என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water tank"

    • குடிநீர் தொட்டி அமைக்க கோரிக்கை
    • சிந்தாமணி 89-வது வார்டில் சுமார் 60 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.

    மதுரை

    மதுரையில் சிந்தாமணி நீர் மேலாண்மை சங்க தலைவர் முனியாண்டி, கிராம விவசாய சங்க தலைவர் மும்மூர்த்தி மற்றும் பலர் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    சிந்தாமணி 89-வது வார்டில் சுமார் 60 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு தற்போது அம்ரூத் திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக் கப்பட உள்ளது. இதனால் எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு எந்த தொந்தரவும் கிடையாது.

    இது எங்களின் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்கும். இந்த இடத்தில் எந்த மடையும் கிடையாது. சிலர் ஆக்கிரமிப்பு செய்ய வேண்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கும், அந்த இடத்துக்கும் சம்பந்தமும் கிடையாது. இந்த இடம் முழுமையாக அரசு புறம்போக்கு நிலமாக உள்ளது.

    மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு சிந்தாமணி கிராமத்தில் அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் தேக்க தொட்டியை அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதுகுளத்தூர் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டது.
    • ஜே.சி.பி. மூலம் பழுதடைந்த மேல்நிலை தண்ணீர்தொட்டியை அகற்றும் போது தண்ணீர் தொட்டி ஜே.சி.பி. மேல் விழுந்தது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா பொந்தம்புலி கிராமத்திற்கு 75 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் கிராம மக்கள் தவித்து வந்தனர். சித்திரங்குடி-பொந்தம் புலி கிராமத்திற்கு இடையில் 150 மீட்டர் தூரம் மட்டுமே அரசு புறம்போக்கு நிலம் தனிநபர்களால் ஆக்கிரமிப்பில் இருந்தது. இதனை அகற்ற முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் சமரச கூட்டம் நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. பரமக்குடி சப்-கலெக்டர்அப்தாப் ரசூல் தலைமையில் தாசில்தார் சிவகுமார் முன்னிலையில் டி.எஸ்.பி. சின்ன கன்னு தலைமையில் போலீஸ் படை குவிக்கப்பட்டது. கடலாடி ஊராட்சி ஒன்றியம் ஏனாதி ஊராட்சி பொந்தம்புலி கிராமத்திற்கு முதுகுளத்தூர்-கமுதி நெடுஞ்சாலையில் இருந்து சித்திரங்குடி கிராமத்தில் 150 மீட்டர் தூரம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஜே.சி.பி. மூலம் பழுதடைந்த மேல்நிலை தண்ணீர்தொட்டியை அகற்றும் போது தண்ணீர் தொட்டி ஜே.சி.பி. மேல் விழுந்தது. இதில் அதன் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 'புறம்போக்கில் இருந்த புளிய மரத்தை ஏலம்விட சப்-கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஏனாதி கிராம நிர்வாக அலுவலர் அன்பரசன், சித்திரங்குடி வி.ஏ.ஓ. பழனி உள்பட வருவாய்த்துறையினர் இருந்தனர்.

    • ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சி மன்ற புதிய கட்டிடத்திற்கான பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கியது.
    • பூமி பூஜை விழாவுக்கு பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம், நெல்கட்டும் செவல் ஊராட்சியில், மாவீரன் பூலித்தேவன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம், ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சி மன்ற புதிய கட்டிடம் மற்றும் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றிற்கு பூமி பூஜை செய்து பணி ஆரம்பிக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு வாசுதே வநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டி யன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் சந்திர மோகன், ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டியராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் மகேந்திரன், முனியராஜ், கிளைச் செயலாளர் ஸ்டாலின், ஒன்றிய அவைத்தலைவர் வெள்ளையப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்ப சாமி, ஓவர்சீஸ் முத்துமாரி, அரசு ஒப்பந்த தாரர்கள் கார்த்தி, மாரித்துரை, பூசைத்துரை, உள்ளார் மணி கண்டன், விக்கி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • காப்புக்காடுகளை தவிர மற்ற வனப்பகுதியில் வனத்துறை யினர் யூகலிப்பிடஸ் மரக்கன்று களை நட்டு பரா மரித்து வருகின்றனர்.
    • வனவிலங்குகள் நெல், கரும்பு, மணிலா, உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துகின்றன.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் பகுதியில் சிறுநாகலூர், கொட்டையூர், குடியநல்லூர், தியாகை, நின்னையூர், கூத்தக்குடி, வரஞ்சரம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை ஒட்டி வனப்பகுதி அமைந்துள்ளன. இந்த பகுதியில் ஆழ்வார் மலை காப்புக்காடு வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் கூத்தக்குடி காப்புக்காடு ஆகியவை சுமார் 7 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. காப்புக்காடுகளை தவிர மற்ற வனப்பகுதியில் வனத்துறை யினர் யூகலிப்பிடஸ் மரக்கன்று களை நட்டு பரா மரித்து வருகின்றனர். இந்த பகுதி களில் குரங்குகள், மான்கள், காட்டுப்பன்றிகள் , மயில்கள், மலை பாம்புகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இந்த வன விலங்குகளுக்கு காட்டுப்பகு தியில் தேவையான உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காததால் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்கு வருகின்றன. இவ்வாறு வரும் வனவிலங்குகள் நெல், கரும்பு, மணிலா, உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துகின்றன. மேலும் காட்டுப்பன்றி, குரங்கு போன்ற விலங்குகள் மீண்டும் காட்டுப் பகுதிக்குச் செல்லாமல் வயல் பகுதிகளிலேயே தங்கியும் தொடர்ந்து பயிர்களை முற்றிலும் சேதப்படுத்துகிறது.

