என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புகார்"
பாகூர்:
விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவரது மகள் தேவிகலா (வயது 19).
இவர், கடலூரில் உள்ள நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் அங்குள்ள விடுதியில் தங்கி கல்லூரி சென்று வந்தார். சம்பவத்தன்று தேவிகலா கல்லூரி முடிந்து சொந்த ஊருக்கு செல்ல உறவினர் தேவராஜ் என்பவருடன் பஸ்சில் வந்து கொண்டு இருந்தார்.
தவளக்குப்பம் சந்திப்பில் பஸ் நின்ற போது, திடீரென தேவிகலா பஸ்சை விட்டு இறங்கினார். சிறிது நேரத்தில் தேவிகலா மாயமானார். தோழிகள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் எங்கும் தேவிகலா இல்லை.
இதையடுத்து தேவிகலா மாயமானது குறித்து தேவராஜ் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து யாராவது தேவிகலாவை கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஒட்டங்காடு ஊராட்சி , மதன்பட்டவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மனைவி காந்திமதி.
சம்பவத்தன்று சுமார் 30 வயது மதிக்கத்தக்க திருநங்கை ஒருவர், காந்திமதியின் கால் வலிக்கு நாட்டு வைத்தியம் பார்ப்பதாக கூறி அவரது வீட்டிற்கு வந்துள்ளார். இரவு நேரம் ஆனதால், திருநங்கை காந்திமதி வீட்டிலேயே தங்கி விட்டார்.
மறுநாள் அதிகாலையில் வீட்டில் தூங்கிய திருநங்கையும், காந்தி மதியின் மகள் அதிர்ஷ்டமேரியும் (வயது21) காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த காந்திமதி பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் அவர்கள் 2 பேரையும் காணவில்லை.
இந்த நிலையில், திருநங்கை விட்டுச் சென்ற செல்போன் சிம்கார்டை பரிசோதனை செய்து பார்த்த போது திருநங்கையின் படமும் அவரது பெயர் முனியம்மா என்பதும் தெரியவந்தது. அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்?என்ற விவரம் தெரியவில்லை.
இந்த சம்பவம் குறித்து காந்திமதி திருச்சிற்றம்பலம் போலீசில் புகார் செய்தார். திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அதிர்ஷ்டமேரியை கடத்தி சென்ற திருநங்கை முனியம் மாவை தேடி வருகிறார்கள். #tamilnews
உத்தமபாளையம்:
தேனி அருகே உத்தம பாளையம் நாராயண தேவன்பட்டியை சேர்ந்தவர் தங்கபாண்டியன். அதே பகுதியில் மன வளர்ச்சி குன்றிய 26 வயது பெண் தனது தந்தையுடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று தங்க பாண்டியன் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த பெண் சத்தம் போட்டதால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து இளம்பெண்ணின் உறவினர் ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய தங்கபாண்டியனை தேடி வருகின்றனர்.
அரக்கோணம்:
திருத்தணியை சேர்ந்த தெய்வசிகாமணி (வயது 45) ரைஸ் மில் வைத்துள்ளார். இவர் அரக்கோணம் தனியார் வங்கி ஒன்றில் நேற்று மதியம் தனது கணக்கிலிருந்து ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் எடுத்துக்கொண்டு அதை ஒரு கவரில் சுற்றி பைக் பெட்டியில் வைத்துக் கொண்டு திருத்தணி நோக்கி சென்றார்.
அப்போது வழியில் தனியார் கல்லூரி முன்பு உள்ள டீ கடை முன்பு வண்டியை நிறுத்தி விட்டு டீ குடித்துவிட்டு திரும்பி வந்து பைக் அருகே வந்தபோது பெட்டி திறந்திருந்ததை பார்த்து திடுக்கிட்டார். உள்ளே இருந்த பணத்தை காணவில்லை. பணம் திருடுபோனதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
அங்கே நிறைய பைக்குகளும் ஆள் நடமாட்டமும் இருந்தது பதட்டத்துடன் அங்கிருந்தவர்களிடம் விசாரித்த போது யாருக்கும் தெரியவில்லை என்று கூறினார்கள்.
இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சூலூர்:
சூலூர் கே.கே.சாமி நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன்(48). இவரது மனைவி முத்துலட்சுமி(44). 2 பேரும் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள்.நேற்றிரவு பணி முடிந்து இருவரும் வழக்கம் போல சூலூருக்கு தங்களது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
சூலூர் குமரன் கோட்டம் அருகே வரும்போது பின்னால் வந்த இருசக்கர வாகனத்தில் வந்த ஹெல்மெட் அணிந்த கொள்ளையன் முத்துலட்சுமியின் கழுத்திலிருந்த 7 பவுன் தாலிச்செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டான். அருகிலிருந்தவர்கள் விரட்டிச் சென்றும் அவனைப் பிடிக்க முடிய வில்லை. அதைத்தொடர்ந்து நாராயணன் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
சூலூர் சிறப்பு உதவி ஆய்வாளர் ரத்தினசாமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தார். தொடந்து செயின் பறிப்பு சம்பவம் சூலூர் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது. தாலி செயின் பறிப்பு அதிக அளவில் இரவு பகல் பாராமல் நடந்து வருகிறது. இதனால் வெளியே செல்லவே பெண்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள ஆனைமலையன்பட்டியை சேர்ந்தவர் ராசு (வயது62). இவரது மருமகன் ஜீவமணி (54). இவர்கள் 2 பேரும் டி.இ.எல்.சி. சர்ச் தெருவை சேர்ந்த 5 வயது சிறுமியை தங்களது வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அலறியடித்தவாறு வீட்டை விட்டு வெளியேறி தனது தந்தையிடம் அழுதவாறு கூறி உள்ளார்.
இதனை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராசு மற்றும் ஜீவமணியை கைது செய்தனர். #tamilnews
புதுவை தியாகராஜர்வீதியை சேர்ந்தவர் கணபதி ரவி. இவரது மனைவி விமலா (வயது38). இவர் பூமியான்பேட்டையை சேர்ந்த கிரிஜா என்பவரிடம் ஏலச்சீட்டு கட்டி வந்தார். ஏலச்சீட்டு தவணைக்காலம் முடிந்தும் விமலாவுக்கு அதற்கான பணத்தை கிரிஜா கொடுக்காமல் பல்வேறு காரணங்களை கூறி காலம் கடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு விமலா ஏலச்சீட்டு பணத்தை கேட்க கிரிஜா வீட்டுக்கு சென்றார். அப்போது இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த கிரிஜா மற்றும் அவரது மகன் சரவணன் ஆகிய இருவரும் சேர்ந்து விமலாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து விமலா ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோட்டயத்தை அடுத்த குருவிலாங்காட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை ஜலந்தர் பிஷப் பிராங்கோ முல்லக்கல் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது.
புகாரில் கன்னியாஸ்திரி கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பிஷ்ப் பிராங்கோ முல்லக்கல் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி இருந்தார். இது குறித்து கோட்டயம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர் அவர்கள் ஜலந்தர் சென்றும் விசாரணை நடத்தினர். இதையடுத்து வருகிற 19-ந்தேதி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளனர்.
இதற்கிடையே புகாருக்கு ஆளான பிஷப் பிராங்கோ முல்லக்கல்லை கைது செய்யக் கோரி கன்னியாஸ்திரியின் ஆதரவாளர்கள் கொச்சியில் உண்ணாவிரதப் போராட் டம் தொடங்கினர்.
இதில் 5 கன்னியாஸ்திரிகளும், அவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். அவர்கள் பிஷப் பிராங்கோ முல்லக்கல்லை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறி வருகிறார்கள். இன்று 7-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.
கன்னியாஸ்திரிகளின் போராட்டத்திற்கு பல்வேறு சமூக அமைப்புகளும், பெண்கள் உரிமைக்கான சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. நடிகை ரீமா கல்லிங்கல் போராட்ட களத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
இதுபோல எழுத்தாளர் சாராஜோசப், மனித உரிமை ஆர்வலர் அஜிதா, நடிகை பாக்கியலெட்சுமி ஆகியோர் நேற்று போராட்ட மேடைக்கு சென்று ஆதரவு தெரிவித்து பேசினார்கள். அரசியல் கட்சி பிரமுகர்களும், மகளிரணி நிர்வாகிகளும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே பிஷப் பிராங்கோ முல்லக்கல்லை கைது செய்யக்கோரி 3 பேர் கேரள ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தனர். அதில், பிஷப் பிராங்கோ முல்லக்கல்லை கைது செய்ய உத்தரவிட வேண்டும், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கேரள போலீசாரின் விசாரணையில் திருப்தி அடைவதாக தெரிவித்தனர். கன்னியாஸ்திரி புகாரில்கூறி உள்ள சம்பவங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.
எனவே அதனை தெளிவாக விசாரிக்க தாமதம் ஆகும். அதுவரை பொறுத்திருக்கதான் வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் தகினிக்கோட்டை தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகள் சர்மிளா (19). இவர் கொழுந்துலூரில் உள்ள தனியார் கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம். படித்து வருகிறார்.
கடந்த 12-ந் தேதி கல்லூரிக்கு சென்ற சர்மிளா மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளிலும் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சர்மிளாவின் தாய் கவிதா கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரண்வாயல் கிராமத்தை சேர்ந்தவர் நந்தினி (27). காது மற்றும் பேச முடியாத மாற்றுத்திறனாளி. குன்றத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 12-ந் தேதி வேலைக்கு சென்ற நந்தினி மாயமானார். இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் இளம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கோமதி (21). கடந்த 12-ந் தேதி ஜெராக்ஸ் எடுக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுபற்றி புகாரின் பேரில் மப்பேடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்