search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு"

    • குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
    • அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகை தினத்தன்று கடந்த ஆண்டைப் போலவே காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

    சுற்றுச் சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டமாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • நாடு முழுவதும் வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • சோதனையில் சிக்கும் பட்டாசு ரகங்களை பறிமுதல் செய்வதோடு, அபராதமும் விதிக்கின்றனர்.

    திருப்பூர்:

    நாடு முழுவதும் வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நிறைய பேர் கிப்ட் பாக்ஸ், பட்டாசு பண்டல்களை வழக்கமாக எடுத்துச்செல்லும் பைகளில் எடுத்து கொண்டு ரெயிலில் பயணம் செய்கிறார்கள். இது விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது. இதனால்c சோதனையில் சிக்கும் பட்டாசு ரகங்களை பறிமுதல் செய்வதோடு, அபராதமும் விதிக்கின்றனர். மேலும் ெரயில்வே அதிகாரிகள் கூறுகையில், இதுகுறித்து, எச்சரிக்கை அறிவிப்புகளை ஏற்கனவே அறிவித்துள்ளோம். அதையும் மீறி பட்ாசுகளை ரெயிலில் கொண்டு செல்வதால், தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த பரிசோதனை மேலும் தொடரும் என்றனர்.

    • குறிப்பாக குழந்தைகளை கவரும் பட்டாசுகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளன.
    • ஒரே கம்பி மத்தாப்பில் 4 கலர் வரும் மல்டி கலர் கம்பி மத்தாப்பு உள்ளிட்ட பல்வேறு புதிய ரக பட்டாசுகள் அறிமுகமாகி உள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி ஆண்டு தோறும் சென்னை நகரம் முழுவதும் வியாபாரிகள் தற்காலிக பட்டாசு கடைகளை அமைத்து பட்டாசுகளை விற்பனை செய்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பட்டாசுகளை விற்பனை செய்ய தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் சிறு வியாபாரிகள் பட்டாசு கடைகளை திறக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் தற்போது, சென்னை தீவுத்திடலில் மட்டும் பட்டாசுகள் விற்பனை நடந்து வருகிறது.

    நேற்று விடுமுறை நாள் என்பதால் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசுகளை வாங்குவதற்கு பொதுமக்கள் ஏராளமானோர் தீவுத்திடலில் குவிந்தனர். அங்கு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்களுக்கு பிடித்த பட்டாசுகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக பல புதிய ரக பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக குழந்தைகளை கவரும் பட்டாசுகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளன. அந்த வகையில், கலர் கிரிஸ்டல், குடை கம்பி மத்தாப்பு, மயில் பட்டாசு, மல்டி ஷார்ட் துப்பாக்கி, கிரிக்கெட் பால் , பேட் , ஹெலிகாப்டர், கூல்டிரிங்க்ஸ் டின் பிளவர் பாட், தாமரை மலர், டாப் கன் 27, லெமன் சோடா, கோல்டன் லயன், ஒலிம்பிக் டார்ச், லிட்டில் டிராகன் உள்ளிட்ட பல்வேறு வகையான புதிய ரக பட்டாசுகள் அறிமுகமாகி உள்ளன.

    புதிய ரக பட்டாசுகள் குறித்து பட்டாசு விற்பனை செய்யும் வியாபாரிகள் கூறியதாவது:-

    இந்த ஆண்டு குழந்தைகளுக்காக மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான புதிய ரக பசுமை பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன. அதன்படி, பிளையிங் பேர்டு, பிளையிங் சக்கர், கலர் பென்சில், கோல்டன் டக், ஒரே நேரத்தில் 7 விதமாக வெடிக்கும் ரெயின்போ, ஒரே கம்பி மத்தாப்பில் 4 கலர் வரும் மல்டி கலர் கம்பி மத்தாப்பு உள்ளிட்ட பல்வேறு புதிய ரக பட்டாசுகள் அறிமுகமாகி உள்ளது.

