என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "students"

    • 2021-22-ல் 103.4 சதவீதமாக இருந்த மொத்த மாணவர் சேர்க்கை விகிதம், 2023-24-ல் 97.1 ஆக சரிந்திருப்பதாக தெரிவித்தார்.
    • அனைத்து பிரிவு மாணவர் சேர்க்கை 57.56-ல் இருந்து 56.2 ஆகவும் சரிந்திருக்கிறது.

    புதுடெல்லி:

    மக்களவையில் நேற்று பழங்குடியின மக்களின் வாழ்க்கைத்தரம் குறித்த கேள்விகளுக்கு மத்திய பழங்குடியினர் நலத்துறை மந்திரி துர்காதாஸ் உய்கி பதிலளித்தார். அப்போது தொடக்கப்பள்ளிகளில் பழங்குடியின மாணவர்களின் சேர்க்கை விகிதம் கடந்த 2023-24-ம் கல்வி ஆண்டில் குறைந்திருப்பதாக கூறினார்.

    குறிப்பாக 2021-22-ல் 103.4 சதவீதமாக இருந்த மொத்த சேர்க்கை விகிதம், 2023-24-ல் 97.1 ஆக சரிந்திருப்பதாக தெரிவித்தார். அதேநேரம் ஒப்பீட்டளவில் அனைத்து சமூக மாணவர்களும் தொடக்கப்பள்ளிகளில் சேரும் விகிதம் 100.13 சதவீதத்தில் (2021-22) இருந்து 91.7 (2023-24) ஆக குறைந்திருக்கிறது.

    உயர்நிலைப்பள்ளிகளில் பழங்குடியின மாணவர் சேர்க்கை 78.1 சதவீதத்தில் இருந்து 76.9 ஆகவும், அனைத்து பிரிவினரின் விகிதம் 79.56-ல் இருந்து 77.4 ஆக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. மேல்நிலைப்பள்ளிகளில் பழங்குடியினர் மாணவர் சேர்க்கை விகிதம் 52-ல் இருந்து 48.7 ஆகவும், அனைத்து பிரிவு மாணவர் சேர்க்கை 57.56-ல் இருந்து 56.2 ஆகவும் சரிந்திருக்கிறது.

    முன்னதாக பள்ளிகளில் சமீபத்திய ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை குறைந்திருப்பதாக நேற்று முன்தினம் காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி மக்களவையில் குற்றம்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக மோடி அரசை குறை கூறியிருந்த அவர், இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • பாதிக்கப்பட்ட மாணவர்கள் கடத்தூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
    • மாணவர்கள் பாதிக்கப்பட்டதையடுத்து உணவு மாதிரியை பரிசோதனைக்காக உணவு பாதுகாப்புத்துறைக்கு ஆசிரியர்கள் அனுப்பி வைத்தனர்.

    தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அரசுப் பள்ளியில் இன்று காலை உணவு வழங்கப்பட்டது. காலை உணவை 80 மாணவர்கள் சாப்பிட்டனர்.

    சிறிது நேரம் கழித்து காலை உணவு சாப்பிட்ட 16 மாணவர்கள் வயிறு வலிப்பதாக கூறினர். மற்ற மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் கடத்தூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    காலை உணவு சாப்பிட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டதையடுத்து உணவு மாதிரியை பரிசோதனைக்காக உணவு பாதுகாப்புத்துறைக்கு ஆசிரியர்கள் அனுப்பி வைத்தனர்.

    • பிளேடால் சீவிகொள்பவர்களுக்கு 10 ரூபாய் தருவதாக கூறினான்.
    • 40 மாணவ-மாணவிகள் கை விரல்களை சீவிக் கொண்டனர்.

    அகமதாபாத்:

    குஜராத்தில் வீடியோவில் வரும் விளையாட்டை பார்த்து அடிமையான ஒரு பள்ளி மாணவன் அந்த வீடியோ விளையாட்டு போன்று சக மாணவ-மாணவிகளிடம் சவால் விட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    குஜராத்தில் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 7-வது படித்து வரும் மாணவன் எப்போதும் வீடியோ விளையாட்டுகளில் மூழ்கி இருந்தான். கை விரல்களை வெட்டி கொள்ளும் வீடியோ விளையாட்டு ஒன்றை பார்த்து அவன் அதேபோன்று பள்ளியிலும் விளையாட முடிவு செய்தான்.

