search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "train"

    • 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார்.
    • பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர்- வஞ்சிபாளையம் இடையே உள்ள காவிலிபாளையம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக திருப்பூர் ெரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் அடிப்படையில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர் யார் , எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாம்பரம் - எர்ணாகுளம் வருகிற 24-ந்தேதி முதல் செப்டம்பர் 9ந்தேதி வரை வியாழன் தோறும் இயக்கப்படும்.
    • ஆகஸ்டு 25-ந்தேதி முதல் செப்டம்பர் 8-ந்தேதி வரை இந்த ெரயில் இயங்கும்.

    திருப்பூர்:

    ஓணம் பண்டிகையையொட்டி தாம்பரம் - எர்ணாகுளம் இடையே சிறப்பு ரெயில் (எண்:06053) வருகிற 24-ந்தேதி முதல் செப்டம்பர் 9ந்தேதி வரை வியாழன் தோறும் இயக்கப்படும். மதியம் 3 மணிக்கு தாம்பரத்தில் புறப்படும் ரெயில் மறுநாள் காலை 3:30மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும்.

    எர்ணாகுளத்தில் புறப்படும் ெரயில் ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், சென்னை எழும்பூர் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். மறுமார்க்கமாக எர்ணாகுளம் - தாம்பரம் ரெயில் (எண்: 06504) வெள்ளிதோறும் காலை 8:30மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினம் இரவு 11:15மணிக்கு தாம்பரம் சென்று சேரும். ஆகஸ்டு 25-ந்தேதி முதல் செப்டம்பர் 8-ந்தேதி வரை இந்தரெயில் இயங்கும்.

    இந்த ரெயில்களில் ஒரு முதல் வகுப்பு ஏ.சி., 2 இரண்டாம் வகுப்பு ஏ.சி., தலா 6 ஏ.சி., மற்றும் படுக்கை வசதி, 2 பொது பெட்டிகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • மயிலாடுதுறை- திருச்சி ரெயில் மோதி பலத்த காயம் அடைந்தார்.
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திட்டை ரெயில் நிலையத்துக்கும், பசுபதிகோ யில் ரெயில் நிலையத்திற்கும் இடையே தண்டவாளம் அருகே 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அவர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த மயிலாடுதுறை- திருச்சி ரெயில் மோதி பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை அதே ரெயிலில் ஏற்றி தஞ்சைக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் வழியிலேயே அந்த நபர் இறந்து விட்டார்.

    இதையடுத்து தஞ்சை ரெயில்வே இருப்புபாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி உத்தரவின்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ், தலைமை காவலர் சரவணசெல்வன் மற்றும் போலீசார் இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயிலில் அடிப்பட்டு இறந்தவர் யார் ? எந்த ஊர் ? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்தவர் பற்றிய தகவல் தெரிந்தால் உடனே 04362-230004 மற்றும் 9498101980 என்ற எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று இருப்பு பாதை போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • நாடு முழுவதும் உள்ள 500 ரயில் நிலையங்களை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி மேம்படுத்து வதற்கான உத்தரவு
    • பாண்டிச்சேரியில் மட்டும் 93 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளது

    திருச்சி.  

    நாடு முழுவதும் உள்ள 500 ரயில் நிலையங்களை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி மேம்படுத்து வதற்கான உத்தரவை பிறப்பித்து அதற்கான அடிகல்லையும் நாட்டியுள்ளார்.

    அதில் தென்னக ரெயில்வேயில் உள்ள 25 ரெயில் நிலையங்களை மேம்படுத்து வதற்கான பணிகள் தொடங்கியுள்ள நிலையில் தென்னக ரெயில்வேயின் திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறுகையில்...

    இந்திய ரெயில்வே தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதில் குறிப்பாக நவீன மயமாக்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் மத்திய அரசு மூன்று ரயில் நிலையங்கள் அதிகப்படியான மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் மத்திய பிரதேசத்தில் உள்ள ராணிகமலாபதி, பெங்களூர் விஸ்வரேஸ்சய்யா ரெயில் நிலையம், குஜராத் காந்திநகர் செயில் நிலையம் ஆகியவை நவீன மயமாக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் 1309 ரெயில்கள் நவீன மயமாக்கப்பட உள்ளன.

