என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலம்பம்"

    • மானாமதுரை அருகே சிலம்பத்தில் உலக சாதனை படைத்த பெண்ணுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
    • கிராம பெண்கள் வாழ்கையில் பல்வேறு சாதனைகளை செய்ய வேண்டும் என முன் உதாரணமாக வெற்றி பெற்று விழிப்புணர்வும் ஏற்படுத்தி உள்ளார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே திருப்பாசேத்தி மலவராய னேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் பாலன். இவரது மகள் செல்வ பிரியா (வயது 21). இவர் சிறுவயதில் இருந்தே சாதனை படைக்க வேண்டும் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

    ஓவிய போட்டி, தடகள போட்டி, படிப்பு என எல்லா வற்றிலும் திறமையை மெருகேற்றிக் கொண்ட இவர் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்திலும் பயிற்சி பெற்று அனைவருக்கும் சொல்லிக்கொடுக்கும் வகையில் கோலோச்சி இருக்கிறார். பி.எஸ்.சி. பட்டப்படிப்பு முடித்த இவர் சிலம்ப மாஸ்டர் குமாரிடம் முறையாக கற்று தினமும் பயிற்சி மேற்கொண்டார்.

    இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் நடை பெற்ற உலக சாதனைப்போட்டியில் தொடர்ந்து 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி செல்வ பிரியா உலக சாதனை படைத்துள்ளார்.

    இந்த சாதனைக்கு அவரது பெற்றோர் மற்றும் பேராசிரியைகள் ஜெபா, சுகன்யா உள்ளிட்ட பலர் உறுதுணையாக இருந்துள்ளனர். தொடர்ந்து செல்வபிரியா தனது கிராமத்தில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக சிலம்பம் கற்றுக் கொடுத்து வருகிறார்.

    கிராம பெண்கள் வாழ்கையில் பல்வேறு சாதனைகளை செய்ய வேண்டும் என முன் உதாரணமாக வெற்றி பெற்று விழிப்புணர்வும் ஏற்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சிவகங்கையில் என்னைப்போல் சாதிக்க பல்வேறு பெண்கள் இருக்கி றார்கள். அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களையும், வாய்ப்பையும் கொடுக்க வேண்டும் என்றார்.

    • மாநில சிலம்ப போட்டிக்கு எஸ்.பி.கே. பள்ளி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டார்.
    • தலைமை ஆசிரியை தங்கரதி மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர்.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் நடந்தன. இதில் அருப்புக்கோட்டையில் உள்ள நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவிகள் அக்‌ஷயபுஷ்பா, பவித்ரா சகி முதலிடமும், மாணவிகள் பிரியதர்ஷினி, துர்கா நந்தினி 2-ம் இடமும் பெற்றனர். முதலிடம் பெற்றவர்கள் மாநில அளவில் நடைபெற இருக்கும் சிலம்ப போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    அவர்களையும் உடற்கல்வி ஆசிரியைகளையும் அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை தலைவர் காமராஜன், உறவின்முறை செயலாளர் முத்துசாமி, பள்ளி தலைவர் ஜெயவேல் பாண்டியன், உதவி தலைவர் அஜய், தலைமை ஆசிரியை தங்கரதி மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர். 

    • சிறு வயது முதலே சிலம்பப் போட்டியின் மீது அதீத ஆா்வம் இருந்தது.
    • 5ம் வகுப்பு படித்து வரும் மதுமிதா (10) தங்கம் வென்றாா்.

    பல்லடம்,நவ.29-

    தமிழ்நாடு மாநில சிலம்பாட்ட கழகம், திருப்பூா் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சாா்பில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் சின்னசாமியம்மாள் மாநகராட்சி பள்ளியில் நடைபெற்றது. இதில் 10 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்ற காரணம்பேட்டையில் உள்ள தனியாா் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வரும் மதுமிதா (10) தங்கம் வென்றாா்.