    கடந்த வாரம் அவன் சக மாணவர்களிடம் அந்த வீடியோ கேம் விளையாட்டை காண்பித்து கைவிரல்களை பிளேடால் சீவிகொள்பவர்களுக்கு 10 ரூபாய் தருவதாக கூறினான். இந்த சவாலில் வெற்றி பெறவிட்டால் தனக்கு 5 ரூபாய் தந்துவிட வேண்டும் என்று அவன் பந்தயம் கட்டினான்.


    அவனது வீடியோ சவால் விளையாட்டை ஏற்று அவனுடன் படிக்கும் 40 மாணவ-மாணவிகள் பிளேடை எடுத்து கை விரல்களை சீவிக் கொண்டனர்.

    இதைக் கண்டு வகுப்பு ஆசிரியை கடும் அதிர்ச்சி அடைந்தார். இது வெளியில் தெரிந்தால் சர்ச்சையாகி விடும் என்று அவர் மாணவர்களை அதட்டி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மறைத்துவிட்டார்.

    என்றாலும், கடந்த 21-ந் தேதி சமூக வலைதளம் மூலம் இந்த தகவல் பரவியது. 40 மாணவ-மாணவிகள் கைவிரல்களை வெட்டி கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

    இதையடுத்து போலீசார் அந்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். வீடியோ கேமில் அடிமை யாகி இருந்த அந்த 7-ம் வகுப்பு மாணவனை அழைத்து கவுன்சிலிங் கொடுக்க தொடங்கி உள்ளனர்.

    • ஒரு அறையில் சில மாணவர்கள் தேர்வில் காப்பியடித்து எழுத முயன்றுள்ளனர்.
    • தேர்வில் காப்பியடிக்க அனுமதிக்காத ஆசிரியர்கள் மீது அந்த மாணவர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    தேர்வில் காப்பியடிக்க அனுமதிக்காத ஆசிரியர்களின் வாகனத்தின் மீது மாணவர்கள் சிலர் பட்டாசு வீசியிருக்கின்றனர். கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் மலப்புரம் சேந்தப்புராயா பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 தேர்வு நடந்திருக்கிறது. தேர்வை கண்காணிக்கும் பணியில் ஈடுபட வேறு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வந்துள்ளனர். இந்தநிலையில் ஒரு அறையில் சில மாணவர்கள் தேர்வில் காப்பியடித்து எழுத முயன்றுள்ளனர்.

    அதனை அந்த அறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீபுகுமார் மற்றும் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் தடுத்துள்ளனர். ஆனால் எதிர்காலம் கருதி காப்பியடிக்க முயன்ற மாணவர்களை பற்றி அந்த ஆசிரியர்கள் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் தேர்வில் காப்பியடிக்க அனுமதிக்காத ஆசிரியர்கள் மீது அந்த மாணவர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

    தேர்வு எழுதி விட்டு வகுப்பறையை விட்டு வெளியே வந்த அவர்கள், தேர்வில் காப்பியடிப்பதை தடுத்த ஆசிரியர்களின் வாகனங்கள் மீது பட்டாசுகளை வீசினர். ஆசிரியர்களின் வாகனங்களின் மீது விழுந்து பட்டாசுகள் வெடித்து சிதறின. இதனால் அந்த பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தேர்வில் காப்பியடிக்க அனுமதிக்காததால் தங்களின் வாகனங்களின் மீது பட்டாசு வீசப்பட்டிருப்பதாக அந்த ஆசிரியர்கள் பள்ளியின் முதல்வரிடம் தெரிவித்தனர். அவர் அதுபற்றி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆசிரியர்களின் வாகனங்களின் மீது பட்டாசு வீசியது யார்? என்பதை கண்டு பிடிக்க அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ள வீடியோ காட்சிகளை போலீசார் ஆய்வு செய்கின்றனர்.