    இந்த முறை பெரியவர்கள் வெடிக்கும் வெடிகள் அதிகளவில் விற்பனைக்கு வரவில்லை. முழுக்க முழுக்க குழந்தைகளை மட்டுமே இலக்கு வைத்து அவர்களுக்கான பசுமை பட்டாசுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்திருக்கிறது. அதே நேரத்தில் இரவு வான வெடிகள் இதுவரை இல்லாத வகையில் பல்வேறு புதிய வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    அதன்படி, இரவு வான வெடிகள் 120 ஷாட் முதல் 1,000 ஷாட் வரை விற்பனைக்கு வந்திருக்கிறது. 1,000 ஷாட் சுமார் 2 மணி நேரம் வரை வானில் வெவ்வேறு வண்ணங்களில் வெடித்து கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளது. மேலும், 16 முதல் 70 எண்ணிக்கையிலான பட்டாசுகள் இருக்கும் வகையிலான கிப்ட் பாக்சுகள் விற்பனைக்கு வந்துள்ளது. மொத்தம் 24 வகையிலான கிப்ட் பாக்ஸ்கள் உள்ளன. ரூ.250 முதல் ரூ.3,500 வரை கிப்ட் பாக்சுகள் விற்பனைக்கு உள்ளன. தற்போது தீவுத்திடலில் மட்டும் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன.

    இன்னும் ஓரிரு நாட்களில் சென்னையில் 100 சதவீதம் பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு விடும் என எதிர் பார்க்கிறோம். தீவுத்திடலில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பட்டாசு களை வாங்கி செல்கின்றனர். கடையில் பட்டாசுகளை வாங்கினால், அதற்கான பில்லை பொதுமக்கள் கட்டாயம் கடைக்காரரிடம் கேட்க வேண்டும். ஆன்லைனில் சீன பட்டாசுகள் அதிகம் விற்பனையாவதால் பொதுமக்கள் யாரும் ஆன்லைனில் பட்டாசுகளை வாங்க வேண்டாம்.

    தமிழக அரசு கடந்த ஆண்டை விட தற்போது கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் பட்டாசு கடைகளுக்கான ஷெட் அமைப்பதில் பல கெடுபிடிகள் உள்ளன. இதனால், சென்னையில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதற்கு தமிழக அரசு தளர்வு அளித்து, கடைகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • மாநகரில் உள்ள ரோடுகளில் வழக்கத்தை விட வாகனப்போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
    • பழங்காலம் முதல் பிரபலமான ஓலை வெடி தற்போது ஓல்டு இன் கோல்டு என்ற பெயரில் தங்க நிறத்தில் மின்னும் ஓலை வெடிகள் பாக்கெட்டுகளாக விற்பனைக்கு வந்துள்ளது.

    திருப்பூர்:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் திருப்பூரில் உள்ள கடைவீதிகளுக்கு மக்கள் அதிக அளவில் வரத்தொடங்கியுள்ளனர். இதனால் துணி கடைகள், இனிப்பு கடைகள், அலங்கார ெபாருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள், மின்சாதன பொருள், நகை கடைகள் உள்பட பல்வேறு வியாபார நிறுவனங்களில் பண்டிகை கால விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

    இதேபோல் ஓட்டல், சாலையோர கடைகளில் ஆடைகள் மற்றும் உணவு வகை, தின்பண்டங்களின் விற்பனையும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கடை வீதிகளில் பொதுமக்கள் குடும்பத்தோடு சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கினர். இதேபோல் வடமாநில தொழிலாளர்களும் அதிக அளவில் வருவதால் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் இருந்தது.

    இதேபோன்று மாநகரில் உள்ள ரோடுகளில் வழக்கத்தை விட வாகனப்போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளதால் மாநகர போலீஸ் சார்பில் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக புதுமார்க்கெட் வீதி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, மங்கலம் ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, முனிசிபல் வீதி, குமரன் ரோடு உள்பட மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் இடங்களில் மின்கம்பங்களில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு, அதன் மூலம் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் வகையிலான அறிவிப்புகளை ஒலிக்க செய்து வருகின்றனர். காலை முதல் இரவு வரை முக்கியமான நேரங்களில் இந்த அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.

