என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரணி"

    • தமிழக அரசின் 2024-25-ம் நிதியாண்டு பட்ஜெட்டில், ஜாக்டோ-ஜியோ எதிர்பார்த்த கோரிக்கைகள் இடம்பெறவில்லை.
    • மாவட்ட தலைநகரங்களில் அடுத்த மாதம் 24-ந்தேதி கோரிக்கை மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தொடர்ந்து போராடி வருகிறது.

    தமிழக அரசின் 2024-25-ம் நிதியாண்டு பட்ஜெட்டில், ஜாக்டோ-ஜியோ எதிர்பார்த்த கோரிக்கைகள் இடம்பெறவில்லை என தெரிவித்து, கடந்த மாதம் (மார்ச்) 23-ந்தேதி, மாவட்ட தலைநகரங்களில், ஜாக்டோ-ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    இந்த நிலையில், ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்டம் சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை), மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கை பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட தலைநகரங்களில் அடுத்த மாதம் (மே) 24-ந்தேதி (சனிக்கிழமை) கோரிக்கை மாநாடு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று ஜாக்டோ-ஜியோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வருமானத்தில் பாதி வாடகைக்கே செலவிட வேண்டியுள்ளது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
    • இந்த விஷயம் தொடர்பாக அரசாங்கம் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மாட்ரிட்:

    ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் மக்கள் அடர்த்தி மிகுந்த நகரங்களில் ஒன்று. வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்ட பல தேவைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் அங்கு குடியேறுகின்றனர். ஆனால் அந்த அளவுக்கு அங்கு வீடுகளின் எண்ணிக்கை இல்லை.

    இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட வீட்டு உரிமையாளர்கள், தங்கள் வீட்டின் வாடகையை உயர்த்தி வருகின்றனர். இதனால் வருமானத்தில் பாதி வாடகைக்கே செலவிட வேண்டியுள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்த விஷயம் தொடர்பாக அரசாங்கம் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, வீட்டு வாடகை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்தன.

    இந்நிலையில், தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்ற போராட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு பேரணியாகச் சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியது.

    • பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு.
    • இறுதியாக மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    நீடாமங்கலம்:

    நாச்சியார் கோவில் அரசு மருத்துவமனை வளாகத்தில், திருநறையூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, "பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள்" குறித்த விழிப்புணர்வு மற்றும் எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது? என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் நாச்சியார் கோவில் அரசு மருத்துவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக் கலந்து கொண்டார்.

    மேலும் இந்நிகழ்ச்சியில் சித்த மருத்துவர் ஜெயந்தி, நாச்சியார் கோவில் இன்ஸ்பெக்டர் ரேகா ராணி, திருநறையூர் அரசு பெண்கள் பள்ளி ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்வின் இறுதியாக மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாச்சியார்கோவில் அரசு மருத்துவமனையில் இருந்து தொடங்கி திருநறையூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேரணி முடிவுற்றது.

    • ஊழல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு வாரம் கடந்த மாதம் 31-ந் தேதி முதல் நேற்று வரை கடைபிடிக்கப்பட்டது.
    • ஊழல் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்தியா முழுவதும் ஊழல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு வாரம் கடந்த மாதம் 31-ந் தேதி முதல் நேற்று வரை கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை மண்டல தமிழ்நாடு கிராம வங்கி சார்பில் கன்னியாகுமரியில் ஊழல் தடுப்புவிழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியை கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா தொடங்கி வைத்தார்.

    கன்னியாகுமரியில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி கடற்கரை சாலை வழியாக கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரையில் சென்று நிறைவடைந்தது. அங்கு ஊழல் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    இந்தநிகழ்ச்சிக்கு நெல்லை மண்டல உதவி பொதுமேலாளர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார்.இதில்வங்கி அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் சுற்றுலா காவலர்கள் திரளாக கலந்து கொண்டு ஊழல் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    • வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது
    • வருவாய் கோட்டாட்சியர் தொடங்கிவைத்தார்

    புதுக்கோட்டை:

    வாக்காளர் வரைவு பட்டியல் தேர்தல் ஆணையம் வெளியிட்டதை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வருவாய் துறையின் சார்பாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள பொன் புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி மற்றும் பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா சைக்கிள் பேரணியை துவக்கி வைத்தார்.