    இதுகுறித்து மதுமிதாவின் தந்தையான பல்லடம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலா் மதிவாணன் கூறியதாவது:-எனது மகளுக்கு சிறு வயது முதலே சிலம்பப் போட்டியின் மீது அதீத ஆா்வம் இருந்தது. இதன் காரணமாகவே தொடா் பயிற்சி மேற்கொண்டதால் மாவட்ட அளவிலான போட்டியில் தொடா்ந்து 5வது ஆண்டாக தங்கப்பதக்கம் வென்றுள்ளாா். மேலும், கடந்த 2021ம் ஆண்டு பொங்கலூரில் நடைபெற்ற மாநில அளவிலான தனித்திறமை போட்டியிலும் தங்கம் வென்றுள்ளாா் என்றாா். தங்கம் வென்ற மாணவியை பயிற்சியாளா், பெற்றோா் மற்றும் உறவினா்கள் வெகுவாக பாராட்டினா்.

    • சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி அந்தமானில் நடந்தது.
    • விஜய் மற்றும் எமிலி ஆகியோர் சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றனர்.

    சாயர்புரம்:

    சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி அந்தமானில் நடந்தது. இதில் சாயர்புரம் கோல்டு ஸ்டார் சிலம்பாட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்று விளையாடினர். இதில் சாயர்புரம் கூட்டுறவு சங்க தலைவர் புளியநகர் அறவாழி, சாயர்புரம் பேரூராட்சி தலைவர் பாக்கியலெட்மி ஆகியோரின் மகன் விஜய் மற்றும் க.சாயர்புரம் ஆறுமுகம், கவுசல்யா என்பவர்களது மகள் எமிலி ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.

    வெற்றி பெற்ற 2 பேருக்கும் சாயர்புரம் மெயின் பஜாரில் பொது மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்டாளங்குளம் பஞ்சாயத்து தலைவர் சங்கரேஸ்வரி ஏசுவடியான் கலந்து கொண்டு மாணவ, மாணவிக்கு பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் பயிற்சி அளித்த கோல்டு ஸ்டார் சிலம்ப மாஸ்டர் சண்முகசுந்தரம், மாஸ்டர் மணிகண்டன் ஆகியோரை கட்டாளங்குளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஏசுவடியான், சாயர்புரம் வட்டார நடைபயிற்சி குழு தலைவர் பிச்சைமுத்து மற்றும் பட்டுபுதியவேல், ராஜா, அசோக், பரமசிவம், தங் ராஜ் மற்றும் ஊர் பொது மக்கள் பாராட்டினார்.சாயர்புரம் கூட்டுறவு கடன் சங்க தலைவர் அறவாழி நன்றி கூறினார்.

    • தொடர்ந்து இரண்டு மணி நேரம் பல்வேறு வகையான சிலம்பம் சுற்றி உலக சாதனை.
    • 6 முதல் 60 வயது வரை உள்ள சிலம்பம் கற்றவர்கள் ஒரே இடத்தில் கூடி இம்மாபெரும் உலக சாதனையை நிகழ்த்தினர்.

    சீர்காழி:

    சீர்காழியில் பழமை வாய்ந்த வீரத்தமிழர் சிலம்பாட்டக் கழகம் இயங்கி வருகிறது.

    இதன் நிறுவனர் மற்றும் பயிற்றுநராக சிலம்பாட்ட ஆசான் சுப்ரமணியன் இருந்து வருகிறார்.

    இம்மாணவர்கள் தமிழகம், வெளிமாநிலம் உட்பட வெளிநாட்டுகளிலும் சிம்பாட்ட போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் வீரத்தமிழர் சிலம்பாட்ட சார்பாக மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

    இதில் வீரத்தமிழர் சிலம்பாட்ட கழக மாணவ, மாணவிகள் யோகேஸ்வரன் 3 விதமான ஆயுதம் 6 மணிநேரம் சுற்றியும், கலைமொழி, இனியவளவன், நித்திஸ், அண்டரசன், ஸ்ரீநிவாஸ், கிஷோர், விமல் உள்ளிட்ட 25 பேர் தனிநபர் உலக சாதனை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

    6 மணி நேரம் முதல் 24 மணிநேரம் வரை ஒற்றைக்கம்பு, இரட்டை கம்பு, வாள் வீச்சு, சுருள்வாள், வேல் கம்பு, கரலாக்கட்டை உள்ளிட்ட ஆறு வகையான ஆயுதங்களை பயன்படுத்தி உலக சாதனை செய்தனர்.