    சிறுநாகலூர், குடியநல்லூர், தியாகை, கூத்தக்குடி ஆகிய சாலைகளில் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது மான், காட்டுப்பன்றி, முயல் உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது தண்ணீர் தேடி திடீரென சாலையை கடந்து செல்கின்றன. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் வனவிலங்குகளின் மீது எதிர்பாராதவிதமாக மோதும் போது விபத்து ஏற்படுகிறது. இதேபோல் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர் வனவிலங்குகளின் மீது மோதுவதால் வனவிலங்குகள் பலத்த காயம் அடைகின்றன. இவ்வாறு அவ்வப்போது இந்த பகுதிகளில் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே விவசாயிகளின் பயிர் பாதுகாப்பு, ஏற்படும் விபத்து ஆகியவற்றை கவனத்தில் கொண்டு வனவிலங்குகள் வனப்பகுதியிலேயே வசிக்கும் விதமாக வனப்பகுதியின் நடுவே இயற்கை வனப்பகுதி அமைத்து அதில் வனவிலங்குகளுக்கு தேவையான பழ வகை மரங்களை நட்டு முறையாக பராமரிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வனப்பகுதியில் வன விலங்குகளின் எண்ணிக்கையை கணக்கீடு செய்யவேண்டும். அவற்றின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்தந்த பகுதியில் குடிநீர் தொட்டி அமைத்து தர வேண்டும். மேலும் இந்த தொட்டிகளில் தொடர்ந்து தண்ணீர் நிரப்பினால் மட்டுமே விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கமுடியும் என இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    • பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் குடிநீர் தொட்டி அமைத்து இதுவரை குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை கூறியும் பஸ் நிலையத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் உள்ள திரு.வி.க பஸ் நிலையத்தில் இருந்து ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, போரூர், கிண்டி, சைதாப்பேட்டை, கோயம்பேடு, அரக்கோணம், திருத்தணி, காஞ்சிபுரம், தாம்பரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஆந்திர மாநிலம், சத்தியவேடு, திருப்பதி, காளகஸ்திரி, நாகலாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதனை திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த பயணிகளும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பயணிகளும் பயன்படுத்தி வருகின்றனர். தினசரி பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் பஸ் நிலையப்பகுதி எப்போதும் பயணிகள் கூட்டமாக இருக்கும்.

    ஆனால் பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் குடிநீர் தொட்டி அமைத்து இதுவரை குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. தற்போது கடந்த ஒரு மாதமாக வாட்டி வதைக்கும் கோடை வெயிலால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பஸ்டிரைவர், கண்டக்டர்கள் குடிநீர் வசதியின்றி கடும் அவதிக்கு ள்ளாகி வருகின்றனர்.

    பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டு உள்ள குடிநீர் தொட்டி வெறும்காட்சி பொருளாகவே காட்சி அளிக்கிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை கூறியும் பஸ் நிலையத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று மதியம் சுட்டெரிக்கும் வெயிலால் பஸ் நிலையத்தில் இருந்த முதியவர் ஒருவரும், பெண் ஒருவரும் மயங்கி விழுந்தனர். அவர்கள் குடிநீர் இல்லாமல் மயங்கி விழுந்து இருப்பது தெரிந்தது. அவர்களுக்கு மற்ற பயணிகள் முதல் உதவி அளித்து அருகில் உள்ள கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கி கொடுத்து குடிக்க வைத்தனர்.