    அதில் திருச்சி கோட்டத்தை பொறுத்தவரை 15 ரெயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட உள்ளது.

    அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், காரைக்கால், மன்னார்குடி, திருப்பாதிப்புலியூர், சிதம்பரம், அரியலூர், திருவண்ணாமலை, விருத்தாச்சலம், வேலூர், கண்டோன்மென்ட், போளூர், லால்குடி ஆகிய ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி வருகிற 6-ந் தேதி இந்த அம்ரித் பாரத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்நிகழ்ச்சியில் திருச்சி கோட்ட அளவில் 4 ரெயில் நிலையங்கள் இணைக்கப்படுகிறது. அதில் மயிலாடுதுறை, தஞ்சாவூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகியவை இணைக்கப்படுகிறது.

    இந்த ரயில் நிலையங்கள் அனைத்திலும் வெளிநாடுகளில் இருப்பது போல் மேம்படுத்த பட உள்ளோம். அதில் நகரின் இரண்டு பகுதிகளையும் இணைக்கும் வகையிலும், ரெயில் நிலையங்களின் கட்டிடங்களை மேம்படுத்தி மறு வடிவமைப்பு செய்தல், நவீன வசதிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், பயணிகளின் வழிகாட்டுதலுக்கான சைன் போர்டு அமைக்கப்பட உள்ளது. நம்ம ஊரின் கலாச்சாரம் பண்பாட்டை குறிக்கும் வகையில் கட்டிடங்கள் வடிவமைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக பிரதமர் மோடி 508 ரெயில் நிலையங்களுக்கு பணிகளை தொடங்கி வைக்கிறார்.

    திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட 15 ரயில் நிலையங்களுக்கு 120 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் மொத்தம் 18 ரயில் நிலையங்களும் கேரளாவிற்கு 5 ரயில் நிலையங்களும் கர்நாடகாவில் ஒன்றும் புதுச்சேரியில் ஒன்றும் என மொத்தம் 25 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது.

    அதில் பாண்டிச்சேரி மட்டும் 93 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளது என்று கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் வணிக பிரிவு மேலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • ஈரோட்டுக்கு வரும் ரெயில் ரத்து செய்யபட்டுள்ளது
    • திருச்சியில் இருந்து இரவு 7 மணிக்கு கிளம்பி ஈரோடு வரும் ரெயில் (06611) இன்று ஒரு நாள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது

    ஈரோடு,

    திருச்சி ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் கடந்த 23-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதனால் திருச்சியில் இருந்து இயக்கப்படும் சில ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சில ரெயில்கள் மாற்று பாதையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சியில் இருந்து இரவு 7 மணிக்கு கிளம்பி ஈரோடு வரும் ரெயில் (06611) இன்று ஒரு நாள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ஈரோட்டில் இருந்து மதியம் 1:35 மணிக்கு திருநெல்வேலி செல்லும் ரயில் (16845) இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே, சேலம் கூட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 27 ரெயில்களில் புறப்படும் பயணிக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
    • திருச்சி நிலைய அட்டவணையில் குறிப்பிட்ட நேரத்துக்கு (மாலை, 4:50 மணிக்கு) வந்து சேரும்.

     திருப்பூர்:

    திருச்சி மார்க்கத்தில் நடக்கும் பொறியியல் மேம்பாட்டு பணி காரணமாக 27 ெரயில்களில் புறப்படும் பயணிக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

    வருகிற ஆகஸ்டு 13ந்தேதி இரவு 10 மணிக்கு சென்னையில் புறப்படும் ெரயில் சேரன் எக்ஸ்பிரஸ் (எண்:12673) காட்பாடி நிலையத்திற்கு இரவு 11:48 மணிக்கு வந்து 5 நிமிடம் தாமதமாக இரவு 11:53 மணிக்கு வரும். இந்த ெரயில் ஜோலார்பேட்டை நிலையத்திற்கு அதிகாலை 1:03க்கு பதிலாக 10 நிமிடம் தாமதமாக 1:13 மணிக்கு வந்து சேரும்.

    ஆகஸ்டு 14ந்தேதி மயிலாடுதுறை - கோவை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் (எண்:12083) மதியம் 2:55 மணிக்கு பதில் 5 நிமிடம் தாமதமாக 3 மணிக்கு மயிலாடுதுறையில் புறப்படும். கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர் நிலையங்களுக்கு தாமதமாக வரும்.

