என் மலர்
நீங்கள் தேடியது "Victory"
- 19 வயதுடையவருக்கான சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம்.
- 17 வயது பிரிவு ஆண்கள் கபடி போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாமிடம்.
பேராவூரணி:
பேராவூரணி அரசு மேல்நிலைப்பள்ளி, 12 ஆம் வகுப்பு மாணவர் இன்பன் கார்த்தி, பாபநாசத்தில் கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற, 19 வயதுடையவருக்கான சைக்கிள் பந்தயப் போட்டியில் கலந்து கொண்டு, மாவட்ட அளவில் முதலிடத்தை பெற்றார்.
இதன் மூலம் இவர் மாநில அளவிலான போட்டிக்கு பங்கு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல் இப்பள்ளியில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள், 17 வயது பிரிவு ஆண்கள் கபடிப் போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை, பள்ளித் தலைமை ஆசிரியர் முதல்வன், உடற்கல்வி ஆசிரியர்கள் திருநாவுக்கரசு, சோலை, முத்துராமலிங்கம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- மனோரா சுற்றுலாத்தலம் 2-ம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட 300 ஆண்டுகளை கடந்த பொக்கிஷம்.
- மாவீரன் நெப்போலியன் ஆங்கிலேய படையினரிடம் தோல்வி அடைந்தார்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி, மனோரா சுற்றுலாத்தலத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் உலக மரபு வாரவிழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தஞ்சை தொல்லியல் துறை அலுவலர் தங்கதுரை தலைமை தாங்கி பேசியதாவது:-
தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் நவம்பர் 19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை உலக மரபு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி மரபுச் சின்னங்களை கட்டணம் இன்றி பொதுமக்கள், மாணவர்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
மேலும், மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
மனோரா சுற்றுலாத்தலம் 2-ம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட 300 ஆண்டுகளை கடந்த பொக்கிஷம். வாட்டலூர் என்ற இடத்தில் நடைபெற்ற போரில், மாவீரன் நெப்போலியன் ஆங்கிலேயப் படையினரிடம் தோல்வி அடைந்தார்.
நெப்போலியன் தோல்வியை வெளியுலகுக்கு தெரிவிக்கவும், ஆங்கிலேயரின் வெற்றியை கொண்டாடியும், 2-ம் சரபோஜி மன்னரால் உருவாக்கப்பட்டது தான் இந்த மனோரா என்னும் நினைவுச்சின்னம். மாணவர்கள் நினைவுச் சின்னங்களை பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்வில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சத்தியநாதன், சாரண ஆசிரியர் முத்துச்சாமி, காரைக்குடி பட்டாலியன் ஹவில்தார் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம், சாரண இயக்க மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் மனோராவில் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.
- 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.
- வெற்றி பெற்ற 60 மாணவர்கள் மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்பர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்று வருகிறது.
சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போட்டியில் 36 பள்ளிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
14, 17, 19 ஆகிய வயதுக்கு உட்பட்டோர் என 3 பிரிவுகளின் கீழ் டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்று வருகிறது. பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ராஜ்கமல் தலைமையில் நடைபெறும் போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் காந்திமதி தொடங்கி வைத்தார்.
மேலும் மாவட்ட அளவில் நடைபெறும் இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படுவதுடன். போட்டியில் வெற்றி பெற்று 60 மாணவ-மாணவிகள், மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றனர்.
- முதலிடம் பிடித்த மூன்று மாணவர்களுக்கு நினைவு பரிசுகள்.
- பள்ளி பருவத்தில் மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மதுவிலக்கு காவல்துறை சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் மீனாட்சி சுந்தரம், அலோசியஸ், தலைமை காவலர்கள் சீனிவாசன், ரஞ்சனி பிரியா, செந்தமிழ்ச்செல்வி, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியை வெற்றி செல்வி அனைவரையும் வரவேற்றார். முதலிடம் பிடித்த மூன்று மாணவர்களுக்கு நினைவு பரிசுகளும் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் நோட்டுகளும் வழங்கி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரூபாவதி பேசுகையில் பள்ளி பருவத்தில் மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் போதை பழக்கத்திற்கு அடிமையாக கூடாது என்றார்.
முடிவில் ஆசிரியர் இன்பாலன் நன்றி கூறினார்.
- வாழ்க்கையில் மாணவிகள் சாதித்து வெற்றி பெறுவது எப்படி?
- பள்ளி- கல்லூரி விடுதி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம்- நாகை சாலையில் உள்ள அரசு கல்லூரி மாணவிகள் விடுதியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை இணைந்து மாணவ- மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர் தலைமை தாங்கினார்.