    மேலும் தமிழகம் முழுவதும் இருந்து 340 சிலம்பாட்ட மாணவ, மாணவிகள் தொடர்ந்து இரண்டு மணி நேரம் பல்வேறு வகையான சிலம்பம் சுற்றி உலக சாதனை செய்தனர்.

    குறிப்பாக 6 வயது சிறுவன் முதல் 60 வயது வரை சிலம்பம் கற்றவர்கள் ஒரே இடத்தில் கூடி இம்மாபெரும் உலக சாதனையை நிகழ்த்தினர்.

    இவர்களின் சாத னையை ஜாக்கி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அமைப்பை சேர்ந்த ஜேக்கப்ஞா னசெல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு அங்கீகரித்து சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினர்.

    அப்போது வீரத்தமிழர் சிலம்பாட்ட கழக கௌர வத்தலைவர் சரண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • கையுந்துபந்து மற்றும் கிரிக்கெட் ஆகிய போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெற உள்ளது.
    • ஒவ்வொருவரும் ஆதார் கார்டு பதிவேற்றம் செய்வது அவசியம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    2022-23-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதல் -அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இந்த மாத இறுதி மற்றும் அடுத்த மாதத்தில் நடைபெற உள்ளது.

    இதில் பொது பிரிவினர் ( 15 முதல் 35 வயது வரை ) கபடி, சிலம்பம், தடகளம், இறகு பந்து, கையுந்துபந்து மற்றும் கிரிக்கெட் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெற உள்ளது.

    இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு (12 வயது முதல் 19 வயது வரை ) கபடி, சிலம்பம், தடகளம் , கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல் பந்து , நீச்சல் , கையுந்துபந்து, மேசைபந்து மற்றும் கிரிக்கெட் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது.

    கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு ( 17 வயது முதல் 25 வயது வரை ) கபடி, சிலம்பம், தடகளம் , கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல் பந்து , நீச்சல் , கையுந்துபந்து, மேசைபந்து மற்றும் கிரிக்கெட் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.

    மாற்றுத்திறனாளிகளுக்கு ( வயது வரம்பு இல்லை ) 50 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், கையுந்து பந்து, கபடி, எறிபந்து போட்டிகளும், அரசு ஊழியர்களுக்கு ( வயது வரம்பு இல்லை ) கபடி, செஸ், தடகளம், இறகுப்பந்து, கையுந்து பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகளும் நடக்க உள்ளது.

    மண்டல அளவில் டென்னிஸ், பளுதூக்குதல், கடற்கரை கையுந்து பந்து ஆகிய போட்டிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ -மாணவிகளுக்கு நடைபெற உள்ளது.

    இந்த போட்டிகளில் கலந்து கொள்வதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் முகவரியான www.sdat. tn.gov.in என்ற இணையதளத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான பதிவில் பதிவு செய்யலாம்.

    ஒவ்வொருவரும் ஆதார் கார்டு பதிவேற்றம் செய்வது அவசியம்.

    இதில் பதிவு செய்வதற்கு நாளை ( ஞாயிற்றுக்கிழமை) கடைசி நாளாகும்.

    எனவே தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த அனைவரும் அதிக அளவில் பதிவு செய்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்காண விளையாட்டு போட்டிகளில் பெருமளவில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொடர்ந்து, 6 மணி நேரம் உலக சாதனை செய்த பிரிவில் சிலம்ப சாதனை.
    • 24 மணி நேரம் நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில் ஒற்றை சிலம்பம் சுழற்றி எட்டு நபர்கள் சாதனை.

    பட்டுக்கோட்டை:

    அணைக்காடு சிலம்பக்கூடம் மற்றும் மனோரா ரோட்டரி சங்கம் இணைந்து 74 வது குடியரசு தினம் மற்றும் சிறார் மீள் உணர் தற்காப்பு விழிப்புணர்வை முன்னிறுத்தி 24 மணி நேர உலக சாதனை. நிகழ்ச்சி ஜனவரி 26 முதல் 27ம் தேதி வரை ஏனாதி இராஜப்பா கலை அறிவியல் கல்லூரியின் கலை அரங்கில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பால்கஸ்மி மற்றும் செயலனார்-தஞ்சை மாவட்ட சைக்கில் அசோரியேசன் செயலாளர் நெப்போலியன் வரவேற்புரையாற்றினார்.

