என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைவி கைது"

    • குழந்தைகளை அழைத்துக் கொண்டு செம்மாங்குப்பத்திற்கு வந்து விட்டார்.
    • குடிப்பழக்கத்தை நிறுத்தி விடுவதாகவும், தன்னுடன் சேர்ந்து வாழுமாறும் கேட்டுள்ளார்.

    கடலூர்:

    வடலூர் அருகேயுள்ள திடீர் குப்பத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 29). வெல்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கும் பண்ருட்டி காடாம்புலியூரை அடுத்த சந்தியாவிற்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ராமமூர்த்திக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இதில் ஆத்திரமடைந்த சந்தியா, குழந்தைகளை அழைத்துக் கொண்டு செம்மாங்குப்பத்திற்கு வந்து விட்டார். இந்நிலையில் நேற்று மாலை சந்தியாவை தேடி ராமமூர்த்தி செம்மாங்குப்பத்திற்கு வந்தார். குடிப்பழக்கத்தை நிறுத்தி விடுவதாகவும், தன்னுடன் சேர்ந்து வாழுமாறும் கேட்டுள்ளார். இதில் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் அங்கிருந்த கயிறை எடுத்த சந்தியா, தனது தந்தையின் உதவியுடன், ராமமூர்த்தியின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். இது குறித்து தகவல் அறிந்த முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ராமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா செம்மாங்குப்பத்திற்கு விரைந்து சென்று சம்பவம் குறித்து விசாரனை நடத்தினார். ராமமூர்த்தியின் மனைவி சந்தியாவை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த நாட்டுத்துரை தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
    • கருப்பாத்தாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பழனி:

    பழனி அருகே உள்ள வடபருத்தியூர் கிராமம் தோட்டத்து சாலையில் வசித்து வருபவர் நாட்டுத்துரை(70). இவரது மனைவி கருப்பாத்தாள்(65). இவர்களது ஒரே மகளுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். நாட்டுத்துரை மற்றும் அவரது மனைவி ஆடுகள் வைத்து வளர்த்து வருகின்றனர்.

    நாட்டுத்துரை குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஒரே வீட்டில் அவர்கள் இருந்தபோதும் தனித்தனியாக உணவு சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர்.

    நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த நாட்டுத்துரை தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றவே வீட்டில் இருந்த அரிவாளால் தனது மனைவியை வெட்ட முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த கருப்பாத்தாள் அந்த அரிவாளை பறித்து தனது கணவரை சரமாரியாக வெட்டினார்.

    இதில் நாட்டுத்துரை சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நாட்டுத்துரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கருப்பாத்தாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடும்ப பிரச்சினையில் கணவரை மனைவியே வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • இருந்தபோதிலும் பிள்ளைகளின் நலன் கருதி கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று அவர்களது உறவினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
    • சம்பவ இடத்திற்கு சாத்தூர் டி.எஸ்.பி. நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள சிந்தப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கற்பகராஜா (வயது 27). அதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (25). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இதற்கிடையே மனைவியின் நடத்தை மீது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கற்பகராஜா, விஜயலட்சுமி ஆகிய இருவரும் சிந்தப்பள்ளி கிராமத்தில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக பிரிந்து தனித்தனியாக வசித்து வந்தனர்.

    இருந்தபோதிலும் பிள்ளைகளின் நலன் கருதி கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று அவர்களது உறவினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதேபோல் இருவரும் சேர்ந்து வாழ்வோம் எனக்கூறி கற்பகராஜா விஜயலட்சுமியின் வீட்டிற்கு சென்று தினமும் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    நேற்று முன்தினம் இரவும் கற்பகராஜா மதுபோதையில், விஜயலட்சுமியின் வீட்டிற்கு சென்றார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே நேற்று காலை கற்பகராஜா, மனைவி விஜயலட்சுமியின் வீட்டில் மர்மமான முறையில் கழுத்தில் காயத்துடன் இறந்து கிடந்துள்ளார்.

    தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சாத்தூர் டவுன் போலீசார் கற்பகராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு சாத்தூர் டி.எஸ்.பி. நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த சாத்தூர் டவுன் போலீசார் கற்பக ராஜாவின் மனைவி விஜயலட்சுமி மற்றும் மாமியார் ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் துருவி துருவி விசாரித்தனர்.

    அப்போது விஜயலட்சுமி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    தினமும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து அடித்து துன்புறுத்தியதால் கணவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தேன். பின்னர் மதுவாங்கி வைத்துக் கொண்டு அவரை சமாதானம் பேச அழைத்து அவருக்கு மதுவை அதிகமாக ஊற்றிக்கொடுத்தோம். கற்பகராஜூக்கு போதை தலைக்கேறியதும் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தோம். அதற்கு உதவியாக அவருக்கு சித்துராஜபுரம் பகுதியைச் சேர்ந்த திருநங்கை, அவரது கணவர் இருந்தனர்.

