என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் விசாரணை"

    • டி.வி. அருகே இருந்த மின்சார பெட்டியை குழந்தை தொட்டபோது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தது.
    • மாதவரம் பால்பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    சென்னை:

    சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை, மாத்தூர் எம்.எம்.டி.ஏ. 3-வது பிரதான சாலை 87-வது தெருவைச் சேர்ந்தவர் சாம்சன். இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இவருடைய மனைவி புஷ்பராணி. இவர்களுக்கு 7 மாதத்தில் ஆண் குழந்தை இருந்தது. நேற்று காலை சாம்சன் வேலைக்கு சென்றுவிட்டார். நேற்று மாலை குழந்தை வீட்டின் அறையில் விளையாடிக்கொண்டிருந்தது. புஷ்பராணி, சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்ததாக தெரிகிறது.

    அப்போது டி.வி. அருகே இருந்த மின்சார பெட்டியை குழந்தை தொட்டபோது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த புஷ்பராணி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு மணலியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுத காட்சி பார்க்க பரிதாபமாக இருந்தது. இது குறித்து மாதவரம் பால்பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • பழனியப்பன் தனது பிறந்த நாளை தாய் மற்றும் தன்னுடன் பணியாற்றும் ஊழியர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார்.
    • வீட்டில் நகைகள் ஏதும் இருந்ததா? அவை கொள்ளை போய் உள்ளதா? என்பது குறித்து விரிவான விசாரணையை போலீசார் உடனடியாக தொடங்கினர்.

    பொன்னமராவதி:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சிகப்பி (வயது 75). ஆறுமுகம் ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களது மகன் பழனியப்பன் (55). என்ஜினீயரான இவர் வீடு கட்டுமான தொழில் மற்றும் சொந்தமாக மரப்பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி உஷா ஈரோட்டில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் பழனியப்பன் நேற்று தனது பிறந்த நாளை தாய் மற்றும் தன்னுடன் பணியாற்றும் ஊழியர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். இதை அடுத்து வழக்கம்போல் இரவில் தனது தாயாருக்கு சாப்பாடு கொடுப்பதற்காக சென்றவர் பின்னர் மீண்டும் அவர் வெளியே வரவில்லை.

    இன்று காலை வழக்கம் போல் கட்டிட வேலைக்கு வந்த தொழிலாளர்கள் பழனியப்பன் வீட்டின் கதவை தட்டினர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது அங்கு மரப்பட்டரையின் விளக்குகள் அனைத்தும் எரிந்து கொண்டு இருந்தன.

    பின்னர் ஜன்னல் வழியாக அவர்கள் பார்த்தபோது அங்கு கண்டகாட்சி அவர்களை உறைய வைத்தது. பழனியப்பன் மற்றும் அவரது தாய் சிகப்பி இருவரும் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தனர்.

    இதை அடுத்து அவர்கள் உடனடியாக பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் துணை போலிஸ் சூப்பிரண்டு அப்துல் ரகுமான் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது தாய், மகன் இருவரும் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்கள். மேலும் வீட்டின் வெளியே பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவின் வயர்கள் அனைத்தும் அறுக்கப்பட்டு கிடந்தது. வீட்டின் உள்அறையில் இருந்த சிசிடிவி கேமராவும் திருடு போயிருந்தது.

    ஆனால் வீட்டில் நகைகள் ஏதும் இருந்ததா? அவை கொள்ளை போய் உள்ளதா? என்பது குறித்து விரிவான விசாரணையை போலீசார் உடனடியாக தொடங்கினர். அதேபோல் நகை பணத்திற்காக இந்த கொடூர கொலை சம்பவம் நடந்ததா அல்லது முன் விரோதம் காரணமா மற்றும் தொழில் போட்டி காரணமாக கொலை நடந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தாய் மற்றும் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொன்னமராவதி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ரயில்வே டிராக்கில் இளம் வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
    • ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூரை அடுத்த குடிதாங்கி சாவடியில் உள்ள ரயில்வே டிராக்கில் இளம் வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். நெல்லிக்குப்பம் போலீசார் ரயில்வே போலீசாருக்கு தகவல் அனுப்பினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், இறந்தவர் யார்? ரயில்வே டிராக்கினை கடக்கும் போது ரயில் மோதி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ரயில்வே டிராக்கில் இறந்து கிடந்தவர் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த சேகர் (வயது 26) என்பது தெரியவந்துள்ளது.

    • வசந்தகுமாருக்கு ஆன்லைன் விளையாடும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
    • நகைகளை அடகு வைத்த பணத்தை அவர் ஆன்லைன் விளையாட பயன்படுத்தி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை ஜடையம்பாளையத்தை சேர்ந்தவர் முருகையன்(63). விவசாயி. இவரது மனைவி சரோஜா(55).

