search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரக்கன்று"

    • கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு மேலக்குறப்பாளையம் பகுதியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது
    • எம்.எல்.ஏ. இரா.மாணிக்கம் தொடங்கி வைத்தார்

    குளித்தலை,

    கரூர் மாவட்டம் குளித்தலை தி.மு.க. கழக மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வதியம் ஊராட்சி பகுதிகளான மேலகுறப்பாளையம் பகுதியில் குளித்தலை நெடுஞ்சாலை துறை சார்பாக கலைஞரின் நூறாவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு குளித்தலை எம்.எல்.ஏ. இரா.மாணிக்கம் தலைமையேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்நிகழ்ச்சியில் குளித்தலை தி.மு.க. மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொய்யாமணி தியாகராஜன், கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் செந்தில்குமரன், இளநிலை பொறியாளர் சந்திரமோகன், குளித்தலை மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் நெடுஞ்செழியன் மற்றும் சாலை பணியாளர்கள், பொதுமக்கள், தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பாபநாசம் உட்கோட்டத்தில் 2 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது.
    • மணலூர், வீரமாங்குடி, சோமேஸ்வ ரபுரம் சாலையில் 250 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    கபிஸ்தலம்:

    முன்னாள்முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் பாபநாசம் நெடுஞ்சாலை துறை உட்கோட்டத்தில் உயர் அதிகாரிகளின் உத்தரவுபடி பாபநாசம் உட்கோட்டத்தில் 2 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, முதல் கட்டமாக பாபநாசம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட மணலூர், வீரமாங்குடி, சோமேஸ்வ ரபுரம் சாலையில் 250 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    விழாவிற்கு ஊராட்சி தலைவர் சாந்தி கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

    முன்னதாக நெடுஞ்சா லைத்துறை இளநிலை பொறி யாளர் ரவி அனைவரும் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக பாபநாசம் ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    இதில் சாலை ஆய்வாளர்கள், நெடுஞ்சாலை துறை பணியாளர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கமுதி நெடுஞ்சாலையில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
    • சாலை ஆய்வாளர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி-சாயல்குடி நெடுஞ்சாலையில் கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில், கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழாவை தமிழகம் முழுவதும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து, கமுதி நெடுஞ்சாலை பகுதிகளில், நெடுஞ்சாலைதுறை சார்பில் உதவி கோட்ட பொறியாளர் சக்திவேல் ஏற்பாட்டில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் பார்த்திபன், சாலை ஆய்வாளர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டை நெடுஞ்சாலை துறை சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றது
    • மரக்கன்றுகளை, மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா நட்டார்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை நகராட்சி, தஞ்சாவூர் சாலை, சிட்கோ எதிரில், கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், மரக்கன்றுகளை, மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா நட்டார்.பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது, கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையின் மூலம் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியினை முதலமைச்சர் கடந்த 7-ந் தேதி அன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.

    அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை நெடுஞ்சா லைத்துறை கோட்டத்தி ற்குட்பட்ட தஞ்சாவூர் சாலையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 15 ஆயிரம் மரக்கன்றுகள் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் நடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்



    • பெரம்பலூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது
    • பணி்யை கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்.

    பெரம்பலூர்:

    மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து மாநில நெடுஞ்சாலைகளிலும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றும், இதனால் மாநில நெடுஞ்சாலைகளில் இடைவெளி இல்லாமல் மரங்கள் வளர்க்கப்படும் என்ற இலக்கு எட்டப்படும் என்றும் 2023-24-ம் ஆண்டு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

    அந்த அறிவிப்பிற்கிணங்க, கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்க நாளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் விழுப்புரம், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்டத்திற்குட்பட்ட, நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பெரம்பலூர் கோட்டத்தின் மூலம் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் அரசு சாலைகளின் ஓரங்களில் 5 ஆயிரம் எண்ணிக்கைகள் கொண்ட பலவகை மரக்கன்றுகள் நடும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் கற்பகம் கலந்து கொண்டு மாநில நெடுஞ்சாலையான பெரம்பலூர் புறவழிச்சாலையில் ஆலம்பாடி பகுதியில் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். இதில் நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பெரம்பலூர் கோட்டம், உட்கோட்டங்களின் பொறியாளர் கலைவாணி, பெரம்பலூர் உதவி கோட்ட பொறியாளர் மாயவேலு, உதவி பொறியாளர் ஆறுமுகம் மற்றும் சாலை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 25 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன
    • காவல் நிலையத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது


    புதுக்கோட்டை:


    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே அறிவுறுத்தலின் பேரில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. காவல் ஆய்வாளர் உஷா நந்தினி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மா, பலா, கொய்யா, சந்தனம் மற்றும் 25 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன. ஒவ்வொரு மரக்கன்றுகளுக்கும் கூண்டுகள் அமைத்து தண்ணீர் ஊற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அனைத்து போலீசார் உட்பட அருகில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


    ×