search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "works"

    • ரூ.79.42 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.
    • திருவலஞ்சுழி தொடங்கி தஞ்சாவூர் நோக்கி ஒரு பிரிவாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

    பாபநாசம்:

    கும்பகோணம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சா லையில் பல ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தமிழ்நாடு அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் ரூ.79.42 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

    இந்த பணிகள் தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் தொடங்கி கும்பகோணம் நோக்கி ஒரு பிரிவாகவும், திருவலஞ்சுழி தொடங்கி தஞ்சாவூர் நோக்கி ஒரு பிரிவாகவும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

    கும்பகோணம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் பாபநாசம் பகுதியில் பசுபதி கோயில், அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளி, வழுத்தூர், சரபோஜிராஜபுரம், ரெகுநாதபுரம், பண்டா ரவாடை, ராஜகிரி, பாபநாசம், திருப்பாலைத்துறை, சுவாமிமலை ஆகிய 11 இடங்களில் மழைநீர் வடிகால் வசதிக்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இப்பணிகளை தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை உதவி பொறியாளர் பழனியப்பன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    • சேலம் நெத்திமேடு முதல் அன்ன தானப்பட்டி வரையில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
    • இந்த சாலை பணிகளை சேலம் தரக்கட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் முருகன் நேரில் ஆய்வு செய்தார்.

    சேலம்:

    மாநில நெடுஞ்சா லைத்துறை சார்பில் சேலம் நெத்திமேடு முதல் அன்ன தானப்பட்டி வரையில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதே போல், நெத்திமேடு முதல் கொண்டலாம்பட்டி ரவுண்டானா வரையிலும், அம்மாபேட்டை மிலிட்டரி சாலையில் பாலபாரதி பள்ளி முதல் அணைமேடு வரையிலும் மற்றும் நெய்க்காரப்பட்டி முதல் உத்தமசோழபுரம் வரையி லும் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வரு கிறது. பொன்னம்மா பேட்டை ெரயில்வே கேட் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த சாலை பணிகளை சேலம் தரக்கட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் முருகன் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சாலையின் நீளம், அகலம், தடிமன், அடர்த்தி, சாலை தளத்தின் சாய்மானம் மற்றும் தரத்தை ஆய்வு செய்தார். மேலும், சாய்வு தளம் மற்றும் தரத்தை ஆய்வு செய்து மழைநீர் தேங்காத வகையில் சாலைகள் அமைக்க அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது உதவி பொறியாளர்கள் ரா.சவுந்தர்யா, சுமதி மற்றும் தரக்கட்டுப்பாட்டு உதவி கோட்ட பொறியாளர் கோதை மற்றும் உதவி பொறியாளர்கள் கவின், பிருந்தா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • தமிழகத்தில் 544 இடங்களில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாடு மாறி உள்ளது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அம்மா பேட்டை ஒன்றியங்களை சார்ந்த 252 குடியிருப்பு களுக்கான கூட்டு குடிநீர் திட்டம் ( ஜல் ஜீவன் மிஷன் ) ரூ.288.02 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா பாபநாசத்தில் நடைபெற்றது.

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை உரையாற்றினார். அரசு தலைமை கொறடா கோவி. செழியன் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச் . ஜவாஹிருல்லா, தஞ்சை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தஞ்சாவூர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேற்பார்வையாளர் கருணாகரன் வரவேற்றார். தலைமை பொறியாளர் முரளி திட்ட விளக்க உரையாற்றினார்.

    தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என்.நேரு கலந்துகொண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் ஜல் ஜீவன் திட்டத்தின் பங்களிப்புடன் பாபநாசம் மற்றும் அம்மாபேட்டை ஒன்றியங்களில் 252 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்ட பணிகளை அடிக்கல் நாட்டில் துவக்கி வைத்து விழா பேருரையாற்றினார்.

