search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகார்"

    காட்டுமன்னார்கோவிலில் தனியார் கம்பெனி ஊழியரின் கார் திடீரென்று தீ பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பெரியார்மேல்வீதியை சேர்ந்தவர் அமிர்தராஜ் (வயது 42). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அமிர்தராஜ் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு ஊருக்கு வந்திருந்தார். தனக்கு சொந்தமான காரை வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் நிறுத்தி வைத்திருந்தார்.

    பொங்கல் பண்டிகை முடிந்ததும் அமிர்தராஜ் காரை ஊரில் நிறுத்தி விட்டு குடும்பத்துடன் சென்னை சென்று விட்டார். கடந்த 5 நாட்களாக அமிர்தராஜ் வீட்டின் அருகே கார் நின்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 3 மணியளவில் அந்த கார் திடீரென்று தீ பிடித்து எரிந்தது. கார் தீ பிடித்து எரிந்ததும் அக்கம் பக்கத்தினர் கூச்சல் போட்டு அலறினர்.

    வீட்டில் இருந்த அமிர்தராஜின் தந்தை பாடலீஸ்வரரும் அங்கு வந்தார். பின்பு அவர்கள் அந்த கார் மீது தண்ணீர் ஊற்றினர். ஆனால் கார் கொழுந்து விட்டு எரிந்து கொண்டே இருந்தது.

    இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் கொளஞ்சிநாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்து குறித்து காட்டுமன்னார்கோவில் போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சியாம்சுந்தர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று எரிந்த காரை பார்வையிட்டார்.

    கார் எதனால் தீப்பிடித்தது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனியார் கம்பெனி ஊழியரின் கார் திடீரென்று தீ பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் கவிராஜன் (வயது 29). பி.காம் மற்றும் மல்டி மீடியா அனிமேசன் படித்துள்ள இவர், போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார்.

    இவருக்கும், தேவதானத்தைச் சேர்ந்த முனீசுவரி என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பெற்றோர் கட்டாயத்தின் பேரிலேயே கவிராஜன் திருமணம் செய்தாராம். இதனை மனைவியிடம் அடிக்கடி கூறிவந்தார்.

    இந்த நிலையில் இரவில் வேலை இருப்பதால், வீட்டிற்கு காலையில் வருகிறேன் என கவிராஜன் மனைவியிடம் கூறிச் சென்றார். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், உறவினர்கள் ஸ்டூடியோவுக்கு சென்றனர்.

    அங்கு கதவு பாதியளவு திறந்து கிடந்தது. அதனை திறந்து உள்ளே சென்ற போது கவிராஜன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசில் கிருஷ்ணன் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் லவகுசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கவிராஜன் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது மனைவி முனீசுவரி தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார்.

    மதகடிப்பட்டில் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருபுவனை:

    திருபுவனை அடுத்த மதகடிப்பட்டு கோகு நகரை சேர்ந்தவர் அரிதாஸ். கொத்தனார். இவரது மனைவி கமலா. இவர்களுக்கு மதியழகன் (21) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    மதியழகன் இ.இ.இ. டிப்ளமோ படித்து விட்டு வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் மதியழகனை அரிதாஸ் கொத்தனார் வேலைக்கு அழைத்து சென்றார்.

    மதியழகன் வேலைக்கு சென்றதில் இருந்தே படித்து விட்டு இந்த வேலைக்கு வந்து விட்டோம் என மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று தந்தை வேலைக்கு சென்று விட்டார். தாய் கமலா மாடு மேய்க்க சென்றார். வீட்டில் தனியாக இருந்த மதியழகன் மின் விசிறி கொக்கியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அரிதாஸ் திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, ஏட்டு ஜெயதேவன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடையாலுமூடு அருகே வங்கிக்கு சென்ற 2 குழந்தைகளின் தாய் மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    கடையாலுமூடு ஆம்பாடி பகுதியை சேர்ந்தவர் மணி கண்டன். இவரது மனைவி சாஜினி (வயது 35). இவர்களுக்கு திருமணம் முடிந்து ஒரு மகனும், மகளும் உள்ளனர். மணிகண்டன் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி சாஜினி தனது மோட்டார் சைக்கிளில் கடையாலுமூட்டில் உள்ள வங்கிக்கு சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் வங்கிக்கு சென்ற சாஜினி வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை தேடி வங்கிக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதையடுத்து அவரை உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து வெளிநாட்டில் உள்ள மணி கண்டனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கடையாலுமூடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர். உறவினர்களும் மாயமான சாஜினியை தேடி வருகின்றனர்.

    தேனி அருகே தபால் ஊழியர் உள்பட 2 இளம்பெண்கள் மாயமாகினர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேனி:

    தேனி அருகே உள்ள வீரபாண்டி சிவசக்தி நகரைச் சேர்ந்த சீனி மகள் ராஜலெட்சுமி (வயது 21). இவர் திண்டுக்கல்லில் உள்ள தபால் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார்.