    இதுகுறித்து பயணிகள் கூறும்போது, திருவள்ளூர் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து பல ஆயிரக்கணக்கான பயணிகள் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, ஆந்திர மாநிலம் உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும் பெரும்பாலானோர் இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    ஆனால் இங்கு இதுவரை குடிநீர் வசதி செய்து தரப்படாததால், அருகில் உள்ள கடைகளுக்கு சென்று தண்ணீர் வாங்கி குடிக்கும் நிலை உள்ளது. கிராமத்தில் இருந்து வரும் கூலி தொழிலாளிகள் மற்றும் வசதி இல்லாதவர்கள் தாகத்துடன் தவிக்கின்றனர்.

    குறிப்பாக முதியோர், பெண்கள், சிறுவர்கள் சிலர் வெயிலின் தாகத்தால் மயங்கி விடுகின்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. எனவே, பயணிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • விருதுநகர் அருகே உள்ள அரசு பள்ளி தண்ணீர் தொட்டியில் சாரைப்பாம்பு கிடந்தது.
    • அந்த பாம்பு அருகில் உள்ள வனப்பகுதியில் விடப்பட்டது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்குளம் கிராமத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி திறக்கப்படு வதை முன்னிட்டு துப்புரவு பணியாளர்களை கொண்டு பள்ளி முழுவதும் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தது.

    இந்த நிலையில் பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியை துப்புரவு பணி யாளர்கள் சுத்தம் செய்த போது, குடிநீர் தொட்டிக்குள் சுமார் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு கிடந்தது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், அதுகுறித்து திருச்சுழி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் முனீஸ்வரன் தலைமை யிலான வீரர்கள் ஆனைக் குளம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வந்து, தண்ணீர் தொட்டிக்குள் கிடந்த சாரை பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு அருகில் உள்ள வனப்பகுதியில் விடப்பட்டது.

    • ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு எம்.ஜி.எம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • படுகாயம் அடைந்த ராமபிரம்மம் குடும்பத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், வாரங்கல் மாவட்டம், கோர்ரெகுண்டாவை சேர்ந்தவர் ராமபிரம்மம். இவரது மனைவி ரமாதேவி. மகன் ஹரிஷ் குமார் ஆகியோர் மச்சிலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் மூலம் விஜயவாடாவுக்கு செல்வதற்காக வாரங்கல் ரெயில் நிலையத்திற்கு வந்து ரெயிலுக்காக காத்திருந்தனர்.

    இதேபோல் ஏராளமான பயணிகளும் ரெயிலுக்காக அங்குள்ள பிளாட்பாரத்தில் நின்றனர்.

    இந்நிலையில் ரெயில்வே பிளாட்பாரத்திற்கு மேலே இருந்த 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திடீரென உடைந்து விழுந்தது.

    அதன் அருகில் இருந்த ராமபிரம்மம், அவரது மனைவி ரமாதேவி, மகன் ஹரிஷ் குமார் ஆகியோர் மீது விழுந்து படுகாயம் அடைந்தனர்.

    மேலும் மேற்கு வங்கத்தை சேர்ந்த 5 பயணிகளும் லேசான காயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு எம்.ஜி.எம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேற்கு வங்க பயணிகள் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் ரெயிலில் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    படுகாயம் அடைந்த ராமபிரம்மம் குடும்பத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தெற்கு மத்திய ரெயில்வேயின் செகந்தராபாத் கோட்ட மேலாளர் அபய் குமார் குப்தா சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

    • தொட்டியின் பில்லர்கள் அனைத்தும் பணியாளர்களை கொண்டு சுத்தியலால் உடைக்கப்பட்டு பின்பு ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு இடித்து அகற்றப்பட்டது
    • திப்பணம்பட்டியில் பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்றும் பணி நடைபெற்றதனால் பாவூர்சத்திரம்- கடையம் செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டிருந்தது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியில் காமராஜர் நினைவு நடுநிலைப்பள்ளி மற்றும் ஊர் மைதானத்தின் அருகே அமைக்கப்பட்டு இருந்த ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் தூண்கள் அனைத்தும் வலுவிழந்த நிலையில் காணப்பட்டது.

