என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 96359"

    கண்டமனூர் பகுதியில் திடீரென பெய்த கன மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெற்பயிர்கள் மடிந்து விழுந்தன பாய் போட்டது போல மடிந்து காணப்படுகிறது.

    கண்டமங்கலம்:

    கடந்த சில நாட்களாக மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால் கத்திரி வெயிலின் தாக்கம் குறைந்தது பொதுமக்கள் நிம்மதி அடைந்தார்கள்.

    நேற்று காலை முதல் வெயில் வெளுத்து வாங்கியது திடீரென மாலை முதல் மேகத்தில் மாற்றங்கள் காணப்பட்டன. இரவு 8 மணி முதல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    கண்டமனூர் பகுதியில் திடீரென பெய்த கன மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெற்பயிர்கள் மடிந்து விழுந்தன பாய் போட்டது போல மடிந்து காணப்படுகிறது.

    இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட் டுள்ள நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சமயத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்தால் நெற்பயிர் மடிந்து விவசாயிகளுக்கு பெரிதும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திடீர் மழையால் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள நெற்பயிர்கள் மடிந்து விழுந்ததால் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.

    இயற்கை வேளாண்மையில் அசத்தும் மதுரை விவசாயிக்கு மாநில விருது வழங்க கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார்.
    மதுரை

    திருமங்கலத்தை அடுத்த சவுடார்பட்டியை சேர்ந்த இயற்கை விவசாயி சுப்புராஜ் என்பவர் தோட்டத்தில் நெல்லி 6 ஏக்கர், சப்போட்டா 4 ஏக்கர், கொய்யா 7 ஏக்கர், கொடிக்காய்புளி 2.5 ஏக்கர், அத்தி 3 ஏக்கர் போன்ற பழப்பயிர்களை 10 ஆண்டுகளாக பயிரிட்டு வருகிறார். 

    இதற்காக அவர் ரசாயன உரங்களுக்கு மாற்றாக இயற்கை வேளாண் இடு பொருட்களான பஞ்சகாவ்யா, தசகாவ்யா, அமிர்த கரைசல், மீன் அமிலம் ஆகியவற்றை  பயன்படுத்துகிறார். இதன் காரணமாக அவருக்கு ஆண்டு தோறும் 125 டன் பழங்கள் வரை விளைச்சல் கிடைக்கிறது.

    விவசாயி சுப்புராஜ் கூறுகையில், இயற்கை வேளாண் இடுபொருட்களை மட்டுமே விவசாயத்திற்கு பயன்படுத்துவதால், உடலுக்கு கெடுதி இல்லை. மண் வளமும் மேம்படுத்தப்பட்டு உள்ளது  என்றார்.

    விவசாயி சுப்புராஜின் இயற்கை வேளாண்மை குறித்து பாராட்டு தெரிவித்த கலெக்டர் அனிஷ் சேகர்,  தமிழகத்தில் இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு, மாநில அளவில் விருது வழங்கப்படுகிறது. இதற்காக சுப்புராஜின் பெயரை பரிந்துரைத்து உள்ளோம்” என்று தெரிவித்தார்.

    அப்போது அவருடன் வேளாண்மை இணை இயக்குநர் விவேகானந்தன், தோட்டக்கலை துணை இயக்குநர் ரேவதி உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
    ஆந்திரா விவசாயிகளின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டே கிருஷ்ணா நீர் முன்னதாக பூண்டி ஏரிக்கு திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. பூண்டி ஏரியில் சேமிக்கப்படும் தண்ணீர் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கேற்ப செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். அதன்படி ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீர் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும்.

    கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பெய்த பலத்த மழையால் பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியதால் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஜனவரி மாதம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

    இந்த நிலையில் கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் குறைந்ததால் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அரசு ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்தது.

    அதன்படி கடந்த 5-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்தத் தண்ணீர் 8-ந்தேதி காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்தடைந்தது. அன்று இரவே பூண்டி ஏரிக்கும் சென்றடைந்தது.

    கண்டலேறு அணையில் இருந்து முதலில் வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. தற்போது தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,700 கனஅடி வீதம் திறக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் கிருஷ்ணா தண்ணீர் பூண்டி ஏரிக்கு வருவது தற்போது குறைந்து உள்ளது.

    கடந்த வாரத்தில் 650 கனஅடிவரை வந்த தண்ணீர் வரத்து தற்போது 385 கனஅடியாக குறைந்து உள்ளது. ஆந்திரா பகுதியில் விவசாயிகள் கிருஷ்ணா தண்ணீரை எடுப்பதே தண்ணீர் வரத்து குறைந்ததற்கு காரணம் என்று தெரிகிறது.

    ஆந்திரா விவசாயிகளின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டே கிருஷ்ணா நீர் முன்னதாக பூண்டி ஏரிக்கு திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    எனவே ஆந்திரா விவசாயிகள் தண்ணீர் எடுப்பது குறைந்ததும் கிருஷ்ணா நீர் முழுமையாக பூண்டி ஏரிக்கு வந்தடையும்.

    மேலும் கண்டலேறு அணையில் போதுமான தண்ணீர் இருப்பதால் பூண்டி ஏரிக்கு தடையின்றி தண்ணீர் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    பூண்டி ஏரியில் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி. தற்போது ஏரியில் 1143 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 385 கன அடி தண்ணீர் வழங்கப்படுகிறது.

    ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக 841 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • டெல்லி மற்றும் பக்கத்து மாநிலங்களை சேர்ந்த ஏராளமான போலீசார் எல்லைகளில் பாதுகாப்புக்கு நிறுத்தப் பட்டுள்ளனர்.

    விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று விவசாயிகள் மகா பஞ்சாயத்து எனப்படும் 72 மணிநேர போராட்டம் நடத்தப் போவதாக முடிவு செய்திருந்தனர்.

    வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்த சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பு இந்த போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்திருந்தது.

    இந்த அழைப்பை ஏற்று டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் நேற்று முதலே ஜந்தர் மந்தரை நோக்கி வரத் தொடங்கினார்கள்.

    வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் இந்த போராட்டத்தை ஒடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.

    இதற்காக அரியானா, உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு செல்லும் அனைத்து சாலைகளையும் போலீசார் தடுப்பு வேலிகளை அடைத்து மூடினார்கள்.

    மேலும் டெல்லி மற்றும் பக்கத்து மாநிலங்களை சேர்ந்த ஏராளமான போலீசார் எல்லைகளில் பாதுகாப்புக்கு நிறுத்தப் பட்டுள்ளனர்.

    இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக பாரதீய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளரும், சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பின் மூத்த தலைவருமான ராகேஷ் தியாகத் நேற்று ஜந்தர் மந்தர் சென்றபோது அவரை காசிப்பூரில் தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.

    அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அவர் போராட்டத்தில் பங்கேற்காமல் திரும்பி சென்றார். இந்தநிலையில் திட்டமிட்டபடி டெல்லியில் இன்று காலை முதல் விவசாயிகள் போராட்டம் தொடங்கியது.

    டெல்லி ஜந்தர் மந்தரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் ஜந்தர் மந்தர் மைதானத்தில் தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பி தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு தெரிவித்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறுகையில், 'விவசாய விலை பொருட் களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும். விவசாயி கடன் களை தள்ளுபடி செய்ய வேண்டும். மின்சார சட்டத்தை செயல்படுத்தக் கூடாது' என்றனர்.

    விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.டெல்லி புறநகர் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    டெல்லி எல்லைகளான சிங்கு, காசிப்பூர் உள்ளிட்ட பகுதி களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.டெல்லி தலைநகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அங்கு போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து விவசாயிகளை போலீசார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.

    • சென்னையைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணரும் தனியார் நிறுவனத்தின் இயக்குனருமான சிவபெருமான் தலைமை வகித்தார்.
    • புதுப்பட்டினம், பழையபாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கோத்ரேஜ் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    சீர்காழி, ஜூலை:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள கடலோர புதுப்பட்டினம் கிராமத்தில் விவசாயிகளுக்கு இறால் நோய் எதிர்ப்பு மற்றும் மேலாண்மை குறித்த இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது. சென்னையைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணரும் தனியார் நிறுவனத்தின் இயக்குனருமான சிவபெருமான் தலைமை வகித்தார். டாக்டர் பொன்னுசாமி, டாக்டர் உதயகுமார் கலந்துகொண்டு மழைக்காலங்களில் இறால் குட்டைகளில் நோய் வராமல் இருப்பதற்கு தடுக்கும் வழிமுறைகள்,நோய் எதிர்ப்பு மேலாண்மை, தீவனம் இடுதல் குறித்த தொழில்நுட்பம்,நோய் கட்டுப்படுத்துதல், உற்பத்தி செலவினங்களை குறைப்பதற்கான ஆலோசனை உள்ளிட்ட கருத்துக்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. புதுப்பட்டினம், தாண்டவன்குளம், தற்காஸ்,பழையபாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கோத்ரேஜ் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    விவசாயிகளின் விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், ஸ்மார்ட்போன் வாங்கிய ரசீதின் நகல், போனின் ஐ.எம்.இ.ஐ. எண், ரத்து செய்யப்பட்ட காசோலை ஆகியவற்றை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு நிதியுதவி அளிக்கப்படும்.
    ஆமதாபாத் :

    குஜராத்தில் உள்ள விவசாயிகள் ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக அம்மாநில அரசு ரூ.1,500 வரை நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது.

    இதன்படி, ஸ்மார்ட்போன் விலையில் 10 சதவீதம் அல்லது ரூ.1,500 இவற்றில் எது குறைவோ அந்த தொகை நிதியுதவியாக வழங்கப்படும். இதற்கான பிரத்யேக இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளும் இதில் பலனடையலாம். ஆனால், கூட்டாக விவசாயம் செய்பவர்களில், தலா ஒருவருக்கு மட்டுமே நிதியுதவி அளிக்கப்படும். ஸ்மார்ட்போனை தவிர, இயர்போன், பவர் பேங்க், சார்ஜர் போன்ற சாதனங்கள் வாங்க இத்திட்டம் பொருந்தாது.

    விவசாயிகளின் விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், ஸ்மார்ட்போன் வாங்கிய ரசீதின் நகல், போனின் ஐ.எம்.இ.ஐ. எண், ரத்து செய்யப்பட்ட காசோலை ஆகியவற்றை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு நிதியுதவி அளிக்கப்படும்.

    விவசாயிகளுக்கான நலத்திட்டங்களுக்கு விண்ணப்பித்தல், வானிலை தகவல்கள், பூச்சி மருந்து விவரங்கள், நவீன பண்ணை தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ள விவசாயிகள் ஸ்மார்ட்போன் வாங்குவது நல்லது என்று மாநில வேளாண்துறை தெரிவித்துள்ளது.
    கடந்த 2014-ம் ஆண்டு, முதல்முறையாக மோடி ஆட்சிக்கு வந்தபோதே முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் 9 முக்கிய திருத்தங்களை கொண்டு வந்து, அதை அவசர சட்டமாக பிறப்பித்தது.
    புதுடெல்லி :

    விவசாயிகளின் ஓராண்டு கால எதிர்ப்புக்கிடையே, வேளாண் சட்டங்களை ரத்துசெய்வதாக பிரதமர் மோடி அறிவித்திருப்பது, பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், விவசாயிகள் எதிர்ப்பால் மோடி அரசு பின்வாங்குவது இது முதல்முறை அல்ல.

    கடந்த 2014-ம் ஆண்டு, முதல்முறையாக மோடி ஆட்சிக்கு வந்தபோதே முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் 9 முக்கிய திருத்தங்களை கொண்டு வந்து, அதை அவசர சட்டமாக பிறப்பித்தது.

    வேளாண் சட்டங்களுக்கு எழுந்த எதிர்ப்பை போலவே, இந்த அவசர சட்டத்துக்கும் அப்போது எதிர்ப்பு எழுந்தது. ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்பு உள்பட பெரும்பாலான விவசாய சங்கங்கள், இது விவசாயிகள் நலனுக்கு எதிரானது என்று கூறி, எதிர்ப்பு தெரிவித்தன.

    அப்போதைய கூட்டணி கட்சிகளான சிவசேனா, அகாலி தளம், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. காந்தியவாதி அன்னா ஹசாரே, கடும் எதிர்ப்பு தெரிவித்தார். டெல்லியில் போராட்டங்கள் நடந்தன.

    வழக்கம்போல், பிரதமர் மோடி அந்த அவசர சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது அல்ல என்று விளக்கம் அளித்தார். இருப்பினும் எதிர்ப்புகள் அடங்கவில்லை.

    அதே சமயத்தில், இந்த அவசர சட்டத்துக்கு சட்ட வடிவம் அளிப்பதற்காக, 2015-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புக்கிடையே மசோதா கொண்டுவரப்பட்டது. மக்களவையில் அம்மசோதா நிறைவேறி விட்டது. ஆனால், பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை இல்லாததால், மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாதநிலை ஏற்பட்டது.


    தேவர்குளம் அருகே விவசாயிக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள சுண்டன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 47), விவசாயி.

    இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவன் (65) என்பவருக்கும் இடப்பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரண்டு குடும்பத்திற்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த பரமசிவன், அவரது மனைவி சீலக்காரி, மகன் வேல்முருகன் ஆகிய 3 பேரும் சேர்ந்து, கருப்பசாமியை சரமாரி அடித்து உதைத்து அரிவாளால் வெட்டி விட்டு ஓடி விட்டனர்.

