என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விருது"

    • பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பதவி ஏற்றார்.
    • 21 நாடுகள் அவருக்கு சர்வதேச விருதுகளை அளித்து கவுரவப்படுத்தின.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பதவி ஏற்றியதில் இருந்து அவருக்கு பல நாடுகள் சர்வதேச விருதுகளை அளித்து கவுரவப்படுத்தி உள்ளன.

    இதுவரை 21 நாடுகளின் உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். அதன் விவரம் வருமாறு:

    சவுதி அரேபியா: ஆர்டர் ஆஃப் அப்துல் அஜீஸ் அல் சவுத்

    ஆப்கானிஸ்தான்: ஸ்டேட் ஆர்டர் ஆப் காஜி அமீர் அமானுல்லா கான்

    பாலஸ்தீனம்: கிராண்ட் காலர் ஆஃப் தி ஸ்டேட் ஆஃப் பாலஸ்தீன விருது

    மாலத்தீவு: ஆர்டர் ஆஃப் தி டிஸ்டிங்குவிஷ்ட் ரூல் ஆஃப் நிஷான் இசுதீன்

    ஐக்கிய அரபு அமீரகம்: ஆர்டர் ஆஃப் சயீத் விருது

    பஹ்ரைன்: கிங் ஹமத் ஆர்டர் ஆஃப் தி ரினைசன்ஸ்

    அமெரிக்கா: லெஜியன் ஆஃப் தி மெரிட்

    பிஜி: கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் பிஜி

    பப்புவா நியூ கினியா: கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் லோகோ

    பலாவ்: பலாவ் குடியரசு எபகல் விருது

    எகிப்து: ஆர்டர் ஆப் தி நைல்

    பிரான்ஸ்: கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர்

    கிரீஸ்: தி கிரான்ட் கிராஸ் ஆப் ஆர்டர் ஆப் ஹானர்

    பூடான்: ஆர்டர் ஆஃப் தி ட்ரூக் கியால்போ

    ரஷியா: ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ விருது

    நைஜீரியா: கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி நைஜர்

    டொமினிகா: டொமினிகோ அவார்ட் ஆப் ஹானர்

    கயானா: ஆர்டர் ஆப் எக்ஸலன்ஸ்

    பார்படாஸ்: ஹானரி ஆப் பிரீடம்

    குவைத்: தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்

    மொரிஷியஸ்: ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் மற்றும் கீ ஆஃப் தி கிராண்ட் கமாண்டர்

    • மொரீஷியசில் தலைவர்கள், இந்திய சமூகத்தினரை சந்தித்து உரையாடினார்.
    • மொரீஷியஸ் நாட்டின் உயரிய விருது இன்று வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    போர்ட் லூயிஸ்:

    மொரீஷியஸ் நாட்டின் 57-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் மொரீஷியசுக்கு நேற்று புறப்பட்டார். தீவு நாடான மொரீஷியசை சென்றடைந்ததும், பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பிரதமர் மோடியின் வருகையை சிறப்பிக்கும் வகையில் பேசிய அந்நாட்டு பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம், மொரீஷியஸை இன்னும் மேம்படுத்தும் நோக்கில் நாட்டில் விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்காக இந்திய அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    நீங்கள் எப்போதெல்லாம் எங்கள் நாட்டுக்கு வருகிறீர்களோ, அப்போது எங்களுடைய நாட்டை நன்றாக வளப்படுத்துகிறீர்கள். மொரீஷியஸ் நாட்டில் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் நீங்கள் ஆற்றிய பங்கு உண்மையில் பெரிதும் பாராட்டத்தக்கது என பிரதமர் மோடிக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.

    இந்நிலையில், பிரதமர் மோடிக்கு, தி கிரேட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் அண்டு கீ ஆப் தி இந்தியன் ஓசன் என்ற மொரீஷியஸ் நாட்டின் உயரிய விருது இன்று வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருது பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெறுகிறார்.

