search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழைநீர்"

    • கொசஸ்தலை ஆற்றின் கரை கடந்த ஆண்டு பெய்த மழையின் போது உடைப்பு ஏற்பட்டது.
    • திருவள்ளூர் மாவட்டத்தில் 3 நாட்களாக அதிக அளவு மழை பெய்து உள்ளது.

    பொன்னேரி:

    கொசஸ்தலை ஆற்றின் கரை கடந்த ஆண்டு பெய்த மழையின் போது உடைப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து தற்போது தேவையான முன் எச்சரிக்கை பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சோழவரம் ஒன்றியம் ஆங்காடு பாடியநல்லூர் விச்சூர் வெள்ளிவாயல் பகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர், சட்டமன்ற உறுப்பினர்கள் மாதவரம் சுதர்சனம், துரை சந்திரசேகர் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அவர்கள் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் கரைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் சா.மு. நாசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு 20 சென்டி மீட்டர் மழை ஒரே நாளில் பெய்தது. தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் 3 நாட்களாக அதிக அளவு மழை பெய்து உள்ளது. முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்புகள் குறைவாக உள்ளது.

    கொசஸ்தலை ஆற்றின் கரைகளில் உடைப்பு ஏற்படாமல் தடுக்கவும் வெள்ள நீர் ஊருக்குள் புகாதவாறு தேவையான நடவடிக்கைகள், பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன், வட்டாட்சியர் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • சென்னையில் நேற்றிரவு பெய்த பலத்த மழையால் மாங்காடு பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது.
    • முகலிவாக்கத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முகாமிட்டு மழை நீரை வடிய வைக்க ஏற்பாடு செய்து வருகிறார்.

    சென்னை:

    சென்னையில் நேற்றிரவு பெய்த பலத்த மழையால் மாங்காடு பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. அங்குள்ள வெள்ள நீர் கரைபுரண்டு முகலிவாக்கம், கொளப்பாக்கம் பகுதிக்கு வந்ததால் ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    முட்டளவுக்கு தண்ணீர் கிடப்பதால் அங்குள்ள மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். தகவல் அறிந்ததும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று காலையில் அந்த பகுதிக்கு நேரில் சென்றார். சேரும், சகதியுமாக மாறிய சாலைகளில் நடந்து சென்று மழைநீர் தேங்கிய பகுதிகளில் தண்ணீரை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து முகலிவாக்கத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முகாமிட்டு மழை நீரை வடிய வைக்க ஏற்பாடு செய்து வருகிறார்.

    • பல பகுதிகளில் தண்னீர் தேங்கியதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
    • மோட்டார் பம்புகள் மூலம் மழைநீரை வெளியேற்ற முன்னேற்பாடுகள்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள மழைநீர் வடிகால் அமைப்பு மற்றும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது,

    கடந்த ஆண்டு கனமழையின் போது நாகப்பட்டினம் நகரின் பல பகுதிகளில் தண்னீர் தேங்கியதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, கடந்த ஓராண்டில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், நீர் வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

    மேலும், கடந்த ஆண்டு அதிக அளவு தண்னீர் தேங்கிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டு இம்முறை அங்கு மோட்டார் பம்புகள் மூலம் மழைநீரை வெளியேற்றும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறையை மக்கள் தொடர்பு கொண்டு, மழை வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    1077, 04365 251992, 8438669800 ஆகிய எண்களில் மக்கள் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்லடத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்தது.
    • 20க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.

