search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "train"

    • ஜோலார்பேட்டை - சோமநாயக்கன்பட்டி இடையே, சுரங்க பாலம் கட்டும் பணி நடக்கிறது.
    • .இத்தகவலை தெற்கு ெரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர்:

    சேலம் ெரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட, ஜோலார்பேட்டை - சோமநாயக்கன்பட்டி இடையே, சுரங்க பாலம் கட்டும் பணி நடக்கிறது. இப்பணி நடப்பதால் வருகிற 23-ந்தேதி கொச்சுவேலி - பெங்களூரு சூப்பர்பாஸ்ட் ெரயில் (எண்: 16319) மறுமார்க்கமாக 24-ந்தேதி பெங்களூரு - கொச்சுவேலி ெரயில் (எண்:16320) முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

    இதே போல் எர்ணாகுளம் - பெங்களூரு சூப்பர்பாஸ்ட் ெரயில் (எண்: 12683) 24-ந்தேதியும், பெங்களூரு - எர்ணாகுளம் ெரயில் (எண்: 12684) மறுநாளும் ( 25-ந் தேதி) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.இத்தகவலை தெற்கு ெரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கோயமுத்தூர் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்
    • வணிகர்களுக்கு உரிய இழப்பீடு, ஓய்வூதியம் வழங்கவும் தீர்மனம்

    கோவை,

    கோயமுத்தூர் மார்க்கெட் வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நடந்தது. ஆர்.எஸ்.கணேசன் தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன், பாரூக், ரமேஷ், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் அப்துல் ரஹிமான் வரவேற்றார்.

    பொதுக்குழு கூட்டத்தில் நிலவில் தென்துருவத்தில் சந்திரயான்-3 விண்கலத்தை தரையிறக்கி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிப்பது, கோவையில் இருந்து திருச்செந்தூருக்கு இரவுநேர விரைவு ரெயிலை பொள்ளாச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக இயக்குவதற்கான நடவடிக்கைகளில் சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் ஈடுபட வேண்டும்,

    இயற்கை பேரிடர் மற்றும் தீ விபத்துகளால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், பொட்டல பொருட்களுக்கு உரிமம் வழங்குவதில் இரட்டை முறையை மாற்றி அமைத்து உணவு பாதுகாப்பு துறையிடம் உரிமம் பெற்றால் போதும் என சட்ட விதிகளை மாற்றி அமைக்க வலியுறுத்துவது, தியாகி குமரன் மார்க்கெட் நுழைவு வாயில் வளைவு பெயர் பலகை அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் ஆர்.எஸ்.கணேசன் புதிய தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

    • ரெயில்களில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் கடத்தப்படுகிறா? என அடிக்கடி சோதனை செய்வது வழக்கம்.
    • மொரப்பூர் அருகே ரெயில் வந்தபோது பொதுபெட்டியில் இருந்த 2 பைகளை போலீசார் திறந்து பார்த்தனர்.

    சேலம்:

    சேலம் ரெயில்வே போலீஸ் நிலைய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ரெயில்களில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் கடத்தப்படுகிறா? என அடிக்கடி சோதனை செய்வது வழக்கம்.

    அதன்படி ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு வந்த பிலாஸ்பூர் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் விரைவு வண்டியில் சேலம் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர். இதில் மொரப்பூர் அருகே ரெயில் வந்தபோது பொதுபெட்டியில் இருந்த 2 பைகளை போலீசார் திறந்து பார்த்தனர். அதில் 16 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த பைகளை கொண்டு வந்த சேலம் சிவதாபுரம் பகுதியை சேர்ந்த சிவா (50) என்பவரிடம் விசாரணை நடத்தினர். இதில் விஜயவாடாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததாக அவர் தெரிவித்தார். இதையடுத்து அவரை சேலம் ரெயில்வே போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மயிலாடுதுறையில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்பட்டது.
    • இந்த ரெயில் அனைத்து ரெயில் நிறுத்தங்களிலும் நின்று செல்லும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை -திருச்சி, திருச்சி - கரூர், கரூர்-சேலம் ஆகிய 3 ரெயில்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே ரெயில் சேவையாக மயிலாடுதுறை தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.