    கடந்த 21-ந் தேதி மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூதாட்டி சரோஜா கழுத்தை அறுத்து படுகொலை செய்ப்பட்டார். மேலும் வீட்டில் பீரோவில் இருந்த சில நகைகளும் மாயமாகி இருந்தது.

    இந்த சம்பவம் குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட னர். மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், மேட்டுப்பாளை யம் டி.எஸ்.பி. பாலாஜி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் வேளாங்கண்ணி உதய ரேகா, நித்யா, சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வ நாயகம், பாண்டியராஜன், சுல்தான் இப்ராகிம், ஆனந்த குமார்,மற்றும் போலீசார் கொண்ட 5 தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இதற்கிடையே போலீசாருக்கு அதே பகுதியை சேர்ந்த வசந்தகுமார்(19) என்ற கல்லூரி மாணவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. வசந்தகுமார் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரை தனிப்படையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் போலீசார் சிறுமுகை தென் திருப்பதி நால்ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வசந்தகுமாரை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் மூதாட்டியை கொன்று நகையை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தொடர்ந்து விசாரித்தனர்.

    விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

    வசந்தகுமாரின் தாயார் தையல் தைத்து கொடுத்து வருகிறார். இவரிடம் இறந்த சரோஜா துணிகளை தைப்பதற்கு கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். பின்னர் துணிகளை வசந்தகுமார் எடுத்து சென்று மூதாட்டியிடம் பணம் வாங்கி வருவார். அப்போது மூதாட்டி தனியாக இருப்பதையும், வீட்டில் நகை இருப்பதையும் வாலிபர் அறிந்தார். இதனால் அதனை எடுக்க வாலிபர் திட்டமிட்டுள்ளார். சம்பவத்தன்று வசந்தகுமார் பாட்டியிடம் பணம் வாங்குவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அப்போது மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட வாலிபர், மூதாட்டியை கத்தியால் குத்தி கொன்று விட்டு, வீட்டில் இருந்த 14 பவுன் நகையை திருடி சென்றதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் கல்லூரி மாணவர் வசந்தகுமாரை கைது செய்தனர். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், வசந்தகுமார் நகையை வீரபாண்டியில் உள்ள ஒரு கடையில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளார்.

    வசந்தகுமாருக்கு ஆன்லைன் விளையாடும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நகைகளை அடகு வைத்த பணத்தை அவர் ஆன்லைன் விளையாட பயன்படுத்தி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது.

    • வீட்டில் இருந்து வெளியூர் வியாபாரத்திற்கு சென்று வருவதாக ஏழு மலை தனது மனைவி சுகுணாவிடம் கூறி சென்றார்.
    • தகவலின் பெயரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் அங்கு சென்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா செங்குறிச்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் ஏழுமலை (வயது 43). இவர் இருசக்கர வாகனம் மூலம் புலி, பூண்டு வியா பாரம் செய்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியூர் வியாபாரத்திற்கு சென்று வருவதாக ஏழு மலை தனது மனைவி சுகுணாவிடம் கூறி சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி தனது உறவினர்களுடன் சேர்ந்த ஏழுமலையை தேடினார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று அதிகாலை அதே கிராமத்தை பாலாஜி என்ப வரது கிணற்றில் ஏழமலை பிணமாக மிதந்தார். அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பெயரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் அங்கு சென்றனர். தீயணைப்பு படைவீரர்கள் கிணற்றில் இறங்கி ஏழுமலை உடலை மீட்டனர். அதன் பின்னர்பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வியாபாரி ஏழுமலை எப்படி இறந்தார், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசார ணை நடத்தி வருகிறார்கள்.

    • மகேஷா தனது நண்பர்களுடன் கடலில் குளித்த போது ராட்சத அலை இழுத்து சென்றது.
    • இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    வானூர்:

    உத்தரபிரதேசம் மாநிலம் ஆவாஜ் பிகார் காலனியை சேர்ந்தவர் துளசிதாஸ். அவரது மகன் மகேஷா. பெங்களூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாட முடிவு செய்தார். அதன்படி நண்பர்கள் 7 பேருடன் புதுவைக்கு வந்தார்.

    இவர்கள் கோட்டக்குப்பம் அருகே சின்ன முதலியார் சாவடியில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கினர். பின்னர் மகேஷா தனது நண்பர்களுடன் அந்த பகுதியில் உள்ள கடலில் குளித்தார். அப்போது எழும்பி வந்த ராட்சத அலை மகேஷாவை இழுத்து சென்றது.

    அதிர்ச்சியடைந்த நண்பர்கள் கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் கடலில் இறங்கி மகேஷாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். அவர்கள் மகேஷாவை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • என் மனைவிக்கும் அந்த பகுதியை சேர்ந்த 3 பேருக்கும் மதுபாட்டில் விற்பனை செய்வது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
    • செய்யாறு போலீசார் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்யாறு:

    செய்யாறு டவுன், வெங்கட்ராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவர் பட்டு நெசவு தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 39).