    இதேப்போல் மாவட்டத்திற்கு உட்பட்ட உடுமலை, பல்லடம், தாராபுரம், காங்கயம் உள்பட பல்வேறு ஊர்களில் கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அந்த பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தீபாவளி பண்டிகையின் பிரதானமாக பட்டாசு ரகங்கள் விற்பனையும் திருப்பூர் பகுதியில் துவங்கியுள்ளது. நிரந்தர பட்டாசு கடைகள், தற்காலிக பட்டாசு கடைகள், பட்டாசு நிறுவனங்களின் நேரடி விற்பனை நிலையங்கள் என திருப்பூர் பகுதியில் பட்டாசு விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    பெரும்பாலான பட்டாசு ரகங்கள், கிப்ட் பேக் வகையில் விற்பனையாகிறது. இவை 10 முதல் 60 வகையான பட்டாசுகள் என்ற அடிப்படையில் பல்வேறு விலைகளில், அதாவது 500 ரூபாய் முதல் விற்பனைக்கு உள்ளது. இவை தவிர ரகம் வாரியாக சிறியது முதல் மிகப் பெரிய அளவிலான வெடிகள், சர வெடிகள், புஸ்வாணங்கள், மத்தாப்பு வகைகள், வானில் பறந்து சென்று வெடிக்கும் பட்டாசுகள், வண்ண மயமாக வெடித்து சிதறும் வாண வேடிக்கை பட்டாசுகள் என நூற்றுக்கும் மேற்பட்ட வகையில் விற்பனைக்கு வந்துள்ளன.

    நடப்பாண்டில் சிறுவர்களை ஈர்க்கும் விதமான பல்வேறு புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் சாக்லெட் வெடி, சாக்லெட் மத்தாப்பு, கேன் மாடல் புஸ்வாணம் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட உயர சென்று வெடிக்கும் வெடிகள், ெஹலிகாப்டர் மாடல் வெடி, மேஜிக் புஸ்வாணம் போன்ற பல ரகங்கள் விற்பனையாகிறது. பழங்காலம் முதல் பிரபலமான ஓலை வெடி தற்போது ஓல்டு இன் கோல்டு என்ற பெயரில் தங்க நிறத்தில் மின்னும் ஓலை வெடிகள் பாக்கெட்டுகளாக விற்பனைக்கு வந்துள்ளது. புஸ்வாண வகையில் மயில் வடிவத்திலான புஸ்வாணம் வெகுவாக கவருகிறது. சாக்லெட் மாடல் வெடி போன்று லாலி பாப் வடிவிலான ராக்கெட் பட்டாசும் உள்ளது. இரட்டைக்குழல் துப்பாக்கி என்பதோடு தற்போது இரட்டை துப்பாக்கியும் சிறுவர்களை ஈர்க்கும் விதமாக உள்ளது. 

    • ரெயில்களில் பட்டாசுகளை எடுத்து சென்றால் அபராதம்-சிறை என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • டிக்கெட் எடுக்காமல் பயணித்தவர்களிடம் ரூ.1 கோடி வசூல்.

    மதுரை

    மதுரை ெரயில்வே கோட்டத்தின் அக்டோபர் மாத பயணச்சீட்டு பரிசோ தனை வருமானம் ரூ.ஒரு கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது.

    பண்டிகை காலமான அக்டோபர் மாதத்தில் ெரயில் நிலையங்கள், ெரயில்களில் அதிரடி பயணச்சீட்டு சோதனைகள் நடைபெற்றன. இதன் மூலம் மதுரை கோட்டம் பயண சீட்டு பரிசோதனை வருமானமாக ரூ.1 கோடியே 8 லட்சத்து 12 ஆயிரத்து 26 ஈட்டியுள்ளது. பயண சீட்டுகள் இல்லாமலும், குறைபாடுடைய பயணச் சீட்டுகளை வைத்தும் பயணம் செய்த 15 ஆயிரத்து 734 பேர் பிடிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து பயணக்கட்டணத்துடன் அபராதமாக ரூ.1 கோடியே 6 லட்சத்து 13ஆயிரத்து 680 வசூலிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பதிவு செய்யாமல் அதிக அளவு உடைமைகளை ெரயில்களில் கொண்டு சென்ற 308 பேர் பிடிக்கப் பட்டு அவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.1 லட்சத்து 98 ஆயிரத்து 346 வசூலிக்கப் பட்டுள்ளது.

    தீ விபத்துகளை தவிர்க்க ெரயில்களில் பட்டாசு கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்கப் பட உள்ளது. இந்திய ெரயில்வே சட்டம் 1989-ல் உள்ள பிரிவுகள் 67, 154, 164, 165 ஆகியவற்றின் வாயிலாக கடும் நடவடிக்கை எடுக்கப் படும்.

    இந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட் டால் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.1000 அபராதம் அல்லது இந்த 2 தண்டனை களும் சேர்த்து வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது.