    இதனிடையே இன்று காலை மயிலாடுதுறையில் இருந்து 6.20 மணிக்கு புறப்பட்ட இந்த ரயிலை ரயில் பயணிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இனிப்புகள் வழங்கி வரவே ற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ரெயில் இன்ஜின் முன்புறம் மாலை அணி வித்தும் மற்றும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    மேலும் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரயிலில் பயணம் மேற்கொண்டார்.

    முன்னதாக ரயில் ஓட்டுனர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    இந்த ரயில் மயிலாடுதுறையில் இருந்து காலை 6.20 மணிக்குப் புறப்பட்டு கும்பகோணம் பாபநாசம் தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு காலை 9.30 மணிக்கு சென்றடைகிறது.

    பின்னர் கரூர், நாமக்கல் வழியாக பிற்பகல் 1.45 மணிக்கு சேலம் சென்றடைகிறது.

    இதே போன்று மறு மார்க்கமாக சேலத்தில் மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு 6.05 மணிக்கு வந்தடைகிறது.

    பின்னர் இரவு 9.40 மணிக்கு மயிலாடுதுறை வந்து சேரும். இந்த ரயில் அனைத்து ரயில் நிறுத்தங்களிலும் நின்று செல்வது குறிப்பி டத்தக்கதாகும்.

    சேலத்தில் இருந்து கரூர் வரை இயக்கப்பட்ட ரெயில் இனிமேல் மயிலாடுதுறை வரை இயக்கப்பட இருப்பது ரயில் பயணிகள் மற்றும் வணிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

    • கோவை வழியாக கொல்லம், மங்களூருவுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கொல்லம்-கச்சிகுடா இடையிலான சிறப்பு ரெயில்(எண்:07045) கொல்லத்தில் இருந்து வருகிற 30-ந் தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு செப்டம்பர் 1-ந் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு கச்சிகுடா சென்றடையும்.

    கோவை,

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கோவை வழியாக கொல்லம், மங்களூருவுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சேலம் கோட்ட ரெயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஓணத்தை முன்னிட்டு செகந்திராபாத்-கொல்லம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில்(எண்:07121), இன்று மாலை 4.35 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 11.20 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

    கொல்லம்-செகந்திரா பாத் இடையிலான சிறப்பு ரெயில்(எண்:07122) வருகிற 29-ந் தேதி இரவு 7 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு வரும் 31-ந் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

    செல்லும் வழியில் இந்த ரெயில்கள் காயன்குளம், மாவேலிக்கரா, செங்கனூர், திருவல்லா, செங்கனாச் சேரி, கோட்டயம், எர்ணாகு ளம் நகரம், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    எஸ்.எம்.வி.டி பெங்களூரு-மங்களூரு சென்ட்ரல் இடையிலான சிறப்பு ரெயில்(எண்(06569), எஸ்.எம்.வி.டி பெங்களூருவில் இருந்து நாளை மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.30 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் சென்றடையும்.

    செல்லும் வழியில் இந்த ரெயில்கள் காசர்கோடு, பைய்யனூர், கண்ணூர், தலச்சேரி, வடகரா, கோழிக் கோடு, திரூர், சொர்ணூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பங்காரபேட் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    மங்களூரு சென்ட்ரல்- எஸ்.எம்.வி.டி பெங்களூரு இடையிலான சிறப்பு ரெயில்(எண்:06570) வருகிற 29-ந் தேதி இரவு 8.05 மணிக்கு மங்களூர் சென்ட்ர லில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.45 மணிக்கு எஸ்.எம்.வி.டி பெங்களூரு சென்றடையும்.

    கச்சிகுடா-கொல்லம் இடையிலான சிறப்பு ரெயில்(எண்:07044) கச்சிகுடாவில் இருந்து நாளை மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 11.20 மணிக்கு கொல்லம் சென்ற டையும்.