    இவர் இன்று காலை 7 மணி அளவில் பைக்கில் செய்யாறு பைபாஸ் சாலையில் வந்தவாசியை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அங்குள்ள தனியார் பள்ளி அருகே சென்ற போது பின்னால் வேகமாக வந்த கார் பைக் மீது மோதியது.

    இதில் விஜயலட்சுமி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    இது சம்பந்தமாக அவரது கணவர் முருகன் செய்யாறு போலீசில் புகார் அளித்துள்ளார்.

    என் மனைவிக்கும் அந்த பகுதியை சேர்ந்த 3 பேருக்கும் மதுபாட்டில் விற்பனை செய்வது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.

    கும்பலை சேர்ந்த ஒருவர் 3 நாட்களுக்கு முன்பு நாங்கள் விற்கும் பகுதியில் மதுவிற்றால் கொலை செய்துவிடுவேன் என்று எனது மனைவியை மிரட்டி சென்றார். அந்த கும்பல் தான் எனது மனைவியை கார் ஏற்றி கொலை செய்துள்ளனர்.

    அந்த 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து செய்யாறு போலீசார் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்மநபர்கள் ஆனந்தராஜ் மீது மிளகாய் பொடி தூவி அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளனர்.
    • வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆனந்தராஜ் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவில்பட்டி:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் செல்லி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இருளப்பன். இவரது மகன் ஆனந்தராஜ் (வயது 30). இவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதிய பஸ் நிலையத்தில் இரு சக்கர வாகன காப்பகம் நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு வாகன காப்பகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவர் நள்ளிரவு அங்கு தூங்கிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை வாகன காப்பகத்திற்கு பயணிகள் சென்றனர்.

    அப்போது ஆனந்தராஜ் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், பொறுப்பு டி.எஸ்.பி. லோகேஸ்வரன் ஆகியோர் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.

    நேற்று இரவு வாகன காப்பகத்தில் ஆனந்தராஜ் தூங்கி கொண்டிருந்தார். இன்று அதிகாலை ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்மநபர்கள் ஆனந்தராஜ் மீது மிளகாய் பொடி தூவி அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் ஆனந்தராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். ஆனந்தராஜ் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆனந்தராஜ் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள புதிய பஸ் நிலையத்தில் வாகன காப்பக உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • ரூ‌. 2 லட்சம் தந்தால் தான் சுரேஷை விடுவோம் இல்லாவிட்டால் நடப்பதே வேறு என மிரட்டல் விடுத்தனர்.
    • வேலூர் வடக்கு போலீஸ் கடத்தல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் லத்தேரி அடுத்த பன மடங்கியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 28) கோழிப் பண்ணை நடத்தி வருகிறார். நேற்று இரவு 8.30 மணிக்கு கோழி பண்ணைக்கு தீவனம் வாங்குவதற்காக பைக்கில் வேலூர் வந்தார்.

    கொணவட்டம் அருகே வந்தபோது அவரை 5 பேர் கொண்ட கும்பல் மடக்கினர். மேலும் கத்தியை காட்டி மிரட்டி அவரை ஒதுக்குப்புறமான இடத்திற்கு கடத்திச் சென்றனர்.

    அங்கு வைத்து அவரது செல்போனை பறித்தனர்.

    தொடர்ந்து அவரது குடும்பத்தினரை மிரட்டி பணம் பறிக்க கும்பல் திட்டமிட்டனர். அதன்படி சுரேஷின் செல்போனில் இருந்து அவருடைய வீட்டிற்கு பேசினர்.

    ரூ. 2 லட்சம் தந்தால் தான் அவரை விடுவோம் இல்லாவிட்டால் நடப்பதே வேறு என மிரட்டல் விடுத்தனர்.

    சுரேஷின் குடும்பத்தினர் இது குறித்து அதை ஊரைச் சேர்ந்த உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் கூட்டாக கும்பல் கூறிய இடத்திற்கு வந்தனர். அவர்களை கண்டதும் சுரேஷை விட்டுவிட்டு கும்பல் தப்பி ஓடினர். அவர்களில் 3 பேரை மடக்கிப் பிடித்தனர். 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

    பிடிபட்ட 3 பேரையும் சரமாரியாக தாக்கினர். அவர்களை வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • கேளம்பாக்கம் அருகே படூர் கிராமத்தில் சாலையோரத்தில் ஏராளமான வடமாநில வாலிபர்கள் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • எப்படி தமிழகத்திற்கு வந்தனர்? அவர்களை இங்கு அழைத்து வந்தது யார்? என்ன வேலை செய்து வந்தனர்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    திருப்போரூர்:

    கேளம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஜி20 மாநாடு நடைபெற திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

    இதையடுத்து கேளம்பாக்கம், தாழம்பூர், கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தங்கி உள்ள வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குறித்து கடந்த சில நாட்களாக போலீசார் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கேளம்பாக்கம் அருகே படூர் கிராமத்தில் சாலையோரத்தில் ஏராளமான வடமாநில வாலிபர்கள் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அங்கிருந்த 16 வாலிபர்களை பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது இந்தி மற்றும் உருதுமொழி மட்டும் பேசினர். அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. அவர்களிடம் எந்த ஆவணங்களும் இல்லை.