    தீ விபத்தால் ஏற்படும் நஷ்டம், சேதம், உயிரிழப்பு ஆகியவற்றிற்கும் குற்றவாளி பொறுப்பேற்க நேரிடும். இதற்காக தீபாவளி பண்டிகை நாட்களில் பயணச் சீட்டு பரிசோத னையை தீவிரமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

    தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் ெரயில்களில் அதிக அளவில் பயணிகள் பயணிக்க வாய்ப்பு இருக்கி றது. இந்த காலத்திலும் நாளை முதல் 30-ந்தேதி வரை சிறப்பு பயண சீட்டு பரிசோதனை நடைபெற உள்ளது. ெரயில்களில் பட்டாசு, மண்எண்ணை, எரிவாயு உருளை, பெட் ரோல் போன்ற எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்வோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க ெரயில்வே பாது காப்பு படையும் தீவிர அதிரடி சோதனைகள் நடத்தி வருகிறது.

    • பட்டாசு கடைகளை தாசில்தார் கோபாலகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • ஜெயலட்சுமி, தீபா, கீதா, முருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள பட்டாசு கடைகளை தாசில்தார் கோபாலகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சங்கராபுரம், பூட்டை சாலை, கள்ளக்குறிச்சி மெயின் சாலை, திருக்கோவிலூர் மெயின் ரோடு, அரசம்பட்டு, வடசெட்டியந்தல், மூரார்பாளையம் ஆகிய இடங்களில் தீபாவளியை முன்னிட்டு அனுமதி பெற்று அமைந்துள்ள பட்டாசு கடைகளையும், அது அமைந்துள்ள இடத்தையும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது வருவாய் ஆய்வாளர்கள் கல்யாணி, ருத்ரகுமார், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயலட்சுமி, தீபா, கீதா, முருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • உச்சநீதிமன்றம் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியுள்ளது
    • காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் அனுமதி

    தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகை அன்று, பொதுமக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். ஆனால், பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிக அளவில் ஏற்படுவதாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இதுதொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம், இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்தது. மேலும் பசுமை பட்டாசுகளை தயாரிக்கவும், வெடிக்கவும் உத்தரவிட்டது.

    அதனடிப்படையில், தமிழகத்தில் இந்த ஆண்டு தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டும் இரண்டு மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

    • பட்டாசு தயாரிக்கும் இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
    • போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து கும்பகோணம் தாசில்தார் வெங்கடேஸ்வரனிடம் ஒப்படைத்தனர்.

    சுவாமிமலை:

    தமிழகத்தில் சமீபத்தில் பட்டாசு குடோனில் ஏற்றபட்ட தீவிபத்தில் பலர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து தமிழக காவல் துறை சார்பில் பட்டாசு குடோன் மற்றும் பட்டாசு தயாரிக்கும் இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்கள் முறையாக உரிய அனுமதி பெற்று தொழில் செய்து வருகின்றரா என தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் அதிக அளவில் போலீசார் தீவிரமாக பட்டாசு குடோனில் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ்ராவ்த் உத்தரவின் படி, திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா ராணி தலைமையிலான போலீசார் நாச்சியார்கோவில் அருகே உள்ள நாகரசம்பேட்டை பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு குடோனில் முறையாக அனுமதி பெறாமல் ரூ.10 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் 204 சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதைத் தொடந்து போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து கும்பகோணம் தாசில்தார் வெங்கடேஸ்வரனிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக நாச்சியார் கோவில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • சீர்காழி நகரின் பல்வேறு வீதிகளில் பட்டாசு கடைகள் செயல்பட்டு வருகின்றனர்.
    • அவசர காலங்களில் வெளியேறும் வகையில் இரு வழிகள் உள்ளனவா என ஆய்வு செய்தார்.

    சீர்காழி:

    சீர்காழியில் தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு வீதிகளில் பட்டாசு கடைகள் செயல்பட்டுவருகின்றனர். இந்த கடைகளில் உதவி கலெக்டர் அர்ச்சனா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது பட்டாசு கடைகளில்உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளதா பாது காப்பான முறையில் கடைகளில் பட்டாசுகள் விற்பனை நடைபெறுகிறதா, அவசர காலங்களில் வெளியேறும் வகையில் இரு வழிகள் உள்ளனவா, தீ தடுப்பு சாதனங்கள், மணல், தண்ணீர் ஆகியவை தயார் நிலையில் கடைகளில் வைக்கப்பட்டுள்ளதா என கோட்டாட்சியர் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை அலுவலர் ஜோதி, காவல் உதவி ஆய்வாளர் சீனிவா சன், வருவாய் ஆய்வாளர் சுகன்யா உடனிருந்தனர்.