    கொல்லம்-கச்சிகுடா இடையிலான சிறப்பு ரெயில்(எண்:07045) கொல்லத்தில் இருந்து வருகிற 30-ந் தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு செப்டம்பர் 1-ந் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு கச்சிகுடா சென்றடையும்.

    செல்லும் வழியில் இந்த ரெயில்கள் காயன்குளம், மாவேலிக்கரா, செங்கனூர், திருவல்லா, செங்கனாச் சேரி, கோட்டயம், எர்ணா குளம் நகரம், ஆலுவா , திருச்சசூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 6-ந் தேதி, அடுத்த மாதம் 2-ந் தேதி தாம்பரத்தில் இருந்து 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு மங்களூருவுக்கு சென்றடையும்.
    • 27-ந் தேதி, அடுத்த மாதம் 3-ந் தேதி இரவு 11 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்பட்டு அடுத்தநாள் மதியம் 3.15 மணிக்கு தாம்பரத்தை அடையும்.

    திருப்பூர்:

    ஓணம் பண்டிகையையொட்டி தாம்பரம்-மங்களூருவுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் வருகிற 26-ந் தேதி, அடுத்த மாதம் 2-ந் தேதி தாம்பரத்தில் இருந்து 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு மங்களூருவுக்கு சென்றடையும். இந்த ரெயில் சேலத்துக்கு இரவு 9.30 மணிக்கும், ஈரோட்டுக்கு 10.35 மணிக்கும், திருப்பூருக்கு 11.28 மணிக்கும், கோவைக்கு 12.37 மணிக்கும் செல்லும்.

    இதுபோல் வருகிற 27-ந் தேதி, அடுத்த மாதம் 3-ந் தேதி இரவு 11 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்பட்டு அடுத்தநாள் மதியம் 3.15 மணிக்கு தாம்பரத்தை அடையும். இந்த ரெயில் கோவைக்கு காலை 6.27 மணிக்கும், திருப்பூருக்கு 7.13 மணிக்கும், ஈரோட்டுக்கு 8 மணிக்கும், சேலத்துக்கு 9.02 மணிக்கும் வந்து செல்லும்.

    இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • திருவனந்தபுரத்திலிருந்து பாலக்காடு வரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்பட்டு வந்தது.
    • கோவையிலிருந்து 1920 லிருந்தே தனுஷ்கோடிக்கு ெரயில் இயக்கப்பட்டு வந்தது.

    உடுமலை:

    திருவனந்தபுரத்திலிருந்து பாலக்காடு வரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்பட்டு வந்தது. பெங்களூரு-கோவை இன்டர்சிட்டி ெரயில் கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை நீட்டிக்கப்பட்டதற்கு மாற்றாக இந்த ெரயிலை கோவை வரை நீட்டிப்பதாக அப்போது ெரயில்வே அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்டது.ஆனால் அதற்கு மாறாக அந்த ெரயில் மதுரை வரை நீட்டிக்கப்பட்டது. அந்த ெரயிலை, இப்போது ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    தற்போது பாம்பன் பாலமும், ராமேஸ்வரம் ெரயில்வே நிலையமும் புதுப்பிக்கப்பட்டு வரும் நிலையில், ராமேஸ்வரம் செல்ல வேண்டிய ெரயில்கள் அனைத்தும், மண்டபம் மற்றும் ராமநாதபுரத்துடன் நிறுத்தப்படுகின்றன.

    கோவையிலிருந்து 1920 லிருந்தே தனுஷ்கோடிக்கு ெரயில் இயக்கப்பட்டு வந்தது. 1964ல் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடி முற்றிலும் அழிந்த பின்பு அந்த ெரயில் கோவை- ராமேஸ்வரம் இரவு நேர ெரயிலாக இயக்கப்பட்டு வந்தது.மருதமலை, பழனி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, ராமே ஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு திருத்தலங்களையும் இணைக்கும் வகையில் 90 ஆண்டுகளாக இயங்கி வந்தது.கோவையில் வாழும் பல லட்சம் தென் மாவட்ட மக்களுக்கும் பெரிதும் பயனளித்து வந்தது. அகல ெரயில் பாதைப்பணிக்காக நிறுத்தப்பட்ட அந்த ெரயிலை மீண்டும் இயக்கினால் கொங்கு மண்டலத்திலுள்ள பக்தர்கள், தென் மாவட்ட மக்கள் அனைவருக்கும் பேருதவியாக இருக்குமென்று தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் பல அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி, மனுப்போர் நடத்தி வருகின்றன. மக்கள் பிரதிநிதிகளும் கடிதம் மேல் கடிதம் அனுப்பி வருகின்றனர். இன்று வரையிலும் இதற்கான பரிந்துரை கூட அனுப்பப்படவில்லை.

