என் மலர்
நீங்கள் தேடியது "woman"
- அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் விருதாம்பாள் உயிரிழந்துள்ளார்.
- சம்பவம் தொடர்பாக எல்லப்பன், கோபி கிருஷ்ணன், சுப்ரமணி, விவேக் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலையில் 3 சென்ட் இடத்திற்காக விருதம்பாள் என்கிற மூதாட்டி எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
படுகாயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் விருதாம்பாள் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக எல்லப்பன், கோபி கிருஷ்ணன், சுப்ரமணி, விவேக் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூதாட்டி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த எல்லப்பன் என்பவர் மற்றும் தரப்பினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பள்ளிபாளையம் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார்.
- அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கலா பரிதாபமாக இறந்தார்.
பள்ளிப்பாளையம்:
பள்ளிபாளையம் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் கலா (வயது 57). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு சத்யா நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் குடிபோதையில் வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் திடீரென சாலையில் நடந்து சென்ற கலா மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த கலாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கலா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
- காரில் இருந்த 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
- கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவினாசி :
ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் அவினாசியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மனைவி, தாய் மற்றும் குழந்தையுடன் வந்தார். இரவு தங்கிவிட்டு இன்று காலை காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டார்.
சேவூர் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது சாலிக்காட்டுப்பாளையம் அருகே சக்திநகரில் ஒரு பெண் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் அந்த பெண்ணின் மீது மோதி அவரை இழுத்துக் கொண்டே போய் ரோட்டில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் காரில் இருந்த 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். காரில் சிக்கிய பெண்ணும் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயம் அடைந்த 4 பேரும் கோபி ச்செட்டி ப்பாளையத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சேவூர் போலீசார் மேற்கொண்ட விசா ரணையில் வாக்கிங் சென்று விபத்தில் சிக்கி பலியான பெண் சேவூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி சாந்தாமணி என்பது தெரிய வந்துள்ளது. விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஏற்காட்டில் ஒரு பெண்ணுக்கு ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது.
- ஆம்புலன்சை சாலையின் ஓரமாக நிறுத்திய ஊழியர்கள், பெண்ணுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 25). கூலி தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (20). நிறைமாத கர்ப்பிணியான நந்தினிக்கு இன்று அதிகாலை 1 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஏற்காடு அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் பணியில் இருந்த சிகாமணி மற்றும் ஓட்டுநர் ஆசைத்தம்பி ஆகியோர் வந்து நந்தினியை வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
ஆனால் ஆத்து பாலம் அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது நந்தினிக்கு பிரசவ வலி அதிகமானது. அதை தொடர்ந்து ஆம்புலன்சை சாலையின் ஓரமாக நிறுத்திய ஊழியர்கள், நந்தினிக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர்.
இதையடுத்து 1.30 மணி அளவில் நந்தினிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக நந்தினி, குழந்தையை சேலம் அரசு மருத்துவமனை கொண்டு வந்து சேர்த்தனர். குறித்த நேரத்தில் பிரசவம் பார்த்து தாயையும், சேயையும் காப்பாற்றிய ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர் சிகாமணி மற்றும் ஓட்டுநர் ஆசைத்தம்பி ஆகியோருக்கு நந்தினியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
- தோட்டத்திற்கு சென்ற பெண்ணை அடித்துக் கொலை செய்த மற்றொரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
- திருச்சி சிறையில் அடைத்தனர்
கரூர்
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள பில்லூர் ஊராட்சி பெரியவீட்டுக்கா ரன்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி வசந்தா (வயது 39). இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் முத்துசாமி கொத்தனார் வேலைக்கும், வசந்தா தங்களுக்கு சொந்தமான தோட்டத்துக்கு வேலைக்கும், இவர்களது மகள் பள்ளிக்கும் சென்று விட்டார்.
