என் மலர்
நீங்கள் தேடியது "suicide"
- டெல்லி ஐஐடியில் பயின்ற மாணவர்கள் இருவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டனர்.
- கடந்த இரண்டு மாதங்களில், கல்லூரி விடுதிகளில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக அதிக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
நாட்டில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி மைய விடுதிகளில் மாணவர்களின் தற்கொலை வழக்குகள் அதிகரித்து வருவது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
டெல்லி ஐஐடியில் பயின்ற மாணவர்கள் இருவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டனர். தங்கள் பிள்ளைகள் சாதிரீதியான பாகுபாடு காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர் குற்றம்சாட்டனர். ஆனால் இதுகுறித்த புகாரை காவல்துறை எடுத்துக்கொள்ள மறுப்பதால் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பெற்றோர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் ஜே. பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், கடந்த இரண்டு மாதங்களில், கல்லூரி விடுதிகளில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக அதிக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைகான் காரணம் குறித்து நாம் விவாதிக்க வேண்டும்.
பாகுபாடு, ராகிங் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் காரணமாக பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். கல்வி நிறுவன வளாகத்துக்குள் தற்கொலை உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்தால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் தரப்பிலிருந்து உரிய அதிகாரிகளால் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்படுவதை உறுதி செய்வது கட்டாயக் கடமையாகும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, முன்னாள் நீதிபதி எஸ். ரவீந்திர பட் தலைமையில் 9 பேர் அடங்கிய தேசிய அளவிலான செயற்குழு அமைக்கப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். ஒரு மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், உயர்கல்வி, சமூக நீதி மற்றும் சட்ட விவகாரங்கள் துறையின் செயலாளர்கள் அதன் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கான முக்கிய காரணங்களைக் கண்டறிந்து, தற்போதுள்ள விதிமுறைகளை பகுப்பாய்வு செய்து, பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய விரிவான அறிக்கையை செயற்குழு தயாரிக்கும் என்று தெரிவித்தனர்.
மேலும், தனது அறிக்கையைத் தயாரிக்கும் பணியில், எந்தவொரு உயர்கல்வி நிறுவனத்திலும் திடீர் ஆய்வு நடத்த செயற்குழுவுக்கு அதிகாரம் உண்டு. இந்தப் செயற்குழு நான்கு மாதங்களுக்குள் இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பிக்கும். அதே நேரத்தில் இறுதி அறிக்கை எட்டு மாதங்களுக்குள் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
- பிரியாவுக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதை சிறுது காலத்திலேயே சிவப்பிரகாஷ் அறிந்து கொண்டார்.
- ஒரு விபத்தில் சிவபிரகாஷ் படுகாயமடைந்த பின்னர் மனைவி பிரியா தனது பிறந்த வீட்டுக்கு சென்றுவிட்டார்.
மத்தியப் பிரதேசத்தில் இன்ஸ்டாகிராம் நேரடி அமர்வின் போது ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரின் மனைவி மற்றும் மாமியார் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் கூற்றுப்படி, மத்தியப் பிரதேசம், ரேவா மாவட்டத்தில் வசித்து வந்த சிவபிரகாஷ் திரிபாதி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரியா சர்மாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள் இருக்கிறாள். ஆனால் பிரியாவுக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதை சிறுது காலத்திலேயே சிவப்பிரகாஷ் அறிந்து கொண்டார். இதனால் இருவருக்கும் இடையில் பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இதற்கிடையே ஒரு விபத்தில் சிவபிரகாஷ் படுகாயமடைந்த பின்னர் மனைவி பிரியா தனது பிறந்த வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மனஉளைச்சலில் இருந்த சிவப்பிரகாஷ் கடந்த மார்ச் 16 ஆம் தேதி இன்ஸ்டாகிராம் லைவ் ஸ்ட்ரீமிங் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நேரலையில் தற்கொலைக்கு முன் பேசிய அவர், தனது மனைவியும் மாமியாரும்தான் தற்கொலைக்கு காரணம் என்றும் திருமண வாழ்க்கையால் தனது சந்தோஷத்தை இழந்துவிட்டதாகவும் கூறினார்.
