என் மலர்
நீங்கள் தேடியது "ரெயில் பயணிகள்"
- பலுசிஸ்தானைப் பிரிப்பதற்கு முயற்சிக்கும் பிரிவினைவாதக் குழுவான பலுச் விடுதலைப் படையின் மஜீத் படைப்பிரிவால் இந்த கடத்தல் அரங்கேறியது.
- 346 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பெஷாவர் செல்லும் பயணிகள் ரெயில் கடந்த மார்ச் 11 (செவ்வாய்க்கிழமை) கடத்தப்பட்டது. 400க்கும் மேற்பட்ட பயணிகளை, பெரும்பாலும் பாதுகாப்புப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஜாபர் எக்ஸ்பிரஸ், சிபி நகரம் வழியாகச் சென்றபோது இந்த கடத்தல் நிகழ்ந்தது.
பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தானைப் பிரிப்பதற்கு முயற்சிக்கும் பிரிவினைவாதக் குழுவான பலுச் விடுதலைப் படையின் மஜீத் படைப்பிரிவால் இந்த கடத்தல் அரங்கேறியது. 24 மணி நேரத்திற்கு பின் பாகிஸ்தான் ராணுவம் எடுத்த நடவடிக்கையில் ரெயில் பயணிகள் மீட்கப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின் போது 346 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே இந்த ரெயில் கடத்தலில் ஈடுபட்ட பலுச் விடுதலைப் படைக்கு பின்னால் இந்தியா உள்ளதாக பாகிஸ்தானின் மூத்த அதிகாரி ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தியா பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகவும் அதன் அண்டை நாடுகளை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் அவர் பேசியிருந்தார்.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "பாகிஸ்தானின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் கடுமையாக நிராகரிக்கிறோம்.
உலகளாவிய பயங்கரவாதத்தின் மையம் எங்கே இருக்கிறது என்பது முழு உலகிற்கும் தெரியும். பாகிஸ்தான் அதன் சொந்த உள்நாட்டு பிரச்சினைகள் மற்றும் தோல்விகளுக்கான பழியை மற்றவர்கள் மீது சுமத்துவதற்குப் பதிலாக தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உள்நோக்கிப் பார்க்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பயங்கரவாதிகள் வழிமறித்து கடத்தினர்.
- ராணுவத்தை சேர்ந்த 28 வீரர்கள் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் கடத்திய பயணிகள் ரெயிலில் சிக்கியிருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடத்தப்பட்ட ரெயிலில் இருந்து பயணிகளை மீட்கும் பணியின் போது பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 28 வீரர்கள் உயிரிழந்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டாவில் இருந்து கைபர் பதுன்கவா மாகாணத்தின் பெஷாவர் பகுதிக்கு சென்று கொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பயங்கரவாதிகள் வழிமறித்து கடத்தினர்.
பாகிஸ்தானிடமிருந்து பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் கோரும் பலுச் விடுதலை இராணுவம் (BLA) என்ற பிரிவினைவாத அமைப்பு இந்த கடத்தலை அரங்கேற்றியது. ரெயில் பிரு குன்றி மலைப்பகுதியின் அருகில் உள்ள சுரங்கப்பாதையில் சென்றுக் கொண்டிருந்த போது ஆயுதம் ஏந்திய நபர்கள் ரெயிலை வழிமறித்தனர்.
இதையடுத்து ரெயிலில் இருந்த பயணிகளை மீட்கும் பணியில் பாதுகாப்பு படையினர் மற்றும் அந்நாட்டு ராணுவத்தினர் ஈடுபட்டு இருந்தனர். அதன்படி ரெயிலில் சிக்கி பணயக்கைதிகளாக வைக்கப்பட்ட பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்.
"இந்த நடவடிக்கையின் போது 346 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்," என்று ஒரு ராணுவ அதிகாரி ஏ.எஃப்.பி. (AFP) நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இந்தத் சம்பவத்துக்கு பலூச் விடுதலைப் படை (BLA) உரிமை கோரியது. தண்டவாளத்தில் வெடிப்பு நிகழ்ந்து, மலைகளில் மறைந்திருந்த இடங்களில் இருந்து டஜன் கணக்கான துப்பாக்கி ஏந்தியவர்கள் வெளியே வருவது போன்ற வீடியோவை அது வெளியிட்டது.
- ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பயங்கரவாதிகள் வழிமறித்து கடத்தினர்.
- சுரங்கப்பாதையில் சென்றுக் கொண்டிருந்த போது ஆயுதம் ஏந்திய நபர்கள் வழிமறித்தனர்.
பாகிஸ்தானில் பயணிகள் ரெயில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டாவில் இருந்து கைபர் பதுன்கவா மாகாணத்தின் பெஷாவர் பகுதிக்கு சென்று கொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பயங்கரவாதிகள் வழிமறித்து கடத்தினர்.
பாகிஸ்தானிடமிருந்து பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் கோரும் பலுச் விடுதலை இராணுவம் (BLA) என்ற பிரிவினைவாத அமைப்பு இந்த கடத்தலை அரங்கேற்றியது. ரெயில் பிரு குன்றி மலைப்பகுதியின் அருகில் உள்ள சுரங்கப்பாதையில் சென்றுக் கொண்டிருந்த போது ஆயுதம் ஏந்திய நபர்கள் ரெயிலை வழிமறித்தனர்.
ரெயிலை கடத்திய பயங்கரவாதிகளில் 16 பேரை இதுவரை கொன்றுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பயணிகளில் 104 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
முன்னதாக, பலுசிஸ்தான் செய்தித் தொடர்பாளர் ஷாஹித் ரிண்ட் கூறும் போது, "பாதுகாப்புப் படையினர் 104 பயணிகளை (58 ஆண்கள், 31 பெண்கள் மற்றும் 15 குழந்தைகள்) - ஒரு பெட்டியிலிருந்து மீட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.
ரெயிலில் சுமார் 400 பயணிகள் இருந்தனர். இதனால் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. பெஷாவர் செல்லும் பயணிகள் ரயிலில் தீவிர துப்பாக்கிச் சூடு நடந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் மீட்புக் குழுக்கள் அனுப்பப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரிண்ட் கூறியுள்ளார்.
- ரெயில் நிலையங்களின் மேம்பாடு குறித்தும் ரெயில் சங்க பிரதிநிதிகளுடன் விஜய் வசந்த் எம்.பி. ஆலோசனை மேற்கொண்டார்.
- டவுண் ரெயில் நிலையத்தில் பரசுராம் ரெயில் 1 நிமிடம் நின்று செல்ல வழிவகை செய்தல், ரெயில் நிலையம் அருகே பேருந்து நிலைய வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை
நாகர்கோவில் :
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய ரெயில்வே சேவைகள் குறித்தும் ரெயில் நிலையங்களின் மேம்பாடு குறித்தும் ரெயில் சங்க பிரதிநிதிகளுடன் விஜய் வசந்த் எம்.பி. ஆலோசனை மேற்கொண்டார்.
இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், புதிய ரெயில்களைக் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வருதல் சில ரெயில்கள் குறிப்பிட்ட சில ரெயில் நிலையங்களில் நின்று செல்ல ஏதுவாக வழிவகை செய்தல் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து ஆலோசனை மேற் கொள்ளப்பட்டது.
குறிப்பாக தாம்பரம்-நாகர்கோவில் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்கு தல், ஷார்மினார் விரைவு ரெயிலை கன்னியாகுமரி வரை நீடித்தல், வார கடைசி யில் வேளாங்கண்ணி செல்ல கன்னியாகுமரி வழித்தடத்தில் ரெயில் இயக்குதல், மதுரை-திருவனந்தபுரம் இடையே மெமோ ரெயில் இயக்குதல், டவுண் ரெயில் நிலையத்தில் பரசுராம் ரெயில் 1 நிமிடம் நின்று செல்ல வழிவகை செய்தல், ரெயில் நிலையம் அருகே பேருந்து நிலைய வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இதனைக் கேட்டறிந்த விஜய் வசந்த் எம்.பி. இந்த கோரிக்கைகள் குறித்து ரெயில்வே அதிகாரி களிடம் நேரடியாக கோரிக்கை கள் வைத்து விரைந்து நடவ டிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மேலும் வரக் கூடிய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இது குறித்து பேசுவேன் என ரெயில் பயணிகள் சங்கத்திடம் கூறினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருவனந்தபுரம் கோட்ட ரெயில்வே ஆலோ சனை குழு உறுப்பினர் சூசைராஜ், மதுரை கோட்ட ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சிவக்குமார், ரெயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்த ஸ்ரீ ராம், கன்னியாகுமரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் முருகதாஸ் உள்ளிட்ட சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- முன்பதிவு செய்து பயணிக்கிற பயணிகள் பிரிவில் இந்த கால கட்டத்தில் 53 கோடியே 65 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.