    • பஸ்சை ஓட்டி வந்த நபர்கள், பஸ்சில் டீசல் இல்லாததால் நிறுத்தி விட்டு சென்றுள்ளது தெரிய வந்தது.
    • கல்லூரி காவலர் கேட்டபோது, ஸ்பேர் பஸ் எடுத்து வரச் சொன்னதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியின் பஸ் மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாக காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து ஆலங்குடி போலீசார் மாவட்டம் முழுவதும் தகவல் கொடுத்து சோதனை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் ஆலங்குடியில் காணாமல் போன கல்லூரி பஸ், அறந்தாங்கி அருகே நிற்பது தெரிய வந்தது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அறந்தாங்கி போலீசார், ஆலங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    பஸ்சை ஓட்டி வந்த நபர்கள், பஸ்சில் டீசல் இல்லாததால் நிறுத்தி விட்டு சென்றுள்ளது தெரிய வந்தது.

    அறந்தாங்கி போலீசாரின் தகவலையடுத்து, ஆலங்குடி போலீசார் அறந்தாங்கி விரைந்து சென்று காணாமல் போன கல்லூரி பஸ்சை மீட்டு வந்தனர்.

    இதனை தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட அதே கல்லூரியில் படிக்கும் 4 மாணவர்கள் அங்கு நின்ற கல்லூரி பஸ்சை ஓட்டிக்கொண்டு சென்றுள்ளனர்.

    இதுகுறித்து கல்லூரி காவலர் கேட்டபோது, ஸ்பேர் பஸ் எடுத்து வரச் சொன்னதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.

    பஸ் வெளியே சென்ற பிறகு தான், அந்த பஸ் அதே கல்லூரி மாணவர் மற்றும் அவரது நண்பர்களால் கடத்தப்பட்டுள்ளது தெரிந்துள்ளது.

    இந்த பஸ்சை திட்டமிட்டு கடத்தியதால் ஏதேனும் தவறான எண்ணத்தில் கடத்தி இருப்பார்களோ? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.

    இச்சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆலங்குடி போலீசார் பஸ்சை கடத்திய மாணவர்கள் 4 பேரையும் தேடி வருகின்றனர். 

    • 12 ஆம் வகுப்பு வணிக நிர்வாகத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
    • வினாத்தாள் தயாரித்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராஜஸ்தானில் நேற்று முன்தினம் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு வணிக நிர்வாகத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. புதிய தேர்வு தேதியை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு வணிக நிர்வாகத் தேர்வு வினாத்தாள் அப்படியே நகல் எடுக்கப்பட்டு இந்தாண்டு நடைபெற்ற தேர்விலும் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இந்த விவகாரத்தில் ராஜஸ்தான் பள்ளி கல்வி வாரியம் அலட்சியத்துடன் செயல்பட்டதாக புகார் எழுந்த நிலையில், வினாத்தாள் தயாரித்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • எம்.பி.ஏ. பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களை சமீபத்தில் ஒரு கும்பல் தொடர்பு கொண்டு பேசியது.
    • மாணவர்களுக்கான உதவி மையத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர்.

    மும்பை:

    மராட்டியத்தில் என்ஜினீயரிங், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., சட்டம், பி.எட் உள்ளிட்ட படிப்புகளில் சேர பொது நுழைவுத்தேர்வு (சி.இ.டி.) நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத்தேர்வு அடுத்த மாத தொடக்கத்தில் நடைபெற உள்ளது.

    இந்தநிலையில் எம்.பி.ஏ. பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களை சமீபத்தில் ஒரு கும்பல் தொடர்பு கொண்டு பேசியது. அந்த கும்பல் நுழைவுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வைப்பதாகவும், பிரபல கல்லூரிகளில் இடம் வாங்கி தருவதாகவும் கூறி மாணவர்களிடம் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை கேட்டனர்.

    இதுகுறித்து மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அமைக்கப்பட்டு இருந்த மாணவர்களுக்கான உதவி மையத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். பின்னர் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் டெல்லியை சேர்ந்த கும்பல் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவுகளை திருடி பிரபல கல்லூரிகளில் சீட்டு வாங்கித்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மோசடி தொடர்பாக டெல்லியை சேர்ந்த அபிஷேக் ஸ்ரீவட்சாவ், சேத்தன் குமார், அம்பிரிஷ் குமார் ஆகியோரை கைது செய்தனர்.