    இந்த விருது பெற்ற பின்பு பேசிய பிரதமர் மோடி, இது எனக்கான கவுரவம் மட்டும் அல்ல. 140 கோடி இந்தியர்களின் கவுரவம். இந்த விருது, இந்தியா மற்றும் மொரீஷியஸ் இடையே நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கலாசார மற்றும் வரலாற்று பிணைப்புகளுக்கான அடையாளம் ஆகும் என தெரிவித்தார்.

    இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியின்போது மழை கொட்டியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பிரதமர் மோடி விருது பெறும் நிகழ்வை காண்பதற்காக மக்கள் கூடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முன்னாள் போலீஸ் அதிகாரி வால்டர் தேவாரம் கலந்து கொண்டு விருதினை வழங்கினார்.
    • 12 தன்னார்வளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் வெங்கடாம்பட்டி டிரஸ்ட் சார்பில் வால்டர் தேவாரம் விருது வழங்கும் நிகழ்சி வெங்கடாம்பட்டியில் நடைபெற்றது.

    முன்னாள் போலீஸ் அதிகாரி வால்டர் தேவாரம் கலந்து கொண்டு விருதினை வழங்கினார். இயற்கை விஞ்ஞானி விஜயலெட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் ஆலங்குளத்தில் செயல்பட்டு வரும் பூ உலகை காப்போம் மன்றம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மரக்கன்று நடுதல், பராமரித்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தல் போன்ற பணிகளை செய்து வருகிறார்கள். இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக குழுவினருக்கு விருது வழங்கப்பட்டது.சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் பூ உலகை காப்போம் மன்ற தலைவர் ராஜா, அதியப்பன், முருகன், சிவா மற்றும் ஆலோசகர் இளங்கோ உட்பட 12 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

    விழா ஏற்பாடுகளை டிரஸ்ட் நிர்வாகி திருமுருகன் செய்திருந்தார்.

    • சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரிக்கு சிறந்த பயிற்சி, வேலை வாய்ப்புக்கான விருது பெங்களூருவில் வழங்கப்பட்டது.
    • மென்பொருள் சார்ந்த பன்னாட்டு நிறுவனங்களில் 1263 பணி நியமன ஆைணகளை பெற்று தந்துள்ளது.

    சிவகாசி

    கர்நாடகா டிரேடர்ஸ் சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் ஆசியஅரபு டிரேடர்ஸ் சேம்பர் ஆப் காமர்ஸ் இணைந்து கல்வித்துறையில் கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி, பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற தகுதிகளின் அடிபபடையில் சிறந்த கல்லூரிகளுக்கு விருது வழங்கும் விழாவை பெங்களூருவில் நடத்தியது.

    இதில் 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இதில் சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியயில் கல்லூரிக்கு கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் வழங்கியதற்காக விருது வழங்கப்பட்டது.

    பி.எஸ்.ஆர். பொறியயில் கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறையானது முனைப்புடன் செயல்பட்டு ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பு விகிதத்தை அதிகரித்து வருகிறது. கடந்த கல்வி ஆண்டில் பல்வேறு துறை சார்ந்த மற்றும் மென்பொருள் சார்ந்த பன்னாட்டு நிறுவனங்களில் 1263 பணி நியமன ஆைணகளை பெற்று தந்துள்ளது.

    சிறந்த முறையில் செயலாற்றிய பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறையின் ஒருங்கிணைப்பாளர்களை கல்லூரியின் தாளாளர் ஆர்.சோலைசாமி, இயக்குநர் விக்னேஸ்வரி அருண்குமார், முதல்வர் மாரிச்சாமி ஆகியோர் பாராட்டினர்.

    • தமிழ்நாடு நுகர்வோர் பேரவை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான செயல்பாடுகளுக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது.
    • சிறப்பு விருது ஆறுமுகநேரி சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    தேசிய நுகர்வோர் தினவிழாவை முன்னிட்டு ஆறுமுகநேரி அருகேயுள்ள சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனத்திற்கு நுகர்வோர் பேரவை சிறப்பு விருது வழங்கப்பட்டது.