    • பட்டாசுக் கிடங்குகள் மற்றும் பட்டாசுக்கடைகள் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து கண்கா ணிக்கப்பட்டு வருவதுடன் தேவையான பாது காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
    • சேலம் மாவட்டம் முழுவதும் பட்டாசு தயாரிக்கும் இடங்கள், பட்டாசுக் கிடங்குகள், பட்டாசு விற்பனைக்குரிய இடங்களை வருவாய்த்துறை, காவல் துறை, தொழிலக பாதுகாப்புத்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட அலுவலர்களைக் கொண்ட குழு உரிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் கடை பிடிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    தீபாவளி பண்டிகையை யொட்டி பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பட்டாசு தயாரிக்கும் இடங்கள், பட்டாசுக் கிடங்குகள் மற்றும் பட்டாசுக்கடைகள் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து கண்கா ணிக்கப்பட்டு வருவதுடன் தேவையான பாது காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    குறிப்பாக பட்டாசு தயாரிக்கும் இடங்களில் பணியாளர்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று பட்டாசு கிடங்குகளில் நிர்ண யிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டி ருந்தால் பட்டாசுக் கிடங்குகள் உடனடியாக சீல் வைத்து மூடவும் உத்தரவி டப்பட்டுள்ளது.

    தற்காலிக பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி வேண்டி விண்ணப்பிப்ப வர்களுக்கு பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு திறந்தவெளி மைதானங்களில் பட்டாசுக் கடைகளை அமைத்துக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சேலம் மாவட்டம் முழுவதும் பட்டாசு தயாரிக்கும் இடங்கள், பட்டாசுக் கிடங்குகள், பட்டாசு விற்பனைக்குரிய இடங்களை வருவாய்த்துறை, காவல் துறை, தொழிலக பாதுகாப்புத்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட அலுவலர்களைக் கொண்ட குழு உரிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் கடை பிடிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    பட்டாசுப் பொருட்களை பொதுமக்கள் ெரயில், பஸ்கள், வாடகை கார் உள்ளிட்ட வாகனங்களில் எக்காரணம் கொண்டும் எடுத்துச் செல்லக்கூடாது. இதனை மீறினால் கடுமை யான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதன் பொருட்டு சிறப்பு தணிக்கைக் குழு அமைக்கப்பட்டு ரெயில், பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள், சுங்கச் சாவடிகள் மற்றும் ஆங்காங்கே ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். பட்டாசுகளால் விபத்துக்கள் ஏற்படாமல் தடுத்திட பொதுமக்கள், பட்டாசு தயாரிப்பா ளர்கள், விற்பனை யாளர்கள் என அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தடையி ன்மைச்சான்று பெற்று உரிமம் பெறப்பட வேண்டும்.
    • விதிமுறைகள் கடைபிடிக்கப்படாமல் இருந்தால் உரிமம் ரத்து செய்யப்படும்

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித் துள்ளதாவது:-

    அரியலூர் மாவட்டத்தில் பட்டாசு உற்பத்தி அலகுகள் மற்றும் பட்டாசு விற்ப னைக்கடைகள் வெடிபொ ருள் சட்டத்தின்படி தீய ணைப்புதுறை, காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் தொழில் பாதுகா ப்புத்துறை யின் தடையி ன்மைச்சான்று பெற்று உரிமம் பெறப்பட வேண்டும்.

    உரிமம் பெற்ற பின்பு உரிமத்தில் குறிப்பிடப் பட்டுள்ள இடத்தில் மட்டும் உரிம அளவின்படி உரிம நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருப்பு வைத்து க்கொள்ள வேண்டும். அனைத்து பாது காப்புகள் குறித்த நட வடிக்கைகளை தவறா மல் கடைபிடிக்க வேண்டும்.

    உரிமத்தில் குறிப்பிடப் பட்டுள்ள விதிமுறைகள் கடைபிடிக்கப்படாமல் இருந்தால் உரிமம் ரத்து செய்யப்படும்.

    உரிமம் பெறாத இடங்க ளில் பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை கள் மேற்கொண்டு கைது செய்யப்படுவார்கள்.

