என் மலர்
நீங்கள் தேடியது "சாலை"
- சாலையை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மறியலில் ஈடுபட்டனர்.
- இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர்.
மதுரை
மதுரை மாநகர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை விபத்துகளை ஏற்படுத்தும் குலமங்கலம் மெயின் ரோட்டை சீரமைக்க கோரி இன்று மறியல் போராட்டம் நடந்தது.
பல ஆண்டுகளாக சாலைகள் போடப்படாமல் இருக்கும் வ.உ.சி 1 , 2, அண்ணா தெரு , பாரதிதாசன் தெரு, சத்யா நகர், ஆபீசர் டவுன் ஆகிய தெருவில் சாலைகளை உடனடியாக அமைக்க வேண்டும். சத்தியமூர்த்தி மெயின்ரோடு , பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய வேண்டும்.குடிநீரில் சாக்கடை கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
22, 23, 24 ஆகிய வார்டுகளில் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கை களை வலியுறுத்தி பகுதிக்குழு செயலாளர் பாலு தலைமையில் இந்த மறியல் போராட்டம் மீனாம்பாள்புரம்-குலமங்கலம் மெயின் ரோடு சக்கரை செட்டியார் படிப்பகம் அருகில் நடந்தது.
இதில் 23-வது வார்டு கவுன்சிலர் குமரவேல், மாநிலக்குழு உறுப்பினர் விஜயராஜன் ஆகியோர் பேசினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர்.
- புளியம்பட்டி தெருவில் சேரும் சகதியுமாக சாலைகளில் காட்சியளிக்கிறது.
- பள்ளி மாணவ-மாணவிகள் சாலையில் கடந்து செல்வதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது.
சாம்பவர்வடகரை:
சாம்பார்வடகரை 2-வது வார்டு புளியம்பட்டி தெருவில் உள்ள பொதுமக்கள் சாம்பவர்வடகரை பேரூராட்சிக்கு புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகாரில் புளியம்பட்டி தெருவில் உள்ள அனைத்து வீடுகளில் உள்ள கழிவு நீர்களும் வாறுகால் வசதி பயனளிக்காமல் சேரும் சகதியுமாக சாலைகளில் காட்சியளிக்கிறது. இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் சாலையில் கடந்து செல்வதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித பயனும் இல்லாததால் பொதுமக்கள் மீண்டும் புகார் அளித்துள்ளனர்.
- குண்டும், குழியுமான சாலைகளால் ராமேசுவரம் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
- தேசிய நெடுஞ்சாலைத்துறையும் பெயரளவில் மட்டுமே செயல்படுகிறது என பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.
ராமேசுவரம்
இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத்தில் பிரசித்தி பெற்றது ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலாகும். இங்கு தினமும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். தென்னகத்து காசி என்று அழைக்கப்படும் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது.
இதே போல் பிரசித்த பெற்ற தனுஷ்கோடி, அப்துல்கலாம் நினைவு மண்டபம் போன்றவை காண நாள்தோறும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் நகரில் வாகனப் பெருக்கமும் அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்கேற்ப சாலைவசதிகள் ராமேசுவரத்தில் இல்லை என்பது கவலைக்குறியது.
ராமேசுவரத்தில் 35 ஆயித்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பெரும்பாலான பகுதிகளில் குறைந்த அளவே அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதே போல் ராமேசுவரம் நகருக்கு வரும் யாத்திரீகர்கள், சுற்றுலா பயணிகள் ரெயில், பஸ் நிலையங்களில் இருந்து அரசு பஸ் மற்றும் ஆட்டோக்கள் மூலம் கோவிலுக்கு செல்கின்றனர்.