    இவ்வாறு அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து கணவனை கொன்ற விஜயலட்சுமி (25), அவரது தாயார் பழனியம்மாள் (48), திருநங்கை ஸ்வீட்டி (25), இவரது கணவர் வேலாயுதம் (25) ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் சாத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பிரேத பரிசோதனையில் ரமேஷ் மூச்சு திணறி உயிரிழந்ததற்கான தடயங்கள் இருந்தது.
    • கணவன் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு தகராறு செய்தார்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள வாணியன் சத்திரம் கிராமத்தில் வசித்து வந்தவர் ரமேஷ் (வயது 30). குடிப்பழக்கத்துக்கு ஆளான இவர் கடந்த 11-ந்தேதி மர்மமான முறையில் வீட்டில் உள்ள படுக்கை அறையில் இறந்து கிடந்தார்.

    இது தொடர்பாக வெங்கல் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் ரமேஷ் மூச்சு திணறி உயிரிழந்ததற்கான தடயங்கள் இருந்தது. இதனால் ரமேஷ் மனைவி தங்கலட்சுமி (27) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே, அவரை பிடித்து போலீசார் துருவித்துருவி விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனது கணவன் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு தகராறு செய்தார். ஆத்திரம் அடைந்து தனது கணவரை முகத்தில் தலையணையால் அமுக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    போலீசார் தங்கலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். திருவள்ளூர் முதல் நிலை குற்றவியல் கோர்ட்டு மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் தங்கலட்சுமியை போலீசார் புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

    • ஒண்ட வந்த பிடாறி, ஊர் பிடாறியை விரட்டிய கதையாக, வேலைக்கு வந்தவர் சொத்தை வளைத்து போட தொடக்கம் முதலே திட்டம் தீட்டியுள்ளார்.
    • சிவக்குமார் வசம் இருந்த ஒரு சில சொத்துக்களை பிள்ளையின் எதிர்கால நலனை கூறி தனது பெயருக்கு மாற்றி எழுதி வாங்கியுள்ளார்.

    'காட்டன் சிட்டி' என்று அழைக்கப்படும் ராஜபாளையம் 100-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள், பேண்டேஜ் துணி தயாரிப்பு என 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் ஒரு தொழில் நகரமாகும். விசுவாசத்திற்கும், வேட்டைக்கும் பயன்படுத்தப்படும் ஐந்தறிவு ஜீவனான நாய்க்கும் புகழ்பெற்ற ராஜபாளையத்தின் பெயரை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கொடூர கொலை சம்பவம் சற்றே மறக்கடித்து இருக்கிறது.

    ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தின் முன்பாக சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்வீட் ஸ்டால் நடத்தி வந்த குருசாமி ராஜாவின் மறைவுக்கு பிறகு அவரது மகன் சிவக்குமார் (வயது 43) தொடர்ந்து அந்த கடையை நடத்தி வந்தார். பெற்றோர் பார்த்து நடத்தி வைத்த திருமணம், குழந்தை பிறப்புக்கு பிறகு கசந்ததால் அவரை கோர்ட்டுக்கு சென்று விவகாரத்து பெற்ற சிவக்குமார் தன்னுடைய கடைக்கு வேலைக்கு வந்த நெல்லை மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தன்னை விட 20 வயது குறைந்த காளீஸ்வரி (23) என்பவரை 2-வதாக திருமணம் செய்துகொண்டார்.

    இந்த தம்பதிக்கு குருசரண் (2) என்ற ஒரு மகன் உள்ளார். தீபாவளி பண்டிகை அன்று ஒரே வண்ணத்தில் கணவன், மனைவி, குழந்தை புத்தாடை அணிந்து உற்சாகத்துடன் தீபாவளியை கொண்டாடிய சிவக்குமார், அதேநாள் தந்தையின் நினைவு தினம் என்பதால் மனைவி, குழந்தையை அழைத்துக் கொண்டு ராஜபாளையம் சஞ்சீவி மலை அடிவாரத்தில் உள்ள தந்தையின் கல்லறை தோட்டத்திற்கு அஞ்சலி செலுத்த சென்றார்.

    அப்போது அங்கு 4 பேர் அமர்ந்து மது அருந்திக் கொண்டு இருந்ததாகவும், அவர்களை சிவக்குமார் கண்டித்ததால் அவர்கள் ஒன்று சேர்ந்து தாக்கியதில் சிவக்குமார் மயங்கி விட்டதாகவும் பதறியடித்துக்கொண்டு சிவக்குமாரின் மனைவி காளீஸ்வரி ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக அங்கு சென்று போலீசார் பார்த்த போது, சிவக்குமார் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

    அங்கேயே போலீசாருக்கு சந்தேகப்பொறி தட்டியது. இருந்தபோதிலும் உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர டி.எஸ்.பி. பிரீத்தி தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதேநேரத்தில் காளீஸ்வரியையும் போலீசார் தங்கள் வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அப்போது கூட கணவர் கொலை செய்யப்பட்ட சலனம் சற்றும் இல்லாமல் இயல்பாக நடந்து கொண்ட காளீஸ்வரியிடம் பிடியை இறுக்கிய போலீசார், அவர் கூறிய தகவல்களை கேட்டு உறைந்து போனார்கள்.