    ஆனால் திருச்சி நிலைய அட்டவணையில் குறிப்பிட்ட நேரத்துக்கு (மாலை, 4:50 மணிக்கு) வந்து சேரும். இந்த 2 ரெயில்கள் உட்பட 25 ெரயில்களின் புறப்படும், பயணிக்கும் நேரம் ஆகஸ்டு 2-வது மற்றும் 3-வது வாரம் குறிப்பிட்ட தேதியில் மாற்றப்பட்டுள்ளது. இத்தகவலை ரெயில் நிலையத்தில் உள்ள தகவல் மையத்தில் பயணிகள் அறியலாம் என சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • ரெயில் சேவை வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்
    • தண்டவாள பணிகள் முடிக்க பட்டதால் வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.

    திருப்பூர்:

    கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் பாலக்காடு- திருச்சி ெரயில் சேவை வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும் என,ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, பாலக்காடு ெரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:-

    திருச்சி ரெயில் நிலையம் - திருச்சி கோட்டை ெரயில் நிலையம் இடையே, தண்டவாள பணிகள் நடப்பதால், பாலக்காடு - திருச்சி (16844), திருச்சி - பாலக்காடு (16843) உள்ளிட்ட 2 ெரயில்களின் சேவை, ஜூலை 20-ந் தேதி முதல் 25ம் தேதி வரை மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில், வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    • தூக்க கலக்கத்தில் இருந்த அவர் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பூர்:

    ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பங்கஜ் மராண்டி(45). இவர் ஊட்டியில் உள்ள எஸ்டேட்டில் தனது குடும்பத்தினருடன் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் ஊட்டியில் வாடகைக்கு வீடு ஒன்றை பிடித்து தங்கி இருந்தார்.

    இதனையடுத்து தனது குடும்பத்தினரை அழைத்து வருவதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு நேற்று ரயில் மூலம் கோவை வந்தார். அதிகாலை 4 மணி அளவில் ரயில் திருப்பூர் அடுத்த கூலிபாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது பாத்ரூம் செல்வதற்காக பங்கஜ் மராண்டி வந்துள்ளார்.

    அப்போது தூக்க கலக்கத்தில் இருந்த அவர் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார்.நீண்ட நேரமாகியும் அவர் இருக்கைக்கு திரும்பாததால் மனைவி மற்றும் குழந்தைகள் ரயில் முழுவதும் தேடிப் பார்த்தனர். எங்கும் கிடைக்கவில்லை கோவை வந்ததும் கோவை ரயில்வே போலீசில் தகவல் தெரிவித்தனர். ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் திருப்பூர் அருகே கூலிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் ஒருவர் பிணமாக கிடப்பதாக திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டபோது அது பங்கஜ் மராண்டி என்பது தெரியவந்தது.பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது சம்பந்தமாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்வதை விரும்பும் இளைஞர்கள் சில சமயங்களில் விபரீத செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • ரெயில் படிக்கட்டில் அமரும் தகராறில் வாலிபர்கள் 2 பேர் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விருதுநகர்:

    கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலை தென் மாவட்ட மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக முன் பதிவு செய்யப்படாத பெட்டியில் ஏறும் பயணிகள் இருக்கைகளுக்காக அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதும், மோதலில் ஈடுபடுவதும் வழக்கமான ஒன்றாகி விட்டது.

    அதிலும் படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்வதை விரும்பும் இளைஞர்கள் சில சமயங்களில் விபரீத செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை கோவையில் இருந்து புறப்பட்ட அந்த ரெயில் மதுரையை கடந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று இந்த ரெயிலில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முன்பதிவு அல்லாத இரண்டு பெட்டிகளிலும் குற்றாலம் செல்லும் சுற்றுலா பயணிகள் உள்பட ஏராளமானோர் நின்றவாறும் பயணம் செய்தனர். இதற்கிடையே படிக்கட்டுகளிலும் இளைஞர்கள் சிலர் தொங்கியவாறும் சென்றனர்.

    அப்போது படியில் அமர்வதில் பயணம் செய்வதில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது 32), தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த மாரியப்பன் (36) ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. உடனே ரெயிலில் பயணம் செய்த சக பயணிகள் அவர்களை கண்டித்ததோடு, உள்ளே வருமாறும் அறிவுரை கூறினர். ஆனால் அதனை ஏற்காமல் அந்த வாலிபர்கள் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டவாறு வந்தனர்.