    பல்லடம் :

    பல்லடத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்து பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

    நேற்று முன்தினம் காலை முதல் பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து இரவு முழுவதும் அவ்வப்போது விட்டு, விட்டு பெய்தவண்ணம் உள்ளது. நேற்று அதிகாலை முதலே வானம் மப்பும், மந்தாரமுமாக இருந்தது. தொடர்மழையால் பல்லடம் அண்ணாநகர் பகுதியில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் அங்கிருந்த மக்கள் இரவு முழுவதும் மழைநீரை வெளியேற்றியபடி இருந்தனர். நகராட்சி ஊழியர்கள், மழைநீர் தேங்கியுள்ள அண்ணாநகரில் மோட்டார் வைத்து மழைநீரை வெளியேற்றி வருகின்றனர். இதே போல பல்லடம் பச்சாபாளையம், பனப்பாளையம், காலனி பகுதிகளில் உள்ள சில வீடுகளில் மழை நீர் புகுந்தது. மழைநீர் பாதித்த இடங்களை, பல்லடம் தாசில்தார் நந்தகோபால், நகராட்சி ஆணையாளர் விநாயகம்,உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தினர். பல இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

    • பொதுமக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினார்.
    • பம்புசெட் வைத்து உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மழை நீரை வெளியேற்ற வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்து வருவதால் மழை வெள்ளத்ததால் பாதிக்கப்பட்ட தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட கேசவன்பாளையம், களுவன்திட்டு, சீர்காழி நகராட்சிக்குட்பட்ட 13 -வது வார்டு, ஸ்டேட் வங்கி அருகில் தேர் வடக்கு வீதி, 8-வது வார்டு தடாளம் மேற்கு , வசந்த் நகர், 2- வது வார்டு இரணியன் நகர் ஆகிய இடங்களுக்கு கலெக்டர் லலிதா கொட்டும் மழையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    கேசவன்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு சாலையில் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் மழை நீரை பம்பு செட் வைத்து வெளியேற்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அதிரடி உத்தரவிட்டார். அங்குள்ள பொது மக்களிடம் மழை அதிகமாக இருக்கும் என்று வானிலை அறிக்கை கூறியுள்ளதால் பொது மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட களுவன்திட்டு பகுதியில் சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீரை உடனடியாக வெளியேற்ற உத்தரவிட்டார்.

    குறிப்பாக பொது மக்கள் தங்கியிருக்கும் வீடுகளின் அருகில் மழை நீர் தேங்கியிருக்கும் பட்சத்தில் பம்பு செட் வைத்து உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மழை நீரை வெளியேற்ற வேண்டும்.

    மேலும் சாலைகளில் மரங்கள் விழுந்தால் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு அகற்ற வேண்டும் என்றார். தொடர்ந்து சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் பம்பு செட்வைத்து மழை நீரை வெளியேற்ற சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இவ்வாய்வின் போது , சீர்காழி வருவாய் கோட்டாட்சியர்அர்ச்சனா, சீர்காழி நகர் மன்றத்த லைவர்துர்கா பரமே ஸ்வரி, தரங்கம்பாடி பேரூராட்சித்தலைவர் சுகுணாசங்கரி, சீர்காழி நகராட்சி ஆணையர்வா சுதேவன், தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர்கமலக்கண்ணன், வட்டாட்சியர்கள் செந்தில்குமார்,புனிதா,வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரதுறை , வேளாண்மைத்துறை மற்றும் பல்வேறு அரசுத்துறையைச் சேர்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • மழை நீரும் வடிய வாய்க்கால், வடிகால்கள் தூர்வாரப்படாமல் ஆக்கிரமிப்பில் இருப்பதால் மழை நீர் குடிசை பகுதிகளை சூழ்ந்து உள்ளது.
    • கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தைக்கால் தெருவில் இருந்து மழைநீர் வடியும் வடிகால்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு தைக்கால் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் உள்ள வீடுகள் பெரும்பாலும் குடிசை வீடுகளாக உள்ளது.இந்த நிலையில் திட்டச்சேரி கடைத்தெரு, மெயின் ரோடு பகுதிகளில் மழை நீர் வடிகால் சரியில்லாத காரணத்தால் மழை நீர் வடிந்து முதலியார் தெருவழியாக தைக்கால் தெரு குடிசை பகுதியில் வந்து சேர்கிறது.

    அதேபோல் புறாக்கிராமம் பகுதியில் இருந்து வடியும் மழை நீர் கிளி வாய்க்கால் வழியாக தைக்கால் தெருவை வந்தடைகிறது.