சிவபிரகாஷ் தற்கொலை செய்துகொள்ளும் 44 நிமிடங்கள் இன்ஸ்டா நேரலையை அவரது மனைவி பிரியாவும், மாமியாரும் பார்த்துக்கொண்டிருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக வழகுபதவு செய்து விசாரித்து வந்த போலீசார் தற்போது பிரியாவையும் அவரது தாயையும் கைது செய்துள்ளனர்.
- அவர் என்னை அல்ல, என் வேலையை மணந்தார்.
- அவன் தனது தந்தையைப் போல மாறுவதை நான் விரும்பவில்லை
டெல்லியில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் PGT நுண்கலை ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் அன்விதா சர்மா (29 வயது). இவர் கடந்த 2019 இல் கௌரவ் கௌசிக் என்வரை மணந்தார். கௌசிக் தனியார் மருத்துவமனை ஒன்றில் டாக்டராக உள்ளார். இவர்களுக்கு நான்கு வயது மகன் உள்ளான்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) அன்விதா சர்மா, 'சமைத்துவிட்டேன், சாப்பிடுங்கள் கௌரவ்' என கணவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டுதனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கான காரணம் குறித்து தனது பெற்றோருக்கும், சகோதரருக்கும் அன்விதா நீண்ட வாட்சப் குறிப்பு ஒன்றை அனுப்பினார். அதில் தனது கணவன், மாமியார் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.
"அவர் என்னை அல்ல, என் வேலையை மணந்தார். நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன், ஆனால் அது ஒருபோதும் போதவில்லை. அவர்கள் மாமியார் மீது மட்டுமே கவனம் செலுத்தும் ஒரு மருமகளை விரும்பினர்.

ஆனால் என் பெற்றோரும் சகோதரரும் எனக்கு அவர்களின் அளவுக்கு சமமாக முக்கியமானவர்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் என் கணவர் செய்தது போல் யாரும் என்னை இவ்வளவு கேலி செய்திருக்க முடியாது.
நான் செய்த எல்லாவற்றிலும் அவர் தவறுகளைக் கண்டுபிடித்தார். மாமியாரோ, வேலை செய்யும் பணிப்பெண்ணை மட்டுமே விரும்பினார். மகிழ்ச்சியாக இருப்பதுபோல் நடித்து நடித்து சோர்வாக உணர்கிறேன். அவமானங்களை இனியும் தாங்க முடியாது.
என் கணவரால் எனது வங்கிக் கணக்குகள், காசோலை புத்தகம் மற்றும் அனைத்தையும் அணுக முடியும். தயவுசெய்து என் குழந்தையை மட்டும் கவனித்துக் கொள்ளுங்கள். இந்த உலகில் நான் என் மகனை மிகவும் நேசிக்கிறேன், நீங்கள் அவரை உங்களுடன் வைத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவன் தனது தந்தையைப் போல மாறுவதை நான் விரும்பவில்லை" என்று அன்விதா தனது பெற்றோருக்கு எழுதியுள்ளார்.

கோப்புப்படம்
ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் கௌஷிக் மற்றும் அவர்களது மகன் வெளியே சென்றிருந்தபோது அன்விஷா தூக்கிட்டு தற்கொலை செய்தார். அன்விதாவின் மெசேஜை பார்த்தவுடன், அவரது குடும்பத்தினர் உடனடியாக அன்விதாவைத் தொடர்பு கொள்ள முயன்றனர்.
ஆனால் அவர்களின் அழைப்புகளுக்கு பதிலளிக்கப்படவில்லை. அவர்கள் கௌஷிக்கிற்கு தகவல் தெரிவித்தனர். அவர் வீடு திரும்பினார், ஆனால் கதவு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார். வீட்டிற்குள் நுழைய ஜன்னல் கிரில்லை வெட்டினர் . உள்ளே சென்று பார்த்தபோது அன்விதா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.
இந்நிலையில் மகளின் இறப்பு தொடர்பாக அவி அன்விதாவின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், திருமணத்திற்குப் பிறகு, அன்விதாவின் கணவர், மாமனார் மற்றும் மாமியார் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தத் தொடங்கினர்.