இந்தநிலையில் மாலை வெகுநேரம் ஆகியும் வசந்தா வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வசந்தாவின் கணவர் முத்துசாமி மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் வசந்தாவின் செருப்பு மட்டும் தோட்டத்தின் அருகே உள்ள ஒரு கிணற்றின் மேல் பகுதியில் கிடந்துள்ளது. இதைக்கண்ட உறவினர்கள் தோகைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி வசந்தாவை பிணமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வசந்தாவின் கணவர் முத்துசாமி கொடுத்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் சரோஜாவை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சரோஜா முன்விேராதம் காரணமாக வசந்தாவை களைக்கொத்தி மரக்கட்டையால் அடித்து கொலை செய்து, கிணற்றில் வீசி சென்றதை ஒத்துக் கொண்டார். இதையடுத்து தோகைமலை போலீசார் கொலை வழக்குப்பதிந்து, சரோஜாவை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தோகை மலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
- சுரண்டை அருகே உள்ள திருச்சிற்றம்பலத்தை சேர்ந்தவர் பவித்ரா கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு சென்று வந்தார்.
- நேற்று வீட்டில் இருந்த அவர் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
சாம்பவர்வடகரை:
சுரண்டை அருகே உள்ள திருச்சிற்றம்பலத்தை சேர்ந்தவர் வெள்ளப்பாண்டி. இவரது மகள் பவித்ரா (வயது20). இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு சென்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உறவினர் வீடான சாம்பவர்வடகரைக்கு சென்றார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த அவர் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பவித்ரா பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக சாம்பவர் வடகரை சப்-இன்ஸ்பெக்டர் காசிவிஸ்வநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பவித்ரா எதற்காக தற்கொலை செய்தார் ? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண் குழந்தைகள் விருதிற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
- கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய பெண் குழந்தைகள் விருதிற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தை பிறப்பிடமாக கொண்ட 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய வீரதீர செயல் மற்றும் சாதனைகள் புரிந்த தகுதிகளுடைய பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசால் 2022-ம் ஆண்டிற்கு வழங்கப்படும் தேசிய பெண் குழந்தைகள் விருது வழங்கப்படவுள்ளது.
பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேரு எதாவது வகையில் சிறப்பான தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள் மூட நம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் என சேவைகளை செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதியுடையவர்கள் உரிய விபரங்களுடன் வரும் 30ம்தேதி மாலை 5.30 மணிக்குள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
- இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி வழங்கப்பட்டது
- புதுவேட்டக்குடி ஊராட்சியில் விபத்து
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் புதுவேட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மனைவி சகுந்தலா (வயது 38). இவர்கள் இருவரும் கடந்த ஜூன் மாதம் 10-ந்தேதி அரியலூரில் இருந்து பொய்யாத நல்லூர் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி சகுந்தலா சாலையில் விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த சகுந்தலாவை அரியலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் ேசர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சகுந்தலா கடந்த ஜூலை 1-ந்தேதி இறந்தார். சகுந்தலா துங்கபுரம் ஐ.ஓ.பி. வங்கியில் பாரதப் பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து இருந்தார்.
இதையடுத்து துங்கபுரம் ஐ.ஓ.பி. கிளை மேலாளர் தினேஷ்குமார் ரூ.2 லட்சத்திற்கான விபத்து காப்பீட்டு தொகையை சகுந்தலாவின் கணவர் பாலசுப்பிரமணியனிடம் வழங்கினார். அப்போது புது வேட்டக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் செல்வி தர்மலிங்கம் உடன் இருந்தார்.
- 2 குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலீசார் மீட்டனர்.
- குடும்ப பிரச்சினையில் விபரீத முடிவு
அரியலூர் :
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள நாச்சியார்பேட்டை கீழத்தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 39). தச்சு தொழிலாளியான இவருக்கும், சாத்தமங்கலம் கீழத்தெருவை சேர்ந்த கணேசனின் மகள் சுதாவுக்கும்(28) திருமணம் நடந்து, சுமார் 8 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளனர். பின்னர் இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. தற்போது அவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் வேல்முருகனுக்கும், சுதாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. நேற்று காலை வேல்முருகன், சமைப்பதற்காக இறைச்சி எடுத்து சுதாவிடம் கொடுத்துவிட்டு வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார்.