    அதாவது ஒண்ட வந்த பிடாறி, ஊர் பிடாறியை விரட்டிய கதையாக, வேலைக்கு வந்தவர் சொத்தை வளைத்து போட தொடக்கம் முதலே திட்டம் தீட்டியுள்ளார். இவரிடம் மயங்கிய பின்னரே சிவக்குமார் முதல் மனைவியை விவகாரத்தும் செய்ய துணிந்துள்ளார். பஸ் நிலையம் எதிரே சுமார் ரூ.15 கோடிக்கும் மேல் பெறுமானமுள்ள ஸ்வீட் ஸ்டால், ஏராளமான வீடுகள், பல ஏக்கர் பரப்பளவில் நிலங்கள், தந்தையின் பெயரில் தொடங்கப்பட்ட அறக்கட்டளை சொத்துக்கள் அனைத்தும் தனக்கே, தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்த காளீஸ்வரி, கணவரை கொலை செய்யவும் நேரம் குறித்தார். கொலை செய்யும் அளவுக்கு செல்ல முக்கிய காரணம், ஸ்வீட் ஸ்டால் நிர்வாகத்தை மனைவியிடம் கொடுத்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் கன்சல்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்த சிவக்குமாருக்கு, அங்கும் ஒரு பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டு தொடர்பு நீடித்துள்ளது. இதனை அறிந்துகொண்ட காளீஸ்வரி சொத்தில் பங்கு போட அந்த பெண்ணும் வந்துவிடுவாரோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக சிவக்குமார் வசம் இருந்த ஒரு சில சொத்துக்களை பிள்ளையின் எதிர்கால நலனை கூறி தனது பெயருக்கு மாற்றி எழுதி வாங்கியுள்ளார். இதற்கிடையே சிவக்குமார் ராஜபாளையத்தை சேர்ந்த கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த யோகா மாஸ்டர் அய்யப்பனுக்கு, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.6 லட்சம் பணம் வாங்கியுள்ளார். ஆனால் வேலை வாங்கி தராததோடு, பணத்தை திரும்ப தருவதில் ஏற்பட்ட தாமதத்தால் அவரை தனக்கு சொந்தமான வீட்டிலேயே சிவக்குமார் வாடகைக்கு வைத்துள்ளார்.

    யோகா பயிற்சியாளராக இருந்த அய்யப்பன், காலப்போக்கில் அதனை மறந்து அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த காளீஸ்வரிக்கும் யோகா, சிலம்பம் கற்றுத்தரும் சாக்கில் ஒட்டி, உறவாடி அவரை மடக்கிப்போட்டார். கணவர் இருப்பதோ சென்னை, கள்ளக்காதலன் வசிப்பதோ தனது வீட்டில்..., யாருக்கும் சந்தேகம் வராது என்று எண்ணிய காளீஸ்வரி அய்யப்பனுக்கு நாள்தோறும் உல்லாச விருந்து படைத்து வந்துள்ளார். பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதுபோல், சிவக்குமாருக்கு இந்த கள்ளக்காதல் விஷயம் தெரியவந்து, மனைவியை கண்டித்துள்ளார். மேலும் காளீஸ்வரியின் சகோதரி ராஜபாளையம் அருகே தெற்கு தேவதானம் கிராமத்தில் வசித்து வருகிறார். திருமணம் ஆகாத அவரையும் அழைத்து வா உன்னுடன் சேர்த்து அவருடனும் குடும்பம் நடத்துகிறேன் என்றும் சிவக்குமார் கூறி உள்ளார்.

    அப்போது முதல் கணவரை தீர்த்துக்கட்ட தருணம் பார்த்த காளீஸ்வரிக்கு கிடைத்ததோ, தீபாவளி பண்டிகையுடன் மாமனாரின் நினைவு தினம். தந்தை இறந்த நாளிலேயே மகனுக்கு நினைவு தினத்தை தீர்மானித்த காளீஸ்வரி, அதற்கு பகடைக்காயாக கள்ளக்காதலன் அய்யப்பன், அவரது நண்பர் விக்னேஸ்வரன், மேல ஆப்பனூரை சேர்ந்த மருதுபாண்டியன் ஆகியோரை பயன்படுத்தினார். பக்காவாக ஸ்கெட்ச் போட்டு பகல் முழுவதும் கணவரை மகிழ்வித்த காளீஸ்வரி, அந்திசாயும் மாலை வேளையில் மாமனாரின் கல்லறை அமைந்துள்ள பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

    முதலில் அங்கு தயாராக இருந்த அய்யப்பன், விக்னேஸ்வரன், மருதுபாண்டியன் ஆகியோர் மூலம் சொத்துக்களை காளீஸ்வரியின் பெயருக்கு மாற்றி எழுதித்தருமாறு மிரட்டியுள்ளார். ஆனால் மறுத்ததால் நண்பர்களுடன் சேர்ந்து சென்னையில் இருந்து தீபாவளி கொண்டாட வந்த சிவக்குமாரை கழுத்தை அறுத்து கொலை செய்ய கூறியுள்ளார். அவர் திட்டமிட்டபடியே கொலையும் அரங்கேறியுள்ளது.