ஆனால் ராமேசுவரத்தில் உள்ள முக்கிய சாலைகள் போக்குவரத்திற்கு லாயகற்ற நிலையில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் ராமேசுவரம் சாலையில் பயணம் என்பது சாகச பயணமாக மாறி வருகிறது. பள்ளத்தல் ஏறி, இறங்கும் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவதும், இதில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் படுகாயமடைவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
ராமேசுவரம் நகரில் பாதாள பணிக்காக பல்வேறு பகுதிகளில் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. திரும்பிய திசை எல்லாம் குண்டும், குழியுமாக இருப்பதால் போக்குவரத்து என்பது சிரமாக மாறி உள்ளது. ராமேசுவரம் லட்சுமண தீர்த்தம் முதல் திட்டக்குடி கார்னர் நகராட்சி அலுவலகம் வரை 2 பகுதிகளிலும் பாதாள சாக்கடைக்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த சாலைகளில் கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் என்ற நிலையில் வாகனங்கள் சென்று வருகிறது.
ராமேசுவரத்தில் அவல நிலையை போக்க மாவட்ட நிர்வாகமும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேசிய நெடுஞ்சாலைத்துறையும் பெயரளவில் மட்டுமே செயல்படுகிறது என பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.
இந்தியாவில் ஆன்மீக நகரங்களில் முக்கியமானதாக உள்ள ராமேசுவரத்தில் தரமான சாலை அமைத்து போக்குவரத்திற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் அமைச்சர், தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கழிவுநீர் ஓடைகள் சீரமைப்பு
- கழிவுநீர் ஓடைக்கு மேல் போடப்பட்டிருந்த மேல் மூடிகள் இடித்து அகற்றப்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநக ரப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மேயர் மகேஷ் அதிரடி நடவ டிக்கையை மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக மாநகரப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். கோட்டார் போலீஸ் நிலையம் முதல் ஒழுகினசேரி வரை உள்ள சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்று காலை நடந்தது. மாநகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி. என்ற மூலமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மேற்கொண்டனர். மீனாட்சிபுரம் பகுதியில் கடையின் முன் பகுதி ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தது. அதை ஜே.சி.பி. எந்திரம் மூலமாக இடித்த அகற்றினார்கள்.கடைகள் முன்பு வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளையும் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினார்கள். கடைகள் முன்பு போடப்பட்டிருந்த படிக்கட்டுகளும் இடித்து அகற்றப்பட்டது.
மீனாட்சிபுரம் பகுதியில் கழிவு நீர் ஓடைகள் மணல் நிரம்பி காணப்பட்டது. இதையடுத்து ஜே.சி.பி. எந்திரம் மூலமாக கழிவுநீர் ஓடையில் கிடந்த மணல்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. கழிவுநீர் ஓடைக்கு மேல் போடப்பட்டிருந்த மேல் மூடிகள் இடித்து அகற்றப்பட்டது.
இதை தொடர்ந்து கழிவு நீர் ஓடையில்கிடந்த மணல்கள் அகற்றப்பட்டது.ஆக்கிரமிப்பு கட்டப்பட்ட தையடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் மீனாட்சிபுரம் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தகவல்
- மழையின் காரணமாக சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
நாகர்கோவில்:
முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு ஊராட்சி யில் உள்ள சாலைகள் பழுதடைந்து காணப்படுவதுடன், இச்சாலைகளை சீரமைத்து பல ஆண்டுகள் ஆகின்ற நிலை உள்ளது. மேலும் கடந்தாண்டு மற்றும் நடப்பாண்டில் பெய்த மழையின் காரணமாக சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
ஊராட்சி சாலைகள் மற்றும் ஒன்றிய சாலை களை மாவட்ட சாலை களாக தரம் உயர்த்தி முன்னுரிமை வழங்கி சீரமைக்க வேண்டுமென நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மற்றும் நெடுஞ்சா லைத்துறை பொறியா ளர்களுக்கு ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகள் வைத்திருந்தேன்.