    லாரல் கல்வி நிறுவனங்–களின் தாளாளர் பாலசுப்ர மணியன், ஏனாதி ராஜப்பா கலை அறிவியல் கல்லூரியின் செயலாளர் கணேசன் ஆகியோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

    தஞ்சை மாவட்ட சைக்கிள் அசோசியேஷன் தலைவர் டாக்டர் சதாசிவம், இந்திய சிலம்ப சம்மேளனம் துணைச் செயலாளர் ஜலேந்திரன், மனோரா ரோட்டரி சங்கத் தலைவர் சிவச்சந்திரன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

    இந்த உலக சாதனை நிகழ்ச்சியின் நடுவர்களாக நோபல் உலக சாதனை நிர்வாகத்தின் சிஇஓ டாக்டர் அரவிந்த் லட்சுமி நாராயணன், நிர்வாக அலுவலர் வினோத், அதன் மாநில தீர்ப்பாளர் பரணிதரன் மற்றும் ஹேமந்த் குமார் உள்ளிட்டவர்கள் செயல்பட்டனர்.

    இந்த உலக சாதனையின் போது மருத்துவ உதவி மற்றும் ஆம்புலன்ஸ் சேவையினை டாக்டர் ரவி பொறுப்பேற்று செய்திருந்தார். மேலும் விழாவில் மனோரா ரோட்டரி சங்க செயலாளர் சத்தியமூர்த்தி, அதன் பொருளாளர் சங்கர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நோபல் உலக சாதனை நிகழ்ச்சியில் தொடர்ந்து 6 மணி நேரம் உலக சாதனை செய்த பிரிவில் சிலம்பம், மான்கொம்பு மற்றும் சுருள் உள்ளிட்ட ஆயுதங்கள் பயன்படுத்தி சாதனை புரிந்தவர்கள் 4 நபர்களும், அதே பிரிவில் இரண்டு நபர்கள் 12 மணி நேர சாதனையும் புரிந்தனர்.

    அடுத்து 12 மணி நேரம் தொடர்ந்து ஒற்றை சிலம்பம் சுழற்றி 12 நபர்கள் சாதனை புரிந்தனர். இறுதியாக 24 மணி நேரம் நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில் ஒற்றை சிலம்பம் சுழற்றி எட்டு நபர்கள் சாதனை புரிந்தனர்.

    நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. முடிவில் தஞ்சை மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் துணை செயலாளரும் சிலம்பகலை பயிற்சியாளருமான ஷீலாதாஸ் நன்றி கூறினார்.

    • ஒவ்வொரு மாவட்ட சிலம்ப சங்க செயலாளர்கள் மேற்பார்வையில் கலந்து கொண்டனர்.
    • மாணவர்களுக்கான தனித்திறன் எவ்வாறு மதிப்பீடு செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை வின்னர் மல்டிமியூரல் அகாடமியில் சிலம்பம் இந்தியா சங்கம் சார்பில் தேசிய அளவிலான நடுவர்களுக்கான ஒரு நாள் சிலம்ப பயிற்சி முகாம் நடைபெற்றது.

    சிலம்பம் இந்திய சங்கத்தின் தந்தை சந்திரமோகன், சிலம்பம் இந்திய சங்கத்தின் தலைவர் பொன்ராமர், செயல் தலைவர் கண்ணதாசன், பொதுச்செயலாளர் நாகராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

    பயிற்சி முகாமில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இந்திய சிலம்ப சங்கத்தில் அங்கீகாரம் பெற்ற மாவட்ட செயலாளர்கள் மற்றும் சிலம்ப பயிற்றுநர்கள் ஒவ்வொரு மாவட்ட சிலம்ப சங்க செயலாளர்கள் மேற்பார்வையில் கலந்து கொண்டனர்.