    இந்நிலையில் மங்களூருவி லிருந்து ராமேஸ்வரத்துக்கு போத்தனூர் வழியாக வாரம் இரு முறை ெரயிலை இயக்க தெற்கு ரயில்வே பரிந்துரை அனுப்பியுள்ளது.அதையும் கோவை சந்திப்புக்கு வராமல், போத்தனூர் வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளதால் சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    • கோவையில் இருந்து திருப்பதிக்கு இன்டர்சிட்டி ெரயில், வாரத்துக்கு 3 நாட்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.
    • ெரயில், கோவை- திருப்பதி இன்டர்சிட்டி இயக்கப்படாத நாட்களில் இயக்கப்படுகிறது மகிழ்ச்சி அளிக்கும் செய்தி ஆகும்.

    திருப்பூர்:

    கோவையில் இருந்து திருப்பதிக்கு இன்டர்சிட்டி ெரயில், வாரத்துக்கு 3 நாட்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ெரயில், கொங்கு மண்டலத்திலுள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு பேருதவியாக வுள்ளது.இதனால் எப்போதுமே இந்த ெரயிலில் இடம் கிடைப்பது அரிதாகவே இருக்கும். இந்த ெரயிலின் இயக்கத்தை அதிகப்படுத்த வேண்டுமென்று பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது.

    இந்நிலையில் கோவை வழியாக திருப்பதிக்கு வாரம் இரு முறை ெரயில் புதிதாக இயக்கப்படவுள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இந்த ெரயிலை இயக்குவதற்கு, ெரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

    மொத்தம் 21 பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ள இந்த ரெயில் கொல்லத்தில் மதியம் புறப்பட்டு மாலை 6மணிக்கு கோவை வழியாக கடந்து செல்கிறது.கோவையில் இந்த ெரயிலில் ஏறினால் மறுநாள் அதிகாலை 3:20 மணிக்கு திருப்பதி சென்று விடலாம். மறு மார்க்கத்தில் திருப்பதியிலிருந்து இந்த ெரயில், செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் புறப்பட்டு கோவையை கடந்து கேரளம் செல்லும். திருப்பதியில் மதியம் 2:40 மணிக்கு இந்த ெரயில் புறப்படும். கோவைக்கு இரவு 10 மணிக்கு வந்தடையும்.

    கேரளத்தில் கொல்லத்தில் புறப்படும் இந்த ெரயில், மாவேலிக்கரை, சங்கனாச்சேரி, காயம்குளம், செங்கனூர், திருவல்லா, கோட்டயம், எர்ணாகுளம், ஆலுவா, திருச்சூர் மற்றும் பாலக்காடு ஆகிய ரெயில் நிலையங்களிலும் , தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்களிலும் நிறுத்தப்படும். ஆந்திர மாநிலம் சித்தூரில் நிற்கும்.

    இந்த ெரயில், கோவை- திருப்பதி இன்டர்சிட்டி இயக்கப்படாத நாட்களில் இயக்கப்படுகிறது என்பது, பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி ஆகும்.