இதன் அடிப்படையில் தற்போது ஊராட்சி சாலை களை மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்தி சீரமைக்க, நெடுஞ்சாலைத்துறை - நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி சட்ட மன்றத் தொகுதியில் வடக்கு தாமரைகுளம்-பறக்கை சாலை தரம் உயர்த்துவதற்கு ரூ. 1 கோடியே 57 லட்சமும், புதுக்குளம் சாலை- கடம்பாடி விளாகம் வழி, ஆலந்துறை தெற்கு மேடு காலனி அலங்காரமூலை சாலை தரம் உயர்த்துவதற்கு ரூ.5 கோடியே 43 லட்சத்து 78 ஆயிரமும், பறக்கை-தாமரைக்குளம் சாலை தரம் உயர்த்த ரூ.1 கோடியே 5 லட்சத்து 74 ஆயிரமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இச்சாலை பணிகள் விரை வில் தொடங்கி சீரமைக் கப்பட்டு மக்கள் பயன் பாட்டிற்கு வரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அருப்புக்கோட்டையில் சாலையை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை 12-வது வார்டில் மகாலிங்கம் மூப்பனார் தெரு, பெருமாள் தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்களை கொட்டி பல நாட்கள் ஆகிவிட்டது. இதனால் இந்த பகுதி மக்கள் கற்களில் நடப்பதற்கு சிரமமாக இருப்பதாக தெரிவித்தனர்.
பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் நடப்பதற்கும், சைக்கிளில் சென்று வருவதற்கும் சிரமமாக இருக்கிறது என்றும் கூறினர். இந்தப் பகுதியில் குடிநீர் வந்து பல நாட்கள் ஆகிவிட்டது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
விரைவில் எங்கள் பகுதியில் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து அந்த வார்டு கவுன்சிலர் அல்லிராணியிடம் கேட்டபோது, விரைவில் சாலை சீரமைக்கப்படும். குடிநீர் விநியோகமும் சரிசெய்யப்படும் என்றார்.
- சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது
- 10 ஆண்டு–களுக்கு மேலாக இருந்த
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கல்லாக்கோட்டை ஊராட்சி ஆண்டாள் தெரு வழியாக கரம்பக்குடி ஒன்றியம் அம்பு கோயிலுக்குசெல்லும் பாதை சுமார் 10 ஆண்டு–களுக்கு மேலாக செப்பனிடாமலும் தனிநபர் ஆக்கிரமிப்புகளாலும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் கந்தர்வ–கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, கரம்பக்குடி தாசில்தார் ராமசாமி, கந்தர்வகோட்டை தாசில்தார் ராஜேஸ்வரி மற்றும் ஒன்றிய குழு தலைவர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மேற்கண்ட பாதையை அமைக்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தனர்.
இதனால் பல ஆண்டு–களாக ஆண்டாள் தெரு மற்றும் அம்பு கோயில் சாலை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து நிலை மாறி, அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றியும், புதிய தார் சாலை அமைப்பதற்கான முன்னேற்பாடுகளையும் எடுத்தனர்.
இதனால் பொதுமக்கள் அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியுடன் பாராட்டு தெரிவித்தனர்.
- பெரம்பலூர் - துறையூர் இருவழிச் சாலை திறக்கப்பட்டது
- நடைபெற்ற அரசு விழாவில்
பெரம்பலூர்:
பெரம்பலூர் முதல் துறையூர் வரையிலான 30 கிலோ மீட்டர் இருவழித்தட சாலை திறக்கப்பட்டதையடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் சார்பாக சென்னை கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தின் மூலம் பெரம்பலூர் முதல் துறையூர் வரையிலான 30 கி.மீ நீளமுள்ள சாலையை ரூ.2.09 கோடியில் நிலம் எடுத்து இருவழித்தடமாக அகலப்படுத்தி மேம்பாடு செய்து, நக்கசேலம், குரும்பலூர் நகரப்பகுதிகளுக்கு மாற்றாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் 12 சிறுபாலங்கள், 53 குறுபாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சாலை வழிகளில் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் சோலார் பிளிங்கா விளக்குகள், உயர்மின்கோபுர விளக்குகளும், குடியிருப்புப் பகுதிகளில் நடைபாதையுடன் கூடிய மழைநீர் வடிகால் வசதியும், சாலையோர மின்விளக்குகளும், கழிவறை, தண்ணீர் மற்றும் விளக்கு வசதிகளுடன் கூடிய பஸ் நிழற்குடைகளும் கட்டப்பட்டுள்ளன.
அரியலூரில் நேற்று நடந்த அரசு விழாவில் இந்த சாலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து ஆலம்பாடியில் அச்சாலையின் பெயர் பலகையை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
- சுமார் 4.50 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலை சேதம் அடைந்துள்ளது.