    இதில் மாவட்ட போட்டிகள் முதல் அகில இந்திய போட்டிகள் நடத்துவதற்கான விதிமுறைகள், பயிற்றுனர், நடுவர்களுக்கான, உடை விதிமுறைகள், மாணவர்களுக்கான தனித்திறன் எவ்வாறு மதிப்பீடு செய்ய வேண்டும், தொடு முறை பயிற்சிகளை எவ்வாறு நடத்தி தர வேண்டும் என்பது பற்றி ஆசிரியர்களுக்கு கையேடுகள் வழங்கப்பட்டன.

    தொடர்ந்து, செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டு, 100 மதிப்பெண்களுக்கான எழுத்து தேர்வும் நடை பெற்றது.

    தேர்வின் அடிப்ப டையில் பயிற்றுநர்களுக்கு கிரேடு சான்றிதழ் இந்திய சிலம்ப சங்க பொறுப்பாளர்களால் வழங்கப்பட்டது.

    முகாமிற்கான ஏற்பாடுகளை சிலம்பம் தஞ்சாவூர் சங்க மாவட்ட செயலாளர் ராஜேஷ் கண்ணா செய்திருந்தார்.

    இதில் 100-க்கும் மேற்பட்ட சிலம்ப பயிற்றுனர்கள் கலந்துகொண்டனர். முகாமின் செயல்முறைகள் மற்றும் வழிபாட்டு நிபந்தனைகள் தஞ்சையை சேர்ந்த ரெங்கநாயகி மற்றும் சங்கீதா ஆகியோர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தினர்.

    இதில் சிறப்பு விருந்தினராக டாக்டர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டார்.

    • கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றிய மாணவர்கள் அசத்தினர்.
    • உடல் உறுப்புகளை தானம் செய்வதின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தியது.

    திருமங்கலம்

    உலக சோடகான் கராத்தே அமைப்பும், திருமங்கலம் லீ சாம்பியன் ஆர்ட்சும் இணைந்து உலக சாதனை நிகழ்ச்சியாக கராத்தே மற்றும் சிலம்ப போட்டிகளை நடத்தியது. திருமங்கலம் தனியார் பள்ளியில் நடந்த இந்த நிகழ்ச்சி உடல் உறுப்புகளை தானம் செய்வதின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 5 மணிநேரம் கராத்தேயில் கிக்ஸ் (உதைத்தல்) நிகழ்ச்சியும், 2 கண்களை துணியால் கட்டியவாறு சிலம்பத்தில் இரட்டை கம்பு சுழற்றும் நிகழ்ச்சியும் நடந்தது.

    ஆணழகன் சங்கத்தின் செயலாளர் மற்றும் சோழன் உலக சாதனை புத்தகத்தின் தென்மாநிலத்தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். நிறுவனர் நிமலன் நீலமேகம் முன்னிலை வகித்தார். கராத்தே அமைப்பின் செயலாளர் பால்பாண்டி வரவேற்றார். கராத்தே கிக்சில் 101 மாணவர்களும், சிலம்பம் சுற்றுவதில் 166 மாணவர்களும் சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக போலீஸ் டி.எஸ்.பி. வசந்தகுமார், தாசில்தார் சிவராமன், இந்தியன் சிலம்ப பள்ளி தலைமை பயிற்சியாளர் மணி, மதுரை மாவட்ட சிலம்ப கழகத்தின் பொருளாளர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவ-மாணவிகள் கடற்கரையில் நீண்ட வரிசையில் நின்றபடி தொடர்ந்து 30 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி அசத்தினர்.
    • விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கேடயங்கள் வழங்கி பாராட்டினார்.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரையில் ஒருங்கிணைந்த சிலம்பாட்ட கழகம் சார்பில் சிலம்பம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக 1200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சிலம்பம் சுற்றி சோழன் உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த சிலம்பாட்ட கழக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் அபுல்கலாம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டி ராஜ், பொருளாளர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாணவ-மாணவிகள் கடற்கரையில் நீண்ட வரிசையில் நின்றபடி தொடர்ந்து 30 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி அசத்தினர்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கேடயங்கள் வழங்கி பாராட்டினார்.