    இதில் அதிர்ச்சி தரும் மற்றொரு தகவல் நமக்கு தனிப்படை போலீஸ் மூலம் கிடைத்தது. என்னவென்றால், காளீஸ்வரியின் கள்ளக்காதலை அறிந்து முதலில் அதிர்ச்சி அடைந்த சிவக்குமார், இவளை இப்படியே விட்டுவைத்தால் சமுதாயத்தில் தனக்கு இருக்கும் நல்ல பெயர் கெட்டுவிடும், எனவே தக்க சமயம் பார்த்து காளீஸ்வரியை போட்டுத்தள்ள நினைத்திருந்தார். ஆனால் முந்திக் கொண்ட காளீஸ்வரி சற்றும் சலனமின்றி கணவரை கொடூரமாக கொலை செய்துள்ளார். உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இன்று உள்ளே சென்ற காளீஸ்வரியால் தவிப்பது சிவக்குமார் மூலம் பெற்றெடுத்த 2 வயது குழந்தைதான்.

    • கணவர் தன்னை துன்புறுத்தி வருவதாக சிரஞ்சீவியிடம் உமா தெரிவித்தார்
    • கணவர் காணாமல் போனதாக எலமஞ்சி போலீசில் உமா புகார் செய்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், எஸ் ராயவரத்தை சேர்ந்தவர் கொண்டல ராவ் (வயது 49). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி உமா. இவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    அதே பகுதியை சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவர் காக்கிநாடாவில் பெண்கள் பயன்படுத்தும் மணி பர்ஸ், பேக் உள்ளிட்டவை வியாபாரம் செய்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிரஞ்சீவி கடைக்கு சென்ற உமாவுக்கும் அவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. கணவரிடம் சிரஞ்சீவி தனது தூரத்து உறவினர் என அறிமுகம் செய்து வைத்தார்.

    சிரஞ்சீவியும் உமாவும் மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்து வந்தனர். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கொண்டல ராவுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த கொண்டல ராவ் மனைவியை துன்புறுத்தி வந்தார்.

    கணவர் தன்னை துன்புறுத்தி வருவதாக சிரஞ்சீவியிடம் உமா தெரிவித்தார். இதனால் கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.

    சம்பவத்தன்று கொண்டலராவை காக்கிநாடா ஆஸ்பத்திரியில் சர்க்கரை வியாதிக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி காரில் அழைத்துச் சென்றார்.

    சிகிச்சை முடிந்து மறுநாள் இரவு காரில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தனர். ராகில கொத்தூர் என்ற இடத்தில் வந்தபோது தயாராக இருந்த சிரஞ்சீவி மற்றும் அவரது நண்பர் சைதுர்கா ஆகியோர் காரை நிறுத்தினர். அவர்களுடன் உமாவும் சேர்ந்து கொண்டலராவை கழுத்து இறுக்கி கொலை செய்தனர்.

    பின்னர் ராவுல பாலம் அருகே உள்ள கோதாவரி ஆற்றில் கொண்டலராவின் பிணத்தை வீசினர். கணவர் காணாமல் போனதாக எலமஞ்சி போலீசில் உமா புகார் செய்தார்.

    கொண்டலராவின் உறவினர்கள் உமா, சிரஞ்சீவி என்பருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும் அவர் மீது சந்தேகம் இருப்பதாக போலீசில் தெரிவித்தனர். போலீசார் சிரஞ்சீவியை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சிரஞ்சீவி கொண்டலராவை அவரது மனைவியுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து உமா, அவரது கள்ளக்காதலன் சிரஞ்சீவி, அவரது நண்பர் சைதுர்கா ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • நான் குழந்தைகள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நிலையில் அவரை வீட்டிற்கு வெளியே அழைத்து வந்தேன்.
    • குடிபோதையில் செக்ஸ் டார்ச்சர் செய்து தகாத வார்த்தையால் திட்டி என்னை அடித்து துன்புறுத்தினார்.

    அரூர்:

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கீரைப்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜா(40). கூலி தொழிலாளி இவரது மனைவி கனகா(34) ராஜா என்பவர் கடந்த 1-ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இவரது சாவில் சந்தேகம் இருப்பதாக அவர் தாய் ராதாமணி அரூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் அரூர் போலீசார் சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை செய்தனர். இந்நிலையில் அவரது மனைவி கனகாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் தனது கனவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து அளித்துள்ள வாக்குமூலத்தில் எனது கணவர் கூலி தொழில் செய்து வருகிறார். தினமும் மதுபோதையில் வீட்டிற்கு வந்து செக்ஸ் டார்ச்சர் செய்வார். சம்பவத்தன்று இரவில் அதிக மதுபோதையில் வீட்டிற்கு வந்தார்,

    பின்னர் என்னை செக்ஸ் டார்ச்சர் செய்தார் எனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறினேன், அதை பொருட்படுத்தாமல் அவரது ஆசைக்கு இணங்க என்னை வற்புறுத்தினார்.

