search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tometo"

    • உள்ளூர் மட்டுமின்றி திண்டுக்கல், பழனி, உடுமலை பகுதியில் இருந்தும் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.
    • தக்காளி விலை மீண்டும் சரிவால் இல்லத்தரசிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால் அதன் விலை ஒரு கிலோ ரூ.40 ஆக சரிந்துள்ளது.

    பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், மே மாதம் வரை உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகமாக இருந்தது.

    மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிப்பின் காரணமாக அந்நேரத்தில் ஒரு கிலோ ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.15-க்கு என குறைந்த விலையில் விற்பனையானது.

    பின் கோடை மழைப்பொழிவு போதியளவு இல்லாததால், பல கிராமங்களில் தக்காளி சாகுபடி குறைந்தது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து வழக்கத்தைவிட மிகவும் குறைவாக இருந்தது.

    இதனால் கடந்த மாதம் இறுதியில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் அதிகபட்சமாக ரூ.120 வரை விற்பனையானது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு ஆளானார்கள். இந்நிலையில், சில வாரத்துக்கு பிறகு, மார்க்கெட்டில் தற்போது தக்காளி வரத்து சற்று அதிகரித்தது. இதனால், அதன் விலை குறைய தொடங்கியது.

    உள்ளூர் மட்டுமின்றி திண்டுக்கல், பழனி, உடுமலை பகுதியில் இருந்தும் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நேற்று மார்க்கெட்டில் 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி ரூ.500 முதல் ரூ.600-க்கு ஏலம் போனது. சராசரியாக ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.45 வரை விற்பனையானது. சில வாரத்துக்கு பிறகு தக்காளி விலை மீண்டும் சரிவால் இல்லத்தரசிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

    • கடந்த சில நாட்களாக 25 டன், 50 டன் என வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருக்கிறது.
    • உழவர் சந்தைகளில் நாட்டுத் தக்காளி கிலோ ரூ.60 முதல் ரூ.64 வரை விற்பனை செய்யப்பட்டது.

    கோவை,

    கோவை எம்.ஜி.ஆர். மொத்த காய்கனி மார்க்கெட், தியாகி குமரன் மார்க்கெட் ஆகியவற்றுக்கு நேற்று ஓரே நாளில் தக்காளி வரத்து 130 டன்களாக அதிகரித்தது. இதனால், நாட்டுத்தக்காளி விலை கிலோ ரூ.60 ஆக சரிந்தது.

    கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை உச்சத்தில் இருந்தது. கிலோ ரூ.100-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. அந்த சமயத்தில், கோவை க்கு வழக்கமாக வரும் உள்ளூர் தக்காளிகளின் வரத்து குறைவாக இருந்தது. கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து இருந்தது.

    இந்தநிலையில், கடந்த சில நாட்களாக கோவைக்கு உள்ளூர் தக்காளியின் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் தக்காளியின் மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை விலை குறைந்து வருகிறது.

    இதுகுறித்து கோவை தியாகி குமரன் மார்க்கெட்டின் அனைத்து மொத்த காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறும் போது, பொள்ளாச்சி, உடுமலை உள்ளிட்ட உள்ளூர் பகுதிகளில் இருந்து கோவைக்கு தக்காளி வரத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக 25 டன், 50 டன் என வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருக்கிறது.

    நேற்று எம்.ஜி.ஆர் மொத்த மார்க்கெட்டுக்கு உள்ளூர் பகுதிகளில் இருந்து நாட்டுத்தக்காளி 100 டன்னும், தியாகி குமரன் மார்க்கெட்டுக்கு 30 டன்னும் வந்துள்ளது.

    அதே சமயம் கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் ஆப்பிள் தக்காளி வரத்து குறைந்துள்ளது. நாட்டுத் தக்காளி கிலோ ரூ.50, ரூ.60 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

    வெளிமாநிலங்களில் இருந்து வரும் தக்காளி மொத்த விற்பனையில் கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது என்றார்.

    உழவர் சந்தைகளில் நாட்டுத் தக்காளி கிலோ ரூ.60 முதல் ரூ.64 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆப்பிள் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது.

    • 67 பண்ணை பசுமை கடைகளில் ரூ.60க்கு தக்காளி விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • ேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் தக்காளியை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை.

    கோவை,

    தமிழகம் முழுவதும் தக்காளி விலை கிடுகிடுவென அதிகரித்து உள்ளது. எனவே அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழக அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

    அதன்படி அரசு சார்பில் முதற்கட்டமாக 67 பண்ணை பசுமை கடைகளில் ரூ.60க்கு தக்காளி விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அதனை 111 நியாய விலைக்கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    தக்காளி விளைச்சல் குறைந்துள்ள நிலையில் கூடுதல் விலை கொடுத்து வாங்கி, கூட்டுறவு கடைகள், நியாயவிலைக்கடைகள் மூலம் தக்காளி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த மாதம் விற்பனையை விரிவுபடுத்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாட்டில் 500 நியாய விலைக்கடைகளில் நேற்று முதல் தக்காளி விற்பனை தொடங்கியது. அனைத்து மாவட்டங்களிலும் சராசரியாக 10 கடைகள், சில பகுதிகளில் 15 கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் 20 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக கோவை மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள விவசாயிகளிடம் இருந்து தக்காளி பழங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. அவை நேற்று கோவைக்கு கொண்டு வரப்பட்டன.

    இதனை தொடர்ந்து கோவை சாய்பாபா காலனி உள்பட 20 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனைக்கு வந்தது. அங்கு ஒரு கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது.

    கோவை காய்கறி மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.180க்கு விற்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இங்கு உள்ள ஒருசில ரேஷன் கடைகளில் ஒரு கிலோ ரூ.60க்கு விற்கப்பட்டது. எனவே பொதுமக்கள் நேற்று ரேஷன் கடைகளுக்கு அதிகளவில் திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் போட்டி போட்டு கொண்டு தக்காளி பழங்களை வாங்கி சென்றனர்.

    கோவையில் உள்ள 20 ரேஷன் கடைகளில் 500 கிலோ தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை தொடங்கியது. ஆனால் ஒரே நாளில் அனைத்து பழங்களும் விற்று தீர்ந்து விட்டன.

    கோவை சாய்பாபா காலனி ரேஷன் கடைக்கு தக்காளி வாங்குவதற்காக வந்திருந்த பெண்கள் கூறுகையில், காய்கறி மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.180க்கு விற்கிறது. இதனால் நாங்கள் போதிய அளவில் வாங்க முடியாமல் வேதனைப்பட்டு வந்தோம்.

    இந்த நிலையில் அரசே, ரேஷன் கடைகள் மூலம் ஒரு கிலோ ரூ.60க்கு விற்பனை செய்து உள்ளது மகிழ்ச்சி தருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் தக்காளி விலை கட்டுக்குள் வரும்வரை அரசு ேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் தக்காளியை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×