    ஒருகட்டத்தில் மோதல் முற்றியதில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். விருதுநகரை தாண்டி ஆர்.ஆர். நகர் பகுதியில் ரெயில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது தாக்குதலில் ஈடுபட்ட வாலிபர்கள் இரண்டு பேரும் அடுத்தடுத்து படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தனர்.

    இதில் ஒருவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார்.

    பலியான இரண்டு பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன. ஓடும் ரெயில் படிக்கட்டில் அமரும் தகராறில் வாலிபர்கள் 2 பேர் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பறக்கும் ரெயில் திட்டம் நீட்டிப்புக்கு திட்டமதிப்பீடு ரூ.734 கோடியாக மாற்றி அமைக்கப்பட்டு ரெயில்வே ஒப்புதல் அளித்தது.
    • தில்லை கங்கா நகர் பகுதியில் தூண்கள் அமைக்கப்பட்டு, மேம்பால இணைப்பு பணிகள் முடிந்துவிட்டன.

    வேளச்சேரி:

    சென்னை கடற்கரை- வேளச்சேரி வரை பறக்கும் ரெயில் சேவை உள்ளது. இந்த ரெயில் சேவையை பரங்கிமலை வரை 5 கிலோ மீட்டருக்கு நீட்டிக்கும் பணி கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையிலான 500 மீட்டர் தூர பணியில் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த பணி கிடப்பில் போடப்பட்டது. இந்தநிலையில் கிடப்பில் போடப்பட்ட ஆதம்பாக்கத்தில் இருந்து 500 மீட்டருக்கான பறக்கும் ரெயில் திட்டப் பணியில் நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்து மீண்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. பறக்கும் ரெயில் திட்டம் நீட்டிப்புக்கு திட்டமதிப்பீடு ரூ.734 கோடியாக மாற்றி அமைக்கப்பட்டு ரெயில்வே ஒப்புதல் அளித்தது.

    இதற்கிடையே இதற்காக தில்லை கங்கா நகர் பகுதியில் தூண்கள் அமைக்கப்பட்டு, மேம்பால இணைப்பு பணிகள் முடிந்துவிட்டன. மேலும் மீதமுள்ள பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    ஆதம்பாக்கம்-பரங்கிமலை ரெயில் நிலையங்களுக்கு இடையே 500 மீட்டர் தூரத்தில் மெட்ரோ ரெயில் 2-ம் கட்டப் பாதை, பறக்கும் ரெயில் பாதையை கடக்கிறது. எனவே இந்த ரெயில் பாதை பணியை தெற்கு ரயில்வே மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

    சென்னை கடற்கரை-தாம்பரம் புறநகர் மின்சார ரெயில், கடற்கரை- பரங்கிமலை பறக்கும் ரெயில் மற்றும் சென்ட்ரல்-பரங்கிமலை மெட்ரோ ரெயில் சேவை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில், பரங்கிமலையில் புதிய ரெயில் முனையம் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    இதன்மூலம், மெட்ரோ, புறநகர் மற்றும் பறக்கும் ரெயில் பயணிகள் பரங்கிமலையில் இருந்து தாங்கள் செல்ல விரும்பும் இடத்திற்கு எளிதில் செல்ல முடியும். இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் அனைத்தும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கட்டுமானப் பணிகள் முடிந்ததும் தண்டவாளங்களை ஆய்வு செய்து, சேவைகளை இயக்க ஒப்புதல் அளிக்குமாறு தெற்கு கோட்டத்தின் (பெங்களூர்) ரெயில்வே பாதுகாப்பு ஆணையரிடம் கோரிக்கை வைக்கப்படும். இதன் பின்னர் ஆய்வு முடிவடைந்து ரெயில் சேவை தொடங்கப்படும்.

    • செங்கல்பட்டில் இரவு 11 மணிக்கு புறப்படும் ரெயில் கடற்கரைக்கு நள்ளிரவு 12.54 மணிக்கு வந்து சேருகிறது.
    • கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 47 சேவைகள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளன.