அவளுடைய முழு சம்பளம், காசோலை புத்தகம் மற்றும் ஏடிஎம் கார்டுகளையும் அவர்களே பெற்றுக்கொண்டனர். மார்ச் 16 அன்று, அவர்கள் என் மகளை கடுமையான உடல் மற்றும் மன ரீதியாகவும் துன்புறுத்தினர், இதனால் அவர் தற்கொலைக் குறிப்பு எழுதி, துயரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரை அடுத்து அன்விதாவின் கணவர் கௌஷிக், மாமனார் மற்றும் மாமியாரை வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
- இந்த போட்டி உலகில் பின்தங்கிவிடுவார்கள் என்றும் தொடர்ந்து பயந்ததாகக் கூறப்படுகிறது.
- கணவர் தூக்கில் தொங்கிய நிலையிலும், குழந்தைகள் மயக்கமடைந்த நிலையிலும் இருப்பதைக் கண்டார்.
ஆந்திரப் பிரதேசத்தில் மகன்கள் சரியாக படிக்காததால் அவர்களை கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடாவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (ONGC) ஊழியராக இருந்தவர் 37 வயதான சந்திர கிஷோர். இவருக்கு ஏழு மற்றும் ஆறு வயதுடைய இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் அவர்களை தண்ணீர் நிறைந்த வாளியில் மூழ்கடித்து கொன்றார்.
இதன் பின்னர் அவர் படுக்கையறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்ற அவரது மனைவி அறைக்கதவை திறந்தபோது, கணவர் தூக்கில் தொங்கிய நிலையிலும், குழந்தைகள் மயக்கமடைந்த நிலையிலும் இருப்பதைக் கண்டார்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, சந்திர கிஷோர் தனது மகன்கள் படிப்பில் சிறந்து விளங்கவில்லை என்றால், எதிர்காலத்தில் அவர்கள் சிரமப்பட வேண்டியிருக்கும் என்றும், இந்த போட்டி உலகில் பின்தங்கிவிடுவார்கள் என்றும் தொடர்ந்து பயந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த மன அழுத்தத்தால், அவர் இவ்வளவு இறுதியில் இந்த முடிவை எடுத்துள்ளார். இதற்கிடையே சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆண்டு 2,635 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக அமைச்சர் தகவல்.
- விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசு கொள்கை தயார் செய்ய வேண்டும்.
மகாராஷ்டிராவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கை கவலை அளிக்கும் விதமாக உள்ளது. விவசாயிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு இதற்கு கொள்கை வகுக்க வேண்டும் என சரத் பவார் வலியுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆண்டு 2,635 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக, சட்டசபையில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக சரத் பவார் கூறுகையில் "மராத்வாடா மற்றும் விதர்பா பகுதிகளில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை தொடர்பாக வெளியான தகவல் கவலையளிக்கும் விதமாக உள்ளது. நாங்கள் வெவ்வேறு இடங்களில் சரியான தரவுகளை சேகரிக்க உள்ளோம். விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசு கொள்கை தயார் செய்ய வேண்டும்.
இவ்வாறு சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மேலும், சரத் பவார் கட்சியின் ஜெயந்த் பாட்டீல் அஜித் பவார் கட்சிக்கு மாற இருப்பதாக தகவல் வெளியானது குறித்து கேட்க கேள்விக்கு, இது தொடர்பாக மீடியாவுக்கு அவர் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்" என்றார்.
பாராமதியில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது ஜெயந்த் பாட்டீல் சரத் பவாரை சந்தித்து பேசினார். பின்னர், தான் விரக்தியில் உள்ளது. தன்னுடைய கருத்தில் இருந்து தவறான முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
- இன்றைக்கு வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட தங்கள் உயிரை மாய்த்து கொள்கிறார்கள்.
- சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்தவர்களும் இருப்பவர்களும், பிரபலங்களும் பலருக்குத் தன்னம்பிக்கை உணர்வை ஊட்டியவர்களும்கூட தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
திருச்சி:
இன்றைக்கு இயற்கை மரணங்களுடன் போட்டி போடும் அளவுக்கு தற்கொலைகள் அதிகரித்து விட்டன. கோழைத்தனமும், தாழ்வு மனப்பான்மையும் ஒருவரை இந்த துயர முடிவுக்கு தள்ளி விடுகிறது.
முன்பெல்லாம் தற்கொலைக்கு காதல் தோல்வி, கடன் பிரச்சனைகள், தீராத வியாதி போன்ற வலுவான காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால் இன்றைக்கு வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட தங்கள் உயிரை மாய்த்து கொள்கிறார்கள்.
இதில் வயது வரம்பு இல்லை. 10 வயது முதல் வயதான முதியவர் வரை வயது வித்தியாசம் இன்றி தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். இந்தியாவில் கடந்த 54 ஆண்டுகளில் 17.56 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் உள்பட 4.7 கோடி பேர் தற்கொலை செய்து வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளனர் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது. சமீப காலமாக தற்கொலைகளின் எண்ணிக்கை சகட்டுமேனிக்கு உயர்ந்துள்ளது. அதிலும் பல பேர் குடும்பத்துடன் தற்கொலை செய்கிறார்கள்.
குடும்பத் தலைவரின் தற்கொலை முடிவு ஏதும் அறியாத சின்னஞ்சிறு குழந்தைகளையும் கொன்று விடுகிறது. இது வேதனையின் உச்சமாக இருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி பெல் நிறுவன பொது மேலாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலைக்கான காரணம் புரியாத புதிராக உள்ளது. இருதய நோயால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு அலுவலக அறையில் பிணமாக மீட்கப்பட்டார்.
அவருக்கென்ன ராஜா மாதிரி என்பார்களே அந்த இடத்தில் தான் பெல் அதிகாரியும் இருந்தார். மத்திய அரசு பணி, மனைவி தனியார் பள்ளி ஆசிரியை, புகழ்பெற்ற என்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் ஒரே மகள். அவருக்கு என்ன பிரச்சனையோ அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். ஆனால் குடும்ப அளவில் பெரிய கடன் பிரச்சனைகள் இருப்பதாக தெரியவில்லை.
இந்த சம்பவம் நடந்த அடுத்த 2 நாட்களில் சென்னை திருமங்கலத்தில் டாக்டர், தனது வழக்கறிஞர் மனைவி மற்றும் 2 மகன்களுடன் தற்கொலை செய்து கொண்ட தகவல் வெளியானது. இவர் கடன் பிரச்சனையால் குடும்பத்துடன் தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இதேபோன்று சில வாரங்களுக்கு முன்பு சேலம் தொழிலதிபர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் புதுக்கோட்டை அருகே காரில் குடும்பத்தோடு வந்து, தன்னை மாய்த்துக் கொண்டதுடன் தனது வயதான தாய், மனைவி, மகன், மகள் அனைவரையும் விஷம் அருந்த செய்து அனைவரும் காருக்குள்ளேயே பிணமாக மீட்கப்பட்டனர்.கரூரில் கடந்த மாதம் ஒரு தொழிலாளி குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் மனைவி, மகளை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை திருவொற்றியூரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மனைவி இறந்த துக்கம் தாங்கமுடியாத கணவர் தனது 19 வயது மகள், 14 வயது மகன் ஆகியோருடன் தற்கொலை செய்து கொண்டார்.
இவ்வாறு நாளும் பொழுதும் தற்கொலை சம்பவங்கள் நடந்து வருகின்றன. வாழ்க்கை வாழ்வதற்கே. எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் இறைவன் அழைக்கும் வரை வாழ்ந்து விட வேண்டும்.
இதுபோன்ற துயர முடிவுகளுக்கு நடக்கும் எந்த விஷயத்துக்கும் ஒரு தீர்வாக, தற்கொலைதான் என இவர்களால் நம்பப்படுகிறது என்கின்றன உளவியல் ஆய்வுகள். ஒருவருக்கு வேலைப் பளுவால் ஏற்படக்கூடிய அழுத்தமும் மற்றொருவருக்கு குடும்பத்தில் ஏற்பட்ட விரக்தியும் தற்கொலையை நோக்கித் துரத்துகிறது.