    பின்னர் மீண்டும் வேலைக்கு செல்வதற்காக பாட்டி சுருளியம்மாளுடன் தேனி புதிய பஸ்நிலையம் வந்தார். அங்குள்ள கழிப்பறைக்கு சென்று வருவதாக கூறிச் சென்ற ராஜலெட்சுமி மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் லிங்கம்மாள் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதில் டொம்புசேரியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர்தான் தனது மகளை கடத்தி சென்றிருக்க கூடும் என தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீசார்அவர்களை தேடி வருகின்றனர்.

    போடி சர்ச் ரோடு பகுதியைச் சேர்ந்த பிரவீன் மனைவி அமுதா ராணி (வயது 19). இவர் சம்பவத்தன்று அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கூறிச் சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவரது கணவர் பிரவீன் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    பரீட்சையில் தோல்வி அடைந்ததால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை:

    மதுரை பெருங்குடி அருகில் உள்ள வளையங்குளத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (வய27). டிப்ளமோ பட்டப்படிப்பு படித்து வந்தார்.

    இதற்கான தேர்வில் அவர் ஒரு சில பரீட்சையில் தேர்ச்சி அடையவில்லை. இருந்தபோதிலும் கார்த்திக் தொடர்ந்து 3 தடவைகள் ‘அரியர்ஸ்’ தேர்வு எழுதினார். ஆனாலும் தேர்ச்சி பெறமுடியவில்லை.

    இதனால் விரக்தி அடைந்த கார்த்திக் நேற்று காலை வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுதொடர்பாக கார்த்திக் சகோதரர் பால்பாண்டி பெருங்குடி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் செண் பகவேலன் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இதேபோல் மதுரை ஒத்தக்கடை அருகில் உள்ள மலைச்சாமி புரத்தைச் சேர்ந்தவர் வைரமுத்து (36). இவருக்கு மனநல பாதிப்பு இருந்தது. இந்த நிலையில் வைரமுத்து நேற்று இரவு வீட்டின் சமையல் அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுதொடர்பாக வைரமுத்துவின் தாய் சரஸ்வதி ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தேனி அருகே மைனர் பெண்ணை திருமணம் செய்த வாலிபர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் மல்லயகவுண்டன் பட்டியைச் சேர்ந்த மகேந்திரன் மகன் பிரவீன்குமார். இவருக்கும் பழனிசெட்டிபட்டி தெற்கு ஜெகநாதபுரத்தைச் சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் நடந்த திருமணம் குறித்து குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தேனி, குழந்தைகள் நல உறுப்பினர் பிரேமா விசாரணை நடத்தியதில் அந்த பெண் மைனர் என்பது தெரிய வந்தது. இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் பிரேமா புகார் அளித்தார்.

    போலீசார் மைனர் பெண்ணை திருமணம் செய்த பிரவீன்குமார், அவரது தந்தை மகேந்திரன், தாய் செல்லம்மாள் மற்றும் மைனர் பெண்ணின் பெற்றோர் உள்பட 6 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடியில் கோவிலில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்கள் திருட்டு போனது குறித்து போலீசாருக்கு புகார் செய்யப்பட்டது. போலீசார் கேமிரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி டுவிபுரம் 3-வது தெருவில் கல்வி விநாயகர் கோவில் உள்ளது. இந்த பகுதியில் தேவாலயம் மற்றும் புதியதாக தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு வருவதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த கோவிலில் பூட்டை உடைத்து அடிக்கடி திருடு போகியுள்ளது. 

    இதையடுத்து திருடர்களை கண்டுபிடிக்க கோவில் வளாகப்பகுதியில் சி.சி.டி.வி.கேமிரா பொருத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் பூஜைகளை முடித்துவிட்டு நிர்வாகிகள் கோவிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். நேற்று காலை வழக்கம் போல் கோவிலை திறக்க வந்தனர். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டு இருந்தது.

    இது குறித்து மத்தியபாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் சி.சி.டி.வி.கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது அதில் ஒரு சிறுவன் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த கேமிரா காட்சிகளை கொண்டு திருட்டில் ஈடுபட்ட சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை அருகே குடிக்க பணம் தராததால் அண்ணனை கொன்ற தம்பியை போலீசார் தேடி வருகிறார்கள்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த பாலத்தோட்டனப் பள்ளி கிராமத்தை சேர்ந்த சித்தப்பா மகன்கள் மாதேஷ் (வயது 28), கிருஷ்ணா (21). இவர்கள் 2 பேரும் விவசாய கூலி வேலை செய்து வந்தனர்.

    இதில் கிருஷ்ணா வேலை செய்யாமல் அடிக்கடி ஊர் சுற்றி வந்துள்ளார். அண்ணனிடம் அடிக்கடி பணம் கேட்டு வாங்கி செலவு செய்து வந்தார். நேற்று இரவு குடிப்பதற்காக பணம் கேட்டார். ஆனால் மாதேஷ் பணம் கொடுக்கவில்லை. இதனால் அண்ணன், தம்பி 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கத்தி எடுத்து வந்த கிருஷ்ணா மாதேசை குத்தினார். உறவினர்கள் தடுத்து கத்தியை பிடுங்கினார்கள். ஆத்திரம் தீராத கிருஷ்ணா அரிவாளை எடுத்து வந்து அண்ணனின் தலையில் பின்பக்கம் அடித்தார். இதில் அவர் சுருண்டு விழுந்தார்.

