என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 98174"

    16 மீனவ கிராம மக்கள் மீன்பிடித் தொழிலுக்கு செல்லாமல் இன்று காலை குடும்பத்துடன் காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் துறைமுக வாசல் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    காட்டுப்பள்ளியில் தனியார் துறைமுகம் மற்றும் கப்பல் கட்டும் தளம் இயங்கிவருகிறது. கடந்த 2008-ம் ஆண்டு இந்த பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக இங்கு இருந்த மீனவ கிராம மக்கள் வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

    இதனால் வாழ்வாதாரம் பாதித்த கடலோரகிராம மீனவர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து 1,750 மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக தனியார் துறைமுகம் மற்றும் கப்பல் கட்டும் தளம் நிர்வாகத்தினர் அறிவித்தனர்.

    இதில் முதற்கட்டமாக 250 பேருக்கு வேலை வழங்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

    மீதமுள்ள 1500 பேருக்கு வேலை வாய்ப்பு, நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிலம் வழங்கிய மீனவ கிராமமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் பழவேற்காடு, தாங்கள் பெரும்புலம் அரங்ககுப்பம் கூணங்குப்பம் திருமலை நகர்,சாட்டங்குப்பம், செம்பாசி பள்ளி,கலங்கரை விளக்கம், நடுக்குப்பம், நக்கத்துரவூ, பேட்டை, பள்ளிகுப்பம், கோரைக் குப்பம், பசியா வரம், உள்ளிட்ட 16 மீனவ கிராம மக்கள் மீன்பிடித் தொழிலுக்கு செல்லாமல் இன்று காலை குடும்பத்துடன் காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் துறைமுக வாசல் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை வாய்ப்பு மற்றும் பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.

    பெண்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல்அறிந்ததும் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்படடனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப் படுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் அங்கேயே குவிந்து உள்ளனர். தொடர்ந்து மீனவ கிராமமக்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். இதனால் அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டு உள்ளது. கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவ கிராமமக்கள் கூறும்போது, கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் முன்னிலையில் நிரந்தர வேலை வாய்ப்பு வழங்குவதாக கம்பெனி நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் இது வரை கம்பெனியில் வேலை வாய்ப்பு வழங்க வில்லை. எனவே போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம் என்றனர்.

    நடப்பாண்டில் மீனவர் குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.5000- வீதம் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்குக் கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15ஆம் நாளன்று தொடங்கி ஜுன் 14ஆம் நாள் வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜுன் 1ம் நாளன்று தொடங்கி ஜுலை 31ஆம் நாள் வரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

    மீன்பிடி தடைக்காலத்தின் போது மீன்பிடி விசைப்படகுகள்/ இழுவலைப் படகுகளில் மீன்பிடிப்பு செய்யும் பணியாளர்கள் மற்றும் முழுநேர மீன்பிடிப்பினை சார்ந்த மீனவ குடும்பங்கள் முற்றிலுமாக தொழிலின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மீனவர்கள் தங்களது குடும்பத்தினை சிரமமின்றி நடத்திச் செல்ல குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.5000- வீதம் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது.

    நடப்பாண்டிற்கான மீன்பிடி தடைக்காலத்தில் தமிழகத்தில் உள்ள 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.90 லட்சம் கடல் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.5000- வீதம் ரூபாய் 95 கோடி வழங்கப்படும்.

    இத்திட்டத்தினை துவக்கி வைக்கும் விதமாக, சென்னை நந்தனத்தில் உள்ள மீனவர் நலத்துறை ஆணையர் அலுவலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,
    மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் திருவள்ளுர், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்பிடும் வகையிலான ஆணைகளை வழங்கினார்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    தமிழகத்திலும் கேரளாவை ஒட்டிய மாவட்டங்களில் மழை செப்டம்பர் மாதம் வரை பரவலாக மழை பெய்யும்.

    சென்னை:

    தென்மேற்கு பருவ மழை ஜூன் முதல் வாரத்தில் வழக்கமாக தொடங்கும். இந்த பருவ மழை காலத்தில் தென் மாநிலங்களில் அதிக மழை பொழிவு கிடைக்கும்.