    அப்போது அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது :-

    தனது துறைக்கு இந்த வருடம் 30 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், இதன் மூலம் 5 கோடியே 50 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் புதிதாக பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் உருவாக்கப்படும். தமிழகத்தின் பெரு நகரங்களாக விளங்கும் கோவை ,மதுரை, சேலம் ஆகிய ஊர்களில் 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது என்றும்,

    , இந்த வருடம் தஞ்சாவூர் மாவட்டத்தில் தனது துறைக்கு மட்டும் தமிழக அரசு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் 544 இடங்களில் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது :- ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்துவதில் தமிழகம் 23 வது இடத்தில் இருந்ததாகவும் ,கே என் நேரு இத்துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்றதும் இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாடு மாறி உள்ளது என்றும் அதற்காக விருதும் கிடைத்துள்ளது இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாவட்ட தி.மு.க துணை செயலாளர்கள் கோவி.அய்யராசு, துரைமுருகன், மாவட்ட கவுன்சிலர்கள் தாம ரைச்செல்வன், பாத்திமா ஜான் ராயல் அலி, ராதிகா கோபிநாத், பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், அம்மா பேட்டை ஒன்றிய குழு தலைவர் கலைச்செல்வன், அம்மாபேட்டை ஒன்றிய குழு துணை தலைவர் தங்கமணி சுரேஷ்கு மார்,பாபநாசம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் நாசர், பாபநாசம் பேரூர் தி.மு.க செயலாளர் கபிலன், பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், மற்றும் அனைத்து ஒன்றிய குழு உறுப்பினர்கள் , பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், சார்பணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் தஞ்சாவூர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக பொறியாளர் எழிலரசன் நன்றி கூறினார்.

    பாபநாசத்தில் கூட்டு குடிநீர் திட்டத்தினை அமைச்சர் கே. என். நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த போது எடுத்த படம். அருகில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அரசு தலைமை கொறடா கோவி செழியன் , எம்.எல்.ஏக்கள் ஜவாஹிருல்லா, சந்திரசேகரன், நீலமேகம், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன் ஆகியோர் உள்ளனர்.

    • தொடக்க நிலையிலேயே பணிகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டன.
    • சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு பாசனம் தரும் நீர் கட்டமைப்பாகவும் விளங்கும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எழிலூர் சாளுவனாற்றுகரையில், எழிலூர் தொடங்கி நெடும்பலம் வரை உள்ள திடலை பயன்படுத்தி ஏரி வெட்ட வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    எழிலூரில் வெட்டப்படும் ஏரியானது எழிலூர், மருதவனம், வங்கநகர் ஓவர்குடி ஊராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நீர் ஆதாரமாகவும், சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு பாசனம் தரும் நீர் கட்ட மைப்பாகவும் விளங்கும்.

    இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு இங்கு ஏரி வெட்ட வேண்டுமென திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கியது. ஆனால், தொடக்க நிலையிலேயே பணிகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டன.

    இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே, நீர் ஆதாரத்தை கருத்தில் கொண்டு ஏரி வெட்டுவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரூ. 6.47 கோடி செலவில் 1,200 மீட்டர் தூரம் சாலை அகலப்படுத்தும் பணி.
    • தேவையான இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை காமராஜர் சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் ஒருங்கி ணைந்த சாலை உட்கட்ட மைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 6.47 கோடி செலவில் 1,200 மீட்டர் தூரம் சாலை அகலப்படுத்தும் பணி மற்றும் தேவையான இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதுகுறித்து கலெக்டர் மகாபாரதி நிருபர்களிடம் கூறுகையில்:-

    மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 2 பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அவற்றில், தரங்கம்பாடி மயிலாடுதுறை-காமராஜர் சாலையில் ரூ. 6 கோடி 47 லட்சம் செலவில் சாலையில் இருபுறமும் அகலப்படுத்தியும், தேவையான இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன.