    நான் குழந்தைகள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நிலையில் அவரை வீட்டிற்கு வெளியே அழைத்து வந்தேன். பின்னர் அவர் குடிபோதையில் செக்ஸ் டார்ச்சர் செய்து தகாத வார்த்தையால் திட்டி என்னை அடித்து துன்புறுத்தினார்.

    நானும் எனது தற்காப்புக்காக அவரை தாக்கினேன் அதில் அவர் மயக்கம் அடைந்து விட்டார் என எண்ணி நான் கதவை தாளிட்டு உறங்கச் சென்று விட்டேன், மீண்டும் எழுந்து வந்து பார்த்த பொழுது எனது கணவர் அங்கேயே இருந்தார். அவரை நான் தட்டி எழுப்பியபோது இறந்து கிடந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரது உடவை யாருக்கும் தெரியாமல் ஓடையில் வைத்து விட்டு நான் வீட்டிற்கு வந்து விட்டேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

    • கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சவிதாவுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
    • போலீசில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து தலைமறைவான சவிதாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ காலையில் இருந்து விரதமிருந்த மனைவி, மாலையில் கணவரை விஷம் வைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரபிரதேசம் மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தை சேர்ந்தவர் ஷைலேஷ் குமார் (32). அவரது மனைவி சவிதா. இவர் கர்வா சவுத் பண்டிகையின் ஒரு பகுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வைலேஷின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செயய உண்ணாவிரதம் இருந்துள்ளார். அதற்கான ஏற்பாடுகளை ஷைலேஷ் மும்முரமாக செய்துள்ளார்.

    இதனிடையே, கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சவிதாவுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து மாலையில் விரதத்தை முடித்து ஷைலேஷிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. இருப்பினும் இருவரும் சமாதானம் ஆகி ஒன்றாக சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் ஷைலேஷ் மயங்கி விழுந்துள்ளார்.

    இதையடுத்து சவிதா அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். ஷைலேஷ் வீட்டிற்கு வந்த அவரது சகோதரர் ஷைலேஷின் நிலைமைய கண்டு உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஷைலேஷ் உயிரிழந்தார்.

    தான் உணவில் விஷம் கலந்து கொடுத்ததாக சவிதா வீடியோ மூலம் ஷைலேஷின் சகோதரருக்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து தலைமறைவான சவிதாவை போலீசார் கைது செய்துள்ளனர். 

    • பெஞ்சமின் வெளிநாட்டில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • வீடியோவில் தனது மனைவியின் துரோகத்தை அழுதபடியும், நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறியபடியும் பெஞ்சமின் கூறினார்.

    திருமண வாழ்வு என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் முக்கியமான ஒன்றாகவும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு பலரது வாழ்க்கையை சந்தோஷமானதாகவும், பலரது வாழ்க்கையை சோகமானதாகவும் மாற்றுகிறது. திருமண வாழ்வு இனிதாக இல்லாமல் போவதற்கு கணவன்-மனைவிக்கு இடையே புரிதல் இல்லாததே பிரதான காரணமாக கூறப்படுகிறது.

    அதேபோல் திருமணத்திற்கு பிறகு ஏற்படும் தவறான தொடர்பும் பலரது வாழ்க்கையை சீரழித்து விடுகிறது. கணவனோ மனைவியோ, தனது இணை மீது அளவில்லாத அன்பு வைத்திருக்கும் பட்சத்தில், அந்த நம்பிக்கைக்கு துரோகம் விளைவிக்கும் வகையில் அவர் வேறு யாருடனாவது தொடர்பு வைத்திருந்தால், அதனை உண்மையாக நேசிக்கும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    அது அந்த நபருக்கு கட்டுப்படுத்த முடியாத ஆத்திரத்தை தரும் பட்சத்தில் அவர் ஒரு கொலையாளியாகவோ அல்லது தனது உயிரையே மாய்த்துக் கொள்ளும் பரிதாபமான நபராகவோ மாறிவிடுகிறார். இதில் இரண்டாவதாக கூறியதைப் போன்று ஒரு நபர், தனது மனைவியின் கள்ளக்காதலை அறிந்து தாங்க முடியாத துக்கத்துக்கு தள்ளப்பட்ட நிலையில் தன்னுடைய உயிரையே மாய்த்துக் கொண்ட சோகம் குமரி மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.

    குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள கொன்னக்குழிவிளை பகுதியை சேர்ந்தவர் பெஞ்சமின்(வயது47). இவருக்கும், சுனிதா (45) என்ற பெண்ணுக்கும் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அவர்களுக்கு குழந்தை இல்லை.

    பெஞ்சமின் வெளிநாட்டில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவர் சவுதி அரேபியாவில் இருந்த நிலையில், அவருடைய மனைவி சுனிதா கொன்னக் குழிவிளையில் உள்ள கணவரின் வீட்டில் இருந்து வந்தார்.