குடும்ப பிரச்சினை காரணமாக மனவேதனையில் இருந்த சுதா, தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அணைக்கரை ராஜ வாய்க்கால் பகுதிக்கு சென்று, குழந்தைகளுடன் தற்கொலை செய்ய முயன்றார். இதுகுறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இளஞ்சியம் மற்றும் வீரமணி ஆகியோர் விரைந்து சென்று, அவர்களை மீட்டு அணைக்கரை சோதனை சாவடியில் வைத்து விசாரணை நடத்தினர். மேலும் இது பற்றி அவரது கணவர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு உள்ள நிலையில் அவர்கள் இருவரையும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு கவுன்சிலிங்குக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்த வேல்முருகன், சுதா ஆகிய ஆகியோரிடம் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் விசாரித்து, இருவருக்கும் அறிவுரை கூறினர். மேலும் குழந்தைகளை பார்த்துக் கொள்ளவும், சிறு சிறு பிரச்சினைகள் வந்தால் விட்டுக் கொடுத்து குடும்பம் நடத்தவும், இருவருக்கும் நீண்ட நேரமாக அறிவுரை கூறினர்.
நீண்ட நேரம் பேச்சு வார்த்தைக்கு பிறகு கணவருடன் செல்வதாக சுதா ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் கணவன், மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது."
- பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
- குழந்தையுடன் நடந்து சென்ற போது சம்பவம்
திருச்சி:
திருச்சி அம்மையப்பா நகரை சேர்ந்தவர் சத்யா . இவர் தனது குழந்தையை இன்று காலை பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் சென்றார். அப்போது ஹெல்மட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் சத்யா கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்கசங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.இதுகுறித்த புகார் அடிப்படையில் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
- பெண்ணிடம் 6.5 புவுன் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டில் பெற்றோருடன் தூங்கிய போது சம்பவம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள காளையன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் மனைவி சுமித்ரா (வயது 23).
குடும்ப பிரச்சனை காரணமாக, கடந்த இரண்டு ஆண்டு காலமாக கணவனை பிரிந்து காளையன்தோப்பில் உள்ள தனது தந்தை ராமலிங்கம் வீட்டில் சுமித்ரா வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு சுமித்ரா, தந்தை ராமலிங்கம் தாய் ஜெயலட்சுமி, சகோதரி சுமதி ஆகியோருடன் உறங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. அப்போது அதிகாலையில் அவரது வீட்டின் பின்பக்க கதவை திறந்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் உறங்கி கொண்டிருந்த சுமித்ரா கழுத்தில் அணிந்திருந்த 6.5 பவுன் சங்கிலியை அறுத்து சென்று விட்டனர்.
இச் சம்பவம் குறித்து ராமலிங்கம் ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் ஆய்வாளர் அழகம்மை மற்றும் சப் இன்ஸ்பெக்டர் நித்யா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஓடும் பஸ்சில் அங்கன்வாடி பெண் ஊழியரிடம் 7 பவுன் செயின் பறிப்பு சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
- ‘டிப்டாப்’ மங்கைகள் 3 பேருக்கு வலைவீச்சு
திருச்சி
திருச்சி எடமலைப்பட்டி புதூர் வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி சர்மிளா தேவி (வயது 41). இவர் துறையூர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் அவர் இன்று காலை 8.30 மணிக்கு எடமலைப்பட்டி புதூர் எஸ்.பி.ஐ. காலனி பஸ் நிறுத்தத்தில் இருந்து ஒரு அரசு டவுன் பஸ்சில் திருச்சி மத்திய பஸ் நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார். இதில் அவர் பயணம் செய்த பத்து நிமிட இடைவெளியில் அவரது கழுத்தில் கை வைத்து பார்த்த போது, தான் அணிந்திருந்த 7 பவுன் தாலி செயின் மாயமாகி இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் கண்ணீர் விட்டு கதறியபடி சர்மிளா தேவி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்துக்கு சென்றார். அங்கு தனது செயின் பறிக்கப்பட்டது தொடர்பாக புகார் அளித்தார்.