தான் நினைத்தது நடக்கவில்லை என்ற ஏமாற்றம், வேலையின்மை, கடன், தொழிலில் நஷ்டம், தோல்வி பயம், காதல் தோல்வி, குற்றவுணர்வு, அவமானம், எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம், போதைக்கு அடிமையாதல், கல்விச் செலவு, நோய், மருத்துவச் செலவு, வரதட்சிணைப் பிரச்சினை, விபத்து, விவாகரத்து, உறவுகளைப் பிரிந்துவிட்டோம் என்ற ஏக்கம், பாலியல் வன்கொடுமை, முறையற்ற கர்ப்பம், குழந்தையின்மை, சட்டச் சிக்கலில் மாட்டிக்கொள்வது, பணிச் சுமையால் ஏற்படும் மனச் சோர்வு, மற்றவர்களுக்கு நாம் சுமையாக, பாரமாக இருக்கிறோமோ என்ற எண்ணம், தேர்வில் தோல்வி, உடல்ரீதியான குறைபாடு, எதிர்பாராத செலவுகள், கந்துவட்டிக் கடனை நோக்கிக் கை நீட்டியதன் விளைவு என எத்தனையோ காரணங்கள் தற்கொலைக்குக் காரணமாகின்றன.
சுயமதிப்பும் தன்னம்பிக்கையும் இல்லாதவர்கள் மட்டுமே தற்கொலை செய்துகொள்வதில்லை. சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்தவர்களும் இருப்பவர்களும், பிரபலங்களும் பலருக்குத் தன்னம்பிக்கை உணர்வை ஊட்டியவர்களும்கூட தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
சமூகச் சூழலின் நெருக்குதலைச் சமாளிக்க முடியாமல் பெரியவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். கூடவே எந்தப் பாவமும் அறியாத தங்களுடைய குழந்தைகளையும் சேர்த்து, தற்கொலை என்ற பெயரில் கொலை செய்துவிடு கிறார்கள். இவற்றுக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று, பாரம்பரியமான நம்முடைய கூட்டுக் குடும்ப முறை முற்றிலுமாக அழிந்துபோனதுமாகும். பெரியவர்கள், சிறியவர்கள் என சகல வயதினரும் உறவுகளும் கலந்து வாழும்போது எந்தவொரு பிரச்சினை என்றாலும் விவாதமும் பரஸ்பர ஆற்றுப்படுத்தலும் எளிதாக இருந்தது. பெற்றோர்கள் நமக்குப் பாரம் என்ற எண்ணத்தை முதலில் தூக்கி எறிந்துவிட்டு, அவர்கள் நம்முடைய பொக்கிஷம் என்ற எண்ணம் இன்றைய இளைய தம்பதியினரிடையே உருவாக வேண்டும். இளமை என்ற இறுமாப்பைத் தளர்த்தி முதுமை பற்றிய தெளிவான அறிவைப் பெற வேண்டும்.
உண்மையான வாழ்க்கையின் உன்னதம் எது என்பதை அறியாமல் போனதும் எது வாழ்க்கை என்பதை ஒவ்வொரு வரும் தெளிவாகப் புரிந்து அறிந்துகொள்ளாததுமே தற்கொலை - கொலைகள் பெருகக் காரணங்களாக அமைகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆக வாழ்க்கை வாழ்வதற்கே.... சாவதற்கல்ல...
- சில நாட்களுக்கு முன்பு பங்கு விலைகள் சரியத் தொடங்கியதால் அவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்
- கூரையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் இருப்பதைக் கண்டனர்.
ஜார்க்கண்டில் பங்ச்சந்தையில் பணத்தை இழந்ததால் ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் சிட்கோரா காவல் பகுதியில் வசித்தவர் சஞ்சீவ் குமார் (25 வயது). இவருக்கு ஒரு மூத்த சகோதரனும் ஒரு சகோதரியும் உள்ளனர்.