- ஏப்ரல் 1 தொடங்கி நவம்பர் 30, 2022 வரையில் முன்பதிவில்லா பயணிகள் பிரிவில் மொத்தம் 352 கோடியே 73 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
புதுடெல்லி:
நமது நாட்டில் கொரோனா பெருந்தொற்று முற்றிலுமாய் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரெயில் பயணிகள் போக்குவரத்து துறை சூடுபிடித்துள்ளது.
குறிப்பாக கடந்த 8 மாத காலத்தில் ரெயில் பயணிகள் எண்ணிக்கையில் நல்ல வளர்ச்சி காணப்பட்டுள்ளது.
இதை ரெயில்வே விடுத்துள்ள அறிக்கை காட்டுகிறது.
இந்த அறிக்கையில் கூறி உள்ள முக்கிய விஷயங்கள்:-
* ஏப்ரல்-1 தொடங்கி நவம்பர் 30, 2022 வரையிலான கால கட்டத்தில் ரெயில் பயணிகள் எண்ணிக்கை 76 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. இந்த காலகட்டத்தில் பயணிகள் பிரிவில் ரெயில்வேயின் வருமானம் ரூ.43 ஆயிரத்து 324 கோடி ஆகும். கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரெயில்வே பயணிகள் பிரிவு வருமானம் ரூ.24 ஆயிரத்து 631 கோடிதான்.
* முன்பதிவு செய்து பயணிக்கிற பயணிகள் பிரிவில் இந்த கால கட்டத்தில் 53 கோடியே 65 லட்சம் பேர் பயணித்துள்ளனர். கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தில் முன் பதிவு செய்து பயணித்த பயணிகள் எண்ணிக்கை 48 கோடியே 60 லட்சம் ஆகும்.
* முன்பதிவு பயணிகள் பிரிவில் மேற்கூறிய 8 மாத கால வருமானம் ரூ.34 ஆயிரத்து 303 கோடி ஆகும். கடந்த ஆண்டு இது ரூ.22 ஆயிரத்து 904 கோடி ஆகும். இது 50 சதவீதம் அதிகரிப்பு ஆகும்.
* ஏப்ரல் 1 தொடங்கி நவம்பர் 30, 2022 வரையில் முன்பதிவில்லா பயணிகள் பிரிவில் மொத்தம் 352 கோடியே 73 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 138 கோடியே 13 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இந்த ஆண்டில் 155 சதவீதம் வளர்ச்சி காணப்பட்டுள்ளது.
* முன்பதிவில்லா பயணிகள் பிரிவில் கடந்த 8 மாத காலத்தில் வருமானம் ரூ.9 ஆயிரத்து 21 கோடி. கடந்த ஆண்டு இது ரூ.1,728 கோடிதான். அந்த வகையில் இந்த வருமானம் 422 சதவீதம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- சோழவந்தான் வட்டார ரெயில் பயணிகள் நல சங்க கூட்டம் நடந்தது.
- ரெயில் பயண கட்டணங்களை பழைய கட்டணத்திற்கு குறைக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சோழவந்தான்
சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் வட்டார ரெயில் பயணிகள் நல சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது. முன்னாள் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கதிரேசன், தங்கராஜ் முன்னிலை வகித்தனர். அய்யனார் வரவேற்றார். சோழவந்தான் ரெயில் நிலையத்தில் ஏற்கனவே நின்று சென்ற ரெயில்களும், புதிதாக ரெயில்கள் நின்று செல்வதற்கும் பாண்டியன், பொதிகை, அந்தியோதயா, திருப்பதி எக்ஸ்பிரஸ் , மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் இரு மார்க்கங்களிலும் சோழவந்தான் ரெயில் நிலையத்தில் தலா ஒரு நிமிடம் நின்று செல்ல வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கொரோனோ காலத்தில் உயர்த்தப்பட்ட ரெயில் பயண கட்டணங்களை பழைய கட்டணத்திற்கு குறைக்க வேண்டும் என்றும் மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக கிருஷ்ணன், துணைத் தலைவராக கண்ணன், செயலாளராக அய்யனார் பொருளாளராக சரவணன், துணைச் செயலாளர்கள் சுப்பிரமணியன், ஆனந்தகுமார், பாலசுப்ரமணியன், முத்துகாமாட்சி, முனியம்மாள் ஆகியோரும் சட்ட ஆலோசர்களாக ராஜேந்திரன், ஜோதிராஜ் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முத்துப்பாண்டி நன்றி கூறினார்.