    • பள்ளி மாணவர்கள் பாடம் படிக்கும்போது போக்குவரத்து தலைப்பில் ரெயில் மற்றும் விமானங்கள் பற்றி வந்திருந்தது.
    • பிள்ளைகள் நாங்கள் விமானத்தில் போக முடியுமா? ரெயிலில் போக முடியுமா? என கேள்வி எழுப்பினார்கள்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அருகே உள்ள பண்டாரம் பட்டியில் செயல்பட்டு வரும் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல அறக்கட்டளை பெயரில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ், பள்ளிக்கு தனது சொந்த செலவில் கட்டிடம் மற்றும் கணினி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செய்து இருந்த நிலையில், பள்ளியில் போக்குவரத்து பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருக்கும்போது ஒரு மாணவன் தலைக்கு மேலே பறக்கக்கூடிய விமானத்தில் நாம் என்று பறப்போமோ என்று ஆதங்கத்தோடு கேட்டுள்ளார்.

    அது மட்டுமல்லாமல் சொந்த ஊர் அருகே ரெயில்வே நிலையம் இருக்கிறது. ஆனால் ரெயிலில் கூட பயணித்ததில்லை எனக் கூறிய மாணவ-மாணவர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்கு முடிவு செய்தார் தலைமை ஆசிரியர் பொன்ராஜ்.

    மாணவர்களிடம் தன் சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் செல்வதாக கூறிய தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் 3 மாதங்களுக்கு முன்பே தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு முன்பதிவு செய்து அதன்படி இன்று காலை 18 மாணவ-மாணவிகளை விமானத்தில் அழைத்துச் சென்று சென்னையில் வண்டலூர் பூங்கா மற்றும் மெட்ரோ ரெயில் பூண்டவட்டில் அழைத்துச் சென்று பார்வையிட உள்ளனர். நாளை மாலை சென்னையில் இருந்து முத்துநகர் ரெயில் மூலம் தூத்துக்குடிக்கு வருகை தர இருக்கின்றனர்.

    மிகவும் வறுமையில் இருக்கக்கூடிய நிலையில் நாங்கள் விமானத்தில் பறப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறும் மாணவர்கள் எங்களால் விமானத்தில் பணம் கொடுத்து பயணம் செய்ய முடியாத நிலையில் எங்கள் ஆசிரியர் அவரது சொந்த செலவில் சென்னைக்கு அழைத்துச் சென்று உயிரியல் பூங்காக்களை பார்வையிட வைப்பது ரெயிலில் அழைத்துச் செல்வது போன்ற விஷயங்கள் தங்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்திருப்பதாகவும் நல்லாசிரியர் பொன்ராஜ்க்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் உருக்கமாக மாணவர்கள் கூறினர்.

    இதுகுறித்து தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் கூறுகையில், 2014-ம் ஆண்டு முதல் பண்டாரம் பட்டிக்கு தலைமை ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் பாடம் சம்பந்தமாக மாணவர்களை எனது சொந்த செலவில் அழைத்துச் செல்வது வழக்கம், பள்ளி மாணவர்கள் பாடம் படிக்கும்போது போக்குவரத்து தலைப்பில் ரெயில் மற்றும் விமானங்கள் பற்றி வந்திருந்தது. பிள்ளைகள் நாங்கள் விமானத்தில் போக முடியுமா? ரெயிலில் போக முடியுமா? என கேள்வி எழுப்பினார்கள்.

    அது எனது மிகுந்த கஷ்டமாக இருந்தது. தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து 17 மாணவ-மாணவிகள் மற்றும் இரண்டு பெற்றோர்கள், தான் உட்பட 20 பேர் செல்கிறோம். இதற்கு சுமார் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் செலவு ஆகிறது என்றார். மேலும் மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது தனக்கு சந்தோஷமாக இருப்பதாக தெரிவித்தார்.

    • கேரளாவில் சமீபகாலமாக போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
    • தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கூட போதைப் பொருட்கள் எளிதாக கிடைக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் அனைத்து வளங்களும் நிறைந்த மாநிலமாக திகழ்கிறது. இதனால் மாநிலத்தின் பெரும்பாலான நிலப்பகுதி வனம் மற்றும் நீர்நிலைகள் நிறைந்தவையாக திகழ்கிறது. மேலும் பல பிரசித்தி பெற்ற கோவில்கள் அங்கு இருப்பதால் கடவுளின் தேசம் என்றும் அழைக்கப்படுகிறது.