நாகை மாவட்ட காப்பாளர் ஆசிரியர் சங்க தலைவர் வைரவமூர்த்தி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் கலந்து கொண்டு வாழ்க்கையில் மாணவிகள் சாதித்து வெற்றி பெறுவது எப்படி என்பது குறித்து பேசினார்.
முன்னதாக தோப்புத்துறை பள்ளி மாணவ விடுதி காப்பாளர் விஸ்வலிங்கம் அனைவரையும் வரவேற்றார்.
இதில் திருப்பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் துணைக்கண்ணன், நல்லாசிரியர்கள் வீரப்பன், செங்குட்டுவன் மற்றும் திருத்துறைப்பூண்டி அலெக்சாண்டர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
வேதாரண்யம் அரசு கல்லூரி மாணவிகள் விடுதி காப்பாளார் கலைவாணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.முடிவில் நாகப்பட்டினம் பாலிடெக்னிக் விடுதி காப்பாளர் அகிலன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் பள்ளி- கல்லூரி விடுதி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- வடலூர் எஸ்.டி. ஈடன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
- தேர்வில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளை பள்ளியின் முதல்வர் சுகிர்தாதாமஸ், நிர்வாக இயக்குனர் தீபக்தாமஸ் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
கடலூர்:
வடலூர் எஸ்.டி. ஈடன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. வடலூரில் கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வரும் எஸ். டி. ஈடன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பொதுத் தேர்வில் 285 மாணவர்கள் தேர்வெழுதினர். இதில் தேர்வு எழுதிய 285 மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளில் 75 பேர் 500 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 550க்கு மேல் 25 பேரும், 570 மதிப்பெண்ணுக்கு மேல் 7 மாணவர்களும் பெற்றுள்ளனர். மாணவி கோபிகா 586 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், மாணவி ஈஸ்வரி 579 மதிப்பெண் பெற்று 2-ம் இடமும், மாணவி சாஜிதா 575 மதிப்பெண்ணுடன் 3-ம் இடமும் பெற்றுள்ளனர். தேர்வில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளை பள்ளியின் முதல்வர் சுகிர்தாதாமஸ், நிர்வாக இயக்குனர் தீபக்தாமஸ் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.பிளஸ்-2 பொதுத் தேர்வில் 285 மாணவர்கள் தேர்வெழுதினர். இதில் தேர்வு எழுதிய 285 மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளில் 75 பேர் 500 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 550க்கு மேல் 25 பேரும், 570 மதிப்பெண்ணுக்கு மேல் 7 மாணவர்களும் பெற்றுள்ளனர். மாணவி கோபிகா 586 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், மாணவி ஈஸ்வரி 579 மதிப்பெண் பெற்று 2-ம் இடமும், மாணவி சாஜிதா 575 மதிப்பெண்ணுடன் 3-ம் இடமும் பெற்றுள்ளனர். தேர்வில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளை பள்ளியின் முதல்வர் சுகிர்தாதாமஸ், நிர்வாக இயக்குனர் தீபக்தாமஸ் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெற தி.மு.க.வினர் பாடுபட வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
- கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
காரியாபட்டி
விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மல்லாங்கிணறில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்றது.
அப்போது அவர் பேசிய தாவது:-
விருதுநகர் வடக்கு மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி பாக முக வர்கள் கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ராமநாத புரத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனை வரும் கலந்து கொள்ள வேண்டும்.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் அயராது பாடுபட வேண்டும். முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை அனைத்து தி.மு.க. சார்பு அணிகளும் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசி னார்.