    மனைவி சுனிதா மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்த பெஞ்சமின் அவருக்கு பிடித்த எல்லாம் செய்து கொடுத்துள்ளார். மனைவியின் விருப்பப்படி தனது பூர்வீக வீட்டை விற்றுவிட்டு, தெற்கு மணக்காவிளையில் புதிதாக வீடு கட்டினார். பெஞ்சமின் வெளிநாட்டுக்கு சென்று விடும் நிலையில், அந்த வீட்டில் சுனிதா மட்டும் குடியிருந்தார்.

    இந்தநிலையில் சமீப காலமாக சுனிதாவின் நடவடிக்கையில் மாற்றும் ஏற்பட்டது. அதனை கண்டுபிடித்த பெஞ்சமின், அதுகுறித்து கேட்கும் போதெல்லாம் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுனிதா தனது வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.

    இதுகுறித்து தகவல் இருந்த பெஞ்சமின் வெளிநாட்டில் இருந்து அவசர அவசரமாக புறப்பட்டு சொந்த ஊருக்கு வந்தார். தனது மனைவியை பல இடங்களில் தேடினார். ஆகவே தனது மனைவி மாயமானது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் மாயமான சுனிதாவை போலீசார் தேடி வந்தனர்.

    ஆனால் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. மனைவி சுனிதா எங்கு சென்றார்? என்று பெஞ்சமின் விசாரித்தார். அப்போதுதான் தனது மனைவிக்கும், திருவந்திக்கரை பகுதியைச் சேர்ந்த சைஜு என்பவருக்கும் தொடர்பு இருந்ததை தெரிந்து கொண்டார்.

    மேலும் தான் வெளிநாட்டில் பல ஆண்டுகளாக வேலை பார்த்து சம்பாதித்த பணத்தில் ஆசையாக கட்டிய வீட்டை விற்று, அதில் கிடைத்த பணத்தையும் எடுத்துக்கொண்டு கள்ளக்காதலனுடன் மனைவி சென்றுவிட்டதை அறிந்தார். மிகவும் பாசம் வைத்திருந்த தனது மனைவியின் இந்த செயல் பெஞ்சமினை மிகவும் பாதித்தது.

    இதனால் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். அதே நேரத்தில் மனைவி தனக்கு செய்த துரோகத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் பெஞ்சமின் தற்கொலை செய்து கொள்வதற்கு முன், தனது செல்போனில் ஒரு வீடியோவை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.



    அந்த வீடியோவில் தனது மனைவியின் துரோகத்தை அழுதபடியும், நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறியபடியும் பெஞ்சமின் கூறினார். தனது மனைவியின் இந்த செயலை தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும், ஆகவே தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் அதில் பேசினார்.

    மேலும் தனது தற்கொலைக்கு தன்னுடைய மனைவியின் கள்ளக்காதலன் சைஜு, தனது மனைவி சுனிதா, அவரது சகோதரி ஷீலா ஆகியோரே காரணம் என்றும், அவர்களை தூக்கில் போட வேண்டும் என்றும் ஆவேசமாக அதில் தெரிவித்தார். அந்த வீடியோவை வெளியிட்ட சிறிய நேரத்தில் தனது வீட்டில் வைத்து பெஞ்சமின் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    பெஞ்சமின் வெளியிட்டிருந்த அந்த வீடியோ பார்ப்பவர்களை கண்கலங்க செய்யும் வகையில் பரிதாபமாக இருந்தது. அவரது பேச்சில் அவர் தனது மனைவி மீது வைத்திருந்த அளவு கடந்த பாசம் தெளிவாக தெரிந்தது. அதனை தாங்க முடியாமல் அவர் தளுதளுத்த குரலில் நடுங்கியபடியும், கதறிய படியும் பேசியது அனைவரையும் பரிதாபப்பட செய்து விட்டது.

    அதே நேரத்தில் பெஞ்சமின் தான் வெளியிட்ட வீடியோவில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை நேரடியாக கேட்டுக்கொண்டார். இதனால் பெஞ்சமின் தற்கொலை விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். பெஞ்சமின் தற்கொலை செய்வதற்கு முன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவை ஆதாரமாகக் கொண்டு போலீசார் வழக்கு பதிந்தனர். பெஞ்சமின் மனைவி சுனிதா, மனைவியின் கள்ளக்காதலன் சைஜு, சகோதரி ஷீலா ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    பெஞ்சமின் மனைவி சுனிதாவுக்கு திருமணத்திற்கு முன்னதாகவே சைஜூவுடன் பழக்கம் இருந்துள்ளது. அப்போது அவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

    திருமணத்திற்கு பிறகும் சைஜுவுடனான தொடர்பை சுனிதா விடவில்லை. வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வரும் நேரத்தில் கணவர் பெஞ்சமினுக்கு சந்தேகம் எதுவும் வராதபடி நடந்து கொண்டுள்ளார். அவர் விடுமுறை முடிந்து மீண்டும் வெளிநாட்டுக்கு சென்ற பிறகு சைஜுவுடன் சேர்ந்து சுற்றி திரிந்தபடி இருந்திருக்கிறார்.