    தமிழகத்திலும் கேரளாவை ஒட்டிய மாவட்டங்களில் மழை செப்டம்பர் மாதம் வரை பரவலாக மழை பெய்யும்.

    தென்மேற்கு பருவ மழை தொடங்குவது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் இன்னும் அறிவிக்கவில்லை.

    ஆனால் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வேகமாக வீசுவதால் இன்று அல்லது நாளை பருவ மழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல், தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடல்-தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் நாளை (30-ந்தேதி) வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • உள் காயம் ஏற்பட்டதாக கூறி நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
    • விசாரணையின் முடிவில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து உண்மை நிலவரம் தெரியவரும் என்று கடலோர காவல் குழும போலீசார் தெரிவித்தனர்.

    காரைக்கால் மாவட்டத்தில் இருந்து கடந்த 15ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி மீனவ கிராமத்தை சேர்ந்த வீரவேல் (வயது 30 ). நாகை, காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த செல்வத்துரை, செல்வகுமார், சதீஷ் உள்பட 10 மீனவர்கள் படகில் சென்று மன்னார் வளைகுடா கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    நேற்று அதிகாலை நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு கப்பலில் ரோந்து வந்த இந்திய கடற்படையினர் சந்தேகம் அடைந்து படகை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்தனர். இந்த நேரத்தில் மழை பெய்ததாலும் இருள் சூழ்ந்து காணப்பட்டதாலும் இந்த எச்சரிக்கையை கவனிக்காமல் படகு சென்றது.

    இதனால் மேலும் சந்தேகமடைந்த இந்தியா கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மீனவர் வீரவேல் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து படகு அருகில் வந்த இந்திய கடற்படையினர் தாங்கள் சுட்டது தமிழக மீனவர்தான் என்பதை உணர்ந்து உடனடியாக வீரவேலுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அங்கிருந்து வீரவேல் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    இந்த நிலையில் மீனவர் மீதான துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் , கொலை முயற்சி, மிக கடுமையான ஆயுதம் கொண்டு தாக்குதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் இந்திய கடற்படையினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    தொடர்ந்து இந்திய கடற்படை வீரர்களிடம், எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினீர்கள்? முறைப்படி எச்சரிக்கை சமிக்ஞை செய்தீர்களா ? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் முடிவில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து உண்மை நிலவரம் தெரியவரும் என்று கடலோர காவல் குழும போலீசார் தெரிவித்தனர்.

    தற்கிடையே துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த வீரவேலுடன் மீன் பிடித்த சக மீனவர்கள் 9 பேரும் கரைக்கு திரும்பினர். பின்னர் உள் காயம் ஏற்பட்டதாக கூறி நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    சிகிச்சை முடிந்து வெளியே வந்தவர்களில் சிலர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியது அதிர்ச்சி அளிக்கிறது. மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கண்காணிப்பது வழக்கமாக இருந்து வந்தது.

    ஆனால் தற்பொழுது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியது வேதனை அளிக்கிறது. துப்பாக்கி சூடு நடந்த சம்பவத்திற்கு பின்னர் இந்திய கடற்படையினர் சிலர் எங்களை கட்டி வைத்து இரும்பு கம்பியால் தாக்கினர். எதனை கடலில் தூக்கி போட்டீர்கள் என விசாரித்தனர். நாங்கள் ஒன்றுமே போடவில்லை என எவ்வளவு கூறியும் கேட்கவில்லை.

    மேலும் படகு முழுவதும் சோதனை இட்டனர். அதன் பின்னரே படகில் இருந்து அவர்கள் வெளியேறினர். எங்களுக்கு உள் காயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக சிகிச்சை பெற்றோம். இனி இது போன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மீனவர் மீது துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதால் இந்த வழக்கு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு சென்றுள்ளது. விசாரணை முடிவில் பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கடற்கரை பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக கடல் சீற்றத்துடனே காணப்பட்டது.
    • குளச்சல், முட்டம், சுற்றுவட்டார கடல் பகுதிகளில் சூறை காற்றுடன் கடல் சீற்றமாகவே காணப்படுகிறது.

    குளச்சல்:

    குமரி மாவட்டத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ராஜாக்கமங்கலம் முதல் நீரோடி வரையிலான மேற்கு கடற்கரை பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக கடல் சீற்றத்துடனே காணப்பட்டது.

    இதனால் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை தங்கு தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர்.

    கடந்த இரண்டு நாட்களாக குறைந்த அளவிலான பைபர் வள்ளம் மற்றும் கட்டுமர மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வந்த நிலையில் இன்று குளச்சல், முட்டம், சுற்றுவட்டார கடல் பகுதிகளில் சூறை காற்றுடன் கடல் சீற்றமாகவே காணப்படுகிறது.

    இதனால் குளச்சல், முட்டம், மண்டைக்காடு, கோடிமுனை, வாணியக்குடி, குறும்பனை உட்படபத்துக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் வள்ளம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் தங்கள் படகுகளை மீன்பிடி துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

    • நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
    • மீனவர்களை இலங்கைக்கு அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் காரைக்கால் அடுத்த காசாக்குடி மேட்டை சேர்ந்தவர் வைத்தியநாதன்.

    இவருக்கு சொந்தமான விசைப்படகில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து காரைக்கால் மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த 1-ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    அவர்கள் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 12 மீனவர்களை சிறை பிடித்தனர். மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

    மீனவர்களை இலங்கைக்கு அழைத்து சென்று சிறையில் அடைத்தனர். மீனவர்களை மீட்டுத்தரக்கோரி மீனவ பஞ்சாயத்தார் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை மீட்டுத்தரக்கோரி வெளியுறவுத்துறை மந்திரி ஜெயசங்கருக்கு முதல்- அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், காரைக்கால் கீழக்காசக்குடி மேட்டை சேர்ந்த வைத்தியநாதன் படகில் சென்று மீன்பிடித்து கொண்டிருந்த போது, கீழ்காசாக்குடியை சேர்ந்த இளையராஜா (33), கணேசன் (48), பிரேம்குமார் (25), ராமன் (31), தர்ம சாமி (48), மயிலாடுதுறை மாவட்டம் சின்னக்குடியை சேர்ந்த வீரா (28), தினேஷ் (28), தரங்கம்பாடியை சேர்ந்த ராமநாதன் (37), ஜெகதீஸ்வரன் (27), விக்னேஷ் (22), சந்திஸ்குமார் (23), நாயகர்குப்பத்தை சேர்ந்த பாக்கியராஜ் (23) ஆகிய 12 மீனவர்களும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மீனவர்களை விரைவில் விடுவிக்க இலங்கை அரசுடன் வெளியுறவுத்துறை மந்திரி பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். .

    • குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றமாக இருந்து வருகிறது.
    • மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் கடற்கரை கிராமங்களில் உள்ள மீன் சந்தைகளும் வெறிச்சோடி கிடந்தன.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் ஜூன் ஜூலை மாதங்களில் வழக்கமாக கடல் சீற்றமாக காணப்படும்.

    இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றமாக இருந்து வருகிறது.நேற்று முன்தினம் ராஜக்கமங்கலம் அருகே அழிக்கால் பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தின் காரணமாக ஊருக்குள் கடல்நீர் புகுந்தது.

    குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.தொடர்ந்து சீற்றம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் விடிய விடிய தூங்காமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் வடிய தொடங்கியது.

    இந்தநிலையில் குமரி கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இதையடுத்து இன்று குமரி மாவட்டத்தில் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    இன்று 3-வது நாளாக அழிக்கால் பகுதியில் கடல் சீற்றமாகவே உள்ளது. ராட்சத அலைகள் 5 அடி முதல் 15 அடி வரை உயரத்திற்கு எழும்பியது. இதையடுத்து கடற்கரையொட்டி உள்ள வீடுகள் வரை அலைகள் வந்து சென்றன.

    குளச்சல் பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் விசைப்படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்திருந்தனர். குளச்சல் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.

    இரயுமன் துறை, இணையம், தூத்தூர் கடியப்பட்டினம், பூத்துறை பகுதிகளிலும் இன்று கடல் சீற்றமாக காணப்பட்டதால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கடலில் சூறைக்காற்றும் வீசி வருவதால் ஏற்கனவே கடலுக்கு சென்ற பெரும்பாலான மீனவர்கள் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர்.

    இதே போல சின்ன முட்டம், ஆரோக்கியபுரம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி பள்ளம் உள்பட பல கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாகவே காணப்பட்டது.

    இதனால் இந்த கட ற்கரை கிராமங்களைச் சேர்ந்த 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட வள்ளம் மற்றும் கட்டுமரங்கள் இன்று காலை கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் கடற்கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    இதனால் மீன் வரத்து அடியோடு நின்று போனது. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் கடற்கரை கிராமங்களில் உள்ள மீன் சந்தைகளும் வெறிச்சோடி கிடந்தன.

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களில் மீன் பிடித் தொழிலில் ஈடுப்பட்டு வருகிறது.

    குளச்சல்:

    குளச்சல் பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் காற்றுடன் மழை பெய்து வருகிறது. குளச்சல் கடல் பகுதியில் பலமான காற்றும் வீசுகிறது. இதனால் வழக்கம்போல் கடலுக்கு செல்லும் வள்ளம், கட்டுமர மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகினரும் படகுகளை தொடர்ந்து செலுத்த முடியாமல் அவசரமாக பாதியிலேயே கரை திரும்பினர். அவை குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.

    கடலுக்கு செல்லாத கட்டு மரங்களும் மணற் பரப்பில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இன்று குளச்சலில் மீன் வரத்து பாதிக்கப்பட்டது.மீன் வாங்க வந்த வியாபாரிகள், பொதுமக்கள் மீன் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    குளச்சல் சுற்று வட்டார பகுதியில் பெய்து வரும் மழையால் கரையாகுளம் பகுதியில் செங்கல் சூளை தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.பாம்பூரி வாய்க்காலில் நீர் மட்டம் உயர்ந்து உள்ளது.

    மீன்பிடித்த போது கடலில் தவறி விழுந்து மீனவர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தெட்சிணாமூர்த்தி மீனவர். இவருக்கு சொந்தமான பைபர் படகில் கீச்சாங்குப்பம் வடக்கு பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் உள்பட 4 மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். வேளாங்கண்ணி அருகே மீன்பிடித்த போது ராமச்சந்திரன் படகிலிருந்து தவறி விழுந்து கடலில் மூழ்கினார்.

    அவருடன் சென்றவர்கள் ராமச்சந்திரனை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து நாகை கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மீனவர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் 15 ஆயிரம் விசைப்படகுகள் ஆழ்கடலுக்குள் செல்லாது. #FishingBan #FishingBanPeriod
    சென்னை :

    மீன்களின் இனவிருத்திக்காக மத்திய-மாநில அரசுகள் மீன்பிடி தடைகாலம் ஒன்றை நிர்ணயம் செய்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கிழக்கு கடற்கரை பகுதிகளான தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் மீன்பிடி தடைகாலம் இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் தொடங்குகிறது.

    கிழக்கு கடற்கரை பகுதிகளில் தடைகாலம் முடிந்த 15 நாட்களில் மேற்கு கடற்கரை பகுதிகளான கேரளா, கர்நாடகம், கோவா, மராட்டியம் போன்ற மாநிலங்களில் மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வரும்.

    கிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 13 கடலோர மாவட்டங்களை சேர்ந்த 591 மீன்பிடி கிராமங்களுக்கும், புதுச்சேரி, காரைக்கால் பகுதி மீனவர்களுக்கும் இந்த தடைகாலம் பொருந்தும்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மீன்பிடி தடைகாலம் என்பது 45 நாட்களுக்கு இருந்தது. ஆனால் சில ஆண்டுகளாக அதை 60 நாட்களாக உயர்த்தி மத்திய-மாநில அரசுகள் நிர்ணயித்தது. அதன்படி, இன்று நள்ளிரவு தொடங்கும் மீன்பிடி தடைகாலம் வருகிற ஜூன் மாதம் 15-ந் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும்.

    தமிழகத்தின் முக்கிய துறைமுகங்களான காசிமேடு, கடலூர், நாகப்பட்டினம், ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் விசைப்படகுகள் கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டு இருக்கும். மொத்தத்தில் 150 முதல் 240 குதிரை திறன் கொண்ட 15 ஆயிரம் விசைப்படகுகள் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாது என்றும், சென்னையில் மட்டும் 2 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாது என்றும் அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசிய செயல் தலைவர் நாஞ்சில் ரவி தெரிவித்தார்.