    இப்படிப்பட் பெருமைகள் நிறைந்த கேரளாவில் சமீபகாலமாக போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மட்டுமன்றி சடடவிரோத போதை மருந்தாக இருக்கும் எம்.டி.எம்.ஏ. பயன்பாடும் அதிகமாக இருக்கிறது.

    வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்களில் கடத்தல்காரர்களிடம் கோடிக்கணக்கில் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் சிக்குவதே அதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். போதைப் பொருட்கள் பயன்பாடு இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

    அவர்கள் மட்டுமின்றி தற்போது பள்ளி மாணவர்களும் அதிகளவில் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். அங்கு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கூட போதைப் பொருட்கள் மிகவும் எளிதாக கிடைக்கிறது.

    தொடக்கப்பள்ளி வகுப் பறைகளை கூட போதை பொருட்கள் எளிதில் சென்றடைவதால் குழந்தை கள் போதை பழக்கத்தில் சிக்கி வரும் அதிர்ச்சி தகவல் சமீபத்திய ஆய்வு ஒன்றில் வெளியாகியிருக்கிறது.

    கேரளாவில் குழந்தைகள் போதை பழக்கத்திற்கு உள்ளாவது குறித்து கோட்டயத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தின் ஆலோசகர் அலீஷா சனிஷ் வேதனையான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

    எங்களின் மையத்தில் மறுவாழ்வு பெற்ற 210-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் இரண்டாம் வகுப்பிலேயே 70 சதவீதம் பேர் போதை பழக்கத்திற்கு உள்ளானது தெரியவந்தது.

    இந்த மையத்தில் போதைப் பொருள் பழக்கத்தில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். அவர்கள் போதை பழக்கத்தில் இருந்து விடுபட போராடுகிறார்கள்.

    எங்கள் மையத்திற்கு வந்த 12 வயது சிறுவன் ஒருவன் மழலையர் பள்ளியில் படிக்கும் போதே ஹாஷிஸ் எண்ணையை பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறான். கிளர்ச்சி அல்லது விரக்தி காரணமாக அந்த சிறுவன் அதனை பயன்படுத்தத் தொடங்க வில்லை.

    தன்னை விட பெரிய குழந்தைகள் பயன்படுத்தியதை பார்த்து, தானும் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பயன்படுத்த விரும்பி இருக்கிறார். பின்பு அதனை பயன்படுத்தியிருக்கிறார். அது கொடுத்த உணர்வு அவருக்கு பிடித்திருக்கிறது. அதனால் அதனை பயன்படுத்தியிருக்கிறார்.

    இப்படித்தான் பல குழந்தைகள், சிலர் பயன்படுத்துவதை பார்த்து ஆர்வம் காரணமாக தாங்களும் பயன்படுத்தி போதை பழக்கத்திற்கு அடிமையாகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    ஆர்வத்தின் காரணமாக போதை பழக்கத்திற்கு குழந்தைகள் அடிமையாவதை போன்று போதைப் பொருள் வாசனை பிடித்து அடிமையாகுபவர்களும் இருக்கிறார்கள். கோட்டயம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் சம்பவத் தன்று பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்திருக் கிறான்.

    அப்போது அவனின் மீது வித்தியாசமான வாசனை வந்ததை அவனது தந்தை கண்டுபிடித்தார். அந்த வாசனையை மறைக்க அந்த சிறுவன் 'மா' இலைகளை தின்றபடி இருந்திருக்கிறார். இந்த வித்தியாசமான பழக்கத்தை சிறுவனின் பெற்றோர் கவனித்தனர். அவனது செயல்பாடு மற்றும் பேச்சில் ஆக்ரோஷம் அதிகமாக இருந்ததையும் பார்த்தனர்.

    ஒரு நாள் அந்த சிறுவன் தனது இளைய சகோதரருடன் சண்டையிட்டார். அப்போது தனது சகோதரனின் மீது அந்த சிறுவன் கத்திரிக்கோலை வேகமாக வீசினார். அந்த கத்திரிக்கோல் அங்கிருந்த டி.வி. மீது விழுந்தது. டி.வி.யின் ஸ்கிரீன் உடைந்தது. சிறுவனின் அந்த ஆக்ரோஷ செயலை பார்த்த பெற்றோர் பீதியடைந்தனர்.