- ஒரு சில ரெயில்கள் மட்டுமே நின்று செல்கின்றன. இதனால் இங்கிருந்து செல்லும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
- மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் திருச்செந்தூர், ராக்போர்ட் ரெயில்கள் நிற்க வேண்டும்.
மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் சென்னை மற்றும் புறநகர் பகுதிக்கு கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.
இங்கிருந்து போதிய ரெயில்கள் இல்லை. ஒரு சில ரெயில்கள் மட்டுமே நின்று செல்கின்றன. இதனால் இங்கிருந்து செல்லும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் திருச்செந்தூர், ராக்போர்ட் ரெயில்கள் நிற்க வேண்டும், சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை வரும் யூனிட் ரெயிலை மேல்மருவத்தூர் வரை காலை மாலை இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை மதுராந்தகம் ரெயில் நிலையம் அருகே திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ராம்புரம் கிராமம் அருகே என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். ரெயில் நின்றவுடன் அதில் இருந்த பயணிகள் உயிர் பயத்தில் கீழே இறங்கி அலறியடித்து ஓடினர்.
- ரெயில் என்ஜின் டிரைவர் மற்றும் போலீசார் புகை வந்த ரெயில் பெட்டியை சோதனை செய்தனர்.
திருப்பதி:
நிஜாமுதீனிலிருந்து திருவனந்தபுரத்திற்கு சுவர்ண் ஜெயந்தி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.
இந்த ரெயில் வடமாநிலங்களில் இருந்து காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக திருவனந்தபுரம் செல்கிறது. நிஜாமுதீனிலிருந்து நேற்று புறப்பட்டு வந்தது.
ரெயிலில் ஏராளமான பயணிகள் இருந்தனர். ரெயில் தெலுங்கான மாநிலம் குன்றத்திமடுகு அருகே வந்தபோது, பி-2 ஏசி பெட்டியில் திடீரென புகை வந்தது. இதனை கண்ட பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார்.
ராம்புரம் கிராமம் அருகே என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். ரெயில் நின்றவுடன் அதில் இருந்த பயணிகள் உயிர் பயத்தில் கீழே இறங்கி அலறியடித்து ஓடினர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.இதையடுத்து ரெயில் என்ஜின் டிரைவர் மற்றும் போலீசார் புகை வந்த ரெயில் பெட்டியை சோதனை செய்தனர். அப்போது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. தீயை அணைத்து தற்கலிகமாக சரி செய்யப்பட்டது. பின்னர் ராம்புரத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டோர்னக்கல் ரெயில் நிலையத்தில் 40 நிமிடம் ரெயில் நிறுத்தப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட பெட்டியை ரெயிலிலிருந்து கழட்டிய பின், ரெயில் புறப்பட்டு சென்றது.
ரெயில் பெட்டியில் புகை வந்தவுடன் பயணி அபாய சங்கலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக தெரிவித்தனர்.
- ரெயில் பயணிகள் வசதி குழு பரிந்துரைத்த பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட பிரசார அணி தலைவர் காமாட்சி ஆகியோர் உடனிருந்தனர்.