    இதில் பொன்னமராவதி வட்டாட்சியர் பிரகாஷ் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பொன்னமராவதி காவல் ஆய்வாளர் தனபாலன் , கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர் பள்ளி மாணவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களில் பொன்னமராவதி புதுப்பட்டி வலையபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் சென்று வாக்காளர் விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தினர் .

    • விருதுநகரில் புத்தகத் திருவிழா தொடங்கியது. விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • பேரணி தேசபந்து மைதானத்தில் தொடங்கி, சந்தை வீதி, தெப்பம் வழியாக, நகராட்சி அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது.

    விருதுநகர்,

    விருதுநகர் கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாக பொருட்காட்சி மைதானத்தில் முதல் முறையாக வருகிற 17-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை புத்தகத் திருவிழா நடக்கிறது.

    இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விருதுநகர் தேசப்பந்து மைதானத்தில் வாக்கத்தான் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    போலீஸ் சூப்பிரண்டு மனோகர் முன்னிலை வகித்தார். கலெக்டர் மேகநாத ரெட்டி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்து, நடைபயணமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இந்த புத்தகத் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள், பிரபல எழுத்தாளர்களின் கருத்தரங்கு சிறப்புப் பட்டிமன்றங்கள், பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், நாட்டுபுற கலைநிகழ்ச்சிகள், தொல்லியல்துறை அரங்குகள், அரசுத்து றைகளின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அனைத்துத் தரப்பு மக்களும் மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெறுவதற்கு திட்டமிடப்பட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த புத்தகக் கண்காட்சி குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    முதலாவது விருதுநகர் புத்தக திருவிழா குறித்து இந்த பேரணியில் விழிப்புணர்வு பதாகைகள் மூலமும், தப்பாட்டம், பொய் கால் குதிரை, உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மூலமும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த பேரணி தேசபந்து மைதானத்தில் தொடங்கி, சந்தை வீதி, தெப்பம் வழியாக, நகராட்சி அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது.

    இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், துணை ஆட்சியர்(பயிற்சி) ஷாலினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சிவக்குமார், நகர்மன்ற தலைவர் மாதவன், ஆணையாளர் ஸ்டான்லி பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் அனுமதியின்றி பேரணி சென்ற அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • தமிழக அரசு ஊழியர்களுக்கு உரிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்த பேரணி நடந்தது.

    மதுரை

    தமிழக அரசு ஊழியர்களுக்கு உரிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் அரசு ஊழியர்கள் பங்கேற்கும் பேரணி நேற்று முதல் நாளை (17-ந் தேதி) வரை பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி மதுரை மாவட்டத்தில் கள்ளிக்குடி வட்டார கல்வி அலுவலகத்தில் நேற்று பேரணி நடந்தது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 2-வது நாளான இன்று திருப்பரங்குன்றம் உதவி கல்வி அலுவலகத்தில் பேரணி தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக 30-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டிருந்தனர். அங்கு வந்த போலீசார் பேரணிக்கு அனுமதி இல்லை. எனவே கலைந்து செல்லுங்கள் என்று கூறினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து பேரணியாக செல்ல முயன்றனர்.

    இதையடுத்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன், ஆசிரியர் சரவணன், டான்சாக் மனோகரன், மாரியப்பன், முருகன், ஆறுமுகம், மாரி, முனியசாமி உள்பட 30-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

    • மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • வட்டார வள மையம் சார்பில் நடைபெற்றது

    அரியலூர்:

    வரும் டிச.3 -ம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, மாற்றுத்தினாளி குழந்தைகளை முன்கூட்டியே அடையாளம் காண்பதில் முக்கிய வத்தையும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை களுக்கு தீர்வு காண்பது குறித்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், டிச.3 -ம் தேதி வரை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    அதன் ஒரு பகுதியாக அரியலூரில் வட்டார வள மையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

    மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணியை முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜப்பிரியன் கொடியசைத்து வைத்தார். பேரணியானது பிரதான கடை வீதி, பேருந்து நிலையம் வழியாகச் சென்று அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நிறை வடைந்தது.