    இப்பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அதேபோல், கல்லணை காவேரிப்பட்டினம் தென்னமரசி சாலை ரூ. 2 கோடியே 50 லட்சம் செலவில் சாலைகள் இருபுறமும் அகலப்படுத்தும் பணி, தேவையான இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    இப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க உத்தரவிட்டுள்ளேன் என்றார்.

    ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் இந்திரன் உடன் இருந்தார்.

    • நடைபாதை அமைத்தல் என்பது போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்றன.
    • மக்களுக்கு பொழுதுபோக்கு இடமாக மட்டுமில்லாமல் பயனுள்ள இடமாக சிவகங்கை பூங்கா திகழும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது.

    அந்த வகையில் தஞ்சாவூரில் புகழ்பெற்ற சிவகங்கை பூங்காவில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பராமரிப்பு பணிகள் தொடங்கியது.

    தற்போது பெரும்பாலான பணிகள் முடிவடைந்து விட்டன.

    இந்த நிலையில் சிவகங்கை பூங்காவில் நடைபெறும் பணிகளை இன்று மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது :-

    தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா பாரம்பரியமிக்கது. தஞ்சாவூரில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பராமரிப்பு பணிகள் தொடங்கின. இதில் தமிழ் அன்னை செயற்கை நீரூற்று புதுப்பித்தல், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் அமைத்தல், மான்கள் இருந்த இடத்தில் சுற்று சுவர், நடைபாதை அமைத்தல் என்பது போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்றன.

    இன்னும் தாவரவியல் பூங்கா அமைக்கப்படவில்லை. இதேபோல் சேர்கள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிவடைந்து விடும்.

    அனைத்து பணிகளும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டன. பழமை மாறாமல் புதுப்பொலிவுடன் சிவகங்கை பூங்கா மாறி உள்ளது.

    அதிகபட்சமாக இன்னும் 2 அல்லது 3 மாதங்களுக்குள் சிவகங்கை பூங்கா திறக்கப்படும். அதன் பிறகு மக்களுக்கு பொழுதுபோக்கும் இடமாக மட்டுமில்லாமல் பயனுள்ள இடமாக சிவகங்கை பூங்கா திகழும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், மண்டல குழு தலைவர் மேத்தா, கவுன்சிலர் கோபால், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • தொல்காப்பியர் சதுக்கம் பராமரிப்பு இன்றி செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காட்சியளித்தது.
    • சமூக விரோதிகள் செயலால் பொதுமக்கள் இங்கு வர அச்சப்படுகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் கடந்த 1995-ம் ஆண்டு உலகத் தமிழ் மாநாடு நடந்தது. அதன் நினைவாக தஞ்சாவூர் தொம்பன் குடிசை பகுதியில்

    5 அடுக்கு கோபுரம் அமைப்பாக தமிழ் மொழிக்கு தொன்மையான இலக்கணம் படைத்த "தொல்காப்பியர் நினைவு கோபுரம்" அமைக்கப்பட்டது.

    தஞ்சையிலிருந்து நாகை -பட்டுக்கோட்டை சாலைகள் பிரியும் சந்திப்பில் இந்த இடம் "தொல்காப்பியர் சதுக்கம்" என பெயரிடப்பட்டது.

    இங்கு பூங்காவுடன் அமைக்கப்பட்ட கோபுரம் இப்பகுதியை சுற்றியுள்ள குடியிருப்பு மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் இடமாக விளங்கியது.

    இந்த பூங்காவில் செயற்கை நீரூற்றுகள், சிறுவர்கள் விளையாடுவதற்கு ஊஞ்சல், சறுக்கி விளையாடுவதற்கு இடம் என பார்த்து பார்த்து அமைக்கப்பட்து.

    இப்படி தஞ்சாவூர் அடையாளமாக விளங்கிய தொல்காப்பியர் சதுக்கம் நாளடைவில் போதிய பராமரிப்பு இன்றி செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காட்சியளித்தது.

    செயற்கை நீரூற்றுகள் மற்றும் சிறுவர்கள் விளையாடுவதற்கு வைக்கப்பட்டிருந்த அனைத்து உபகரணங்களும் சேதமடைந்தன.