    தனது மனைவியின் விவகாரம் அரசல்புரசலாக பெஞ்சமினுக்கு தெரிய வரவே, மனைவியை கண்டித்திருக்கிறார். ஆனால் சுனிதா தனது போக்கை விடவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் கணவர் வெளிநாட்டில் இருந்த நேரத்தில் கள்ளக்காதலனுடன் சுனிதா நிரந்தரமாக குடும்பம் நடத்த சென்று விட்டார்.

    இதனை அறிந்த பெஞ்சமின் உடனடியாக வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பினார். தனது 19 ஆண்டுகால உழைப்பில் கட்டிய வீட்டை விற்று, அதில் கிடைத்த பணத்துடன் மனைவி மாயமானது அவருக்கு பேரதிர்ச்சியை தந்தது. ஆகவே தனது மனைவி மாயமானது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அப்போது கணவருடன் வாழ விருப்பமில்லை என்று சுனிதா கூறிவிட்டதாக தெரிகிறது. மனைவியின் இந்த செயல் பெஞ்சமினை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் காரணமாகவே அவர் தற்கொலை முடிவு எடுத்திருக்கிறார்.

    மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    பெஞ்சமின் தற்கொலைக்கு காரணமான அவரது மனைவி உள்பட 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடினர். இந்த நிலையில் பெஞ்சமினின் மனைவி சுனிதா போலீசாரிடம் சிக்கினார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சுனிதாவின் கள்ளக்காதலன் சைஜு, சகோதரி சீலா ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பெஞ்சமின் எதுவும் கூறாமல் தற்கொலை செய்து இருந்தால் அவரது சாவு சாதாரண தற்கொலை வழக்காக இருந்திருக்கும். ஆனால் அவர் தற்கொலை செய்வதற்கு முன்னதாக அதற்கு காரணமான தனது மனைவி உள்ளிட்டோரை பற்றி மிகவும் தெளிவாக பேசி வீடியோ எடுத்து அதனை சமூக வலை தளத்தில் பதிவிட்டார்.

    இதன் காரணமாகவே பெஞ்சமின் தற்கொலைக்கு காரணமானவர்கள் பற்றிய விவரம் தெரியவந்தது. அவரது தற்கொலைக்கு முக்கியமான காரணமாக இருந்த அவருடைய மனைவி சுனிதாவும் சிக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரேத பரிசோதனை முடிவில் முத்துக்குமார் கழுத்து எலும்பு நெரிக்கப்பட்ட தடம் இருப்பது தெரிய வந்தது.
    • மரியா ஆரோக்கிய செல்வியை சேர்ந்தமரம் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் கைது செய்து சிறையில் அடைத்தார்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி மரியா ஆரோக்கிய செல்வி (வயது 30). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

    கடந்த 5-ந்தேதி முத்துக்குமார் மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் திடீரென மயக்கம் அடைந்து விட்டார் என்று கூறி 108 ஆம்புலன்சில் ஏற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முத்துக்குமார் வரும் வழியிலே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    ஆனால் அவர் இறப்பிற்கான காரணம் என்ன என்று அறிவதற்காக முத்துக்குமார் உடலை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். பிரேத பரிசோதனை முடிவில் முத்துக்குமார் கழுத்து எலும்பு நெரிக்கப்பட்ட தடம் இருப்பது தெரிய வந்தது.

    இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் அவர் மஞ்சள் காமாலையால் இறக்கவில்லை. அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியானது. இதனிடையே நொச்சிகுளம் கிராம நிர்வாக அலுவலரை நேரில் சந்தித்த மரியா ஆரோக்கிய செல்வி தனது கணவர் மஞ்சள் காமாலையால் இறக்கவில்லை என்றும், தான் கொலை செய்ததாகவும் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக சேர்ந்தமரம் போலீசாருக்கு தகவல் தெரியவரவே, மரியா ஆரோக்கிய செல்வியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், எனது கணவர் வேலைக்குச் செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து எனக்கும், எனது குழந்தைகளுக்கும் தொந்தரவு கொடுத்ததோடு, அடித்து துன்புறுத்தி வந்தார்.

    இதனால் அவரது கொடுமையை தாங்க முடியாமல் கடந்த 5-ந்தேதி இரவில் எனது கணவர் தூங்கிக் கொண்டிருந்த போது கழுத்தை நெரித்தேன். அதில் அவர் மயங்கிவிட்டார். அதன் பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் மஞ்சள் காமாலையில் எனது கணவர் மயங்கி விட்டார் எனக் கூறி நம்ப வைத்து அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தேன் என வாக்குமூலம் அளித்தார்.

    அதனை தொடர்ந்து மரியா ஆரோக்கிய செல்வியை சேர்ந்தமரம் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் கைது செய்து சிறையில் அடைத்தார்.

    • தொழிலாளி சாவில் மர்மம் இருப்பதாக அவரது தம்பி பழனிசாமி கொளத்தூர் போலீசில் புகார் செய்தார்.
    • கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தனது கணவரை விஷம் கொடுத்து கொன்றதாக மனைவி தெரிவித்தார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா கொளத்தூர் அருகே உள்ள காரைக்காடு வீரகாரன் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 37). விவசாய கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி புகழரசி (27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சக்திவேல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மனைவி புகழரசி, தனது கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்களிடம் தெரிவித்தார். பின்னர் உறவினர்கள் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்து கொண்டு இருந்தனர்.

    இதனிடையே சக்திவேல் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தம்பி பழனிசாமி கொளத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் சக்திவேலின் மனைவி புகழரசி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தனது கணவரை விஷம் கொடுத்து கொன்றதாக தெரிவித்தார்.

    தொடர்ந்து அவர் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

    எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் சக்திவேல் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்தார். இதனிடையே எனக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த முத்துக்குமார் (27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தோம். இந்த கள்ளக்காதல் விஷயம் எனது கணவர் சக்திவேலுக்கு தெரியவந்தது. இதனால் அவர் என்னை கண்டித்தார்.

    மேலும் கள்ளக்காதலை கைவிடுமாறு கூறி என்னிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இது பற்றி கள்ளக்காதலன் முத்துகுமாரிடம் தெரிவித்தேன். அப்போது, அவர் உனது கணவரை கொன்று விடு, அதன் பிறகு நாம் இருவரும் எந்த இடையூறும் இல்லாமல் சந்தோஷமாக வாழலாம், உனக்கும், உனது குழந்தைகளுக்கும் தேவையான வசதிகளை செய்து தருவதாக கூறினார். பின்னர் யாருக்கும் சந்தேகம் வராதபடி இந்த கொலையை எப்படி செய்வது மற்றும் மறைப்பது குறித்தும் திட்டம் தீட்டினோம்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் குடிபோதையில் எனது கணவர் சக்திவேல் வீட்டுக்கு வந்தார். அவருக்கு முதலில் 10 தூக்க மாத்திரைகளை உணவில் கலந்து கொடுத்தேன். ஆனால் அவர் அதில் உயிர் பிழைத்துக் கொள்வார் என்ற எண்ணத்தில் மீண்டும் தேனீர் போட்டு, அதில் தோட்டத்திற்கு வைத்திருந்த விஷத்தை கலந்து கொடுத்தேன். எனினும் அவர் பிழைத்துக்கொண்டால் என்ன செய்வது என்று எண்ணிய நான், மீண்டும் சாப்பாட்டில் விஷத்தை கலந்து அவருக்கு ஊட்டி விட்டேன். தொடர்ந்து விஷம் ஏறியதால், அவர் துடிதுடித்து இறந்து விட்டார்.

    தொடர்ந்து அவர் உயிரிழந்ததை உறுதி செய்ய, முத்துக்குமாரை போனில் தொடர்பு கொண்டு வீட்டுக்கு வரும்படி கூறினேன். நள்ளிரவில் வீட்டுக்கு வந்த முத்துக்குமார், சக்திவேல் இறந்ததை உறுதி செய்த பின்பு, அவரது வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதைத்தொடர்ந்து எனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினேன். எனினும் போலீஸ் விசாரணையில் உண்மையை ஒத்துக்கொண்டேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    இதையடுத்து போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து, புகழரசியையும், அவரது கள்ளக்காதலன் முத்துக்குமாரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை மேட்டூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட், அவர்கள் இருவரையும் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார்.

    அதன்படி போலீசார் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் ஜெயிலில் புகழரசியையும், சேலம் மத்திய ஜெயிலில் முத்துக்குமாரையும் அடைத்தனர்.

    • கடந்த 16-ந்தேதி சந்தன மாரியப்பன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி பாண்டிச்செல்வி தளவாய்புரம் போலீசில் புகார் செய்தார்.
    • புகாரின் பேரில் போலீசார் சந்தன மாரியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தனமாரியப்பன் (வயது 46). இவரது மனைவி பாண்டிச்செல்வி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் ஒரு பெண்ணுக்கு திருமணமாகி விட்டது. மற்றொரு பெண்ணுக்கு திருமணமாகவில்லை.

    இதற்கிடையே சந்தன மாரியப்பன் கடந்த 13 ஆண்டு காலமாக கண் பார்வை குறைபாட்டாலும் கை,கால் செயல்படாமல் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலே இருந்து வந்தார். பாண்டிசெல்வி கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி சந்தன மாரியப்பன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி பாண்டிச்செல்வி தளவாய்புரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சந்தன மாரியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் சந்தனமாரியப்பன் கொலை செய்யப்பட்டு உள்ளார் என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பாண்டிச்செல்வியிடம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர்.

    இதில் கணவர் தனது நடத்தையில் சந்தேகப்பட்டதால் அவரை கட்டையால் அடித்தேன், பின்னர் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தேன் என்று கூறினார்.

    இதையடுத்து பாண்டிச்செல்வியை தளவாய்புரம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    ×