- 3.73 கோடி மதிப்பீட்டில் புதிதாக சாலை அமைக்கும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை ஒன்றியம் தாழஞ்சேரி ஊராட்சி, வரகடை கிராமத்தில் தொடங்கி நாராயணமங்கலம், திருவாளபுத்தூர் வழியாக கடக்கம் வரை சுமார் 4.50 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலை சேதம் அடைந்துள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவந்தனர்.
பொதுமக்களின் தொடர் கோரிக்கையையடுத்து இந்த மார்க்கத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் (2021-2022) -இன் கீழ் ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் புதிதாக சாலை அமைக்கும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது. இந்த பணியினை மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜகுமார் கலந்துக் கொண்டு தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட குழு உறுப்பினரும், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளரும்மான இளையபெருமாள், உதவி பொறியாளர் கார்த்திக்கேயன், ஒன்றிய பொறியாளர் ராஜேஷ்கண்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் வடவீரபான்டியன், ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- பொதுமக்கள் குமுறல்
- உள்ளாட்சி தேர்தல் முடிந்து 7 மாதங்கள் ஆகியும் இந்த சாலை சீரமைப்பிற்கு போதிய நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள 52 வார்டு களில் சாலை மேம்பாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நடந்த மாநகராட்சி கூட்டத்திலும் சாலை சீர மைப்பிற்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள் ளது. சாலை சீரமைப் பிற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்ட பிறகும் பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாகவே காட்சி அளிக்கின்றன. குறிப்பாக நாகர்கோவில் மாநகராட்சி 17-வது வார்டுக்குட்பட்ட ஜோசப் தெரு சாலை மிக மோசமான நிலையில் காணப்படுகிறது.
இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கள் உள்ளது. ஏராளமான பொது மக்கள் வசித்து வருகிறார்கள். பள்ளி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்கள், பொதுமக்கள் அனைவரும் இந்த சாலையை பயன்ப டுத்தி வருகிறார்கள். இரு சக்கர வாகன ஓட்டிகள், நான்கு சக்கர வாகன ஓட்டிகளும் இந்த சாலை வழியாக தினமும் சென்று வருகிறார்கள்.
ஆனால் இந்த சாலையின் அவல நிலையை சொல்லி மாளாது. அந்த அளவிற்கு மிக மோசமான நிலையில் காணப்படுகிறது. சாலை யில் உள்ள ஜல்லிகள் பெயர்ந்து கிடப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி கீழே விழும் நிலை உள்ளது.சாலையில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு கற்கள் பெயர்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இந்த சாலையை சீர மைக்க விரைந்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கவுன்சிலரை நேரில் சந்தித்து பலமுறை மனு அளித்தும் எந்த நடவ டிக்கையும் எடுக்கப்பட வில்லை. தேர்தல் நேரத்தில் சாலை சீரமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்த உள்ளாட்சி பிரதிநிதிகளும் இதற்கு நடவடிக்கை எடுக்க வில்லை.
உள்ளாட்சி தேர்தல் முடிந்து 7 மாதங்கள் ஆகியும் இந்த சாலை சீரமைப்பிற்கு போதிய நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக போர்க்கால அடிப்படையில் இந்த சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது மட்டுமின்றி 17-வது வார்டுக்குட்பட்ட மேலும் பல்வேறு சாலைகளும் மோசமான நிலையிலேயே காணப்படுகிறது. இந்த சாலை களையும் சீரமைக்க வேண்டும் என்பதே அனை வரின் கோரிக்கையாக உள்ளது. இதேபோல் நாகர் கோவில் மாநகராட்சிக் குட்பட்ட 52 வார்டுகளிலும் குண்டும் குழியுமாக காணப்படும் சாலைகளை சீரமைக்க முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக் கீடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மாநகராட்சி மேயரிடம் கோரிக்கை வைத்து உள்ள னர்.