    37 ஆண்டுகள் பழமையானது

    சுமார் 37 ஆண்டுகள் பழமை யான இக்குடிநீர் தொட்டியின் கான்கிரீட் பில்லர்கள் அனைத்தும் சேதமடைந்து காணப்பட்டதால் அப்பகுதி மக்கள் இதனை அப்புறப்படுத்தி புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என திப்பனம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஐவராஜா மூலம் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த னர். மேலும் ஊராட்சிமன்றம் மூலமும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

    இந்நிலையில் அதனை இடிக்கும் பணி தொடங்கியது. அதனை முன்னிட்டு அருகில் இருந்த பள்ளி மாணவ, மாணவி கள் அருகில் இருந்த மற்றொரு கட்டிடத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அந்த பகுதியில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் வண்ணம் பாவூர்சத்திரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    புதிதாக கட்டப்படுகிறது

    தொட்டியின் பில்லர்கள் அனைத்தும் பணியாளர்களைக் கொண்டு சுத்தியலால் உடைக்கப்பட்டு பின்பு ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு இடித்து அகற்றப்பட்டது. கூடுதலாக பாதுகாப்பு கருதி அருகில் இருந்த டிரா ன்ஸ்பார்மரில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தது.

    குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அகற்றப்பட்டதும்,அதே இடத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட உள்ளது எனவும் சம்பந்தப்பட்ட ஊராட்சிமன்றம் சார்பில் தெரி விக்கப்பட்டது .

    பாவூர்சத்திரம் அருகே திப்பனம்பட்டியில் பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்றும் பணி நடைபெற்றதனால் பாவூர்சத்திரம்- கடையம் செல்லும் சாலையில் போக்கு வரத்து மாற்றி அமைக்கப்பட்டி ருந்தது.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது

    செய்யாறு:

    வெம்பாக்கம் ஒன்றியம், தென் கழனி கிராமத்தில் ரூ.45 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய கிணறு, மேல்நிலை நீர் தேக்க தொட்டி, சிமெண்ட் சாலை ஆகியவற்றை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வெம்பாக்கம் சேர்மன் மாமண்டூர் ராஜி தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், அனக்காவூர் சேர்மன் திலகவதி ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் ஒ. ஜோதி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுமுடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் தினகரன், ஜெ.சி.கே.சீனிவாசன், ஞானவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கு முன்னதாக பெருங்கட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சியில் ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி விளையாட்டு போட்டி தொடங்கி வைத்தார்.

    பின்னர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

    • நகராட்சி மன்ற துணை தலைவர் பா.மு.வாசிம்ராஜா பார்வையிட்டார்
    • குடிநீர்தேக்கதொட்டி தூர்வாரப்பட்டு, பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அரவேணு,

    குன்னூர் நகராட்சி வண்ணராப்பேட்டை ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள குடிநீர்தேக்கதொட்டி தூர்வாரப்பட்டு, அங்கு பராமரிப்பு பணிகள் நடைபெற்றுவருகின்றன.

    இதனை மாநில தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளரும், நகராட்சி மன்ற துணை தலைவருமான பா.மு.வாசிம்ராஜா பார்வையிட்டார். அப்போது அவருடன்அப்பகுதி நகரமன்ற உறுப்பினர் சாந்தா சந்திரன், மாவட்ட பிரதிநிதி மணிகண்டன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் சிக்கந்தர் மற்றும் நந்தகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • நாளும் ஒரு புதுத்தகவல்கள் வந்தபோதிலும் அதில் ஈடுபட்ட கயவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை
    • வழக்குப்பதிவு செய்த போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நேரடியாக பள்ளிக்கு சென்று உடனடியாக விசாரணையை தொடங்கினர்.

    விருதுநகர்:

    அறிவியல், விஞ்ஞானம், விண்வெளி, நாகரீக வளர்ச்சி என்று நாடு முன்னேற்ற பாதையில் பயணித்தாலும், அவற்றையெல்லாம் படுபாதாளத்தில் தள்ளும் வகையிலான ஈனச்செயல்கள் ஆங்காங்கே அரங்கேறி வருவதுதான் வேதனைக்குரிய செயல்.

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் அருகேயுள்ள இறையூர் கிராமத்தில் பொது மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி யாருமே நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு மனித கழிவுகளை கலந்து முன்னேற்றம் அடையாத சமுதாயம் என்பது முத்திரை குத்தப்பட்டது.