இந்த கூட்டத்தில் விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், மாநில வர்த்தக அணி துணைச்செயலாளர் வனராஜா, மாவட்ட அவைத்தலைவர் தங்கராஜ், மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, ஒன்றிய செய லாளர்கள் காரியாபட்டி செல்லம், கண்ணன், நரிக்குடி போஸ் தேவர், கண்ணன், திருச்சுழி சந்தன பாண்டியன், காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில், மாவட்ட கவுன்சி லர்கள் தங்க தமிழ்வாணன், கமலி பாரதி, பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, சந்திரன், முன்னாள் நகர செயலாளர் தங்கபாண்டி யன், மாவட்ட பிரதிநிதி பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- சந்திரயான் வெற்றிகரமாக நிலவில் இறங்கியதை முன்னிட்டு இந்தியா வடிவில் 108 நெய் தீபம் ஏற்றி இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- ரியாக ஏழு மணிக்கு பொதுச் செயலா ளர் குமரவேல் தீபங்களை ஏற்றி வைத்தார்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் கைலாசநாதர் கோவிலில் சந்திரயான் வெற்றிகரமாக நிலவில் இறங்கியதை முன்னிட்டு இந்தியா வடிவில் 108 நெய் தீபம் ஏற்றி இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவிலின் சபா மண்டபத்தில் இந்தியா வடிவத்தில் விளக்கு கள் மற்றும் புஷ்பங்கள் அலங்கரிக்கப்பட்டது. சரியாக ஏழு மணிக்கு பொதுச் செயலா ளர் குமரவேல் தீபங்களை ஏற்றி வைத்தார். முதன்மைச் செயலாளர் மனோகரன் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சந்திரயான் வெற்றிக்கும் இதற்காக பாடு பட்ட விஞ்ஞானிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
பின்னர் சுகந்த குந்தலாம்பிகை மற்றும் கைலாசநாதருக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. முடிவில் ஸ்ரீநிதி நன்றி கூறினார்.
- தன்னை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி வேட்பாளர் ஜெய்க் சி.தாமசை 37ஆயிரத்து 719 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
- தொடர்ந்து 53 ஆண்டுகளுக்கு மேலாக புதுப்பள்ளி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவே இருந்து வருகிறது.
திருவனந்தபுரம்:
கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி இறந்ததையடுத்து, அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த புதுப்பள்ளி தொகுதியில் கடந்த 5-ந்தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட உம்மன்சாண்டியின் மகனான சாண்டி உம்மன் வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி வேட்பாளர் ஜெய்க் சி.தாமசை 37ஆயிரத்து 719 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
53 ஆண்டுகளாக புதுப்பள்ளி தொகுதி எம்.எல்.ஏ.வாக உம்மன்சாண்டி இருந்தார். இந்நிலையில் தற்போது நடந்த இடைத் தேர்தலில் அவரது மகன் சாண்டி உம்மன் வெற்றி பெற்றிருக்கிறார். இதன்மூலம் தொடர்ந்து 53 ஆண்டுகளுக்கு மேலாக புதுப்பள்ளி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சட்டசபை கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கியது. அப்போது புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற சாண்டி உம்மன் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார். முன்னதாக அவர் இன்று காலை சட்டசபை சபாநாயகர் ஷம்சீரை சந்தித்தார்.
- அதிபர் முகமது சோலியும், சீன ஆதரவாளராக கருதப்படும் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான முகமது மூயிசும் நேரடியாக மோதினார்கள்.
- 54.6 சதவீத ஓட்டுகள் பெற்று முகமது மூயிஸ் வெற்றி பெற்றார்.
மாலத்தீவு:
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு கூட்ட நாடான மாலத்தீவில் அதிபர் தேர்தல் நடை பெற்றது. இந்த தேர்தலில் இந்திய ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவராக அறியப்படும் அதிபர் முகமது சோலியும், சீன ஆதரவாளராக கருதப்படும் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான முகமது மூயிசும் நேரடியாக மோதினார்கள்.
கடந்த 9-ந்தேதி அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இதில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை யாரும் பெறவில்லை. அந்நாட்டை பொறுத்தவரை அதிபராக 50 சதவீதம் ஓட்டுகளை பெற வேண்டும்.
இதையடுத்து இறுதிகட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதில் மொத்தம் 85 சதவீத ஓட்டுகள் பதிவானது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் 54.6 சதவீத ஓட்டுகள் பெற்று முகமது மூயிஸ் வெற்றி பெற்றார். அதிபர் முகமது சோலி தோல்வியை தழுவினார். அவர் தான் வெளியிட்ட எக்ஸ் வலைதளத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது மூயிசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். 61 வயதான முகமது சோலி நவம்பர் மாதம் 17-ந்தேதி வரை புதிய அதிபர் பதவியேற்கும் வரை தற்காலிக அதிபராக பதவி வகிப்பார்.
சீன ஆதரவு நிலைப்பாட்டை கொண்ட முகமது மூயிஸ் மாலத்தீவு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதால் இந்தியாவுடனான உறவில் பாதிப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது.
ஏனென்றால் தேர்தல் பிரசாரத்தின் போது அவர் அதிபர் சோலி மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். தனது ஆட்சியில் இந்தியாவுக்கு அளவுக்கு அதிகமாக இடமளிப்பதாகவும், மாலத்தீவில் இந்திய ராணுவத்தினர் இருப்பது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என அவர் தெரிவித்தார்.