    இதனால் மொத்த மழை நீரும் வடிய வாய்க்கால், வடிகால்கள் தூர்வாரப்படாமல் ஆக்கிரமிப்பில் இருப்பதால் மழை நீர் குடிசை பகுதிகளை சூழ்ந்து உள்ளது.இதனால் குடிசை வீடுகளின் சுவர்கள் சாய்ந்து விழுந்து விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலையில் உள்ளது.

    இதுகுறித்துதைக்கால் தெரு சுமதி தெரிவித்த தாவது:-

    கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தைக்கால் தெருவில் இருந்து மழைநீர் வடியும் வடிகால்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது.

    இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வடிவ வழியில்லாமல் குடிசை பகுதிகளை சுற்றி தேங்கி நிற்கிறது.இதனால் கொசு மற்றும் தொற்று நோய் பரவும் நிலை உள்ளது.

    இதுகுறித்து தைக்கால் தெருவை சேர்ந்த ஜீவா கூறியதாவது:-

    கடந்தாண்டு பெய்த கனமழையில் இதேபோல் குடிசை பகுதிகள் சுற்றி மழை நீர் தேங்கி இருந்தது.அதனை அகற்றி தர கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.தைக்கால் தெரு பகுதியை சேர்ந்த அமராவதி கூறும்போது:-

    தற்போது வடிகால்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதால் மழை நீர் வடியாமல் குடிசை பகுதிகளை சுற்றி தேங்கி நிற்கிறது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மழைநீர் வடியவும், வடிகால்களை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அலுவலகம் அருகிலேயே தான் உள்ளது.
    • பொதுமக்கள் தங்கு தடை இன்றி வந்து செல்வதற்கு வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    தாராபுரம்:

    தாராபுரம் உடுமலை சாலையில் உள்ளது தினசரி காய்கறி மார்க்கெட். இந்த சந்தை முன்பு பழைய பஸ் நிலையமாக இருந்தது. 1986-ம் ஆண்டு முதல் காய்கறி சந்தையாக செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கு மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன. இங்கு தினசரி ஆயிரம் கிலோவிற்கு மேல் காய்கறி குப்பைகள் தேங்கி விடுகின்றன. இந்த சூழ்நிலையில் அருகிலேயே நகராட்சிக்கு சொந்தமான வாகன நிறுத்தம் மற்றும் நகராட்சியின் குடிநீர் தொட்டி ஆகியவை அமைந்துள்ளது. நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அலுவலகம் அருகிலேயே தான் உள்ளது.

    இந்த சூழ்நிலையில் இங்கு குப்பைகளை வாரத்திற்கு ஒரு முறை இரண்டு முறை அள்ளுவதால்குப்பை மலைபோல் குவிந்து கிடக்கிறது. மழைக்காலங்களில் குப்பைகள் ரோட்டில் அடித்துச் செல்லப்பட்டு மார்க்கெட் முழுவதும் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு நிறைந்து காணப்படுகின்றன. இதனை உடனடியாக தீர்க்க வேண்டும் நகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட் கடைக்காரர்கள் கூறி வந்த நிலையில் சாலை மறியல் செய்யப்போவதாக அறிவித்தனர்.

    இதையடுத்து அங்கு வந்த தாராபுரம் தி.மு.க. நகர செயலாளர் பொறியாளர் முருகானந்தம் சாலை மறியல் செய்ய வேண்டாம் .உங்களுக்கு உடனடியாக குப்பைகளை அள்ளுவதற்கும் சாக்கடை வசதி மழைநீர் தண்ணீர் வெளியே செல்வதற்கு உண்டான வசதி அனைத்தும் செய்து தரப்படும் எனக் கூறியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது .இது குறித்து மார்க்கெட் தினசரி மார்க்கெட் கடைக்காரர் டேவிட் கூறிய போது, இங்கு மழை நீர் தேங்கி விடுகின்றது .மழை நீரோடு சாக்கடை நீரும் கலந்து வருகிறது .இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் .பொதுமக்கள் தங்கு தடை இன்றி வந்து செல்வதற்கு வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    • தேங்கிய மழைநீரை அகற்ற தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுத்தார்.
    • தரைபாலத்தை நேரடி கண்காணிப்பில் நகராட்சி எடுத்து கொண்டு துரித நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்படும்.