    பூங்கா வளாகத்திற்குள் சமூக விரோதிகள் சிலர் உள்ளே ஏறி குதித்து மதுவை குடித்து விட்டு பாட்டில்களை அப்படியே போட்டு சென்றனர்.

    இதனால் பூங்காவுக்கு வர பொதுமக்கள் அச்சப்பட்டனர்.

    இந்த நிலையில் இன்று மதியம் தொல்காப்பியர் சதுக்கம் பூங்காவில் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொல்காப்பியர் சதுக்கத்தில் செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    இது குறித்து அவர் கூறியதாவது :-

    தஞ்சாவூர் அடையாளமாக

    தொல்காப்பியர் சதுக்கம் விளங்கியது. சமூக விரோதிகள் செயலால் பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் இங்கு வர அச்சப்படுகின்றனர்.

    அந்த நிலையை மாற்ற முடிவு செய்துள்ளோம். மாவட்ட கலெக்டரின் ஒப்புதல் பெற்று தொல்காப்பியர் சதுக்கத்தில் விரைவில் பராமரிப்பு , புனரமைப்பு பணிகள் நடைபெறும்.

    இதற்கு முன்னர் இருந்ததை விட கூடுதலாக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

    சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள் சரி செய்யப்பட்டு கூடுதலாக உபகரணங்கள் அமைக்கப்படும்.

    சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் பொழுது போக்குவதற்கு ஏற்ற இடமாக மாற்றப்படும்.

    வாகனங்கள் நிறுத்துவதற்கு தனியாக பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும்.

    வளாகம் சுத்தப்படுத்தப்பட்டு பராமரிக்கப்படும். முழு பாதுகாப்புடன் தொல்காப்பியர் சதுக்கம் இருக்கும்.

    இதன் மூலம் சமூக விரோதிகள் நடமாட்டம் முற்றிலும் இருக்காது.

    மின்விளக்கு, குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும்.

    ஒட்டு மொத்தத்தில் அனைத்து விதமான வசதிகளும் ஏற்படுத்தி தொல்காப்பியர் பூங்கா பராமரிக்கப்படும் .

    கலெக்டர் ஒப்புதல் உடன் விரைவில் புனரமைப்பு பணிகள் தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரூ.7.66 கோடியில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் தொடங்கிவைக்கப்பட்டது
    • அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், துங்கபுரம், கருப்பட்டாங்குறிச்சி, அத்தியூர், லெப்பைக்குடிக்காடு கீழப்புலியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட கலெக்டர் க.கற்பகம், தலைமையில் சுமார் ரூ.7.66 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, முடிவுற்ற திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட்டிற்க்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் பேசும் போது,

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பொற்கால ஆட்சியில் பெரம்பலுார் மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில், லெப்பைக்குடிக்காடு பகுதியில் குடிநீர் மேம்பாட்டு திட்டம், மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு நிழற்குடை அமைக்கும் பணி மற்று ம் ஜமாலியா நகரில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் பணிகள் தொட ங்கிவைக்கப்பட்டுள்ளது. ஜமாலியா நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கைியனை விரைவில் நிறைவேற்றும் வகையில் உரிய நடவடிக்க எடுக்கப்படும். சிறுபான்மையினர் இன மக்களுக்கு பாதுகாப்பு அரணாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி பகுதி மென்மேலும் வளர பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்

    • 150 மிதவைகள் கொண்டு கட்டமைப்பு பணிகள் முடிக்கப்பட்டது.
    • தெப்ப உற்சவம் நாளை 16-ந் தேதி இரவு நடைபெற உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடான ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

    இவ்வாலயத்தில் நடைபெற உள்ள தெப்ப உற்சவத்தை யொட்டி 25 அடி நீளமும் 25 அடி அகலத்துடன் பிரம்மாண்டமான முறையில் 150 மிதவைகள் கொண்டு கட்டமைப்பு பணிகள் முடிக்கப்பட்டது.