    தமிழ்நாடு நுகர்வோர் பேரவை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான செயல்பாடுகளுக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நுகர்வோர் பேரவை ஆய்வு குழுவின் அறிக்கையின் அடிப்படையில் சுற்றுசூழல், தொழிலாளர்கள் இணக்கம், பொதுமக்கள் நல்லுறவு ஆகியவற்றிற்கான சிறப்பு விருது ஆறுமுகநேரி சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

    தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாநில தலைவர் மோகனசுந்தரம் இந்த விருதை வழங்க அதனை டி.சி.டபிள்யூ. மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது நுகர்வோர் பேரவையின் மாவட்ட சட்ட ஆலோசகர் திலீப்குமார், ஸ்பிக்நகர் உறுப்பினர்கள் சந்திரசேகரன், கீதா சந்திரசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • வீரதீர செயல் புரிந்த 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு விருது வழங்கப்படுகிறது.
    • இந்த தகவலை மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும்பாடுபட்டு, வீரதீர செயல் புரிந்து 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு விருது வழங்கப்படுகிறது.

    இந்த விருைத கீழ்காணும் தகுதிகள் உள்ள பெண் குழந்தைகளிடம் இருந்து கருத்துருக்களை அனுப்பி வைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

    5 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண்,குழந்தை (31 டிசம்பர்-ன்படி), கீழ்கண்டவற்றில் வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும். பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண்குழந்தை தொழிலாளர் ஒழிப்பு , பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான, தனித்துவமான சாதனை செய்திருத்தல்.

    பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல்.

    மேலே குறிப்பிட்டுள்ள தகுதிகளை உடைய பெண் குழந்தைகள் விண்ணப்பத்தை, மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் 3-வது தளம், மதுரை-625 020 என்ற முகவரிக்கு வருகிற 25-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    விண்ணப்பதாரர்கள் கூடுதல் விவரங்களை மதுரை மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி.எண் 0452-2580259-க்கு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கனிமொழி எம்.பி., சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
    • தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் 69-வது கூட்டுறவு வார விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.

    கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் சிவமுத்துக்குமாரசாமி, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான சிவகாமி, மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, மார்க்கண்டேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில், கனிமொழி எம்.பி., சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு பரிசுகள் மற்றும் பயனாளிகளுக்கு கடன் உதவிகளை வழங்கினர்.

    அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கப்பிரிவில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுவரும் தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

    விருதினை, கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவனிடம் இருந்து தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குநர் அந்தோணிபட்டுராஜன் பெற்றுக்கொண்டார்.

    இதில், தூத்துக்குடி சப்-கலெக்டர் கவுரவ்குமார், துணைப்பதிவாளர் சுப்புராஜ் மற்றும் கூட்டுவுத்துறை அதிகாரிகள், பணியாளர்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • 5வது தளத்தில் இயங்கும் கைத்தறி துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.
    • மாவட்டத்தில் இதுவரை 6 டிசைன்கள் மட்டுமே விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

    திருப்பூர்:

    தமிழக அரசு மாநில அளவில் சிறந்த இளம் ஜவுளி வடிவமைப்பாளர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்க உள்ளது. இதற்காக, மாவட்டம்தோறும், வடிவமைப்பாளர்களிடமிருந்து சேலைகளில் இடம்பெறும்வகையிலான புதுமையான மற்றும் அழகிய டிசைன்கள் பெறப்பட்டு வருகிறது.

    கடந்த 6ந் தேதி டிசைன்களை அனுப்புவதற்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, வரும் 20ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. www.loomworld.in என்கிற தளத்தில், வடிவமைப்பு போட்டியில் பங்கேற்பதற்கான நுழைவு படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். திருப்பூர் பகுதி வடிவமைப்பாளர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற 20ந் தேதிக்குள், கலெக்டர் அலுவலக வளாகத்தில், 5வது தளத்தில் இயங்கும் கைத்தறி துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.