    மழைநீர் அகற்றும் பணியை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்- சத்திரப்பட்டி ரோட்டில் ெரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. சத்திரப்பட்டி ரோட்டில் உள்ள 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள், 50-க்கும் மேற்பட்ட நூற்பாலை மற்றும் விசைத்தறி கூடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் கணபதியாபுரம் ெரயில்வே தரைபாலத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

    மழையால் ெரயில்வே தரை பாலத்தில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பள்ளி மாணவர்கள், மில் தொழிலா ளர்கள் உரிய நேரத்துக்கு பள்ளிக்கும், வேலைக்கும் செல்ல முடியா மல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    இதனை கேள்விப்பட்ட ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், நகர் மன்ற தலைவி பவித்ரா ஷியாம்ராஜா ஆகியோர் நேரில் ஆய்வு செய்து ராட்சத மின்மோட்டார்களை வர வழைத்து தேங்கிய மழைநீரை துரிதமாக வெளியேற்றி பாதையை ஒழுங்குபடுத்தினர்.

    நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி மற்றும் அதி காரிகளுடன் ஆலோசனை நடத்தி மழைநீர் வெளியேறி செல்லும் நீரோடையின் அடைப்பை நீக்கி மழைநீர் தங்குதடையின்றி செல்ல உரிய நடவடிக்கைகளை எடுத்தனர்.

    இதுகுறித்து எம்.எல்.ஏ. வும், நகரசபை தலைவரும் கூறுகையில், மேம்பால பணிகள் நிறைவடையும் வரை மழை காலங்களில் கணபதியாபுரம் ெரயில்வே தரைபாலத்தை நேரடி கண்காணிப்பில் நகராட்சி எடுத்து கொண்டு துரித நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ள ப்படும்.

    மாணவர்கள், மில் தொழிலாளர்கள் இனி அச்சமின்றி கணபதியாபுரம் தரைபாலத்தை கடந்து செல்ல வழிவகை செய்து தரப்படும் என்றனர்.

    • மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களை வேளாண்மை துறை அதிகாரிகளுடன் சேர்ந்து கலெக்டர் ஆய்வு.
    • தண்ணீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மேலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களை வேளாண்மை துறை அதிகாரிகளுடன் சேர்ந்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

    அப்போது தண்ணீர் வடிய வைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் உறுதி அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தஞ்சையில் ஒரே நாளில் அதிகபட்சமாக 177 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    தஞ்சை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. மாவட்டம் முழுவதும் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கி உள்ளன.

    தண்ணீர் வடிய வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பருவமழையில் விவசாயிகள் பாதிக்காத வகையில் அனைத்து நடவடிக்கையும் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • கனமழையால் மழைநீர்வடிய வழியின்றி வீடுகளை சூழ்ந்துள்ளது.
    • ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு மழைநீர் வடிய வைக்கும் பணி.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி தோட்ட மானியத்தில் சில மாதங்களுக்கு முன்பு மயான சாலை பேவர் பிளாக் முலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகளின் குறுக்கே செல்லும் வடிகால் வாய்கால்கள் பகுதி சாலை போடப்பட்டதால் குறுகியது.