    தொடர்ந்து தெப்பம் அலங்கரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தெப்ப உற்சவமானது நாளை (மார்ச்.16) இரவு 7 மணி அளவில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

    இதனையொட்டி நடை பெற்ற வெள்ளோட்டத்தில் பிரம்மாண்டமாக கட்டமைக்கப்பட்ட தெப்பத்தின் உறுதித் தன்மை குறித்து பொதுப்பணித்துறையினர், வருவாய்த் துறையினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், இந்து சமய அறநிலை துறை அலுவலர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோர் தெப்பத்தில் பயணித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    40 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    • வெங்காய தாமரை செடிகளால் தண்ணீர் போக்கு தடைப்படுகிறது.
    • இயற்கை உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதி நீர்நிலைகளில் வளர்ந்துள்ள வெங்காய தாமரை செடிகளை அகற்றும் பணியை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில்:-

    மக்களுக்கு முக்கிய தேவையாக இருக்கின்ற நீராதாரங்களை பாதுகாத்து அதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை நகராட்சி நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது. ஆறு, குளம், குட்டைகளில் வளர்ந்துள்ள வெங்காய தாமரை செடிகளால் தண்ணீர் போக்கு தடைப்படுகிறது, நிலத்தடி நீர் மாசுபடுகிறது. எனவே, இந்த செடிகளை முற்றிலும் அகற்றி அதனை நகராட்சி நுண்ணுர தயாரிப்பு மையம் மூலம் பாலம் சேவை நிறுவனத்தின் மேற்பார்வையில் இயற்கை உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது என்றார். நிகழ்ச்சியில் பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், நகராட்சி அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு திட்ட பணிகள் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் தாரேஸ் அகமது ஆய்வு செய்தார்.
    • ரூ.46.57 லட்சம் மதிப்பீட்டில் 1,200 மீட்டர் சாலை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், தில்லையேந்தல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் தாரேஸ் அகமது, கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சாலை, குடிநீர், தெருவிளக்கு வசதி, முதியோர் உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதி குறித்து ஆய்வு செய்ததுடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆணையர் தாரேஸ் அகமது பொதுமக்களிடம் வீடு, வீடாக சென்று கேட்டறிந்தார்.

    முன்னதாக மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பார்த்திபனூர் பகுதியில் பயனாளிகளுக்கு நடமாடும் வாகனம் மூலம் சிகிச்சைகள் மற்றும் மருந்து, மாத்திரைகள் அளிக்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் அரியனேந்தல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பீட்டில் மாசு நீர் சுத்திகரிப்பு பணி நடைபெற்று வருவதையும், அரியனேந்தல் ஆதிதிராவிடர் காலனியில் 15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் மகளிர் சுகாதார வளாகம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், இந்திரா நகர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பீட்டில் செங்குத்து உறிஞ்சிக்குழி பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டார்.

    நெல்மடுவலூர் ஊராட்சியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வட்டார பொது சுகாதார மையத்தின் கட்டுமான பணிகளையும், போகலூர் ஊராட்சி ஒன்றியம், பூவிளத்தூர் கிராமத்தில் தமிழ்நாடு கிராம சாலைகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.46.57 லட்சம் மதிப்பீட்டில் 1,200 மீட்டர் தொலைவில் வணங்கானேந்தல் வழியாக பூவிளத்தூர் வரை சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பரமசிவன், உதவி இயக்குநர் (தணிக்கை) அருள் சேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரமோகன், ரவி, போகலூர் செயற்பொ றியாளர் சுந்தரேசன், உதவி செயற்பொறியாளர்கள் அழகேசன், கல்யாண சுந்தரம், தில்லையேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை பூங்காவில் நடந்து வரும் பணிகளில் பெரும்பாலானவை முடிந்து விட்டன.
    • குறைந்தபட்சம் அடுத்த 30 ஆண்டுகளுக்கு தண்ணீர் பிரச்சனை இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சண். ராமநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 112 பணிகள் எடுக்கப்பட்டு அதில் 92 பணிகள் முடிந்துள்ளது. மீதம் 20 பணிகள் நடந்து வருகிறது. 4 மாதத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்து விடும். கடன் இல்லா மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி விளங்குகிறது. மற்ற மாநகராட்சிகளுக்கு முன் உதாரணமாக திகழ்கிறது .