குமார், ஆன்லைனில் வகுப்பு எடுக்கும் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அவர் பங்குச் சந்தையில் அதிக அளவில் பணத்தை முதலீடு செய்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு பங்கு விலைகள் சரியத் தொடங்கியதால் அவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் பங்குச் சந்தையில் தனது பணத்தை இழந்ததால் நேற்று (செவ்வாய்க்கிழமை) அவர் வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காலையில், பலமுறை கதவைத் தட்டியும் அவர் பதிலளிக்காததால், அவரது குடும்பத்தினர் அவரது அறைக்குள் நுழைந்து பார்த்தபோது கூரையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் இருப்பதைக் கண்டனர்.
அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவிட்டனர். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வளர்கின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050
- தூத்துக்குடி சுனாமி காலனியை சேர்ந்தவர் கணேசன் மீனவர்
- இவருக்கு சமீபகாலமாக உடல்நலம் குறைவு ஏற்பட்டுள்ளது
தூத்துக்குடி:
தூத்துக்குடி சுனாமி காலனியை சேர்ந்தவர் கணேசன் (வயது 58). மீனவர். இவருக்கு திரும ணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளது.
இவருக்கு சமீபகாலமாக உடல்நலம் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு கணேசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெர்மல் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடலூரில் மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
- கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த திருமாணிக்குழியை சேர்ந்தவர் விட்டல் நாதன் (வயது 87). இவரது மனைவி கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இதன் காரணமாக முதியவர் விட்டல்நாதன் மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில், சம்பவத்தன்று அதே பகுதியில் பூச்சி மருந்து குடித்து மயக்க நிலையில் இருந்தார்.
இவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று விட்டல்நாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காதல் விவகாரத்தில் 2 வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
காரியாபட்டி அருகே உள்ள கீழஉப்பிலிக்குண்டு வைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் சதுரகிரி (20). இவர் மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அவரை திருமணம் செய்து கொள்வதற்கான விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர்கள் சிறிது காலம் ஆகட்டும் என கூறியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த சதுரகிரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
ஸ்ரீவில்லிபுத்தூர் இடையபொட்டல் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். அதே பகுதியில் இட்லி கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சிவராமன் (27). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். திருமணத்திற்கு சம்மதம் கேட்டபோது, பெற்றோர்கள் கடன்களை அடைத்துவிட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த சிவராமன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டாஸ்மாக் விற்பனையாளர் தூக்கிட்டு தற்கொலை ெசய்து கொண்டார்.
- அண்ணன் சிகிச்சைக்கு பணம் ஏற்பாடு செய்ய முடியவில்லை
கரூர்
குளித்தலையை அடுத்த தண் ணீர்ப்பள்ளியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், (வயது 45). இவர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். இவரது அண்ணன் மோகன்குமாருக்கு கடந்த ஓராண்டாக உடல் நலமின்றி சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் அவரது மேல் சிகிச்சை செலவுக்கு பணம் ஏற்பாடு செய்ய முடியாத நிலையில், கோபாலகிருஷ்ணன் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று, கோபாலகிருஷ்ணன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு மனைவி ராதா. ஒரு மகன், மகள் உள்ளனர். ராதா அளித்த புகாரின்படி, குளித்தலை போலீசார் வழக் குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
- மனநிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே ஆலம்பாடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் செல்வபாண்டியன். இவரது மனைவி ஜீவா (வயது 40). இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். செல்வபாண்டியன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ஜீவாவுக்கு உதவியாக அவருடன், அவரது தாய் சின்னம்மாள் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக ஜீவா சற்று மனநிலை பாதிக்கப்பட்டு, அதற்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மதியம் சின்னம்மாள் கடைக்கு சென்றிருந்தபோது, வீட்டில் இருந்த ஜீவா திடீரென்று மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். தீ உடல் முழுவதும் பரவியதால் அலறியபடி ஜீவா வீட்டின் வெளியே ஓடி வந்தார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் ஜீவா மீது எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சோ்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜீவா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக பெரம்பலூா் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."