    இது குறித்து மாவட்ட கைத்தறி துறை உதவி இயக்குனர் வெற்றிவேல் கூறியதாவது:-

    சிறந்த ஜவுளி டிசைனர் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், வருகிற 20-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் ஏராளமான டிசைனர்கள் உள்ளனர். ஆயினும் மாவட்டத்தில் இதுவரை 6 டிசைன்கள் மட்டுமே விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

    நிப்ட்-டீ கல்லூரி மாணவர் ஏராளமானோர், புதுமையான பின்னலாடை டிசைன்களை உருவாக்கி வருகின்றனர். அம்மாணவர்கள், விருதுக்கு தங்கள் டிசைன்களை சமர்ப்பிக்க ஆர்வம்காட்டவேண்டும். சிறந்த டிசைன்களை உருவாக்கி பின்னலாடை நகரான திருப்பூருக்கு பெருமை சேர்க்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விழாவிற்கு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பாஸ்கரன் தலைமை தாங்கினார்.
    • தஞ்சை மைய அமைப்பாளர் உமாமகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலில் நடை பெற்ற 1037-ம் ஆண்டு சதயவிழாவில் மாமன்னன் ராசராசன் விருது தஞ்சை மைய பேராசிரியர் ஞானியார் முனைவர் வீ.ஜெயபால் மற்றும் தஞ்சை அகத்திய சன்மார்க்க சங்க செயலர் சிவ. அமிர்தலிங்கத்திற்கு வழங்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து மாமன்னன் ராசராசன் விருது பெற்றவர்களுக்கு இன்று தஞ்சாவூர் பெசன்ட் அரங்கத்தில் பாராட்டு விழா நடை பெற்றது.

    விழாவிற்கு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பாஸ்கரன் தலைமை தாங்கினார்.தஞ்சை பூண்டி கல்லூரி தமிழ்துறை பேராசிரியர் ராஜேஸ்வரி வாழ்த்தி பேசினார். தஞ்சை மைய அமைப்பாளர் உமாமகேஸ்வரி அனை வரையும் வரவேற்றார்.

    விழாவில் முடிவில் தஞ்சாவூர் சோழன் லேப் செல்வராஜன் நன்றி கூறினார்.பாராட்டு விழாவை தொடர்ந்து இந்த அரங்கில் சைவ சித்தாந்த வகுப்பு திருக்குறளில் சைவ சித்தாந்தம் எனும் தலைப்பில் நடைபெறுகிறது.  

    • சிவகங்கை மாவட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • விருதுகள் வழங்குவதற்கு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் 2022-2023-ம் நிதியாண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் மற்றும் பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்கு தொண்டு செய்யும் ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில் சிறந்தோருக்கு, 2023-ம் ஆண்டில் திருவள்ளுவர் திருநாளன்று விருதுகள் வழங்குவதற்கு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

    டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது பெற விரும்பும் தகுதிவாய்ந்த நபர்கள் உரிய விண்ணப்பப் படிவத்தினை சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்று வருகிற 30-ந்தேதிக்குள் மேற்படி அலுவலகத்திற்கு உரிய ஆவணங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • வாகை சூடவா படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    • தஞ்சாவூர் மாவட்டத்தை கதைக்களமாக கொண்ட படத்தில் தஞ்சாவூரை சேர்ந்த நான் நடித்துள்ளது பெருமை அளிக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரை கதைக்களமாக கொண்டு பட்டத்து அரசன் என்ற திரைப்படம் கடந்த 25-ந் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.இந்த படத்தில் நடிகர் அதர்வா கதாநாயகனாகவும், ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

    இதைவிட முக்கிய கதை பாத்திரங்களில் ராஜ்கிரன், ராதிகா, சிங்கம்புலி, ஆர்.கே. சுரேஷ், தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தை சேர்ந்த சிங். முருகா, அதே பகுதியை சேர்ந்த குழந்தை நட்சத்திரங்களான சிங். கோகுல், சிவானிசிங் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்தை தஞ்சாவூர் மாவட்டம் ஆம்பலாப்பட்டை சேர்ந்த சற்குணம் இயக்கியுள்ளார்.இவர் ஏற்கனவே களவாணி, வாகை சூடவா, நய்யாண்டி, சண்டிவீரன் உள்ளிட்ட 6 படங்களை இயக்கி தயாரித்துள்ளார்.