மேலும் தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்திய ராணுவத்தினரை மாலத்தீவில் இருந்து திருப்பி அனுப்பப் போவதாக அறிவித்தார்.
இந்த குற்றச்சாட்டை அதிபர் முகமது சோலி மறுத்தார். மாலத்தீவில் நடந்து வரும் கட்டமைப்பு பணிகளுக்காக இந்திய ராணுவம் வந்துள்ளதாகவும், இதனால் நாட்டின் இறையாண்மைக்கு எந்த பாதிப்பும் இல்லை என அவர் தெரிவித்தார்.
- ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
- நாட்டை மறு கட்டமைப்பு செய்யப்போவதாக அறிவித்தார்.
அர்ஜென்டினா நாட்டில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஜேவியர் மிலே புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தொலைக்காட்சி விவாதத்தில் நெறியாளராக பணியாற்றிய போது அரசியல்வாதிகளிடம் எழுப்பிய கடுமையான கேள்விகளால் பொதுமக்கள் மத்தியில் பிரபலமானார். இதன் மூலம் அவர் தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபராகி இருக்கிறார். இவர் பதவி ஏற்க சென்ற போது ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ஹபியர் பிலேவுக்கு வளர்ப்பு பிராணிகள் மீது அதிக பாசம் உண்டு.
பதவி ஏற்க சென்ற போது வாகனத்தை நிறுத்தி ரோட்டோரம் நின்று கொண்டிருந்த தனது ஆதரவாளர் ஒருவரின் வளர்ப்பு நாயை கொஞ்சி மகிழ்ந்தார். இதைத்தொடர்ந்து ஜேவியர் மிலே அர்ஜென்டினா நாட்டின் புதிய அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது அவர் நாட்டை மறு கட்டமைப்பு செய்யப்போவதாக அறிவித்தார்.
- இந்தியாவில் இருக்கக்கூடிய மக்கள் இந்தியா கூட்டணியை ஆதரிக்கின்றனர்.
- அகதிகள் என்ற வார்த்தையை எடுத்து விட்டு மறுவாழ்வு முகாம் என்ற பெயரை கொண்டு வந்தது தமிழ்நாடு அரசு.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே லெம்பலக்குடியில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் அவர்களுக்கென புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு புதிய குடியிருப்புகளை திறந்துவைத்தார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் இலங்கை தமிழர்களின் முகாம்கள் 106 இருக்கின்றன. அந்த முகாம்களின் உள்ள 20 ஆயிரம் குடும்பங்களுக்கும் அதில் உள்ள 60 ஆயிரம் மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அகதிகள் என்ற வார்த்தையை எடுத்து விட்டு மறுவாழ்வு முகாம் என்ற பெயரை கொண்டு வந்தது தமிழ்நாடு அரசு.
கடல் தான் நம்மை பிரித்துள்ளது.தமிழர் என்ற உறவு நம்மை எப்போதும் இணைத்துதான் உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசிடம் அனுப்பியுள்ளோம். முதல் கட்டமாக இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 200 பேரை தேர்வு செய்து இலங்கை அரசு கொடுக்கப்பட்ட குடியுரிமை மூலம் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
மீண்டும் தமிழ்நாட்டின் சார்பில் முதல் கட்டமாக வந்தவர்களுக்கு உரிமைகள் வழங்குவதற்கான குழு அமைத்து சட்டத்துறை அமைச்சர் ஆலோசனைப்படி சட்ட குழு ஒன்று அமைத்து தீர்வு காணப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைத்ததை முடிப்பவர். அவர் எடுக்கின்ற எல்லா முயற்சிகளும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற முயற்சிக்கு மக்கள் ஆதரவாக இருக்கின்றனர். அதேபோல் இந்தியாவில் இருக்கக்கூடிய மக்கள் இந்தியா கூட்டணியை ஆதரிக்கின்றனர்.
எதிர்காலத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமையை பெற்று தரவும். இலங்கை தமிழர்களில் உள்ள மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கும். வேளாண்மை கல்லூரியில் சேர்வதற்கும் அனுமதி வழங்கும்.
மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கு தான் சட்ட சிக்கல் இருக்கின்றது. அதை மிக விரைவில் மத்தியில் அரசியல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நீட் தேர்வு என்ற அரக்கனை அகற்றிவிட்டு அதில் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் விடிவுகாலம் வரும்போது நம்மோடு இருக்கின்ற இலங்கை தமிழர்களுக்கும் விடிவுகாலம் வரும். இவ்வாறு அவர் கூறினார்.