    இதில் கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டத்திலுள்ள நகரங்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டுமென்பது கொங்கு மண்டலத்தை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • ராமேசுவரம்- செகந்திராபாத் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயிலை மீண்டும் இயக்க கோரிக்கை எழுந்துள்ளது
    • புதுக்கோட்டையை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருவண்ணாமலை, திருப்பதி, காளஹஸ்தி சென்று வர வசதியாக இருந்ததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்

    புதுக்கோட்டை, 

    தென் மத்திய ரெயில்வே மண்டலம் சார்பாக செகந்திராபாத்- ராமேசுவரம்- செகந்திராபாத் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயிலாக கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரெயில் புதுக்கோட்டை, கும்பகோணம், திருவண்ணாமலை, காட்பாடி, திருப்பதி, குண்டூர் வழியாக இயக்கப்பட்டது. செகந்திராபாத்-ராமேசுவரம் சிறப்பு ரெயில் (வண்டி எண்-07685) ஒவ்வொரு வாரமும் செவ்வாய் இரவு 9.25 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டைக்கு புதன் இரவு 10.43 மணிக்கு வந்து ராமேசுவரம் அதிகாலை 3.10 மணிக்கு சென்றடைந்தது. மறுமார்க்கத்தில் ராமேசுவரம்-செகந்திராபாத் சிறப்பு ரெயில் (07686) ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டைக்கு வெள்ளி அதிகாலை 3.40 மணிக்கு வந்து செகந்திராபாத் சந்திப்புக்கு சனி அதிகாலை 7.10 மணிக்கு சென்றடைந்தது. இந்த ரெயில் புதுக்கோட்டையை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருவண்ணாமலை, திருப்பதி, காளஹஸ்தி சென்று வர வசதியாக இருந்தது. இந்த ரெயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24-ந் தேதியுடன் இந்த சிறப்பு ரெயில் நிறுத்தப்பட்டது. இந்த ரெயிலை மீண்டும் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக ரெயில்வே நிர்வாகத்தினரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

    • கேரளாவில் இருந்து புறப்பட ஆலோசனை.
    • கொங்கு மண்டலத்தை சேர்ந்த பக்தர்கள் மத்தியில் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ேகாவை,

    கோவையில் இருந்து திருப்பதிக்கு வாரந்தோறும் 3 நாட்களில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இது கொங்கு மாவட்டத்தை சேர்ந்த பயணிகளுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. எனவே அந்த நாட்களில் 500-க்கும் மேற்பட்டோர் இன்டர்சிட்டி ரெயிலில் முன்பதிவு சென்று பயணம் சென்று திரும்புகின்றனர்.

    கோவை-திருப்பதி ரெயிலில் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்வதால், அந்த ரெயிலில் சீட் கிடைப்பது என்பது பெரும்பாடாக உள்ளது. எனவே திருப்பதிக்கு மேலும் சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று கொங்கு மண்டல பக்தர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    இந்த நிலையில் கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து கோவை வழியாக திருப்பதிக்கு வாரம் இருமுறை சிறப்பு ரெயில் ஒன்றை இயக்குவது என்று தென்னக ரெயில்வே முடிவு செய்து உள்ளது. இதற்கு மத்திய ரெயில்வே வாரியமும் ஒப்புதல் அளித்து உள்ளது.

    அதன்படி 21 பெட்டிகளுடன் கூடிய அந்த சிறப்பு ரெயில் கொல்லத்தில் இருந்து புதன், சனிக்கிழமைகளில் மதியம் புறப்பட்டு, கோவைக்கு மாலை 6 மணிக்கு வரும். அடுத்த நாள் அதிகாலை 3.20 மணிக்கு திருப்பதி செல்லும்.

    அதேபோல மறுமார்க்கத்தில் திருப்பதியில் இருந்து செவ்வாய், வெள்ளி கிழமைகளில் மதியம் 2.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், அன்றைய தினம் இரவு 10 மணிக்கு கோவை வந்தடையும்.

