என் மலர்
நீங்கள் தேடியது "உண்டியல்"
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
- உண்டியல் எண்ணிக்கையின்போது கோவில் துணை கமிஷனர் அருணாசலம், கோவில் தக்கார் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.
மதுரை:
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் 11 உபகோவில்களின் உண்டியல்கள் கோவில் வளாகத்தில் திறந்து எண்ணப்பட்டன. இதில் காணிக்கையாக ரூ. 1 கோடியே 20 லட்சத்து 97 ஆயிரத்து 991 கிடைத்தது.
0.540 கிராம் தங்கம், 3 கிலோ 280 கிராம் வெள்ளி, 323 வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவை காணிக்கையாக கிடைத்தது. உண்டியல் எண்ணிக்கையின்போது கோவில் துணை கமிஷனர் அருணாசலம், கோவில் தக்கார் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.
- சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூனர் கோவிலுக்கு வஸ்திர மரியாதை வழங்கப்பட்டது.
- மாங்காடு காமாட்சியம்மன் கோவிலில் ரூ.54 லட்சத்து 37 ஆயிரத்து 13 ரொக்கமாகவும், 374 கிராம் தங்கம், 753 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக வரப்பெற்றது.
மாங்காடு:
இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடந்த 2022-2023-ம் ஆண்டு சட்டமன்ற மானிய கோரிக்கையில், "இதர மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கும், தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கும் நல்லிணக்க உறவு மேம்பட தமிழக கோவில்களில் இருந்து இதர மாநில கோவில்களுக்கு வஸ்திர மரியாதை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் ஏற்கனவே சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூனர் கோவிலுக்கு வஸ்திர மரியாதை வழங்கப்பட்டது. தற்போது, காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் வைகுண்ட பெருமாள் எம்பார் சாமி கோவிலில் இருந்து பரிவட்ட மரியாதை, மாலை ஆகியவை கர்நாடக மாநிலம் மேல்கோட்டை, செல்வ நாராயண பெருமாள் கோவிலுக்கு வழங்கி வஸ்திர மரியாதை செய்யப்பட்டது. இதேபோல் மாங்காடு, காமாட்சி அம்மன் கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டது.
கோவில் பரம்பரை தர்மகர்த்தா டாக்டர் மணலி ஆர்.சீனிவாசன், துணை ஆணையர்-செயல் அலுவலர் பெ.க.கவெனிதா மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட உதவி ஆணையர் ஆ.முத்துரத்தினவேலு மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூ.54 லட்சத்து 37 ஆயிரத்து 13 ரொக்கமாகவும், 374 கிராம் தங்கம், 753 கிராம் வெள்ளியும் காணிக்கையாக வரப்பெற்றது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
- குருந்தன்கோடு ஊற்று விளையில் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது
கன்னியாகுமரி:
இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு ஊற்று விளையில் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் பூஜை வழிபாடுகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கோயிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து ரூ.1000 பணத்தை திருடிச் சென்று உள்ளனர்.
இது குறித்து கோவில் நிர்வாகி ராமசாமி (வயது 62) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம், நாமக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
- இந்து அறநிலைத் துறையால் முத்திரை இடப்பட்ட உண்டியல் துணியால் மூடப்பட்டு இருந்தது. அதன் அருகே முத்திரை இடாத 2 குட உண்டியல், 2 டிரம் உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது.
நாமக்கல்:
சேலம் நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள|
காளிப்பட்டி கந்தசாமி கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலுக்கு சேலம், நாமக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். திருவிழா காலங்களில் ஏராளமான சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். கோவில் நிர்வாகம், செயல் அலுவலர், பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இக்கோவிலில் உண்டி யல் வசூலில் முறைகேடு நடப்பதாக இந்து சமய அறநிலையத் துறை அதி காரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து நேற்று குமாரபாளையம் சரக இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி மற்றும் அதி காரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது இந்து அறநிலைத் துறையால் முத்திரை இடப்பட்ட உண்டியல் துணியால் மூடப்பட்டு இருந்தது. அதன் அருகே முத்திரை இடாத 2 குட உண்டியல், 2 டிரம் உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், 4 உண்டியலுக்கும் முத்திரை இட்டனர். மேலும் அனுமதி இல்லாமல் உண்டியல் வைத்தது தொடர்பாக துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் முடிவு செய்த அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திருட்டு போன காணிக்கை பணம் ரூ.8 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.
- குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
குளச்சல் களிமாரில் உள்ளது மகாவிஷ்ணு கோயில்.நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூஜை முடிந்து பூசாரி கோயில் நடையை பூட்டிவிட்டு சென்றார்.