    உள்ளூர் போலீசார், சி.பி.சி.ஐ.டி., அறிவியல் பூர்வமான விசாரணை என்று நாளும் ஒரு புதுத்தகவல்கள் வந்தபோதிலும் அதில் ஈடுபட்ட கயவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. மீண்டும் ஒருமுறை அதனை நினைத்து பார்க்கக்கூடாது என்றிருந்த நிலையில் அதே சாயலில் விருதுநகர் அருகே மற்றொரு செயல் நடந்துள்ளது.

    விருதுநகர் அருகேயுள்ள சின்னமூப்பம் பட்டி கிராமத்தில் 200 பேர் கல்வி பயிலும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. முழுக்க, முழுக்க அந்த ஊரைச்சேர்ந்த மாணவ, மாணவிகளே இங்கு படிக்கிறார்கள்.

    முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தின்கீழ் இந்த பள்ளி மாணவ, மாணவிகள் பெருமளவில் பயனடைந்து வருகிறார்கள். அவர்களின் குடிநீர் தேவைக்காக ஏற்கனவே இருந்த வசதியுடன் கூடுதலாக புதிய குடிநீர் தொட்டி ஒன்று தரைதளத்தில் அமைக்கப்பட்டது.

    எந்தவித பாகுபாடும் இன்றி இதுவரை வயிறாற உணவுடன், தரமாமன கல்வியும் போதிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென பூதாகரமாக புகுந்த கயவர்கள் சிலர் பிரச்சினையை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளனர்.

    வழக்கமான வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2-ந்தேதி பள்ளிக்கு வந்த மாணவர்கள் அந்த தொட்டியில் இருந்து குடித்த நீரில் துர்நாற்றம் வீசியது. அதனை திறந்து பார்த்தபோது சாணம் கலந்திருப்பது தெரியவந்தது. சுத்தம் செய்பவர்கள் பெரிதுபடுத்தாமல் கழுவி தண்ணீர் ஏற்றினர். 3-ந்தேதியும் இதே செயல் நடந்தது.

    கிருஷ்ணஜெயந்தி விடுமுறைக்கு மறுநாளான நேற்று பள்ளிக்கு வந்த குழந்தைகள் தண்ணீரை பருகியபோது மீண்டும் அதில் சாணம் அதிக அளவில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் குழந்தைகளுக்கு காலை உணவு தயாரிக்க வந்த மகளிர் சுய உதவிக்குழுவினரும் இதனை உறுதி செய்தனர்.

    இதுபற்றி மாணவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா, விருதுநகர் மேற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நேரடியாக பள்ளிக்கு சென்று உடனடியாக விசாரணையை தொடங்கினர்.

    அப்போது அங்கு திரண்டு ஊர் பொதுமக்கள் கூறுகையில், இந்த பள்ளியில் உள்ளூர் மாணவர்களே படித்து வருகிறார்கள். எனவே அவர்கள் இதுபோன்ற அசுத்தமான செயலை செய்திருக்கமாட்டார்கள். பக்கத்து ஊர்களை சேர்ந்த இளைஞர்கள் சிலர் இங்கு விளையாட வருவார்கள் என்று தெரிவித்தனர். அவ்வாறு வரும் மாணவர்கள் யார், அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டார்களா? என்று விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் கூறுகையில், விடுமுறை நாளில் பள்ளிக்கு விளையாட வந்தவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் உரிய விசாரணை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, துணை போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட வருவாய் அதிகாரி ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

    சாதிய வன்கொடுமையை தடுக்க தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இதுபோன்ற செயல்கள் மாணவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் அமைந்துள்ளதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • கிரைண்டர் கல் தயாரிக்கும் ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்
    • சுப்பிரமணி மனைவியை பிரிந்து குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

    ஊத்துக்குளி,செப்.17-

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள பெட்டிக்கடை அண்ணா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 28). இவர் அங்குள்ள கிரைண்டர் கல் தயாரிக்கும் ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மகன் சித்தேஸ்வரன் (வயது 3). சுப்பிரமணி மனைவியை பிரிந்து குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று வேலை செய்யும் இடத்திற்கு குழந்தையை அழைத்து வந்துள்ளார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அருகில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து விட்டதாக தெரிகிறது. சிறிது நேரம் கழித்து குழந்தையை தேடி பார்த்த சுப்பிரமணி, அங்குள்ள தண்ணீர் தொட்டிக்குள் சித்தேஸ்வரன் பேச்சு, மூச்சு இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக குழந்தையை தூக்கிக்கொண்டு ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் சித்தேஸ்வரன் இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×