    பலத்த காயமடைந்த கருப்பசாமிக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து கருப்பசாமி தேவர்குளம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாபநாசம் அருகே ஆம்னி வேன் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே வளத்தா மங்கலம் கீழத்தெருவில் வசித்து வந்தவர் பெரியசாமி (வயது 70) விவசாயி.சம்பவத்தன்று இவர் டீ குடிப்பதற்காக வளத்தாமங்கலம் மெயின் ரோடு ஓரமாக சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த ஆம்னி வேன் பெரியசாமி மீது மோதியது. இதில் தலையில் பலத்த அடிபட்ட பெரியசாமி சிகிச்சைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையில் இருந்த பெரியசாமி அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் இறந்து விட்டார். இதுகுறித்து அவருடைய மகன் கேசவமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ரெயில் முன்பு பாய்ந்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி திருவெறும்பூர் வேங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 35). இவர் அந்த பகுதியில் விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை வேங்கூர் அருகே உள்ள ரெயில்வே தண்ட வாளத்தில் திடீரென திருச்சி வழி மயிலாடுதுறை சென்ற ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் திருச்சி ரெயில் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் திருச்சி ரெயில் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லெட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரனை நடத்தினார்கள்.

    விசாரணையில் பாலமுருகனுக்கு கடுமையான வயிற்று வலி இருந்ததும் அதை குணப்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தததும் அதனால் தான் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் போலீசார் விசாரனையில் தெரிய வந்தது. ரெயில் நிலைய போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    வடமதுரை அருகே வறட்சியால் பாதித்த தென்னை மரங்களை வேரோடு வெட்டி செங்கல் சூளைக்கு விவசாயிகள் அனுப்பி வருகின்றனர்.

    வடமதுரை, மே. 25-

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், எரியோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தென்னை விவசாயம் அதிக அளவில் நடந்து வருகிறது. கடந்த வருடம் கஜா புயலால் இப்பகுதியில் ஏராளமான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து பாதிக்கப்பட்டன.

    இப்பகுதியில் அதிகா ரிகள் பார்வையிட்டு சேத மடைந்த தென்னையை ஓரளவுக்கு கணக்கிட்டு சென்றனர். ஆனால் பல விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து எதிர்பார்த்த பருவ மழையும் பெய்யாததால் தென்னை மரங்கள் பட்டுப் போய் கருகத் தொடங்கியது.

    இதனால் காய்ந்த மரங்களை விவசாயிகள் வேரோடு வெட்டி செங்கல் சூளைக்கு அனுப்பி வருகின்றனர். இப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. சூளை உரிமையாளர்கள் நேரடியாக வந்து பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை வெட்டி விறகுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    ரூ. 50 முதல் ரூ.100 வரை விலை கொடுத்து இவை வாங்கிச் செல்லப்படுகிறது. நீண்ட நாள் பலன் தரக்கூடியது என்று நம்பி தென்னையை பயிரிட்ட விவசாயிகள் தற்போது கண்ணீர் வடித்து வருகின்றனர்.

    திருத்துறைப்பூண்டி அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.

    இது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுத்தால் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள், காவிரி பாசன விவசாய சங்கத்தினர் போராடி வருகின்றன.

    திருவாரூர் மாவட்டத்தில் திருக்களார், ராயநல்லூர், நான்காம்சேத்தி, சேரன்குளம், நெம்மேலி, கருக்கங்குடி, கருணாவூர், அரிச்சபுரம், கூத்தாநல்லூர், பூதமங்கலம், மேலராதாநல்லூர் வெங்காரம்பேரையூர், கமலாபுரம், கீழப்பெத்தங்குடி, புலிவலம், வெங்கடேசபுரம் உள்ளிட்ட இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் ராயநல்லூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள், கிராம மக்கள் வயலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

    இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், விவசாய சங்க மாநில செயலாளர் மாசிலாமணி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் சரவணன், ராயநல்லூர் கூட்டுறவு சங்க தலைவர் கருணாநிதி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் குருமணி உள்பட பலர் கலந்து கொண்டு கோ‌ஷங்களை எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் விவசாயிகளின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் ராயநல்லூரை சேர்ந்த மணிமாறன் தலைமையில் 65 பேர் கொண்ட போராட்டக்குழு உருவாக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டியில் உள்ள 32 ஊராட்சிகளிலும் தொடர் போராட்டம் நடத்துவது எனவும், வருகிற ஜூன் 1-ந் தேதி திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது எனவும் கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

    ×