நேற்று காலை அந்த வழியாக சென்று பொதுமக்கள் கோயில் முன் கிரில் திறந்து கிடந்ததைக்கண்டு கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். நிர்வாகிகள் விரைந்து சென்று கோயிலுக்குள் சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது.மர்ம நபர் யாரோ? இரவு வேளையில் கோயில் புகுந்து உண்டியலை உடைத்து காணிக்கைகளை திருடி சென்றது தெரிய வந்தது.திருட்டு போன காணிக்கை பணம் ரூ.8 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.இது கோயில் நிர்வாக தலைவர் பிரபாகரன் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் அப்பகுதி சி.சி.டி.வி.கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இதுபோல் மர்ம நபர் உண்டியல் உடைத்து காணிக்கை பணத்தை எடுத்து சென்றார் என்பது குறிப்பிட்டத்தக்கது.
- திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலில் ரூ.26 லட்சம் உண்டியல் வசூலானது.
- இதில் ரூ. 26 லட்சத்தி 70 ஆயிரத்து 630-ம், 219 கிராம் 300 மில்லி கிராம் தங்கமும், 514 கிராம் வெள்ளியும் கிடைத்தது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள திருவெற்றியூரில், சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட வல்மீகநாதர் சமேத பாகம்பிரியாள் அம்மன் கோவில் உள்ளது. பல்வேறு நோய்களை குணப்படுத்தும் சக்தி வாய்ந்த தெய்வமாகக் கருதப்படும் இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு செய்கின்றனர். செவ்வாய், வியாழக்கிழமைகளில் கோவிலில் தங்கியிருந்து தெப்பக்குளத்தில் நீராடி நேர்த்திக்கடனாக தங்கம், வெள்ளி உலோகத்தில் உருவம் செய்து உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். பக்தர்கள் செலுத்திய உண்டியல்கள் திறந்து எண்ணும் நிகழ்ச்சி, இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையர் தனசேகரன் தலைமையில் நடந்தது. தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் செந்தில்குமார், ஆய்வாளர் சண்முக சுந்தரம், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தரராஜன் முன்னிலையில் உண்டியல் காணிக்கை பணம் எண்ணப்பட்டது. இதில் ரூ. 26 லட்சத்தி 70 ஆயிரத்து 630-ம், 219 கிராம் 300 மில்லி கிராம் தங்கமும், 514 கிராம் வெள்ளியும் கிடைத்தது.
- திருட்டு போன காணிக்கை பணம் ரூ.6 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதி சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்
கன்னியாகுமரி:
குளச்சல் களிமாரில் உள்ள மகாவிஷ்ணு கோவிலில் கடந்த வாரம் சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் பூஜை முடிந்து பூசாரி கோவில் நடையை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கோயில் முன் கிரில் திறந்து கிடந்ததைக்கண்டு கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
நிர்வாகிகள் விரைந்து கோயிலுக்குள் சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது.மர்ம நபர் யாரோ? இரவு வேளையில் கோவிலில் புகுந்து உண்டியலை உடைத்து காணிக்கைகளை திருடி சென்றது தெரிய வந்தது.
திருட்டு போன காணிக்கை பணம் ரூ.6 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து கோவில் நிர்வாக தலைவர் பிரபாகரன் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.மேலும் அப்பகுதி சி.சி.டி.வி.கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.இந்நிலையில் குளச்சல் போலீசார் நேற்று இரும்பிலி பகுதியில் ரோந்து செல்லும்போது சந்தேகத்திற்கிடமாக ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார்.போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் ஓட முயற்சித்தார்.போலீசார் அவரை மடக்கி பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் லியோன்நகரை சேர்ந்த வினித் (வயது 28) என்பதும் களிமார் விஷ்ணு கோவில் உண்டியல் உடைப்பில் தொடர்புடையதும் தெரிய வந்தது. மேலும் வினித் கருங்கல், நித்திரவிளை போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளிலும் திருட்டு வழக்குகளில் தொடர்புடையது தெரிய வந்தது. இதையடுத்து குளச்சல் போலீசார் வினித்தை கைது செய்தனர்.
- தங்கம், வெள்ளி, வெளிநாட்டு பணங்களும் குவிந்தன
- உண்டியல்கள் அனைத்தும் 2 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.
கன்னியாகுமரி:
உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று.
இந்தக் கோவில் வளாகத்துக்குள் மொத்தம் 17 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுஉள்ளன. இந்த உண்டியல்கள் அனைத்தும் 2 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.
இது தவிர இந்த கோவிலின் வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ள அன்னதான உண்டியல் மட்டும் மாதந்தோறும் திறந்து எண்ணப்பட்டுவருகிறது. ஆனால் இதில் நிரந்தர உண்டியல்கள் மட்டும் கடந்த 3மாதங்களாக திறந்து எண்ணப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் 3மாதங்களுக்கு பிறகு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உள்ள 17 நிரந்தர உண்டியல்களும்நேற்று திறந்து எண்ணப்பட்டன.
குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை உதவி ஆணையர் தங்கம், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாள ருமான ஆனந்த், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆய்வாளர்தர்மேந்திரா ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.