    இதையடுத்து அந்த சிறுவனை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். சிறுவனின் சிறுநீர் பரிசோதிக்கப்பட்டதில் அவனுக்கு போதை பழக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அதிலிருந்து விடுபட அவனுக்கு சிகிச்சை பெற செய்திருக்கின்றனர்.

    போதை பழக்கத்திற்கு அடிமையாகும் சிறுவர்கள் மூர்க்கத்தனமாக மாறி விடுவதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளதாக ஆய்வு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போதைப் பொருள் பயன்பாடு ஒருவருக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது? என்று திருவனந்தபுரத்தில் உள்ள மறுவாழ்வு மையத்தின் இயக்குனர் டிபின்தாஸ் கூறியிருப்பதாவது:-

    எம்.டி.எம்.ஏ. போன்ற போதை பொருட்கள் பயன்பாடு கடந்த ஆண்டில் கஞ்சாவை முந்தியுள்ளது. இது ஒருவரது உணர்வை மட்டும் மாற்றாது. அவரது தன்னிலையை அழிக்கிறது.

    கடந்த ஆண்டில் எங்களின் மையத்தில் 36 வயதுக்கு உட்பட்டவர்களை அனுமதித்தோம். மேலும் போதை பழக்கத்ததால் புற்று நோயாளிகளாகிய 47 பேருக்கு சிகிச்சையும் அளித்தோம்.

    18 முதல் 22 வயதுடைய 116 இளைஞர்கள் உள்நோயா ளியாகவும், 80 பேர் வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்றனர். மொத்தமாக கடந்த ஆண்டு எங்களிடம் 530 பேர் நோயாளியாக இருந்து சிகிச்சை பெற்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் ஆவர்.

    பலர் தங்களது இளைமை காலங்களில் போதை பழக்கத்திற்க அடிமையானவர்கள். மேலும் பலர் பள்ளி படிப்பு காலத்தில் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள். அவர்கள் பள்ளிப் படிப்பையும் தொடர முடியாத நிலைக்கு சென்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் இயக்குனர் பிரான்சிஸ் மூத்தேடன், போதை பழக்கத்திற்கு அடிமையாகி சிகிச்சை பெற பள்ளி மாணவிகளும் வரும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். அவர் கூறியிருப்பதாவது:-

    பள்ளி மாணவிகள் அதிரப்பள்ளி போன்ற சுற்றுலா தலங்களுக்கு பள்ளி நேரத்தில் செல்கின்றனர். தங்களின் நண்பர்களுடன் போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர். பின்னர் மாலையில் வீட்டுக்கு வழக்கம்போல் திரும்பி வந்து விடுகின்றனர்.

    திருச்சூர் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற நீர்வீழ்ச்சி அதிரப்பள்ளி. அதுபோன்ற இடங்களுக்கு செல்லக்கூடிய அனைவருமே போதை பழக்கத்திற்கு சென்று விடுவதில்லை. சிலர் அந்த பழக்கத்திற்கு தள்ளப்படு கிறார்கள்.

    முதலில் போதைப் பொருளை இலவசமாக கொடுக்கிறார்கள். அதன்பிறகு விலைக்கு வாங்க வைக்கிறார்கள். போதைப் பொருள் விற்பனைக்கு பள்ளி மாணவிகள் இழுக்கப்படுகிறார்கள். அவர்கள் பெரியவர்கள் ஆகவதற்கு முன்னதாகவே கடத்தல்காரர்களாக மாறி விடுகிறார்கள். இது ஒரு தீய சுழற்சி.

    போதைப்பொருள் பயன்பாடு ஆரம்ப காலத்தில் ஒருவரின் மூளை வளர்ச்சியை நிரந்தரமாக மாற்றும். ஒரு குழந்தைக்கு மரபணு பாதிப்பு இருந்தால் 18 வயதுக்கு பிறகு போதை பழக்கத்தில் இருந்து வெளியேற முடியாது. அவர்கள் தங்களின் வாழ்நாள் முழுவதும் போதை பழக்கத்துக்கு அடிமையாகலாம். மேலும் அவர்களுக்கு மனநல கோளாறுகளும் ஏற்படலாம்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    பள்ளி குழந்தைகள் தொடக்கக்கல்வி படிக்கும் போதே, போதை பழக்கத்தில் சிக்குவது பற்றி வெளியாகியிருக்கும் தகவல் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குடியேற்ற விஷயங்கள் ஒரு நாட்டின் இறையாண்மை செயல்பாடுகளுக்குள் இருக்கின்றன.
    • மாணவர்கள் சிரமத்தை எதிர்கொண்டால் அவர்களுக்கு இந்திய தூதரகங்கள் உதவும்.

    இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. அங்குள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மாணவ-மாணவிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இதில் பங்கேற்ற இந்திய மாணவி ரஞ்சனி சீனிவாசனின் விசா ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் அமெரிக்காவில் இருந்து தாமாக வெளியேறினார். இதற்கிடையே ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வரும் இந்திய மாணவரான பதர் கான் சூரி, ஹமாசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு இந்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:-

    விசா மற்றும் குடியேற்ற விஷயங்கள் ஒரு நாட்டின் இறையாண்மை செயல்பாடுகளுக்குள் இருக்கின்றன. இதுபோன்ற உள் விஷயங்களைத் தீர்மானிக்க அமெரிக்காவிற்கு உரிமை உண்டு. வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வரும்போது, அவர்கள் எங்கள் சட்டங்கள், விதிமுறைகளுக்குக் கட்டுப்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    அதேபோல், இந்தியர்கள் வெளிநாட்டில் இருக்கும்போது, அந்நாட்டின் உள்ளூர் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

    மாணவர்கள் ஏதேனும் சிரமத்தை எதிர்கொண்டால் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகங்கள் அவர்களுக்கு உதவும். பதர் கான் சூரி, ரஞ்சினி சீனிவாசன் ஆகியோர் உதவிக்காக அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகங்களை அணுகவில்லை. ரஞ்சினி சீனிவாசன் கனடாவுக்கு சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பரீட்சைக்கு குறுகிய காலம் இருக்கும் போது கால அட்டவணை மிகமிக முக்கியமானது.
    • குறுவினா, மல்ட்டிபிள் சாய்ஸ் உள்ளிட்ட தேர்வு வினாக்களை புரிந்து கொள்ள வேண்டும்.

    ஓராண்டு பாடத்திட்டங்கள் கிட்டத்தட்ட முடிந்து, இப்போது முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. ஒருசில வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வுகள் தொடங்க இருக்கின்றன. இந்நிலையில் பாடம் நடத்த நடத்த படித்து புரிந்து கொள்ளும் மாணவர்களுக்கு மத்தியில், பாடங்களை இறுதியில் படித்து கொள்ளலாம் என நினைக்கும் மாணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதில் சிலர், தாங்கள் நினைத்தபடியே இறுதியில் ஒட்டுமொத்தமாக படித்து 'பாஸ்' மார்க் வாங்குவதுடன், ஒருசிலர் கணிசமான மதிப்பெண்களை பெறுகிறார்கள். அத்தகைய மனபக்குவம் கொண்ட மாணவர்களாக நீங்கள் இருந்தால், இந்த செய்தி தொகுப்பு உதவியாக இருக்கும். தேர்வு நெருங்கிய இறுதி நேரத்தில், எப்படி பாடங்களை படிப்பது, எப்படி தேர்வுக்கு தயாராகுவது என்பதை அறிந்து கொள்வோம்.

    1. கால அட்டவணை

    பரீட்சைக்கு குறுகிய காலம் இருக்கும் போது கால அட்டவணை மிகமிக முக்கியமானது. என்ன தேர்வு முதலில் வர இருக்கிறது, அந்த தேர்வுக்கான பாடத்தின் முதல் பகுதி, கடைசி பகுதி, அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் பகுதி என பாடத்திட்டத்தை நீங்களே பிரித்தெடுத்து அதற்கு ஏற்ப கால அட்டவணையை தயார் செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல, கால அட்டவணைக்கு ஏற்ப பாடங்களை படித்து, தேர்வுக்கு தயாராக வேண்டும்.