விருதுநகர்
விருதுநகரில் பா.ஜ.க. கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் ரெயில் நிலையத்தை கடந்த மார்ச் மாதம் ரவிச் சந்திரன் தலைமையிலான பிற மாநில உறுப்பினர்கள் அடங்கிய ரெயில் பயணிகள் வசதிக்குழு ஆய்வு செய்தது. அப்போது நாங்கள் கொடுத்த கோரிக்கைகளின் படி ரெயில் நிலைய கிழக்கு பகுதியில் நுழைவுவாயில், அனைத்து நடைமேடைகளும் மேம்படுத்துதல், நகரும் படி வசதி, குடிநீர் வசதி, நவீன தங்கும் அறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் செய் வதற்கு ரெயில் பயணிகள் வசதிகள் குழு பரிந்துரைத்ததின்பேரில் தற்போது அதற்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
இதில் முதல் கட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.7 கோடியே 73 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளுக்கு பிரத மர் மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டியுள்ளார். இப்பணிகள் வருகிற மார்ச் மாதம் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து பணிகளை மேற்கொண்டு விருதுநகர் ரெயில் நிலையம் உலக தரத்தில் மேம்படும் என்பது உறுதி. இதற்காக பிரதமர் மோடி, நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு விருதுநகர் மாவட்ட மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மதுரையில் இருந்து அருப் புக்கோட்டை வழியாக தூத்துக்குடி வரையிலான அகல ரெயில் பாதை திட்ட பணியை கைவிடக்கூடாது. திட்ட பணியை விரைந்து முடித்து தென் மாவட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் உதவ வேண்டும் என மாவட்ட பா.ஜ.க. சார்பில் மாநில நிர்வாகிகள் மூலம் மத்திய அரசிடம் வலியு றுத்துவோம். உறுதியாக திட்டம் கைவிடும் வாய்ப்பு ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட பிரசார அணி தலைவர் காமாட்சி ஆகியோர் உடனிருந்தனர்.
- தேசத்தின் உயிர்நாடியாக ரெயில்வே உள்ளது.
- ரெயிலில் பயணம் செய்பவர்கள் தங்கள் பயணத்தின் நினைவுகளை எடுத்துச்செல்கிறார்கள்.
புதுடெல்லி:
ரெயில்வேயில் அதிகாரிகளாக பயிற்சி பெற்று வரும் 255 பேர் அடங்கிய குழு ஒன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தனர்.
ஜனாதிபதி மாளிகையில் உள்ள கலாசார மையத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இளம் அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, பின்னர் அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-
தேசத்தின் உயிர்நாடியாக ரெயில்வே உள்ளது. லட்சக்கணான பயணிகள் நாள்தோறும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு ரெயில் மூலம் சென்று வருகிறார்கள்.
எனவே லட்சக்கணக்கான மக்களின் முதலாளியாக இருப்பதுடன், கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் மற்றும் விருப்பங்களை தாங்கி செல்லும் வாகனமாகவும் உள்ளது.
அதேநேரம், இந்திய பொருளாதாரத்திற்கு மட்டுமின்றி, நாட்டின் ஒற்றுமை மற்றும் சமூக கலாசார பன்முகத்தன்மைக்கும் ரெயில்வே முதுகெலும்பாக உள்ளது.
இந்திய ரெயில்வே சுற்றுச்சூழலின் வளமான பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வது மற்றும் இந்திய ரெயில்வேயை உலகின் சிறந்த தரமான சேவைகளை வழங்குபவராக மாற்ற பாடுபடுவது உங்களை போன்ற இளம் அதிகாரிகளின் பொறுப்பாகும்.
ரெயிலில் பயணம் செய்பவர்கள் தங்கள் பயணத்தின் நினைவுகளை எடுத்துச்செல்கிறார்கள். அவர்களின் பாதுகாப்பை அனைத்து வழிகளிலும் உறுதி செய்ய வேண்டும்.
மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பயன்பாடுகளுடன், ரெயில் பாதுகாப்புக்கு மிகுந்த முன்னுரிமை அளித்து திறமையான தடுப்பு அமைப்புகள் வடிவமைக்கப்பட வேண்டும்.
ரெயில்வே வாடிக்கையாளர்களை, குறிப்பாக பயணிகளை உங்கள் விருந்தினர்களாகக் கருதி, அவர்கள் போற்றும் வகையில் சிறந்த சேவை மற்றும் சிறந்த அனுபவத்தை வழங்குமாறு நான் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை அதிகரிக்க நீங்கள் உழைக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் பூர்த்தி செய்வதுடன், ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான டன் சரக்குகளை ஏற்றிச்செல்லும் இந்திய ரெயில்வேயில் தொழில்நுட்பத்தை சிறந்த அளவிற்கு பயன்படுத்துவது அவசியம்.
