என் மலர்
நீங்கள் தேடியது "மறியல்"
- சாலையை சீரமைக்க வேண்டுமென பலமுறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது.
- கீழப்பாவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தென்காசி:
கீழப்பாவூர் ஒன்றியம் கடப்பொகத்தி பகுதியில் உள்ள சாலை மிகவும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டுமென ஊர் பொதுமக்கள் சார்பில் கீழப்பாவூர் யூனியன் மற்றும் அரசு அலுவலர்களுக்கு பலமுறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் திடீரென 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக புதிய சாலை பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய பா.ஜனதா தலைவர் மாரியப்பன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, வக்கீல் பிரிவு தலைவர் கணபதி, மாவட்ட ராணுவ பிரிவு துணைத் தலைவர் சுரேஷ், இளைஞரணி துணைத்தலைவர் முரளிதரன் ஆகியோர் பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினர்.
அவர்களுடன் கீழப்பாவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பாவூர்சத்திரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அடுத்த 45 நாட்களுக்குள் சாலையை சீரமைத்து தருவதாக அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. உடனே பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- ராசிபுரம் டவுன் ஆத்தூர் ரோட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் அருகில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ராசிபுரம்:
ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சந்திரசேகரபுரம், தெற்குப்பட்டி, அக்ரஹாரம், முருங்கப்பட்டி, களரம்பட்டி, அணைப்பாளையம் தேவேந்திர் தெரு போன்ற பகுதிகளில் சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் அணைப்பாளையம் ஏரி தண்ணீர் குடியிருப்பு பகுதிகளிலும், வயல்களிலும் புகுந்தது.
இதனால் விளை நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கின. சந்திரசேகரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட 3 ஆழ்துளை கிணறுகள் ஏரி தண்ணீரால் மூழ்கியது.
இதன் காரணமாக தெற்குப்பட்டி, சந்திரசேக ரபுரம், அக்ரஹாரம் போன்ற பகுதிகளில் வசிக்கும் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வசதி கிடைக்க வில்லை என்றும், இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மின்மோட்டார்களை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கூறினர். மேலும் தெற்குப்பட்டியில் உள்ள ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு குடிநீர் குழாய் பதிக்க வேண்டும், அணைப்பாளையம் ஏரி தண்ணீரை திறந்து விட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில் கோரிக்கை களை நிறைவேற்றித் தரக் கோரி சந்திரசேகரபுரம், அக்ரகாரம், தெற்குபட்டி, முருங்கப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் காலி குடங்களுடன் ராசிபுரம் டவுன் ஆத்தூர் ரோட்டில் உள்ள காஞ்சி சூப்பர் மார்க்கெட் அருகில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மூதாட்டி ஒருவர் தரையில் படுத்து போராட்டம் நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) வனிதா தெற்குப்பட்டியில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிக்கு புதிய பைப் லைன் உடனடியாக போட்டு தரப்படும் என்று கூறினார். அதன் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர். கசாலை மறியல் காரணமாக அந்தப் பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
- மதுரையில் கழிவு நீரை அகற்ற கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
- மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் கடந்த வாரம் கனமழை பெய்தது. பெரிய கண்மாய்கள் நிரம்பி, மறுகால் பாய்ந்தன.
கூடல் புதூர் ஆபீசர்ஸ் டவுன், குலமங்கலம் மெயின் ரோடு மற்றும் மீனாம்பாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. அவை வெளியேறி செல்வதற்கான கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டது. அதனை மாநகராட்சி நிர்வாகம் சரி செய்யவில்லை. அங்கு தண்ணீர் தொடர்ந்து தேங்கி நிற்கிறது.
இதன் காரணமாக அங்கு வசிக்கும் பொது மக்கள் கொசு தொல்லை உள்பட பல்வேறு பிரச்சினைகளால் அவதிப்படுகின்றனர்.
இதை கண்டித்து 4-வது வார்டு, கனகவேல் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இன்று காலை குலமங்கலம் மெயின் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் கோஷம் எழுப்பினர்.
மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது.
- 60 பெண்கள் உள்பட 250 பேர் கைது
- குமரி மாவட்ட அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட அரசு ரப்பர் கழக தொழிலா ளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சு வார்த்தை கடந்த 11-ந் தேதியன்று நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு ரப்பர் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
அரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குனர் தின்கர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து ரப்பர் மற்றும் அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் வட சோி அரசு ரப்பர் கழக அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்ப ட்டது.