    2. வினா வகை

    குறுவினா, மல்ட்டிபிள் சாய்ஸ் உள்ளிட்ட தேர்வு வினாக்களை புரிந்து கொள்ள வேண்டும். என்ன வகையான வினாக்கள், எப்படிப்பட்ட அமைப்பை நமது பாடம் கொண்டுள்ளது என்பதை புரிந்து கொண்டு அதில் அதிக மதிப்பெண் பெறும் முறையில் படிக்க வேண்டும்.

    3. துறை ரீதியாக தயாராகுதல்

    நீங்கள் படிக்கும் துறை சார்ந்து தேர்வுக்கு தயாராக வேண்டும். வரலாறு, உயிரியல், மொழி சார்ந்த பாடங்களை மனப்பாடம் செய்து தேர்வுக்கு தயாராக வேண்டும். அரசியல், விஞ்ஞானம், பொறியியல் போன்ற பாடங்களை நன்கு புரிந்து கொண்டு தயாராக வேண்டும். கணிதம், வணிகவியல் போன்ற பாடங்களை தீர்வு காணும் வகையில் படிக்க வேண்டும்.

    4. அதிக முக்கியத்துவத்தை உணருதல்

    பாடத்திட்டத்தில் எந்த பகுதியை படித்தால் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும், எந்த பகுதியில் அதிக கேள்விகள் வரும் என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு தேர்வுக்கு தயாராக வேண்டும்.

    5. உணவும், உறக்கமும்...

    உணவும் உறக்கமும் இரு கண்கள் என்று நினைத்துக் கொண்டு அளவோடு உண்டு உறங்குவது தேர்வு பயிற்சிக்கு மிகமிக முக்கியமானது. அதிகம் உண்டால் தேர்வின் போது தூக்கம் வரும். நீண்ட நேரம் விழித்திருந்தாலும் இதே பிரச்சினை தொடரும். எனவே அளவோடு உணவை உட்கொள்ள வேண்டும். எளிதில் செரிமானமாகும் உணவை தேர்வு செய்ய வேண்டும். கிரீன் டீ, சாக்லெட்டுக்கள் போன்றவற்றை அவ்வப்போது படிக்கும் நேரத்தில் சாப்பிட்டால் உற்சாகத்துடன் படிக்கலாம்.

    • பள்ளிக்கு செல்ல காத்திருந்த 7 மாணவிகள் மீது அவ்வழியே பைக்கில் வந்த கும்பல் ஒன்று வலுக்கபட்டயமாக வண்ணப்பொடியை வீசத் தொடங்கியது.
    • 7 மாணவிகளுக்கும் மூச்சுத் திணறல் மற்றும் மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது

    நாடு முழுவதும் நேற்று இந்துமத பண்டிகையான ஹோலி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இந்நிலையில் கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மேஷ்வர் நகரில் ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் பள்ளி மாணவிகள் மீது ரசாயன வண்ணம் பூசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நேற்று பஸ் நிறுத்தத்தில் பள்ளிக்கு செல்ல காத்திருந்த 7 மாணவிகள் மீது அவ்வழியே பைக்கில் வந்த கும்பல் ஒன்று வலுக்கபட்டயமாக வண்ணப்பொடியை வீசத் தொடங்கியது.

    அந்நேரத்தில் பஸ் வந்ததால் மாணவிகள் உடனே பஸ்ஸில் ஏறினர். ஆனால் அந்த கும்பல் விடாமல் துரத்திச் சென்று பஸ்ஸில் ஏறி அந்த 7 மாணவிகள் மீது மேலும் வண்ணப்பொடியை பூசியுள்ளது. அந்த வண்ணப்பொடியில் பசுவின் சாணம், முட்டை, ஃபீனைல் மற்றும் பிற இரசாயனங்கள் கலந்திருந்தாக கூறப்படுகிறது.

    இதனால் 7 மாணவிகளுக்கும் மூச்சுத் திணறல் மற்றும் மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. உடனே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து சிறுமிகளின் பெற்றோர் பதறியடித்து மருத்துவமனைக்கு ஓடி வந்தனர்.

    7 பேரில் 4 மாணவிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று கூறப்படுகிறது. அவர்கள் மேல் சிகிச்சைக்காக கடக் GIMS மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    மற்ற மூவர் உள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெற்றோர் மற்றும் அவ்வூர் மக்கள் இடையே கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. வண்ணம் பூசிவிட்டு பைக்கில் தப்பியோடிய அந்த கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.  

    ×