இந்த உண்டியல் எண்ணும் பணி காலை 9 மணிக்கு தொடங்கியது.மாலை4மணி வரை நடந்தது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் குமரி மாவட்டத்தில்உள்ள திருக்கோவில் பணியா ளர்கள், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி செவ்வாடை பெண் பக்தர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாண வர்கள் ஈடுபட்டனர்.
இதில் உண்டியல் மூலம் ரூ.28 லட்சத்து 39 ஆயித்து 163 ரொக்கபணம் வசூலாகி உள்ளது. இதுதவிர 11 கிராம் தங்கமும் 193 கிராம் 600 மில்லி கிராம் வெள்ளியும் மற்றும் வெளிநாட்டு பணமும் காணிக்கையாக வசூலாகிஉள்ளது. இது தவிர கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னதான திட்டத்துக்கான அன்னதான உண்டியலும் திறந்து என்னபட்டது.
இந்த அன்னதான உண்டியல் மூலம் ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்து 866 வசூல் ஆகி உள்ளது. ஆக மொத்தம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.28 லட்சத்து 32 ஆயிரத்து 346 ரொக்க பணம் காணிக்கை யாக வசூல் ஆகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்க தாகும்.
- தமிழக அரசு இந்த கோவிலில் அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
- நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆய்வாளர் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்ஆகும். இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இங்கு வரும் பக்தர்ளுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக தமிழக அரசு இந்த கோவிலில் அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பக்தர்களின் நன்கொடை மூலமும் கோவிலில் உள்ள வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ள அன்னதான உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானம் மூலமும் இந்த அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதேபோல இந்த மாதத்துக்கான அன்னதான உண்டியல் நேற்று திறந்து எண்ணப்பட்டது.
நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆய்வாளர் சுஜித் ஆகியோர் முன்னிலையில் இந்த உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இதில் காணிக்கையாக ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்து 334 வசூல் ஆகி இருந்தது. அதேசமயம் இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 17 நிரந்தர உண்டியல்கள் ஒரு மாதம் ஆன பிறகும் இதுவரை திறந்து எண்ணப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- சோழவந்தான் அருகே கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது.
- இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் சார்பில் சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்டது மேட்டு நீரேத்தான் கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற துர்க்கை அம்மன் கோவில் உள்ளது.
இந்தக் கோவிலில் நேற்று நள்ளிரவு 35 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் புகுந்து சன்னதிக்கு முன்புள்ள உண்டியலை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்து தப்பினார்.
அவர் மஞ்சள் டி-சர்ட், ப்ளூ கலர் ட்ராக் சூட் அணிந்திருந்தார். கண்களை தவிர்த்து முகம் முழுவதையும் துணியால் மறைத்திருந்தார். அவர் உண்டியலை உடைத்து பணம் திருடும் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது. இந்தக் கோவில் ஊரின் முகப்பு பகுதியில், இரவு நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அமைந்தி ருப்பதால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. இதே கோவிலில் ஏற்கனவே இந்த சம்பவத்தையும் சேர்த்து 3 முறை உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது. மேலும் உற்சவர் சிலையும் திருடு போனது. இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவும் இல்லை. பொருட்கள் மீட்கப்படவும் இல்லை. இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் சார்பில் சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார், கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மர்ம நபர் ஒருவர் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றார்.
- ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிப்பு.
கும்பகோணம்:
கும்பகோணம் குமரன் தெரு பகுதியில் ஆதி சாந்தகுண மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ந்தேதி இரவு மர்ம நபர் ஒருவர் கோவிலின் உள்ளே நுழைந்து கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றார்.
இந்த காட்சி கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கோவிலின் உள்ளே நுழைந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற நபர் கும்பகோணம் செட்டி மண்டபம் அன்னை அஞ்சுகம் நகர் பகுதியைச்சேர்ந்த
மணி என்பது தெரியவந்தது. இதையடுத்து மணியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.1-ல் நீதிபதி பாரதிதாசன் முன்பு நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், குற்றம் நிரூபிக்கப்பட்ட மணிக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.
- தனிப்படை போலீசார் விசாரணை
- கண்காணிப்பு காமிராவின் காட்சிகளையும் போலீசார் ஆய்வு
கன்னியாகுமரி:
சுசீந்திரம் அருகே அக்கரை கடைத்தெருவில் புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள 2 உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து இருந்தனர். அதிலிருந்து பணத்தை கொள்ளையடித்து சென்றிருந்தனர்.
இது குறித்து தலைவர் கபிரியல் ரவி, சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகை களை பதிவு செய்தனர். அப்போது கோவிலில் 2 கைரேகைகள் சிக்கியது.
அந்த கைரேகைகளை பழைய கொள்ளையர்களின் கைரேகைகளோடு ஒப்பிட்டு பார்த்து வரு கிறார்கள். மேலும் கொள்ளை யர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி டி.எஸ்.பி. ராஜா சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவின் காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். ஏற்கனவே கடந்த சில நாட்களாக ஆலயங்களை குறிவைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வரு கிறார்கள். எனவே அதே கொள்ளையர்கள் இங்கும் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.