மேயர் மகேஷ் இந்த சாலை சீரமைப்பில் தனி கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- பல வருடங்களாக புதுப்பிக்கபடாததால் சாலை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
- சாலை ஒற்றையடி பாதை போன்று காணப்படுகிறது.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் பேரூராட்சி 13 வது வார்டு அரையபுரம் கேட்டுத்தெரு, தோப்புத் தெருசாலை பல வருடங்களாக புதுப்பிக்கப்படாததால் சாலையை கிராமமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
மேலும் சாலை புல் பூண்டுகள் மண்டிய நிலையில் ஒற்றையடி பாதை போன்று காணப்படுகிறது.
சேதமடைந்த சாலையை புதுப்பிக்க கோரி பேரூராட்சி நிர்வாகத்திடம் கிராமமக்கள் வலியுறுத்தியும் நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து கிராமமக்கள் கூறியதாவது அரையபுரம்கேட்டுத்தெரு, தோப்புதெரு சாலை போடபட்டு 30 வருடத்திற்கு மேல் ஆகிறது.
தற்போது சாலை முற்றிலும் சேதமடைந்து இருசக்கர வாகனங்கள் கூட போக முடியாத நிலையில் மிகவும் மோசமாக உள்ளது.
எனவே பழுதான சாலையை விரைவில் சீரமைத்து தர வேண்டும் என தெரிவித்தனர்.
- சீத்தாராம் பாளையத்தில் இருந்து சுமார் 1.5 கிமீ தூரத்திற்கு ரூபாய் ஒருகோடி மதிப்பில் மழைநீர் கால்வாய் அமைக்க திட்டவரைவு தயாரிக்கப்பட்டு சூரியம்பாளையம் பகுதி வழியாக அதனை கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்து நமக்குநாமே திட்டத்தில்ரூ.33 லட்சம் பொதுமக்கள் பங்களிப்பாக நகராட்சியில் செலுத்தப்பட்டது.
- சூரியம் பாளையம்பகுதி பொதுமக்கள் இந்த கால்வாய் அமைவதனால் 4 வார்டுகளில் இருந்த மழைநீர் மற்றும் கழிவு நீர் தங்களது பகுதி வழியாக செல்லும் எனவும் அவ்வாறு செல்வதால் தங்களது குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படும் எனவும் தங்களது பகுதியாக வழியாக கொண்டு செல்லக் கூடாது என நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி இன்று திடீர் சாலை மறியிலில் ஈடுபட்டனர்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு நகராட்சி தொண்டிக்கரடு முனியப்பன் கோவில் குப்பண்ணன் காடு பகுதியில் இருந்து கடந்த 50 வருடங்களாக தீர்க்கப்படாமல் இருந்த மழைநீர் ரோட்டில் தேங்கும் பிரச்சினைக்குதீர்வு காண சீத்தாராம் பாளையத்தில் இருந்து சுமார் 1.5 கிமீ தூரத்திற்கு ரூபாய் ஒருகோடி மதிப்பில் மழைநீர் கால்வாய் அமைக்க திட்டவரைவு தயாரிக்கப்பட்டு சூரியம்பாளையம் பகுதி வழியாக அதனை கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்து நமக்குநாமே திட்டத்தில்ரூ.33 லட்சம் பொதுமக்கள் பங்களிப்பாக நகராட்சியில் செலுத்தப்பட்டது.
இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் இதனை அறிந்த சூரியம் பாளையம்பகுதி பொதுமக்கள் இந்த கால்வாய் அமைவதனால் 4 வார்டுகளில் இருந்த மழைநீர் மற்றும் கழிவு நீர் தங்களது பகுதி வழியாக செல்லும் எனவும் அவ்வாறு செல்வதால் தங்களது குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படும் எனவும் தங்களது பகுதியாக வழியாக கொண்டு செல்லக் கூடாது என நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி இன்று திடீர் சாலை மறியிலில் ஈடுபட்டனர்.
திருச்செங்கோடு தேவானங்குறிச்சி சாலையில் நடந்த இந்த மறியலில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸ் டிஎஸ்பி பொறுப்பு பழனிசாமி, நகர காவல் ஆய்வாளர் செந்தில் குமார், நகராட்சி ஆணையாளர் கணேசன், பொறியாளர் சண்முகம், மேலாளர் குமரேசன் ஆகியோர் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள் . உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சுமார் ஒருமணி நேரம் நடந்த சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் சூரியம் பாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.