    அரியலூர் மாவட்டத்தில் உரிமம் பெறாத இடங்களில் மொத்தமாக பட்டாசுகள் பதுக்கிவைத்துல் இருப்பு வைத்தல் போன்றவைகள் தெரியவந்தால் பொது மக்கள் 9865437801 என்ற எண்ணில் தகவல் அளிக்க லாம்.

    பொதுமக்கள் பட்டாசு பண்டில்கள், பட்டாசு கிப்டு பாக்ஸ்களை பேருந்துகள் மற்றும் ரெயில் பயணங்க ளின் போது உடன் எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும். என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • பட்டாசு வெடிகளைத் தயாரிப்பதற்கான பாதுகாப்பு வழிகாட்டு நெறி முறைகளைக் கண்காணிக்கும் அலுவலர்கள் குழுவுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • சேலம் மாவட்டத்தில் பட்டாசு வெடிகளை தயாரித்திட 43 நிறுவனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    பட்டாசு வெடிகளைத் தயாரிப்பதற்கான பாதுகாப்பு வழிகாட்டு நெறி முறைகளைக் கண்காணிக்கும் அலுவலர்கள் குழுவுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத் த்திற்குப்பின் கலெக்டர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-

    குழு அமைப்பு

    சேலம் மாவட்டம் முழுவதும் பட்டாசு தயாரிக்கும் இடங்களை தொடர் ஆய்வு செய்து கண்காணித்திட வருவாய்த்துறை, காவல் துறை, தொழிலக பாது காப்புத்துறை, தீயணைப்புத் துறை ஆகிய 4 துறைகளை சேர்ந்த அலுவலர்களை கொண்ட குழு வட்டார அளவில் அமைக்கப்பட்டு அவர்களுக்கு பட்டாசு வெடிகளை தயாரிப்ப தற்கான பாதுகாப்பு வழி காட்டு நெறிமுறைகள் குறித்தும் தொடர் ஆய்வு களை பாதுகாப்புடன் மேற்கொண்டு உடனுக் குடன் தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கிடுவது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    11 நிறுவனங்கள்

    சேலம் மாவட்டத்தில் பட்டாசு வெடிகளை தயாரித்திட 43 நிறுவனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதில் இதுவரை புதுப்பிக்க விண்ணப்பங்கள் வழங்கப் படாமல் செயல்பாடற் றுள்ள 11 நிறுவன ங்களுக்கு விளக்கம் கோரி உரிய பதில் வழங்கப்படவில்லை எனில் பாதுகாப்பு நலன் கருதி உடனடியாக அவற்றை சீல் வைத்து மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    மீதமுள்ள பட்டாசு வெடிகளை தயாரிக்கும் நிறுவனங்களை முழுமையான பாதுகாப்பு நடைமுறை களைப் பின்பற்றினால் மட்டுமே அனுமதி வழங்கப் பட்டு தொடர்ந்து கண் காணிக்கப்படும். மாவட் டத்தில் 18 மொத்த பட்டாசு விற்பனையாளர்கள் உள்ளனர். இவர்களை பொறுத்த வரை அனுமதிக் கப்பட்ட இடங்களில் அனுமதிக்க ப்பட்ட அளவில் மட்டுமே பட்டாசுகளை இருப்பில் வைத்திடவும், ஆய்வின்போது விதி மீறல்கள் அறியப்பட்டால் பாதுகாப்பு நலன் கருதி இவர்களின் அனுமதியை ரத்து செய்யவும் அறிவுறுத் தப்பட்டுள்ளது.

    643 விண்ணப்பங்கள்

    இதுவரை தீபாவளிக் கென தற்காலிக பட்டாசு விற்பனை கடைகள் அமைத்துக் கொள்ள 643 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. ஒவ்வொரு விண்ணப்பமும் முறையாக ஆய்வு செய்யப் பட்டு தகுதியில்லாத விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்படும். திறந்தவெளி மைதானங்களில் தற்காலிக பட்டாசு விற்பனை கடைகளை அமைத்திட உரிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

    இதில் பட்டாசு தயாரிப் பாளர்கள், விற்பனை யளர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் என அனை வரின் ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே பட்டாசு வெடி விபத்துக்களால் உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்க முடியும். எனவே தமிழ்நாடு அரசின் உத்தரவிற்கிணங்க, இதில் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி வருகிறது.

    இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மேனகா, இணை இயக்குநர் (தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்) தினகரன், அனைத்து வருவாய் கோட்டாட்சியர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், தீயணைப்புத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×