    தற்பொழுது பெய்து வரும் கனமழையால் மழை நீர்வடிய வழியின்றி வீடுகளை சூழ்ந்துள்ளது இதனால்பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் சிரமப்பட்டன மேலும் விசப்பூச்சிகள், பாம்புகள் வருவதால் பேரூராட்சி நிர்வாகம் விரைவாக புதிதாக அமைக்கப்பட்ட சாலை குறுக்கே வடிகால் குழாய்களை அமைத்துமழை நீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்க கோரி 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

    இது குறித்து தகவல் அறிந்த வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர் இதனால் மயிலாடுதுறை சிதம்பரம் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பின்னர், வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், ஜேசிபி எந்திரம் வரவழைக்கப்பட்டு வெட்டி மழை நீர் வடிய வைக்கப்பட்டது.

    • தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிபட்டி கிராமம் கத்தி மாறன்வளவு பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது.
    • இங்கு 295 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிபட்டி கிராமம் கத்தி மாறன்வளவு பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு 295 மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமைஆசிரியராக நாகவள்ளி என்பவர் பணி புரிந்து வருகிறார்.

    இந்த பள்ளி சற்று தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால் மழை காலங்களில், பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கி குளம் போல் மாறிவிடுகிறது. இதனால் மாணவர்கள் கடும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர், கடந்த வாரம் கல்வி அதிகாரிகளுக்கும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கும் தெரிவித்து உள்ளார்.

    இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழை காரணமாக பள்ளியில் தண்ணீர் சூழ்ந்து உள்ளதால், நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு அருகில் உள்ள கிராம சேவை மைய கட்டிடத்தில் வைத்து பாடம் நடத்தப்பட்டது.

    இதுபற்றி அறிந்து பள்ளிக்கு வந்த பெற்றோர்கள், பள்ளிக்கு விடுமுறை அளிக்குமாறு தலைமைஆசிரியரிடம் வலியுறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த வட்டார கல்வி அலுவலர் வாசுகி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கருணாநிதி, ஒன்றிய குழு தலைவர் சுமதிபாபு, ஊராட்சி மன்ற தலைவர் பெரியதாயி ஆகியோர் பள்ளிக்கு வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும், பள்ளியில் தண்ணீர் புகாதவாறு தற்காலிகமாக தடுப்பு பணி மேற்கொள்வதாகவும், மழைநீர் வடிந்த பிறகு ஊராட்சி ஒன்றிய நிதியில் இருந்து நிரந்தர கால்வாய் அமைத்து கொடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    • கொசு ஒழிப்பு மருந்துகள் கலக்கப்பட்டு புகைபரப்பு நடவடிக்கைகள் மூலம் கொசுக்கள் அழிக்கும் பணி நடைபெற்றது.
    • மழைநீர் தேங்காமல் வடிகட்டும் பணி, சாக்கடை நீர் வழித்தடங்களை சீர் செய்யும் பணிகள் நடைபெற்றது.

    திருவாரூர்:

    வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு நோய்த்தொற்று ஏற்படுத்தக்கூடிய டெங்கு கொசு பரவுதலை தடுத்தல், மழைநீர் தேங்காமல் வடிய வைத்தல் உள்ளிட்ட பணிகளை தமிழக அரசு தீவிரப் படுத்தியுள்ளது.

    அந்த வகையில் திருவாரூர் அருகே பெருந்தரக்குடி ஊராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதற்காக கொசு ஒழிப்பு மருந்துகள் கலக்கப்பட்டு புகைபரப்பு நடவடிக்கைகள் மூலம் கொசுக்கள் அழிக்கும் பணி நடைபெற்றது.

    பெருந்தரக்குடி ஊராட்சியில் பெருந்தரக்குடி, குளிக்கரை, மேம்பாலம், சார்வன் ஆகிய இடங்களில் கொசு ஒழிப்பு புகை அடிக்கும் பணி நடைபெற்றது.

    இப்பணியினை ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கண்காணித்து ஆலோசனை வழங்கினர்.

    இதனைத் தொடர்ந்து மழைநீர் தேங்காமல் வடிகட்டும் பணி, சாக்கடை நீர் வழித்தடங்களை சீர் செய்யும் பணிகள் நடைபெற்றது.

    இதுபோல் ஒன்றியத்தில் 44 ஊராட்சிகளிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ×