search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thulabaram"

    • சத்ரு சம்ஹார யாகம் வளர்த்து சாமி தரிசனம்.
    • துலாபாரத்தில் அமர்ந்து அரிசியை கோவிலுக்கு வழங்கினார்.

    திருச்செந்தூர்:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அவரது மனைவி சவுமியா ஆகியோர் இன்று அதிகாலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்தனர்.

    அப்போது கோவிலில் உள்ள துலாபாரத்தில் அமர்ந்து அரிசியை கோவிலுக்கு வழங்கினர். தொடர்ந்து கோவிலில் மூலவர், சண்முகர், குருபகவான் சன்னதியில் வழிபட்டும், சத்ரு சம்ஹார யாகம் வளர்த்தும் சுவாமி தரிசனம் செய்தார்.

    நிகழ்ச்சியின் போது பா.ம.க. தெற்கு மாவட்ட செயலாளர் பரமகுரு, தெற்கு மாவட்ட தலைவர் சிவபெருமாள், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகரச் செயலாளர் முருகன், நகரத் தலைவர் முரளி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • குழந்தை பாக்கியத்திற்காக தவிப்பவர்கள் துலாபாரம் தருவதாக வேண்டிக்கொள்ள வேண்டும்.
    • பக்தர்கள் வாழைப்பழம், கல்கண்டு, பழ வகைகள் போன்றவற்றை துலாபாரம் கொடுக்கலாம்.

    குழந்தை பாக்கியம் அருளும் மிகச்சிறந்த பரிகார தலமாகவும் நாகலாபுரம் வேதநாராயண சுவாமி ஆலயம் திகழ்கிறது.

    குழந்தை பாக்கியத்திற்காக தவிப்பவர்கள் துலாபாரம் தருவதாக வேண்டிக்கொள்ள வேண்டும்.

    குழந்தை பிறந்ததும் துலாபாரம் வேண்டுதலை நிறைவேற்றலாம்.

    பக்தர்கள் பொதுவாக வாழைப்பழம், கல்கண்டு, பழ வகைகள் போன்றவற்றை துலாபாரம் கொடுக்கலாம்.

    பக்தர்களுக்கு என்ன முடியுமோ அதை துலாபாரமாக நிறைவேற்றலாம் என்று அர்ச்சகர் தெரிவித்தார்.

    • இக்கோவிலில் நாள் ஒன்றுக்கு ஐந்துமுறை சுயம்பு லிங்கம் நிறம் மாறும்.
    • இக்கோவிலில் அமைந்துள்ள 36 திருப்படிகளில், அபிஷேகம் அலங்காரம் விளக்கேற்றி திருமுறை ஓதி, திருபடிபூஜைகள் நடைபெற்றது.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் அமர்நீதி நாயனார் குருபூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. இக்கோவில் கயிலாயத்திற்கு இணையான தலம் ஆகும். நாள் ஒன்றுக்கு ஐந்துமுறை நிறம் மாறும் சுயம்பு லிங்கம். அகஸ்தியருக்கு திருமண கோலத்தில் காட்சி கொடுத்த தலம். திருநாவுக்கரசருக்கு திருவடி தீட்சை அருளிய தலம். குந்திதேவி சாப விமோசனம் பெற்ற தலம். அமர்நீதி நாயனாருக்கு முக்தி கொடுத்த தலம். திருமண பரிகார தலம். இக்கோவிலில் அஷ்டபுஜ காளியம்மன் சிறப்புடையது. இந்த திருநல்லூர் மாட கோயிலில் அமைந்துள்ள 36 திருப்படிகளில், அபிஷேகம் அலங்காரம் விளக்கேற்றி திருமுறை ஓதி, திருபடிபூஜைகள் நடைபெற்றது. இவ்விழாவில் துலாபாரம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அமர்நீதி நாயனார் குருபூஜை நிகழ்ச்சியில் திருவாவடுதுறை கட்டளை தம்பிரான் திருச்சிற்றம்பலம் சுவாமிகள், கோயில் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஆய்வாளர் குணசேகரன், ரமேஷ் குருக்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசித்து வழிபட்டனர்.

    ×