    தஞ்சையில் பல்வேறு இடங்களில் சாலை பணிகள் நடந்து வருகின்றன. மேலும் நவீன எந்திரங்கள் மூலம் சாலைகள் சுத்தப்படுத்தப்படுகிறது .

    சிவகங்கை பூங்காவில் நடந்து வரும் பணிகளில் பெரும்பாலானவை முடிந்து விட்டன. இன்னும் 3 மாதத்தில் சிவகங்கை பூங்கா திறக்கப்படும்.

    முதலாம் ஆண்டு நிறைவடைந்து தற்போது 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். வளர்ச்சியை நோக்கி தான் அனைத்து பணிகளும் இருக்கும். ஜெபமாலைபுரம் குப்பை கிடங்கை மாற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது .

    10 ஏக்கர் அளவில் சுத்தப்படுத்தப்பட்டு விட்டன. குப்பை கிடங்கு முழுவதுமாக அகற்றப்பட்ட பிறகு 10 ஏக்கரில் அடுக்குமாடி குடியிருப்பும், 10 ஏக்கரில் யாத்ரி நிவாஸ் கட்டப்படும். பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு இந்த யாத்ரி நிவாஸ் பயனுள்ளதாக இருக்கும்.

    நம்ம வார்டு நம்ம மேயர் என்ற திட்டத்தின் கீழ் முதலாம் ஆண்டில் 51 வார்டுகளிலும் ஆய்வு செய்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினோம். அவற்றின் அடிப்படையில் மழைநீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற ரூ.1112 கோடி மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அமைச்சர் கே. என். நேருவிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

    தற்போது 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில் மக்களோடு மேயர் என்ற தலைப்பில் மக்களை சந்திக்க உள்ளோம்.

    திருவையாறு பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி பள்ளி அருகே வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு பெரிய அளவில் வாகன பார்க்கிங் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரிய கோவிலை சுற்றி பல்வேறு பணிகள் நடைபெற உள்ளன. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் இருக்காது .

    புதிய பஸ் நிலைய புனரமைப்புக்காக ரூ.50 கோடி, மீன் மார்க்கெட் கட்ட ரூ.35 கோடி, சீனிவாசபுரம் - டி.பி.எஸ். நகரை இணைக்கும் வகையில் ரூ.120 கோடியில் பாலம் கட்ட திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரும் பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. 17 மாநகராட்சி பள்ளிகளில் சேதம் அடைந்த கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டப்படும்.

    தஞ்சை மாநகராட்சியில் குறைந்தபட்சம் அடுத்த 30 ஆண்டுகளுக்கு தண்ணீர் பிரச்சனை இருக்காது. 30 எம்.எல்.டி தண்ணீர் தான் தேவை. ஆனால் 60 எம்.எல்.டி தண்ணீர் வரப்போகிறது. இதை தவிர விளார், மாரியம்மன் கோவில், நாஞ்சிக்கோட்டை, பிள்ளையார்பட்டி உள்பட 13 ஊராட்சிகள் தஞ்சாவூர் மாநகராட்சியுடன் இணையப் போகிறது. அப்படி இணையும் போதும் தண்ணீர் பிரச்சனை இருக்காது.

    வருகிற 8-ந்தேதி தஞ்சாவூர் ெரயில்வே நிலையத்தில் ஆய்வு செய்ய உள்ளோம். தஞ்சையில் இன்னும் 6 மாதத்தில் விமான சேவை தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×