    இதையடுத்து அவர்கள் அனைவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்கள் எப்படி தமிழகத்திற்கு வந்தனர்? அவர்களை இங்கு அழைத்து வந்தது யார்? என்ன வேலை செய்து வந்தனர்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    இது குறித்து உருது தெரிந்த போலீசார் மூலம் தீவிரமாக ரகசிய விசாரணை நடத்தி வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • நோட்டும் அசல் ரூபாய் போல் இல்லாததால் சந்தேகமடைந்த பஞ்சவர்ணம் விருதுநகர் மேற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
    • துரைசெல்வியிடம் கள்ளநோட்டு கும்பல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் பழக்கடை வைத்திருப்பவர் பஞ்சவர்ணம் (வயது40). இவரிடம் ஒரு பெண் பழம் வாங்கியுள்ளார். அவர் கொடுத்த 500 ரூபாய் நோட்டு கள்ளநோட்டு போல் இருந்துள்ளது. இதனால் வேறு ரூபாய் நோட்டை தருமாறு பஞ்சவர்ணம் கூறியுள்ளார்.

    உடனே அந்த பெண் முதலில் கொடுத்த 500 ரூபாயாயை வாங்கி கொண்டு வேறு ஒரு 500 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். அந்த நோட்டும் அசல் ரூபாய் போல் இல்லாததால் சந்தேகமடைந்த பஞ்சவர்ணம் விருதுநகர் மேற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சம்பந்தப்பட்ட பெண் கொடுத்த 500 ரூபாய் நோட்டுகளை வாங்கி சோதனை செய்து பார்த்தனர். இதில் அவை இரண்டும் கள்ளநோட்டுகள் என்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து பழம் வாங்க வந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் சிவகாசி அருகே உள்ள வேண்டுராயபுரத்தை சேர்ந்த சுப்புதாய் (56) என்பதும், அவர் அதே பகுதியில் உள்ள துரைச்செல்வி என்பவரின் மகள் பெற்ற தொகையிலிருந்து இந்த நோட்டை எடுத்து வந்து பழம் வாங்கியதாக தெரிவித்தார்.

    இதையடுத்து வேண்டுராயபுரத்தில் உள்ள துரைசெல்வியின் வீட்டிற்கு சென்று போலீசார் அதிரடி சோதனை செய்தனர். அப்போது அங்கு கட்டு கட்டாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

    இதைத்தொடர்ந்து கள்ளநோட்டை புழக்கத்தில் விட்டதாக சுப்புதாயை போலீசார் கைது செய்தனர். துரைசெல்வியிடம் கள்ளநோட்டு கும்பல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    துரைசெல்வி கள்ளநோட்டு கும்பலை சேர்ந்த சில நபர்களின் பெயர்களை தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் கள்ளநோட்டு கும்பலை கூண்டோடு பிடிக்க போலீசார் வலைவிரித்துள்ளனர்.

    கள்ளநோட்டை புழக்கத்தில் விட்டதாக பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சொந்த வேலை காரணமாக அருப்புக்கோட்டையிலி ருந்து சென்னைக்கு வந்தார்.
    • ஜெய கணேசன் காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டை பகுதியை சேர்ந்தவர் ெஜயகணேசன் (வயது 39) கார் டிரைவர். சம்பவத்தன்று காரில் சொந்த வேலை காரணமாக அருப்புக்கோட்டையிலி ருந்து சென்னைக்கு வந்தார். அப்போது எறைஞ்சி சாலை அருகே காரை நிறுத்தி காருக்குள் தூங்கியுள்ளார். இதனையடுத்து ஜெய கணேசின் உறவினர்கள் போன் மூலம் இவரை தொடர்பு கொண்டபோது இவர் போனை எடுக்க வில்லை. இதனால் போலீ சாருக்கு தகவல் கொடுத்த னர்.

    தகவலின்பேரில் எடைக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ஜெய கணேசன் காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனையடுத்து போலீசார் ஜெயகணேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ள குறிச்சி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெய கணேஷ் எப்படி இறந்தார் ? யாரேனும் கொலை செய்தனரா அல்லது வேறு எதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை

    ×