    பேரணியில், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சாமிதுரை, பள்ளி துணை ஆய்வாளர் பழனிசாமி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜேஸ்வரன், ஒருங்கிணைப்பாளர் சார்லஸ், உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

    இதே போல் திருமானூர், இலையூர், நாகமங்கலம், ெஜயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் வட்டார வளமையம் சார்பில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

    • நாமகிரிப்பேட்டை வட்டார வள மையத்திற்குட்பட்ட மாற்று திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • விழிப்புணர்வு பேரணி நாமகிரிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து புறப்பட்டு சென்று பேரூராட்சி அலுவலகம் வரை சென்று முடிவடைந்தது.

    ராசிபுரம்:

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் நாமகிரிப்பேட்டை வட்டார வள மையத்திற்குட்பட்ட மாற்று திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நாமகிரிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து புறப்பட்டு சென்று பேரூராட்சி அலுவலகம் வரை சென்று முடிவடைந்தது. இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் நாகராஜன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கீதா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சென்பக வடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவ -மாணவிகள், பள்ளி ஆசிரியர்கள், இயன்முறை டாக்டர் சுஷ்மிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது
    • மாற்றுத்திறனாளிகளுக்கான

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கல்லாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் கல்வி கற்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் அடைக்கப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மருத.பவுன்ராஜ் முன்னிலை வகித்தார்.பேரணியில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, ஊக்குவித்தல், கல்வியின் அவசியம் குறித்து பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    பேரணியில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சீனி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிரகாஷ், சிறப்பாசிரியர்கள் லீலா ராணி, அறிவழகன், ராதா மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் மாரிமுத்து, நடராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.


    • அரசு பள்ளி மாணவர்கள் பேரணி நடைபெற்றது
    • மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு

    அரியலூர்

    வரும் 3-ந் தேதி மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்பட இருப்பதை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழகொளத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவியர்கள் மாற்றுத்திறனாளிகள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்று, வீதிகளில் மாற்றுத்திறனாளிகள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம், மாற்றுத்திறனாளி உடன் நட்புறவு பாராட்டுவோம், இணைவோம் மகிழ்வோம் என்ற பதாதைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வீதிகளில் பேரணியாக கோசமிட்டு சென்றனர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் வனிதா தலைமைவகித்தார். ஊராட்சி மன்ற தலைவி செந்தமிழ்ச்செல்வி முன்னிலைவகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவி செல்வி, அரசு மருத்துவ ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஆசிரியர்கள் அரசி, ராதை ஆகியோர் செய்திருந்தனர்.

    • பரமத்தி வட்டார ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம் சார்பில் பரமத்தியில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.
    • பேரணி, மோகனூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை சென்றடைந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி வட்டார ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம் சார்பில் பரமத்தியில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.

    பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியை, பள்ளியின் தலைமை ஆசிரியர் சண்முகம் தொடங்கி வைத்தார். பரமத்தி வட்டார கல்வி அலுவலர் கவுரி, பொறுப்பாசிரியர் தேவப்பிரியா, வட்டார வளமைய மேற்பார்வை யாளர் (பொறுப்பு) சுபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேரணி பரமத்தி அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி முன்பு இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. இதில், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிதல், கண்டறியப்பட்ட குழந்தை களை முறையாக பள்ளியில் சேர்த்தல் ஆகியவற்றை வலியுறுத்தி மாணவர்கள் பதாகைகளை ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி னர்.

    பேரணியில் பரமத்தி வட்டார வளமைய ஆசிரியர்கள் பார்வதி, செல்வராணி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பி னர்கள், சிறப்பாசிரியர்கள், பள்ளி ஆயத்த முகாம் பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    அதேபோல் மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் அருணாசலம் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் லாவண்யா கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி, மோகனூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை சென்றடைந்தது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ×