search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் அறிக்கை"

    • நாடு முழுவதும் பாஜக 400 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
    • நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளர் நிற்பது உறுதியாகியுள்ளது.

    நீலகிரி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

    குறிப்பாக கூட்டணி அமைப்பதில் பல்வேறு கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியிருப்பதாவது:-

    பாண்டிச்சேரி உட்பட அனைத்து தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும்.

    நாடு முழுவதும் பாஜக 400 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் நிற்பது உறுதியாகியுள்ளது.

    வேட்பாளர் யார் என்று கட்சி தலைமை, பாராளுமன்ற குழு அறிவிக்க உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு வந்தனர்.
    • அண்ணா அறிவாலயத்திற்கு 500-க்கும் மேற்பட்ட கடிதங்கள் வாயிலாகவும் மக்கள் பரிந்துரைகளை அனுப்பி உள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனி மொழி எம்.பி. தலைமையிலான11 பேர் கொண்ட குழுவினர் மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து பரிந்துரைகளை பெற்று வருகின்றனர்.

    இந்த குழுவில் கனிமொழியுடன் தி.மு.க. செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே. எஸ்.இளங்கோவன், தி.மு.க. விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், தி.மு.க. சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளர் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தி.மு.க. வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., தி.மு.க. மாணவரணிச் செய லாளர் சி.வி.எம்.பி.எழிலர சன் எம்.எல்.ஏ., தி.மு.க. அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி., தி.மு.க. மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., சென்னை மாநகர மேயர் பிரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுரைப்படி தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் கடந்த 5-ந் தேதி முதல், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு வந்தனர்.

    நேரயடியாக மனுக்களை பெற்றதுடன் தொலைபேசி வாயிலாக 18,000-க்கும் மேற்பட்ட அழைப்புகளும், 2,500-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள்; சமூக ஊடகங்கள் வாயிலாக 4,000-க்கும் மேலான பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளது.

    தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு 500-க்கும் மேற்பட்ட கடிதங்கள் வாயிலாகவும் மக்கள் பரிந்துரைகளை அனுப்பி உள்ளனர்.

    இன்று காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட பொது மக்களையும் கட்சி நிர்வாகிகளையும் கனிமொழி எம்.பி. தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் மக்களை சந்தித்தனர்.

    அதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு தங்கள் பரிந்துரைகளை அளித்தனர்.

    வணிகர் சங்கங்கள், விவசாயிகளின் பிரதிநிதிகள், நெசவாளர்கள், மீனவ சங்கங்கள், தொழில் முனைவோர், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள், கல்வி யாளர்கள், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் தங்கள் கோரிக்கைகளை வழங்கினார்கள். இவைகளை பெற்றுக் கொண்ட கனிமொழி எம்.பி. உங்களது கோரிக்கைகளை தீர்த்து வைக்க தேர்தல் அறிக்கையில் இவற்றை தொகுத்து இடம் பெற செய்வோம் என்று கூறினார்.

    • கடந்த 6-7 மாதங்களாக ஜி.கே.வாசன் சில முயற்சிகளை மேற்கொண்டார்.
    • மார்ச் முதல் வாரத்தில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க. உடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்து உள்ளதாக ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, ஜி.கே.வாசனை சந்தித்தார். அப்போது அண்ணாமலை கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் பாஜக அணியில் தமிழ் மாநில காங்கிரஸ் முதல் கட்சியாக இணைந்துள்ளது.

    கடந்த 6-7 மாதங்களாக ஜி.கே.வாசன் சில முயற்சிகளை மேற்கொண்டார்.

    மார்ச் முதல் வாரத்தில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார்.

    பாரம்பரியம் மிக்க கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் விலங்குகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நாளை பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் ஜி.கே.வாசன் பங்கேற்கிறார்.
    • பிரதமர் மோடியை மீண்டும் பிரதமர் ஆக்க தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உழைக்கும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

    குறிப்பாக கூட்டணி அமைப்பதில் பல்வேறு கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. உடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்து உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாலை உடனான சந்திப்பிறகு பிறகு அவர் கூறியிருப்பதாவது:-



    பாஜக கூட்டணியில் ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை கேட்கிறது.

    நாளை பிரதமர் மோடியின் பல்லடம் பொதுக்கூட்டத்தில் நானும் பங்கேற்கிறேன். பிரதமர் மோடியை மீண்டும் பிரதமர் ஆக்க தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உழைக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பாரதிய ஜனதா ஆட்சி தொடர்ந்தால் பொருளாதார ரீதியாக நாடு நலம் பெறும்.
    • விவசாயம், கல்வி, சுகாதாரம் போன்றவற்றுக்கு பாரதிய ஜனதா முக்கியத்துவம் அளிக்கிறது.

    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்து உள்ளது. தமிழ்நாட்டின் கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாரதிய ஜனதாவுடன் இணைந்து செயலாற்றுவதில் த.மா.கா. பெருமை கொள்கிறது.

    பாரதிய ஜனதா ஆட்சி தொடர்ந்தால் பொருளாதார ரீதியாக நாடு நலம் பெறும். பாதுகாப்பு ரீதியாக வலிமை அடையும். இதை கருத்தில் கொண்டே பா.ஜ.க. அணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைகிறது.

    பிரதமர் மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) பல்லடம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இந்த கூட்டத்தில் நானும் (ஜி.கே.வாசன்) பங்கேற்கிறேன். பிரதமர் மோடியை மீண்டும் பிரதமர் ஆக்க தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உழைக்கும்.


    வளமான பாரதம் அமைய வேண்டும் என்று விரும்பும் கட்சிகள் பாரதிய ஜனதாவுடன் வந்து இணைய வேண்டும். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பாடுபடுவார்கள்.

    விவசாயம், கல்வி, சுகாதாரம் போன்றவற்றுக்கு பாரதிய ஜனதா முக்கியத்துவம் அளிக்கிறது. படித்தவர்கள், இளைஞர்கள், பெண்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவாக உள்ளனர். அவரது கரத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

    பாரதிய ஜனதாவுடன் விரைவில் த.மா.கா. தொகுதி பங்கீடு செய்யும்.

    சாதாரண மக்களின் பிரச்சினைகளை பிரதிபலிக்க தி.மு.க. தவறி விட்டது. அதற்கு இந்த பாராளுமன்ற தேர்தலில் விடை கிடைக்கும்.

    இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

    • நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களை போலவே தனித்து போட்டியிடுவதாக அறிவித்து உள்ளது.
    • நீட் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. பா.ஜ.க. கட்சிகள் தங்களது தலைமையில் கூட்டணியை அமைத்து தொகுதி ஒதுக்கீட்டுக்கான பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

    நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களை போலவே தனித்து போட்டியிடுவதாக அறிவித்து உள்ளது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடியாக திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர் ஆகிய 5 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே இடும்பாவனம் கிராமத்தில் வேட்பாளர்களை அறிவித்த சீமான் தொடர்ந்து அவர்களை அறிமுகப்படுத்தி பேசினார். அதன்படி திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு மீட்பு குழு தலைவர் டி. ராஜேஷ், தஞ்சாவூர் தொகுதிக்கு எம்.இ.ஹிமாயூன் கபீர், மயிலாடுதுறை தொகுதிக்கு பி. காளியம்மாள், நாகப்பட்டினம் தொகுதிக்கு எம். கார்த்திகா, நாகப்பட்டினம் தொகுதிக்கு ஆர். தேன்மொழி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர.



    திருச்சி தொகுதிக்கு அறிவிக்கப்பட்டு உள்ள ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு மீட்பு குழு தலைவர் டி. ராஜேஷ் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம், ஸ்டெர்லைட், நீட் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மயிலாடுதுறை தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள பி. காளியம்மாள் நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவராக உள்ளார்.

    தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. போன்ற அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு கூட்டணி என பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் 5 வேட்பாளர்களை அறிவித்துள்ளது அரசியல் கட்சிகளுக்கு இடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் தற்போது அறிவித்துள்ள 5 வேட்பாளர்களில் 3 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு அக்கட்சியினுடைய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பல்வேறு தரப்பட்ட பொதுமக்களை சந்தித்து தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளை கேட்டு வருகிறது.
    • 27-ந்தேதி சென்னை (மாலை 3 மணி முதல்) காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் மத்திய மாவட்டம்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலுக்காக தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரித்து வருகிறது. இதற்காக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழு ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகளை அறிய பல்வேறு தரப்பட்ட பொதுமக்களை சந்தித்து தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளை கேட்டு வருகிறது.

    இந்த குழுவினர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று வந்த நிலையில் கடந்த சில நாட்களாக சட்டசபை நடைபெற்ற காரணத்தாலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருவதாலும் இக்குழுவினர் சுற்றுப்பயணம் கீழ்க்கண்டவாறு மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

    23-ந்தேதி வேலூரில் சந்திப்பு காலையில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், ஆரணி மாலை 3 மணி திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு 26-ந்தேதி தஞ்சாவூரில் சந்திப்பு காலையில் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மாலை 3 மணிக்கு விழுப்புரத்தில் சந்திப்பு. கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள்.

    27-ந்தேதி சென்னை (மாலை 3 மணி முதல்) காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் மத்திய மாவட்டம்.

    28-ந்தேதி சென்னை (காலை 10 மணி) சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு.

    • தி.மு.க. கூட்டணியில் 10-க்கும் மேற்பட்ட கூட்டணிக் கட்சிகள் இருக்கின்றன.
    • தி.மு.க. வுடன் சமூக நீதி, மாநில உரிமைகள், மொழி உரிமை என கருத்தியல் ரீதியாக உடன்பாடு இருக்கிறது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. கூட்டணியில் 10-க்கும் மேற்பட்ட கூட்டணிக் கட்சிகள் இருக்கின்றன. அவரவர் கோரிக்கைகளுக்கு ஏற்ப தொகுதிப் பங்கீடுகளை முடிக்க வேண்டிய பொறுப்பு தி.மு.க. தலைமைக்கு இருக்கிறது. தனிப்பட்ட முறையில் கட்சியின் பலம் எவ்வளவு முக்கியமானதோ, அதைவிட கூட்டணி பலம் மிகவும் முக்கியம். அப்போதுதான் நமது கொள்கை பகைவர்களை வீழ்த்த முடியும்.

    வி.சி.க.வுக்கு தனியாக சின்னம் இல்லை. புதிதாக ஒரு சின்னத்தை நினைவூட்டி இறுதிவரை வழி காட்டுவது கடினம். அதைத் தவிர்ப்பதற்காகத்தான் தி.மு.க. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்துகிறது. மேலும் உதயசூரியன் சின்னத்தில் நின்றால், அது தி.மு.க.வுக்கு கிடைத்த வாக்கு வங்கியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும்.

    எனவே, வி.சி.க. என்னும் கட்சிக்கு வாக்கு வங்கி இருப்பதை நிரூபிக்க வேண்டியிருந்தது. கடந்த மக்களவைத் தேர்தலில் விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்திலும் வாக்கு வங்கி இருந்ததால் சிதம்பரத்தில் பானை சின்னத்திலும் போட்டியிட்டோம். அதன் பின், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்த சின்னத்தில் போட்டியிட்டு வாக்கு வங்கியை உறுதி செய்தோம். எந்தச் சின்னத்தில் போட்டி என்பது பேச்சுவார்த்தையில் தெரியும். சாதிவன்முறை, பெண்கள் தொடர்பான பிரச்சினை, மொழி, இனம் அடிப்படையிலான பிரச்சினை, வர்க்கப் பிரச்சினைகள் எனப் பல தளங்களிலும் முரண்பாடுகள் இருக்கின்றன. அதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க முடியாது. தி.மு.க.வுடன் சமூக நீதி, மாநில உரிமைகள், மொழி உரிமை என கருத்தியல் ரீதியாக உடன்பாடு இருக்கிறது. அந்த புள்ளியில் தி.மு.க.வு டன் வி.சி.க. நீடிக்கிறது.

    பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதைக் கற்பனை கூட செய்ய முடியாது. மாநிலங்கள் இருக்காது, தேர்தல் இருக்காது, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதங்கள் இருக்காது. ஒன் இந்தியா, ஒன் நேசன், ஒன் கல்ச்சர், ஒன் எலக்சன். ஒன் பார்ட்டி என ஆபத்தான நிலையை இந்தியா எட்டும்.

    இவ்வாறு தொல். திருமாவளவன் கூறி உள்ளார்.

    • தொழில் அதிபர்கள், வியாபாரிகள், விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்து வருகிறது.
    • மத்திய அரசின் ஜி.எஸ்.டி.யால் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வியாபாரிகள், தொழில் முனைவோர், நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் உட்பட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கருத்து கேட்டு வருகிறார்கள். கோவையில் நேற்று கருத்து கேட்பு நிகழ்ச்சி நடந்த நிலையில் இன்று சேலம் 5 ரோடு ஜென்னிஸ் கேட்வே ஓட்டலில் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

    இதில் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் தி.மு.க. விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், வர்த்தகர் அணி துணை தலைவர் கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., அயலக அணி செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி., மருத்துவ அணி செயலாளர் டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்ட அறிக்கை தயாரிக்கும் குழுவினர் பங்கேற்றனர்.


    கருத்து கேட்பு கூட்டத்தில் நாமக்கல் முட்டை கோழி பண்ணையாளர்கள், லாரி உரிமையாளர்கள், பஸ் உரிமையாளர்கள் சங்கம் , துணி ஏற்றுமதியாளர்கள், பட்டு உற்பத்தியாளர்கள், கைத்தறி உற்பத்தியாளர்கள், தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் உரிமையாளர்கள், ட்ரெய்லர் உரிமையாளர்கள், மோட்டார் மெக்கானிக் சங்கம், பழங்குடியினர் மக்கள் சங்கம், பால் உற்பத்தியாளர் சங்கம், அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம், வியாபாரிகள் சங்கம், நெசவாளர் சங்கம், நூல் உற்பத்தியாளர் சங்கம், மரவள்ளி கிழங்கு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்களை சார்ந்தவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தங்களது கருத்துக்களை மனுவாக வழங்கினர். அப்போது முக்கிய கருத்துக்களை அவர்கள் நேரடியாக நிர்வாகிகளிடம் தெரிவித்தனர்.

    அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்து தேர்தல் அறிக்கையில் சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக குழுவினர் உறுதி அளித்தனர்.

    தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்டு அறிந்து நேரடியாக பெற்று தேர்தல் அறிக்கை தயாரிக்க வேண்டும் என்று எங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் அனைத்து தரப்பினர் கலந்துகொண்டு கருத்துக்களை பகிர்வதுடன் சில முக்கியமானவற்றை நேரடியாக எங்களிடம் தெரிவிக்கலாம்.


    தொழில் அதிபர்கள், வியாபாரிகள், விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்து வருகிறது. வெள்ள நிவாரணம் கொடுக்க மறுத்து வருகிறது. மத்திய அரசின் ஜி.எஸ்.டி.யால் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பல குழப்பங்கள் அதில் இருக்கிறது. ஆனால் மத்திய அரசு இதை கண்டு கொள்ளவில்லை. கோரிக்கையை காது கொடுத்து கேட்கவும் தயாராக இல்லை.

    மத்திய அரசு நாம் சொல்வதை கேட்கும் அரசாக அமைய வேண்டும். மக்களை ஒருங்கிணைத்து அழைத்து செல்லும் அரசாக அது இருக்க வேண்டும். ஒற்றுமையான மத்திய அரசாக , வேலைவாய்ப்பு உருவாக்கும் அரசாங்கமாக உரிமைகளை மதிக்கும் அரசாக இருக்க வேண்டும். மக்களையும், மொழி உணர்வையும் மதிக்கும் அரசாக உருவாக்க வேண்டும். அதன் அடிப்படையில் இந்த பாராளுமன்ற தேர்தலை அனைவரும் இணைந்து எதிர் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பிரதமர் மோடி விஜயகாந்தை தனது நெருங்கிய நண்பர் என்று புகழ்ந்து பேசி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
    • பாமக பா.ஜனதா கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசி முடிவு செய்து விடும் என்றும் அக்கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க. பாரதிய ஜனதா கட்சிகள் தனித்தனியாக கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன.

    அ.தி.மு.க. கூட்டணியில் இதுவரை இடம் பெற்றிருந்த பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய 2 கட்சிகளும் பெரிய கட்சி என்பதால் இந்த கட்சிகளை இழுக்க பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

    ஆரம்பத்தில் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் பா.ம.க. வை கூட்டணியில் சேர்க்க முயற்சி செய்து வரும் தகவல் கிடைத்ததும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி சி.வி.சண்முகத்தை தைலாபுரம் தோட்டத்துக்கு அனுப்பி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்திக்க ஏற்பாடு செய்தார்.

    அதன்படி சி.வி.சண்முகம் எம்.பி. டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார். சுமார் ½ மணிநேரம் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையின் போது பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி விரும்புவதாக கூறினார்.


    கடந்த தேர்தலில் ஒதுக்கிய 7 தொகுதியைவிட கூடுதலாக 2 தொகுதியும் ஒரு ராஜ்ய சபா சீட் தருகிறோம் என்றும் சி.வி.சண்முகம் கூறினார்.

    ஆனால் டாக்டர் ராமதாஸ் அதற்கு பிடிகொடுத்து பேசவில்லை. எங்கள் கட்சி நிர்வாகிகளோடு கலந்து பேசி முடிவு சொல்கிறேன் என்று கூறிவிட்டார்.

    இந்த நிலையில் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு தான் மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருத்து கணிப்புகள் வெளியாகி வருவதால் பா.ம.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு செல்ல விரும்பவில்லை என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    பா.ஜனதா கூட்டணியில் சேர்ந்து வெற்றி பெறும் பட்சத்தில் மத்திய மந்திரி பதவியை கேட்டு பெற்றுவிடலாம் என்று பா.ம.க. கணக்கு போட்டு வருகிறது.

    இதன் காரணமாக பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. விரைவில் இடம் பெறும் என்று கட்சி நிர்வாகிகளும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இப்போதைய சூழலில் அ.தி.மு.க. கூட்டணியில் சேருவதை விட பா.ஜனதா கூட்டணிக்கு செல்லும் போது எம்.பி.யாக ஜெயித்தால் மத்திய மந்திரி பதவி கிடைத்து விடும் என்பதால் டாக்டர் ராமதாஸ் அந்த முடிவைத்தான் எடுப்பார் என்றும் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.


    பாரதிய ஜனதா கட்சியிடம் பா.ம.க. 12 தொகுதி வரை கேட்டுள்ளதாகவும் 7 தொகுதி வரை கொடுக்க பா.ஜ.க. முன் வந்துள்ள நிலையில் கூடுதலாக 2 சீட் வாங்கி தேர்தலில் கூட்டணி அமைக்க பா.ம.க. தரப்பு தற்போது ஒத்துக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது.

    அடுத்த வாரம் பா.ம.க. பா.ஜனதா கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசி முடிவு செய்து விடும் என்றும் அக்கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

    அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. செல்ல விரும்பவில்லை என்ற தகவல் பா.ஜனதா கட்சிக்கு தெரிய வந்துள்ளதால் பா.ம.க.வுடன் கூட்டணியை உறுதிபடுத்த பா.ஜ.க. தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க.வுக்கு ஸ்ரீபெரும்புதூர், ஆரணி, மயிலாடுதுறை, தர்மபுரி, விழுப்புரம், கடலூர், அரக்கோணம், காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகளை ஒதுக்க தயாராக இருப்பதாகவும் தகவல் தெரிவித்து உள்ளனர்.

    இந்த தொகுதிகள் பா.ம.க. வலுவாக உள்ள தொகுதிகள் என்பதால் அதை பா.ம.க. ஏற்றுக் கொள்ளும் என்றும் மேலும் தொகுதிகள் கேட்டால் கூட தலைமை அதற்கு ஒத்துக் கொள்ளும் என்றும் பா.ஜனதா நிர்வாகிகளும் கூறி வருகின்றனர்.

    எனவே பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. சேருவது உறுதியாகி உள்ளது. இதே போல் தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைக்கவும் பா.ஜனதா கட்சி முனைப்பு காட்டி வருகிறது.

    விஜயகாந்தின் மறைவுக்கு பிறகு மத்திய அரசு சார்பில் அவருக்கு தொடர்ச்சியாக பல்வேறு மரியாதைகள் செய்யப்பட்டுள்ளன.

    பிரதமர் மோடி விஜயகாந்தை தனது நெருங்கிய நண்பர் என்று புகழ்ந்து பேசி அறிக்கை வெளியிட்டிருந்தார். பத்ம விருதும் விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது மத்திய அரசின் மீதும் பிரதமர் மோடி மீதும் தே.மு.தி.க.வினருக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

    அதே நேரத்தில் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் எம்.பி. தேர்தலில் வெற்றி பெற்று கட்சியை வளர்ப்பதற்கு உதவும் என்றும் பிரேமலதா கருதுகிறார்.

    இது போன்ற காரணங்களால் தே.மு.தி.க.வும் பா.ஜனதா கூட்டணியில் சேர உள்ளதாக பேசப்படுகிறது. இது சம்பந்தமாக தே.மு.தி.க. தலைவர்களுடனும் பா.ஜனதா மூத்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நாங்கள் ரத்து செய்துள்ளோம்
    • எங்கள் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேரலாம்.

    புதுடெல்லி:

    உலகளாவிய வணிக உச்சி மாநாடு டெல்லியில் நடந்தது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    மத ரீதியில் துன்புறுத்தப்பட்ட மக்களுக்கு சி.ஏ.ஏ. எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் வாயிலாக குடியுரிமை வழங்கப்படும். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவரப்படும். இது உறுதி. இதை யாராலும் தடுக்க முடியாது.

    அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நாங்கள் ரத்து செய்துள்ளோம், எனவே நாட்டு மக்கள் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு 370 இடங்களில் வெற்றியை தருவார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறும் என்று நாங்கள் நம்புகிறோம்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவு குறித்து எந்த சஸ்பென்சும் இல்லை. காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் கூட தாங்கள் மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் தான் அமர வேண்டும் என்பதை உணர்ந்துள்ளன. எங்கள் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேரலாம்.


    இந்த தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான தேர்தலாக இருக்காது. மாறாக வளர்ச்சியை கொடுக்கும் எங்களுக்கும், வெற்று கோஷங்களை கொடுப்பவர்களுக்கும் இடையே நடக்கும் தேர்தலாக இருக்கும்.

    1947-ம் ஆண்டு நாட்டை பிரித்ததற்கு காங்கிரஸ் கட்சி காரணமாக இருந்தது. இதனால் நேரு, காந்தி ஆகியோரின் வாரிசுகளுக்கு ஒற்றுமை யாத்திரை நடத்த உரிமை இல்லை.

    2014-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை இழந்த போது நாடு மோசமான நிலையில் இருந்தது. அந்த நேரத்தில் பொருளாதாரம் சீரழிந்து காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் ஊழல் நிறைந்திருந்தது. வெளி நாட்டு முதலீடுகள் வரவில்லை.


    அந்த நேரத்தில் நாங்கள் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டு இருந்தால் அது உலகுக்கு தவறான செய்தியை கொடுத்திருக்கும். ஆனால் 10 ஆண்டுகளுக்கு பிறகு எங்களது அரசு பொருளாதாரத்தை மீட்டெடுத்து வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வந்துள்ளது. எங்குமே ஊழல் இல்லை. எனவே வெள்ளை அறிக்கை வெளியிட இதுவே சரியான தருணம். எனவே வெள்ளை அறிக்கையை வெளியிட்டு உள்ளோம்.

    அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்டப்பட வேண்டும் என்று 500 முதல் 550 ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அரசியல், சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி ராமர் கோவில் கட்ட அனுமதிக்கப்படவில்லை. அதை இப்போது நிறை வேற்றியுள்ளோம்.

    ராமர் கோவில் திறப்பு விழாவை காங்கிரஸ் கட்சியினர் ஏன் கொண்டாடவில்லை?

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நாம் தமிழர் கட்சி சார்பில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளனர்.
    • தமிழக அரசியல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தற்போது தேர்தல் கூட்டணி அமைக்க அரசியல் கட்சியினர் தீவிரமாகி வருகின்றனர்.

    தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாத இறுதிக்குள் தொகுதி பங்கீட்டை முடித்துவிட்டு அடுத்த மாதம் முதல் வாரத்திலிருந்து பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

    அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் தங்களது தலைமையில் புதிய கூட்டணியை அமைக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இதே போல் பா.ஜ.க. தங்களது தலைமையில் டி.டி.வி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடன் கூட்டணியை அமைத்து தேர்தல் களம் காண தயாராகி வருகிறது. மேலும் நாம் தமிழர் கட்சி சார்பில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளனர். இதனால் தமிழகத்தில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்து வரும் நிலையில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் எந்த கட்சிகள் சேரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த முறை கூட்டணியில் இருந்த பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் எந்த அணியில் இணையும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த 2 கட்சிகளிடமும், பா.ஜ.க., அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் நடந்த அ.தி.மு.க. தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது, பொறுத்து இருந்து பாருங்கள் அ.தி.மு.க. தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும் என்று கூறினார். இதனால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள் தேசிய கட்சியுடன் கூட்டணி வேண்டாம், மாநில கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்று ஒருமித்த கருத்தை தெரிவித்தனர். இதையடுத்து பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்த போது, 14+1 தரும் கட்சியுடன் கூட்டணி என்று அறிவித்தார். இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் சிலர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

    முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர். ராமதாசை தைலாபுரத்தில் அவரது தோட்டத்தில் சந்தித்து பேசினார். எனவே பா.ம.க. அ.தி.மு.க. கூட்டணியில் சேர இருப்பதாக தகவல்கள் வெளியானது. இது குறித்து அ.தி.மு.கவை சேர்நத நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொன்னது போல் சிறப்பான கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் பா.ம.க. தலைவர்களுடன் போன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இன்னும் சில தினங்களில் நேரடியாக அவர்களை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதே போல் தே.மு.தி.க.விடமும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். தே.மு.தி.க. சார்பில் தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த இன்னும் குழு அமைக்கபடவில்லை. வருகிற 12-ந் தேதி தே.மு.தி.க. கொடிநாள் ஆகும். எனவே அன்று தேர்தல் குழு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. எனவே அவர்கள் குழு அமைத்ததும் தே.மு.தி.க.வுடனும் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தும் என்று கூறப்படுகிறது.

    இது குறித்து பா.ம.க., நிர்வாகிகளிடம் கேட்ட போது அ.தி.மு.க. சார்பில் பா.ம.க.விடம் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்பதை உறுதி செய்தனர். இதே போல் தே.மு.தி.க. நிர்வாகிகளிடம் கேட்ட போது, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேசிய கட்சியுடன் கூட்டணி வேண்டாம் என்று மாவட்ட செயலாளர்கள் அறிவித்தனர். தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி நடந்து வரும் நிலையில் அவர்களுடன் கூட்டணி சேர வாய்ப்பில்லை எனவே அ.தி.மு.க. கூட்டணியில் இணைய அதிக வாய்ப்பு இருக்கிறது என்றனர். எனவே அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. இணையலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இன்னும் சில தினங்களில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.

    ×