    சென்னை:

    சென்னை பெருநகரத்தோடு புறநகர் பகுதி மக்களை இணைக்கும் பாலமாக மின்சார ரெயில் சேவை உள்ளன. அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மின்சார ரெயில்கள் இடம் பெற்றுள்ளன.

    அதிகாலை 3.55 மணிக்கு தொடங்கும் சேவை நள்ளிரவு 1 மணி வரை நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 24 மணி நேரத்தில் 3 மணி நேரங்கள் தவிர மற்ற நேரங்கள் முழுவதும் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு, கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரெயில், மூர்மார்க்கெட்-அரக்கோணம், மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை ஆகிய 4 வழித்தடங்களில் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    பயணிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப மின்சார ரெயில்களின் சேவை மாற்றி அமைத்து ஒவ்வொரு ஆண்டும் கால அட்டவணை வெளியிடுகிறது. நேரம் மாற்றம், கூடுதல் ரெயில் சேவை போன்றவை இதில் முக்கியமாக இடம் பெறும்.

    ஆனால் இந்த முறை மின்சார ரெயில்களின் சேவை குறைத்து அட்டவணை வெளியிட்டுள்ளது. 4 வழித்தடங்களிலும் சேவைகள் சற்று குறைக்கப்பட்டு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

    கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் வரை இயக்கப்படும் மின்சார ரெயில் சேவையின் எண்ணிக்கை 124 ஆக இருந்த நிலையில் தற்போது 8 சேவை குறைக்கப்பட்டு 116 சேவை இன்று முதல் செயல்பட்டிற்கு வந்தது.

    கடற்கரை நிலையத்தில் அதிகாலை 3.55 மணி முதல் சேவை தொடங்குகிறது. இந்த ரெயில் தாம்பரத்திற்கு அதிகாலை 4.50 மணிக்கு செல்கிறது. இரவு 11.59 மணிக்கு கடைசி சேவையாக புறப்படும் மின்சார ரெயில் தாம்பரத்திற்கு நள்ளிரவு 12.54 மணிக்கு செல்கிறது.

    இதே போல செங்கல்பட்டில் இரவு 11 மணிக்கு புறப்படும் ரெயில் கடற்கரைக்கு நள்ளிரவு 12.54 மணிக்கு வந்து சேருகிறது.

    கடற்கரை நிலையத்தில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் பறக்கும் ரெயில் சேவையும் 9 குறைக்கப்பட்டுள்ளன. இதுவரையில் 70 ரெயில்கள் இயக்கப்பட்ட நிலையில் இன்று முதல் 61 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. முன்பு இந்த சேவை 80 ஆக இருந்தது. கடந்த ஆண்டு 70 ஆக குறைக்கப்பட்டது.

    அதிகாலை 4.10 மணிக்கு கடற்கரை நிலையத்தில் இருந்து முதல் சேவை தொடங்குகிறது. 4.55 மணிக்கு வேளச்சேரி சென்றடைகிறது. வேளச்சேரியில் இருந்து அதிகாலை 5.05 மணிக்கு புறப்படும் ரெயில் 5.50 மணிக்கு கடற்கரை வந்து சேரும்.

    இரவு 10.20 மணிக்கு கடைசி சேவையாக கடற்கரையில் இருந்து புறப்படும் மின்சார ரெயில் வேளச்சேரிக்கு இரவு 11.05 மணிக்கு சென்றடையும். அங்கிருந்து இரவு 11.10 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 11.35 மணிக்கு கடற்கரை நிலையம் வந்து சேரும். காலை மற்றும் மாலை பீக் அவர்ஸ் நேரத்தில் 10 நிமிடத்திற்கு வீதம் ஒரு பறக்கும் ரெயில் இயக்கப்படுகிறது. சாதாரண நேரத்தில் 20 நிமிடத்திற்கு ஒரு ரெயில் சேவை உள்ளது.

    மூர் மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் மார்க்கத்தில் 128 மின்சார ரெயில்கள் இக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 124 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. மூர்மார்க்கெட்டில் இருந்து நள்ளிரவு 12.15 மணிக்கு முதல் சேவை ஆவடிக்கு தொடங்குகிறது. இந்த ரெயில் நள்ளிரவு 1.05 மணிக்கு ஆவடியை சென்றடைகிறது.

