என் மலர்
நீங்கள் தேடியது "Government Schemes"
- அனைத்து பணிகளும் செயல்பட கிராமசபைகூட்டம் ஊன்றுகோளாக அமைகின்றன.
- மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், படியூர்ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக கலெக்டர் வினீத் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது :- இனி வரும் காலங்களில் உலக தண்ணீர் தினமான மார்ச் 22-ந்தேதி மற்றும் உள்ளாட்சிகள் தினமான நவம்பர்-1ந்தேதி என 6 முறை கிராம சபைகூட்டம் நடைபெறும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் ஒவ்வொரு முறையும் தங்கள் பகுதியில் நடக்கும்கிராம சபை கூட்டத்தின் போது பொதுமக்கள் முழு அளவில் கலந்து கொண்டுஊராட்சியின் வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசித்து செயல்படும் போது அந்த ஊராட்சியின்அடிப்படை வசதிகள் உட்பட அனைத்து பணிகளும் செயல்பட கிராமசபைகூட்டம் ஊன்றுகோளாக அமைகின்றன.
இது போன்ற கிராமசபை கூட்டத்தில்திட்ட பணிகளை மேற்கொள்ளப்படுவது மட்டுமின்றி பொது சுகாதாரத்தைகடைபிடித்தல், வீடுகள் மற்றும் தெருக்களை சுத்தமாக வைத்து டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல் தாக்குதலை தடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளபொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஏதுவாக இருக்கும். ஊராட்சி அளவில் மகளிர் திட்டம் மூலமாக செயல்படும் மகளிர்சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டது. குழுக்கள் மிகவும்குறைவாக உள்ளதால் மேலும் குழுக்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
குழுக்கள் அமைக்க வட்டார அளவில் மற்றும் ஊராட்சி அளவிலான அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும். ஒரு குழுக்களுக்கு 12 நபர்கள் இருந்தால் போதும். அவ்வாறு குழுக்கள் அமைக்கும் போது ரூ.1லட்சம் முதல் கடனாக வழங்கப்படுகிறது. அரசு அளிக்கின்ற அனைத்து நலத்திட்டங்களையும் பொதுமக்கள் நல்லமுறையில்பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
முன்னதாக மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சமுதாய நிதியாக ரூ.1.10லட்சம் மதிப்பீட்டில் காசோலையையும், புதிய வங்கி கணக்கு புத்தகங்களையும், வேளாண்மை த்துறையின் சார்பில் ரூ.4.500 மதிப்பீட்டில் ரூ.2,000 மானியத்தில் விசை தெளிப்பானையும் கலெக்டர் வினீத் வழங்கினார். தொடர்ந்துபொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
கூட்டத்தில் இணை இயக்குநர் (வேளாண்மை) மாரியப்பன்,தாராபுரம் கோட்டாட்சியர்குமரேசன், முன்னோடி வங்கி மேலாளர்அலெஸ்சாண்டர், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வரலட்சுமி, காங்கேயம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் மகேஷ்குமார், மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் முருகேசன், படியூர் ஊராட்சி மன்றத்தலைவர் ஜீவிதா சண்முகசுந்தரம், வட்டாரவளர்ச்சி அலுவலர்கள்ராகவேந்திரன், நிர்மலா உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- அரசின் திட்டங்கள் உரிய நேரத்தில் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தொழில்துறை ஆணையர் வலியுறுத்தினார்.
- கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தொழில் துறை ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட த்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறை வாரியாக அலுவலர்களுடன் ஆய்வு நடந்தது.