    பின்னர் அங்கிருந்து கிருஷ்ணா தப்பி ஓடிவிட்டார். சுருண்டு விழுந்த மாதேசை தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.

    இந்த கொலை குறித்து தளி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து கிருஷ்ணாவை தேடி வருகிறார்கள். 

    பொள்ளாச்சி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பைனான்ஸ் அதிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அருகே உள்ள கோத்தாம்பட்டியை சேர்ந்தவர் மணி என்கிற குண்டுமணி (39). பைனான்ஸ் அதிபர். இவருக்கும் குள்ளக்கா பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளியும் டிரைவருமான குணசேகரன் மனைவி மணி மேகலைக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் மணியின் மனைவி பேபிக்கு தெரிய வந்தது.

    அவர் கணவரை கண்டித்தார். கள்ளத்தொடர்பை கைவிடும் படி கேட்டுக் கொண்டார். இதில் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    மணிமேகலை கணவர் குணசேகரனும் மனைவியை கண்டித்தார்.

    இதனை தொடர்ந்து மணிமேகலையை அவரது கணவரிடம் இருந்து பிரித்து புளியம்பட்டியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து மணி தங்க வைத்தார். அங்கு அடிக்கடி சென்று வந்தார்.

    தனது மனைவியை பிரித்ததால் குணசேகரன் ஆத்திரத்தில் இருந்தார். நேற்று இரவு மணிமேகலையுடன் மணி புளியம்பட்டியில் இருந்தார். அங்கு வந்த குணசேரகன் தான் கொண்டு வந்த கத்தியால் மணியை சரமாரியாக குத்தினார்.

    இதில் அவரது உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ரத்த வெள்ளத்தில் துடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி மணி இறந்தார். அவரை குத்தி கொன்ற குணசேகரன் தலைமறைவாகி விட்டார்.

    இது குறித்து மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான குணசேகரனை தேடி வருகிறார்கள்.

    மனைவியுடன் கள்ளதொடர்பு வைத்திருந்த பைனான்ஸ் அதிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    உத்தமபாளையம் அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண்ணை காரில் கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் அருகே கோகிலாபுரம் தெற்குதெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது35). இவரது மனைவி சாந்தி(32). இவர்களுக்கு சருஷா, வினோஷா என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    அதேபகுதியில் உள்ள பிரைமரி பள்ளியில் சருஷா படித்து வருகிறார். அவரை அழைப்பதற்காக தனது தாய் செல்வி மற்றும் வினோஷாவுடன் சாந்தி சென்றார்.

    மகளை அழைத்துக் கொண்டு வீடுதிரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த ரினோஷ் என்ற வாலிபர் காரில் வேகமாக வந்து சாந்தி மற்றும் குழந்தைகளை கடத்திக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமணன் இது குறித்து ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    வாணரப்பேட்டையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை வாணரப்பேட்டை உடையார் தோட்டம் ஏழை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 43). சுமை தூக்கும் தொழிலாளி.

    இவருக்கு சுதா என்ற மனைவியும், ஜாஸ்மின் (22) என்ற மகளும், டேனியல் (14) என்ற மகனும் உள்ளனர். ஜாஸ்மின் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

    இவருக்கு பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக பல்வேறு இடங்களில் வரன்கள் தேடினர்.

    தனக்கு திருமணம் செய்து வைப்பதை அறிந்த ஜாஸ்மின் தற்போது எனக்கு திருமணம் வேண்டாம் என கூறினார். ஆனால், பெற்றோர் வடலூரை சேர்ந்த ஹென்றி என்ற வாலிபருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

    இதில், இருவீட்டு சம்மதத்துடன் கடந்த மாதம் 9-ந் தேதி பெண் வீட்டில் வைத்து நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பிறகு மீண்டும் ஜாஸ்மின் தனக்கு திருமணம் வேண்டாம் என்றும், தான் மேலும் படிக்க வேண்டும் என கூறினார்.

    ஆனால், பெற்றோர் அதை கண்டுகொள்ளாமல் திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர். கடந்த 31-ந் தேதி ஜெயசீலன் வழக்கம் போல் வேலைக்கு சென்றார்.

    மனைவி சுதா மகள் திருமணம் சம்பந்தமாக வெளியே சென்றார். ஜாஸ்மினும் அவரது தம்பி ஹென்றியும் வீட்டில் இருந்தனர்.

    அப்போது ஜாஸ்மின் திடீரென அறை கதவை உள்பக்கமாக பூட்டி கொண்டார். பின்னர் அவர் மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு கொண்டார்.

    இதை கண்ட அவரது தம்பி ஹென்றி கதவை தட்டினார். ஆனால், கதவு திறக்கப்படாததால் அவர் கூச்சலிட்டார்.

    இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் கதவை உடைத்து ஜாஸ்மினை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் ஜாஸ்மின் சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார்.

    இதுகுறித்து ஜெயசீலன் முதலியார்பேட்டை போலீ சில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், ஏட்டு செஞ்சிவேல் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×