search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    காயத்தால் விலகிய டி மினார்: விம்பிள்டன் அரையிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்
    X

    காயத்தால் விலகிய டி மினார்: விம்பிள்டன் அரையிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் ஜோகோவிச் அரையிறுதியில் நுழைந்தார்.

    லண்டன்

    டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் நடந்து வருகிறது.

    இன்று நடைபெற இருந்த காலிறுதியில் தரவரிசையில் 2-ம் நிலை வீரரான செர்பிய வீரர் ஜோகோவிச், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதுவதாக இருந்தது.

    இந்நிலையில், இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக அலெக்ஸ் டி மினார் அறிவித்தார். இதன்மூலம் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    Next Story
    ×