அதன்படி அனைத்து தொழிலாளர் சங்கங்கள் சார்பில் இன்று நாகர்கோ வில் வடசேரி அரசு ரப்பர் கழக அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க பொதுச் செயலாளர் வல்சலகுமார் தலைமை தாங்கினார். துணை தலைவா் நடராஜன், ஐ.என்.டி.யு.சி. கிழக்கு மாவட்ட தலைவா் பொன்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட முன்னாள் தலை வர் ராதாகிருஷ்ணன், தொ.மு.ச. மாநில துணை தலைவர் இளங்கோ, எம்.எல்.எப். தலைவர் பால்ராஜ், செயலாளர் ஜெரால்டு மற்றும் அனைத்து தொழிற் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். அவா்கள் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பி னா். பின்னர் அவர்கள் அனைவரும் அரசு ரப்பா் கழக அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தி னா்.
அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் மறியலில் ஈடுபட்டவர்க ளுக்கும், போலீசாருக்கு இடையே லேசான சலசலப்பு ஏற்பட்டது. இதற்கிடையே நாகா்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன் குமார் தலைமையில் இன்ஸ் பெக்டர்கள் திருமுருகன், ராமர், ஜெயலட்சுமி ஆகி யோா் மறியலை கைவிட்டு கலைந்து செல்லும்படி போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் கூறினர். ஆனால் தொடர்ந்து மறியல் போராட்டம் நடந்தது.
இதனைதொடர்ந்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொது செயலாளர் வல்சல குமார் மற்றும் 60 பெண்கள் உள்பட 250 பேரை வடசேரி போலீசார் கைது செய்தனர். அவர்களை அங்குள்ள ஒரு மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அனை வரும் விடுவிக்கப்பட்டார்கள்.
- சேலம் இரும்பாலை அடுத்த செம்மண் திட்டு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
- இதை அடுத்து அந்த பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு செம்மண் திட்டு பஸ் ஸ்டாப் பகுதியில் இன்று காலை 8:30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.
சேலம்:
சேலம் இரும்பாலை அடுத்த செம்மண் திட்டு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அங்குள்ள சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதை அடுத்து அந்த பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு செம்மண் திட்டு பஸ் ஸ்டாப் பகுதியில் இன்று காலை 8:30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் அங்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சாலையை சீரமைத்து தருவதாக உறுதி அளித்தனர். இதை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் இன்று காலை இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- குடிநீர் கேட்டு பெண்கள் திடீர் சாலை மறியல் நடைபெற்றது
- புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால்
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கூலாச்சிக்கொல்லை தெற்கு கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப் பகுதிக்கு கடந்த சில மாதங்களாகவே குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. இது தொடர்பாக இப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் வினியோகம் செய்யப்பட்ட குடிநீர் கலங்களாக வந்துள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் அதிகாரிகளை அணுகியுள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இது நாள் வரை எடுக்காததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் உடனடியாக அனைவரும் ஒன்று சேர்ந்து ஆலோசனை நடத்தினர்.
பின்னர் அவர்கள் காலி குடங்களுடன் கொத்தமங்கலம் பேருந்து நிலையம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தால் வாகனங்கள் போக்குவரத்து இன்றி இருபுறமும் அணிவகுத்து நின்றன. இத்தகவல் அறிந்த கீரமங்கலம் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது திருவரங்குளம் ஆணையர் வரும் வரை போராட்டம் தொடரும் என்று மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
- ஐஜி அலுவலகம் முன்பு மறியல் நடைபெற்றது
- தற்கொலை வழக்கில் நடவடிக்கை கோரி
திருச்சி:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சேர்ந்த தமிழழகி (வயது21) என்ற பெண் திருமணம் ஆகி இரண்டு வருடத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான மூன்று பேர் மீது இரண்டு வருடம் ஆகியும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. முறையான விசாரணையை டிஎஸ்பி நடத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட தமிழழகியின் உறவினர்கள் இன்று திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மத்திய மண்டல காவல்துறை தலைவர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்து. காவல்துறையினர் அவர்களை சட்டையை பிடித்து இழுத்து சாலை விட்டு தள்ளி நிற்க செய்தனர். இதனால் மத்திய மண்டல காவல்துறை அலுவலகம் முன்பு பரபரப்பு நிலவி வருகிறது.
- சாலையை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மறியலில் ஈடுபட்டனர்.
- இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர்.
மதுரை
மதுரை மாநகர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை விபத்துகளை ஏற்படுத்தும் குலமங்கலம் மெயின் ரோட்டை சீரமைக்க கோரி இன்று மறியல் போராட்டம் நடந்தது.
பல ஆண்டுகளாக சாலைகள் போடப்படாமல் இருக்கும் வ.உ.சி 1 , 2, அண்ணா தெரு , பாரதிதாசன் தெரு, சத்யா நகர், ஆபீசர் டவுன் ஆகிய தெருவில் சாலைகளை உடனடியாக அமைக்க வேண்டும். சத்தியமூர்த்தி மெயின்ரோடு , பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய வேண்டும்.குடிநீரில் சாக்கடை கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
22, 23, 24 ஆகிய வார்டுகளில் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கை களை வலியுறுத்தி பகுதிக்குழு செயலாளர் பாலு தலைமையில் இந்த மறியல் போராட்டம் மீனாம்பாள்புரம்-குலமங்கலம் மெயின் ரோடு சக்கரை செட்டியார் படிப்பகம் அருகில் நடந்தது.