மேலும் மாவட்டத்தில் பல்வேறு அரசுத்துறை களின் சார்பில் கடந்தாண்டு மற்றும் நடப்பாண்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்கப் பட்டது. ஒவ்வொரு துறை யிலும் ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் அந்தந்த ஆண்டிலேயே முடிக்க வேண்டும். அது மட்டுமின்றி பொதுமக்களுக்கு உரிய காலத்தில் அரசின் திட்டங்கள் சென்றால்தான் அதன் பயன் அவர்களுக்கு முழுமையாக கிடைத்திட முடியும் என்பதை அறிந்து அந்தந்த துறைகள் செயல்படுவதுடன் திட்டங்கள் சென்றடைவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என தொழில்துறை ஆணையர் அர்ச்சனா அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
முன்னதாக மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அர்ச்சனா பட்நாயக் குயவன்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி யில் காலை உணவு திட்டத்தின் பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் தோட்டக்க லைத்துறையின் மூலம் சுந்த ரமுடையான் ஊராட்சியில் பராமரிக்கப்பட்டு வரும் நாற்றங்கால் பண்ணையினையும், நொச்சி ஊரணியில் உள்ள நாற்றங்கால் பண்ணை யினையும் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) பூவராகவன் அவர்கள், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனிப் அவர்கள், உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஒன்றிய குழு தலைவர் சந்திரன், ஒன்றிய பொறியாளர் அருண் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
- பயிர்காப் பீடு திட்டம் மற்றும் ஒன்றிய, மாநில அரசு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
கள்ளக்குறிச்சி:
கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண்மைதுறை, கால் நடைதுறை, ஊராக வளர்ச்சிதுறை ஆகிய துறைகள் இணைந்து விவசாயி களுக்கு ஆலோ சனைகள் நேற்று வழங்கப்ப ட்டது. வேளாண்மை உதவி இயக்குனர் சத்தியபிரகாஷ் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, ஒன்றிய குழு தலைவர் சந்திரன், ஒன்றிய பொறியாளர் அருண் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினம் வரவேற்றார். இதில் தொழில் நுட்பங்கள் மற்றும் அரசு செயல்படுத்தும் வேளாண் திட்டங்கள் குறித்து விவ சாயிகளுக்கு தெரிவிக்க ப்பட்டது. மேலும், மண்மா திரி சேகரித்தல், மண்வள அட்டை பயன்பாடு குறித்தும், மண்வளம், இணை யதளம் மற்றும் மத்திய மாநில அரசு திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறப்பட்டது.
அதேபோல் கால்நடை மருத்துவர் கவிதா கலந்து கொண்டு கோமாரி நோய் தடுப்புமுறை, தடுப்பூசி பயன்பாடு, கால்நடை பராமரிப்பு குறித்து எடுத்து கூறினார். தோட்டக்கலை துறை சார்பில் தோட்டக்க லை உதவி இயக்குனர் சிவாமலை கலந்து கொண்டு நுண்ணீர்பாசனத்தின் முக்கியத்துவம், பயிர்காப் பீடு திட்டம் மற்றும் ஒன்றிய, மாநில அரசு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். விழாவில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பழமர செடி தொகுப்புகள் வழங்கப் பட்டது. இதில் துணை வட்டார வளர்ச்சி அலு வலர்கள் ஆரோக்கியசாமி, ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் வேங்கோடு கல்யாணி கிருஷ்ணன், செல்வராஜ், ஆன்டி சீனுவாசன், குப்புசாமி, செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தூத்துக்குடி மாவட்டத்தின் 27-வது கலெக்டராக லட்சுமிபதி நேற்று பொறுப்பேற்றார்.
- கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மேல்முறையீட்டு மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என்று கூறினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தின் 27-வது கலெக்டராக லட்சுமிபதி நேற்று பொறுப்பேற்றார். பின்னர் அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தின் ஊரக பகுதிகள், நகரப்பகுதிகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் முழு அளவிலான வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும், ஒட்டுமொத்த நிர்வாகம் ஒருங்கிணைந்து செயல்பட்டு அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் மாவட்ட கலெக்டர் என்ற முறையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அடிப்படை வசதிகள் குடிநீர், சாலை, பொது சுகாதாரம், திடக்கழிவு திட்டங்கள் போன்ற அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்படும். மக்கள் குறை தீர்ப்பு முகாமில் விவசாயிகள், மீனவர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் விரைந்து தீர்வு காணப்படும்.
தூத்துக்குடி மாவட்டம் பொருளாதார தொழில்துறை வளர்ச்சிக்கு உகந்த மாவட்டமாக துறைமுகம், விமான நிலையம் உள்ளிட்ட வசதிகளுடன் திகழ்கிறது. இந்த மாவட்டம் முழு அளவிலான வளர்ச்சி பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அரசு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு செயல்படுத்தப்படும். நான் முதல்வன் திட்டம், மாணவர்களின் கல்வி உதவித்தொகை, திறன் மேம்பாடு திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படும்.
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மேல்முறையீட்டு மனுக்களுக்கு தீர்வு காணப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா முன்னேற்பாடுகள் பணிகளை ஆய்வு செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானவேவ் ராவ், சப்-கலெக்டர் கௌரவ் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- இந்திய அரசாங்கத்துடன் இணைந்து $750 மில்லியன் (ரூ. 6,498 கோடி) பட்ஜெட்டில் 7 திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது
- USAID-யிடமிருந்து இதுவரை இந்தியா ரூ. 825 கோடி (97 மில்லியன் டாலர்) நிதி பெற்றுள்ளது.
இந்தியாவில் தேர்தல் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க USAID அமைப்பு மூலம் 2012 முதல் வழங்கி வருவதாகக் கூறப்படும் 21 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.182 கோடி) நிதியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது.
இந்தியாவிடம் நிறைய பணம் உள்ளது என்றும் யாரையோ தேர்தலில் வெற்றி பெற வைக்க முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் முயற்சி செய்துள்ளதாகவும் அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஒன்றையொன்று விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் USAID அமைப்பிடம் பெற்ற நிதி குறித்து மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, 2023-24 நிதியாண்டில், அமெரிக்க நிறுவனமான USAID, இந்திய அரசாங்கத்துடன் இணைந்து 750 மில்லியன் டாலர் (ரூ. 6,498 கோடி) பட்ஜெட்டில் 7 திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்கள் எதுவும் தேர்தல்கள் அல்லது வாக்கு சதவீத அதிகரிப்புடன் தொடர்புடையவை அல்ல என்றும் நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

ரூ. 6,498 கோடி (750 மில்லியன் டாலர்) மதிப்பீட்டில் விவசாயம்-உணவுப் பாதுகாப்புத் திட்டங்கள், குடிநீர்-சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பேரிடர் மேலாண்மை-சுகாதாரம், நிலையான காடுகள்-காலநிலை திட்டங்கள் மற்றும் புதுமை(innovation) திட்டங்களுக்காக USAID-யிடமிருந்து இதுவரை இந்தியா ரூ. 825 கோடி (97 மில்லியன் டாலர்) நிதி பெற்றுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் தேர்தல் மற்றும் வாக்கு சதவீதத்துக்கு இந்தியா நிதி பெற்றதாக குறிப்பிட்ட டிரம்ப் உடைய கூற்றை மத்திய அரசு நிராகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.
- இமாச்சல பிரதேச காங்கிரஸ் அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
- காங்கிரஸ் தலைவர்கள் 'சனாதன தர்மத்தையும்' அதை பின்பற்றுபவர்களையும் அவமதிக்கிறார்கள்.
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த 2 ஆண்டுகளில் ஏற்பட்ட தொடர்ச்சியான நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கால் அம்மாநில காங்கிரஸ் அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
இதனால் இமாச்சலப் பிரதேச அரசு , சில நலத்திட்டங்களுக்கு நிதியளிக்க கோவில் அறக்கட்டளைகளின் உதவியை நாடியுள்ளது . காங்கிரஸ் அரசின் இந்த கோரிக்கையை எதிர்க்கட்சியான பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், "கடந்த கால எந்த அரசாங்கமும் பட்ஜெட் திட்டங்களுக்கு கோவில் அறக்கட்டளை நிதியைப் பயன்படுத்தியதில்லை. வழக்கமான அரசு செலவுகளுக்கு கோவில் நிதியைப் பயன்படுத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
ஒருபுறம் காங்கிரஸ் தலைவர்கள் 'சனாதன தர்மத்தையும்' அதை பின்பற்றுபவர்களையும் அவமதிக்கிறார்கள், மறுபுறம், காங்கிரஸ் கட்சியினர் தங்கள் கொள்கைகளுக்கு நிதியளிக்க கோவில் நன்கொடைகளைப் பயன்படுத்த விரும்புகிறார்கள்.காங்கிரஸ் அரசின் இந்த முடிவை கோவில் கமிட்டி, பொதுமக்கள் உட்பட அனைவரும் எதிர்க்க வேண்டும்" என்று கடுமையாக சாடியுள்ளார்.