    இதில் வாகை சூடவா படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் இயக்குனர் சற்குணம் மற்றும் படத்தில் நடித்த வல்லத்தை சேர்ந்த சிங். முருகா ஆகியோர் தஞ்சையில் உள்ள விஜயா தியேட்டருக்கு வந்தனர்.அவர்களுக்கு தஞ்சை ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பலர் அவர்களுடன் இணைந்து போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.

    அப்போது இயக்குனர் சற்குணம் அளித்த பேட்டியில், பட்டத்து அரசன் நான் இயக்கிய ஏழாவது திரைப்படம் ஆகும்.

    அடுத்து ஒரு வெப் சீரியல் இயக்குகிறேன்.அதனை தொடர்ந்து நான் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றார்.

    நடிகர் சிங். முருகா கூறும்போது, தஞ்சாவூர் மாவட்டத்தை கதைக்களமாக கொண்ட படத்தில் தஞ்சாவூரை சேர்ந்த நான் நடித்துள்ளது பெருமை அளிக்கிறது.மேலும் குழந்தை நட்சத்திரங்களாக நமது பகுதியை சேர்ந்த சிங் .கோகுல், சிவானிசிங் இந்த படத்தில் நன்றாக நடித்துள்ளனர்.

    படத்தை இயக்கிய சற்குணமும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.நான் அடுத்து வெப் சீரியல் ஒன்றில் நடித்து வருகிறேன். அதன் பின்னர் அடுத்த படங்களின் அறிவிப்பு வெளியாகும் என்றார்.

    • 24 மணி நேரத்திற்கு பின்னர் மறுநாள் அவர் திக்குறிச்சி பகுதியில் ஆற்றிலிருந்து தீ அணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்களால் உயிருடன் மீட்கப்பட்டார்.
    • நாகர்கோவிலில் மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் வைத்து விருது வழங்கும் விழா நடந்தது.

    கன்னியாகுமரி :

    திருவட்டார் அருகே பாரதப் பள்ளியைச் சேர்ந்தவர் புஷ்பபாய் (வயது 60) இவர் கடந்த 10 -ந்தேதி இப்பகுதி வழியாகப் பாயும் கோதையாற்றில் குளித்துக் கொண்டிருந்த போது தண்ணீரில் அடித்துச் செல் லப்பட்டார்.

    இந்நிலையில் 24 மணி நேரத்திற்கு பின்னர் மறுநாள் அவர் திக்குறிச்சி பகுதியில் ஆற்றிலிருந்து தீ அணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்களால் உயிருடன் மீட்கப்பட்டார்.

    இதை யடுத்து மீட்புப் பணியில் ஈடுபட்ட குலசேகரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் (போக்கு வரத்து) செல்வ முருகேசன், தீ அணைப்பாளர்கள் ஜெக தீஸ், கோட்டை மணி, நிஜல்சன், மாரி செல்வம், கபில் சிங், பைஜூ மற்றும் படகு ஓட்டுனர் சுஜின் ஆகியோருக்கு நாகர்கோவிலில் மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் வைத்து விருது வழங்கும் விழா நடந்தது.

    நிகழ்ச்சியில் தீ அணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தென் மண்டல துணை இயக்குனர் நா. விஜயகுமார் அங்கீகார விருது வழங்கி கவுரவித்தார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியகுமார், மாவட்ட உதவி தீ அணைப்பு அலுவலர் இம்மானுவேல் ஆகியோர் பங்கேற்றனர்.

    ×