    கொல்லம்-திருப்பதி இடையேயான சிறப்பு ரெயில் மாவேலிக்கரை, சங்கனாச்சேரி, காயங்குளம், செங்கனூர், திருவல்லா, கோட்டயம், எர்ணாகுளம், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் சித்தூரில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து கோவை வழியாக மேலும் ஒரு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளது, கொங்கு மண்டலத்தை சேர்ந்த பக்தர்கள் மத்தியில் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கரூர் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது
    • வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு ௩ நாட்கள் சிறப்பு ரயில் கரூர் வழியாக இயக்கப்படுகிறது

    கரூர்,

    தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை, வாஸ்கோடகாமா- வேளாங்கண்ணி சிறப்பு ரயில் வரும், 27, செப்டம்பர் 1, 6ம் தேதிகளில் வாஸ்கோட காமாவில் இருந்து இரவு, 9:51 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 3:50 வேளாங்கண்ணியை சென்றடையும். இந்த ரயில் வரும், 28, செப்., 2 மற்றும் 7ல் மாலை, 6:58 மணிக்கு கரூர் வந்து இரவு, 7:00 மணிக்கு வேளாங்கண்ணிக்கு புறப் பட்டு செல்லும். மறுமார்க்கத்தில், வேளாங்கண்ணி-வாஸ்கோடகாமா சிறப்பு ரயில், வேளாங்கண்ணியில் இருந்து வரும், 30, செப்டம்பர் 4, 9 மதியம், 1:20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு, 8:00 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும். இந்த ரயில் கரூருக்கு வரும், 30 மற்றும் செப்., 4, 9 ல் இரவு, 7:48 மணிக்கு வந்து, 7:50 மணிக்கு, வாஸ்கோடகாமா புறப்பட்டு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • திருவனந்தபுரத்திலிருந்து பாலக்காடு வரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
    • போத்தனூர் வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளதால் சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    திருப்பூர், 

    திருவனந்தபுரத்திலிருந்து பாலக்காடு வரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. பெங்களூரு-கோவை இன்டர்சிட்டி ெரயில் கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை நீட்டிக்கப்பட்டதற்கு மாற்றாக இந்த ெரயிலை கோவை வரை நீட்டிப்பதாக அப்போது ெரயில்வே அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்டது.

    ஆனால் அதற்கு மாறாக அந்த ெரயில் மதுரை வரை நீட்டிக்கப்பட்டது. அந்த ெரயிலை, இப்போது ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    தற்போது பாம்பன் பாலமும், ராமேஸ்வரம் ெரயில்வே நிலையமும் புதுப்பிக்கப்பட்டு வரும் நிலையில், ராமேஸ்வரம் செல்ல வேண்டிய ெரயில்கள் அனைத்தும், மண்டபம் மற்றும் ராமநாதபுரத்துடன் நிறுத்தப்படுகின்றன.

    கோவையிலிருந்து 1920 லிருந்தே தனுஷ்கோடிக்கு ெரயில் இயக்கப்பட்டு வந்தது. 1964ல் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடி முற்றிலும் அழிந்த பின்பு அந்த ெரயில் கோவை- ராமேஸ்வரம் இரவு நேர ெரயிலாக இயக்கப்பட்டு வந்தது.

    மருதமலை, பழனி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு திருத்தலங்களையும் இணைக்கும் வகையில் 90 ஆண்டுகளாக இயங்கி வந்தது.

    கோவையில் வாழும் பல லட்சம் தென் மாவட்ட மக்களுக்கும் பெரிதும் பயனளித்து வந்தது. அகல ெரயில் பாதைப்பணிக்காக நிறுத்தப்பட்ட அந்த ெரயிலை மீண்டும் இயக்கினால் கொங்கு மண்டலத்திலுள்ள பக்தர்கள், தென் மாவட்ட மக்கள் அனைவருக்கும் பேருதவியாக இருக்குமென்று தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் பல அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி, மனுப்போர் நடத்தி வருகின்றன. மக்கள் பிரதிநிதிகளும் கடிதம் மேல் கடிதம் அனுப்பி வருகின்றனர். இன்று வரையிலும் இதற்கான பரிந்துரை கூட அனுப்பப்படவில்லை.

    இந்நிலையில் மங்களூருவிலிருந்து ராமேஸ்வரத்துக்கு போத்தனூர் வழியாக வாரம் இரு முறை ெரயிலை இயக்க தெற்கு ரயில்வே பரிந்துரை அனுப்பியுள்ளது.அதையும் கோவை சந்திப்புக்கு வராமல், போத்தனூர் வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளதால் சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    ×