    அதே போல பட்டாபிராமில் இருந்து அதிகாலை 3.20 மணிக்கு புறப்படும் ரெயில் மூர் மார்க்கெட்டுக்கு அதிகாலை 4.25 மணிக்கு வந்து சேரும். இரவு 11.45 மணிக்கு மூர் மார்க்கெட்டில் இருந்து புறப்படும் ரெயில் ஆவடிக்கு நள்ளிரவு 12.30 மணிக்கு செல்லும். இதுவே கடைசி சேவையாகும்.

    இதே போல திருத்தணியில் இரவு 9.45 மணிக்கு புறப்படும் ரெயில் நள்ளிரவு 12.20 மணிக்கு மூர் மார்க்கெட் வந்து சேரும்.

    கடற்கரையில் இருந்து அதிகாலை 4.20 மணிக்கு புறப்படும் முதல் ரெயில் காலை 6.25 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும். கும்மிடிப்பூண்டியில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் ரெயில் மூர் மார்க்கெட்டுக்கு அதிகாலை 5.20 மணிக்கு வந்து சேரும். இரவு 11.20 மணிக்கு மூர் மார்க்கெட்டில் இருந்து புறப்படும் ரெயில் நள்ளிரவு 1 மணிக்கு கும்மிடிப்பூண்டி சென்றடையும்.

    இரவு 9.40 மணிக்கு சூலூர்பேட்டையில் இருந்து புறப்படும் ரெயில் மூர்மார்க் கெட்டுக்கு 11.45 மணிக்கு வந்து சேரும்.

    கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 47 சேவைகள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளன. புதிய அட்டவணைப்படி மொத்தம் 620 மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. முன்பு இருந்ததை விட சேவை சற்று முன்னதாக தொடங்கப்பட்டுள்ளது. கடைசி சேவை நேரம் நீடிக்கப்பட்டுள்ளது.

    • சொந்த ஊர்களுக்கு செல்ல பாலக்காடு - சென்னை ரயிலை பயன்படுத்துகின்றனர்.
    • ெரயிலில் அமர இடமில்லாமல், நீண்ட தூரம் நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டியதுள்ளது.

    உடுமலை:

    தமிழகத்தில் 31 ெரயில்கள் கூடுதலாக ஒரு ெரயில்வே நிலையத்தில் நின்று செல்லும் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, சேலம் ெரயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் சென்னை- கோவை (12673) சேரன் எக்ஸ்பிரஸ் வரும், 19ந் தேதி முதல் காட்பாடி ெரயில் நிலையத்தில் இரண்டு நிமிடம் நிறுத்தப்படும்.

    பாலக்காடு- சென்னை (22652) ெரயிலானது வரும், 18ந் தேதி முதல் குடியாத்தம் ரெயில் நிலையத்திலும், சேலம்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (22154) ெரயில் வரும், 18ந் தேதி முதல் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்திலும் 2 நிமிடம் நின்று செல்லும் என அறிவித்துள்ளது.

    இந்தநிலையில் பாலக்காடு - சென்னை எக்ஸ்பிரஸ் ெரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை ரெயில் நிலையம் உள்ளது. தற்போது கோவை - மதுரை, பாலக்காடு - சென்னை, பாலக்காடு - திருச்செந்தூர், திருவனந்தபுரம் - மதுரை, மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ஆகிய ெரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து, ஏராளமானோர் உடுமலை வழியாக சென்னை உட்பட பல்வேறு நகரங்களுக்கு ெரயில்களில் பயணம் செய்கின்றனர். மேலும் இங்கு தொழிற்சாலை, கம்பெனிகளில் பணிபுரியும் வட மாநிலத்தினரும், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல பாலக்காடு - சென்னை ரயிலை பயன்படுத்துகின்றனர்.

    ஆனால், அந்த ெரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகள் குறைந்த அளவே உள்ளதால், அதில் பயணிகள் முண்டியடித்துக்கொண்டு ஏறுகின்றனர். இதில் குழந்தைகள், முதியோர் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

    இதனால், அவர்கள் ெரயிலில் அமர இடமில்லாமல், நீண்ட தூரம் நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டியதுள்ளது. எனவே, சென்னை ெரயிலில், பயணியரின் சிரமத்தை போக்கும் வகையில், கூடுதல் பெட்டிகள் இணைக்க, தெற்கு ெரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 

    ×