    இதில் அமைச்சர் லட்சுமி நாராயணன், எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் புதுவையில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் சிலம்பாட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.

    • ஒற்றை கம்பு சுற்றுதல், இரட்டை கம்பு சுற்றுதல், சிலம்ப சண்டை என்று 3 விதமாக நடைபெற்றது.
    • வயதின் அடிப்படையிலும், விளையாட்டின் அடிப்படையிலும் 2 பிரிவுகளாக நடைபெற்றது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது. போட்டியில் கும்பகோணம் பகுதியை சுற்றியுள்ள பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    போட்டியானது மாணவ- மாணவிகளுக்கு தனித்தனி பிடிவுகளாக ஒற்றை கம்பு சுற்றுதல், இரட்டை கம்பு சுற்றுதல், சிலம்ப சண்டை என்று 3 விதமாக நடைபெற்றது. மேலும், வயதின் அடிப்படையிலும், விளையாட்டின் அடிப்படையிலும் 2 பிரிவுகளாக நடைபெற்றது.

    போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களையும், பாராட்டு சான்றிதழையும் பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் வழங்கினார். விளையாட்டுக்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் கார்த்திகேயன் செய்திருந்தார்.

    • குருசாமிபாளையம் சிவம் சிலம்பம் பயிற்சி பள்ளி சார்பாக விழிப்புணர்வு சிலம்பம் உலகசாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • ஒரு மணி நேரம் ஒரு கையை கட்டிக்கொண்டும், ஒரு மணி நேரம் ஒரு கண்ணை கட்டிக்கொண்டும் தொடர்ந்து 3 மணி நேரம் சிலம்பம் சுற்றினர்.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையத்தில் மாற்றுத்திறனாளிகளின் ஊக்குவிக்கும் விதமாக சிவம் சிலம்பம் அறக்கட்டளை மற்றும் குருசாமிபாளையம் சிவம் சிலம்பம் பயிற்சி பள்ளி சார்பாக விழிப்புணர்வு சிலம்பம் உலகசாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 3வயது முதல் 21வயது வரை உள்ள மாணவ- மாணவிகள் சுமார் 300 பேர் கலந்து கொண்டு, ஒரு மணி நேரம் கால்களை முட்டி போட்டுக் கொண்டும், ஒரு மணி நேரம் ஒரு கையை கட்டிக்கொண்டும், ஒரு மணி நேரம் ஒரு கண்ணை கட்டிக்கொண்டும் தொடர்ந்து 3 மணி நேரம் சிலம்பம் சுற்றினர்.

    மேலும் 7 வயது மாணவன் பரித்ராஜ் மற்றும் 12-வயது மாணவி இனியா ஆகியோர் 15அடி உயரத்தில் 6200ஆணிகள் பதித்த ஆணி பலகையின் மீது நின்று ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி அசத்தினர். இந்த உலக சாதனை நிகழ்ச்சியை குருசாமிபாளையம் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளி செயலாளர் அர்த்தனாரி "மாதிரி ஒலிம்பிக் தீபம்" ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஜெட்லி புக் ஆப் நிறுவனம் மாணவர்க ளின் முயற்சியை உலக சாதனையாக அங்கீகரித்து, அதன் நிறுவனர் ஜெட்லி மாணவர்களுக்கு உலகசாதனை சான்றிதழ், மெடல் வழங்கினார்,

    மேலும் சிவம் சிலம்பம் அறக்கட்டளை சார்பாக மாணவர்களுக்கு சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டது,

    நிகழ்ச்சியை சிவம் சிலம்பம் அறக்கட்டளை நிறுவனரும் சிலம்பம் தற்காப்புக்கலை பயிற்சியக தலைமை ஆசானுமான வே.மாதையன் தலைமையில் அறக்கட்டளை பொறுப்பாளர்கள் முன்நின்று நடத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குருசாமி பாளையம் சிவம் சிலம்பம் பயிற்சி பள்ளியின் பயிற்சியாளரும்,மல்லூர் ஆல் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவரு மான தமிழ்ச்செல்வன் செய்தி ருந்தார்.

    ×