இதில் 23-வது வார்டு கவுன்சிலர் குமரவேல், மாநிலக்குழு உறுப்பினர் விஜயராஜன் ஆகியோர் பேசினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர்.
- போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்
- பள்ளி மாணவியை அடித்த விவகாரம்
திருச்சி:
திருச்சி வரகனேரி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மனைவி ஜெர்மன் மேரி. இவர்களது மகள் பிலோசியா மேரி. இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவதன்று பிலோசியா மேரிக்கு மெட்ராஸ் ஐ காரணமாக 2 நாட்கள் பள்ளிக்குச் செல்லவில்லை. இதனை தொடர்ந்து அவர் பள்ளிக்கு சென்ற பொழுது வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று பள்ளி ஆசிரியர் கண்டித்து கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவியின் தாய் மேரி கோட்டை போலீசில் புகார் கொடுத்தனர்.
இந்த நிலையில் புகார் குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மாணவியின் பெற்றோர் இன்று திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு திருச்சி- புதுகை சாலையில் திடீரென்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தகவல் அறிந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
- கண்மாயில் கழிவு நீரை திறந்துவிடும் தனியார் மது ஆலையை கண்டித்து பொதுமக்கள் மறியல் செய்தனர்.
- நடவடிக்கை எடுப்பதாக சிவகங்கை தாசில்தார் உறுதியளித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை அருகே உள்ள உடைகுளம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான மது மூலப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு பின்புறம் உடைகுளம் கிராமத்திற்கு சொந்தமான 160 ஏக்கர் விவசாய நிலமும், அதற்கு நீர்வள ஆதாரமாக திகழும் கண்மாயும் உள்ளது.
மது ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரை அந்த கண்மாய்க்குள் திறந்து விடுகின்றனர். இதனால் கண்மாய் நீரின் தன்மை மாறுவதுடன் நிலத்தடி நீரும் மாசு பட்டு உபயோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பல ஆண்டுகளாக விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகள் இந்த நீரை அருந்தினால் இறந்துவிடுவதால் மேய்ச்சலுக்காக அழைத்து செல்ல முடியாத நிலை யும் ஏற்பட்டுள்ளது. இந்த மது ஆலைக்கு வரும் கனரக வாகனங்களால் இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள் பழுதாகி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து கிராம மக்கள் ஆலை நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் நேற்று கனரக வாகனங்களை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காளையார்கோவில் தாசில்தார் கிராம மக்களை சமாதானம் செய்ததுடன், ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மது ஆலை அதிகாரி களிடம் விசாரணை நடத்திய தாசில்தார் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
- புதிதாக பயணியர் நிழற்குடை அமைப்பதற்காக ஒப்பந்தம் விடப்பட்டு அதற்காக ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
- தனி நபர் ஒருவர் அந்த இடத்தில் நிழற்குடை அமைக்க கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மதுக்கூர்:
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, மதுக்கூர் அருகே உள்ள சிராங்குடி கிராமத்தில் உள்ள பழைய பயணிகள் நிழற்குடை ஒன்று சேதமானதை அடுத்து அதே இடத்தில் புதிதாக பயணியர் நிழற்குடை அமைப்பதற்காக ஒப்பந்தம் விடப்பட்டு அதற்காக ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த தனி நபர் ஒருவர் அந்த இடத்தில் நிழற்குடை அமைக்க கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து ஊராட்சி ஒன்றிய ஆணையர் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து நிதியை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சிரங்குடி கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சிராங்குடி மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பிரதீப் ராஜ் சவுக்கான், அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் துரை.செந்தில், தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியலால் பட்டுக்கோட்டை- மன்னார்குடி போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.
- மாரியம்மன் கோவில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- சீர்காழி- மயிலாடுதுறை சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி அருகே கதிராமங்கலம் முதல் மயிலாடுதுறை வரை சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இதையொட்டி சாலையின் இரு புறங்களிலும் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியால் சாலை ஓரம் உள்ள குடியிருப்புகள் பாதிக்கப்படுவதாக கூறி பொதுமக்கள் மயிலாடுதுறை சாலை திருநன்றியூர் மாரியம்மன் கோவில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்துக்கு பா.ம.க. மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி தலைமை தாங்கினார்.
அப்போது குடியிருப்பு வாசிகளுக்கு இடையூறாக அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், அமைக்கப்பட்ட வடிகாலை அப்புறப்படுத்தக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் புயல் பாலச்சந்திரன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
இந்த போராட்டத்தால் சீர்காழி- மயிலாடுதுறை சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.