    மீன்பிடி தடைகாலம் நாட்களில் மீனவர்கள் விசைப்படகுகளில் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்லமாட்டார்கள். மாறாக 20 குதிரை திறனுக்கும் குறைவான கண்ணாடி இழை படகுகளின் மூலம் குறைந்த தூரத்துக்கு சென்று சிறிய அளவிலான மீன்களை பிடித்துவருவார்கள். மீன்பிடி தடைகாலத்தால் இனி வரக்கூடிய நாட்களில் மீன்களின் விலை அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    மேலும், அக்டோபர் முதல் டிசம்பர் மாத காலங்களில் மீன்பிடி தடைகாலத்தை வைத்தால் நன்றாக இருக்கும் என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசிய செயல் தலைவரும், செய்தித் தொடர்பாளருமான நாஞ்சில் ரவி கூறியதாவது:-

    மீன்பிடி தடைகாலம் இந்த காலத்தில்தான் அமல்படுத்த வேண்டும் என்று அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. மேற்கு கடற்கரை பகுதிகளில் மழைக்காலத்தில் தான் மீன்பிடி தடைகாலம் அமலில் இருக்கிறது. அந்த காலத்தில்தான் மீன்கள் இனவிருத்தி செய்ய ஏதுவாக இருக்கிறது. அவர்கள் அதை சரியாக கடைப்பிடிக்கிறார்கள்.

    ஆனால் நமக்கு கோடைகாலத்தில் மீன்பிடி தடைகாலம் என்று நிர்ணயித்து இருப்பதை எந்த மீனவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதை மத்திய- மாநில அரசுகளுக்கு பல முறை கோரிக்கையாக வைத்தும் கண்டுகொள்ளவில்லை. எனவே அரசுகள் மீனவர்களுடன் ஆலோசித்து அக்டோபர்-டிசம்பர் காலங்களில் தடைகாலத்தை கொண்டுவரலாம்.

    அதேபோல், மீன்பிடி தடைகாலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியமான ரூ.5 ஆயிரம் என்பது போதாது. அதை உயர்த்தி வழங்க வேண்டும். விசைப்படகு உரிமையாளர்களுக்கும் படகுகளை பராமரிப்பதற்கு ரூ.2 லட்சம் மானியம் வழங்க அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #FishingBan #FishingBanPeriod
    எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். #RameswaramFishermen

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று 562 விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர்.

    இவர்களில் ஒரு தரப்பினர் இந்திய கடல எல்லையை ஒட்டியுள்ள கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், இது சர்வதேச கடல் பகுதி. மீன் பிடிக்க அனுமதி இல்லை. எனவே உங்கள் பகுதிக்கு செல்லுங்கள் என ராமேசுவரம் மீனவர்களை எச்சரித்தனர்.

    மேலும் சில கடற்படை வீரர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்களை தாக்கியதோடு, மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தி விரட்டியடித்தனர். இதையடுத்து மீனவர்கள் அவசரம், அவசரமாக கரைக்கு திரும்பினர்.

    அப்போது ராமேசுவரத்தை சேர்ந்த அமலன் என்பவரது படகு எல்லை தாண்டி வந்ததாக கூறி அதில் இருந்த மீனவர்கள் முருகேசன், முனியசாமி, ரெனிஸ்டன், சுப்பையா ஆகிய 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

    சிறை பிடிக்கப்பட்ட 4 மீனவர்களும் இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு எல்லை தாண்டி வந்ததாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டு 4 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். #RameswaramFishermen

    பாம்பன் பகுதி மீனவர்கள் 5 பேர் ஆழ்கடலில் மீன்பிடித்தபோது, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். #FishermenArrested
    கொழும்பு:

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் 5 பேரும்  ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

    தலைமன்னார் கடற்படை முகாமில் வைத்து கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படை விசாரித்து வருகிறது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேரை நேற்று இலங்கை கடற்படை கைது செய்த நிலையில், இன்று மேலும் 5 பேரை கைது செய்துள்ளது. #FishermenArrested
    ×