இந்திய ரெயில்வே நிர்வாகம் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் புதுமையான மற்றும் தகவமைப்புடன் சிறந்து விளங்குவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
ரெயில்வே மின்மயமாக்கல், அதிக சரக்குகளை கையாளுதல் மற்றும் வருவாய் உள்ளிட்ட வளர்ச்சி நடவடிக்கைகள் இதில் முக்கியமான படிகள் ஆகும்.
இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.
- கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை என்பது தவறான தகவல்.
- ரெயிலில் சிக்கியுள்ள பயணிகளை மீட்போம்.
தென் தமிழகத்தை புரட்டிப்போட்ட கனமழையால் ரெயிலில் சுமார் 500 பயணிகள் சிக்கி தவித்து வருகின்றனர். நேற்றிரவு 8.40 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி பயணிகளுடன் ரெயில் கிளம்பியது.
சுமார் 21 மணி நேரத்தை கடந்தும் நகர முடியாத நிலையில் ரெயிலுக்குள் பயணிகள் தவித்து வருகின்றனர்.
தண்டவாளம் முழுவதும் நீரில் மூழ்கியதால் ரெயில் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் மீட்க முயற்சி நடந்து வந்தாலும் வானிலை காரணமாக பயணிகளை மீட்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாளையங்கோட்டை சென்றிருந்தார். அங்கு, மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் மேலும் கூறியதாவது:-
கனமழையால் 30 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 50 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளுக்கு அருகில் பொது மக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட இடங்களிலும் அமைச்சர்கள் ஆய்வு செய்வார்கள்.நெல்லையில் தூர்வாரப்பட்ட கால்வாய்கள், அதிக மழையால் நிரம்பி உள்ளது. கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை என்பது தவறான தகவல்.
மழை வெள்ள பாதிப்பு குறித்து கணக்கெடுத்து வருகிறோம். அதன் பிறகு, நிவாரணம் குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்.
ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் சிக்கி தவிக்கும் பயணிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரெயிலில் சிக்கியுள்ள பயணிகளை விமான படை உதவியுடன் விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சென்னை கோட்டத்தில் 5 ரெயில் நிலையங்களில் மலிவு விலை உணவு விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது.
- 200 மில்லி தண்ணீர் பாட்டில் ரூ.3-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
ரெயில் நிலையங்களில் மலிவு விலையில் உணவு விற்பனை செய்யும் திட்டத்தை தெற்கு ரெயில்வே அறிமுகம் செய்துள்ளது.
இந்திய ரெயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) சார்பில் கோடை காலத்தில் ரெயில் பயணிகளுக்கு குறைந்த விலையில் உணவு விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் பயன்பெறும் வகையில் முக்கியமான ரெயில் நிலையங்களில் பொதுப் பெட்டிகள் நிற்கும் பகுதியில் இந்த மலிவு விலை உணவு கடைகள் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை கோட்டத்தில் 5 ரெயில் நிலையங்களில் மலிவு விலை உணவு விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் திருச்சி கோட்டத்தில் 3, சேலம்-4, மதுரை-2, பாலக்காடு-9, திருவனந்தபுரம் கோட்டம்-11 என முதல் கட்டமாக 34 ரெயில் நிலையங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
முன்பதிவு இல்லாத ரெயில் பெட்டிகள் நிறுத்தப்படும் இடத்திற்கு அருகில் இந்த உணவு கவுண்டர் செயல்படுகிறது. 325 கிராம் எடை அளவில் 7 பூரி, மசால் வழங்கப்படுகிறது. இவற்றின் விலை ரூ.20. தயிர், எலுமிச்சை, புளியோதரை சாதம் 200 கிராம் கொண்ட எக்கனாமி மீல்ஸ் விலை ரூ.20, ஸ்னாக் மீல்ஸ் என்ற பெயரில் 350 கிராம் எடையில் மசால் தோசை உள்ளிட்ட தென்னிந்திய உணவுகள் ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
200 மில்லி தண்ணீர் பாட்டில் ரூ.3-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோடை காலத்தில் சாதாரண பெட்டியில் பயணம் செய்யும் பயணிகள் வசதிக்காக மலிவு விலையில் உணவு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பயணிகள் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர்.