ஆன்மிக களஞ்சியம்

கற்பூரம் ஏற்ற காசு இல்லாமல் வருந்தி பாடிய வள்ளலார்

Published On 2024-07-17 11:29 GMT   |   Update On 2024-07-17 11:29 GMT
  • ஸ்ரீ தியாகராஜபெருமானது பவனி பற்றியும் ஓட்டம் பற்றியும் சிறப்பாக பாடியுள்ளார்.
  • திருவொற்றியூர் முருகனுக்கு கற்பூரம் ஏற்ற காசு இன்றி மிகவும் வருந்தி பாடியுள்ளார்.

ராமலிங்க அடிகள் தனது 12வது வயதிலிருந்து 35வது வயது வரை 24 ஆண்டுகள் இடைவிடாமல் திருவொற்றியூருக்கு வந்து இறைவனை வணங்கினார். அங்குள்ள தலவிருட்ச மரமாகிய அத்தி மரத்தின் கீழ் அமர்ந்து தவம் புரிந்து சிவனருள் பெற்றார்.

அவர் அருளிச் செய்த 6 திருமுறைகளில் 3 திருமுறைகள் முற்றிலும் திருவொற்றியூரின் மேன்மையை உணர்த்துகின்றன.

ஆதிபுரிஸ்வரர் மீது எழுத்தறி "பெருமான் மாலை" என 31 பாடல்களையும், வடிவுடையம்மன் மீது ஸ்ரீ வடிவுடை மாணிக்க மாலை என்ற 101 பாடல்களையும் பாடியுள்ளார்.

ஸ்ரீ தியாகராஜபெருமானது பவனி பற்றியும் ஓட்டம் பற்றியும் சிறப்பாக பாடியுள்ளார்.

திருவொற்றியூர் முருகனுக்கு கற்பூரம் ஏற்ற காசு இன்றி மிகவும் வருந்தி பாடியுள்ளார்.

"அருமருந்தே தணிகாசலம் மேவும் ஆருயிரே

திருமருங்கார் ஒற்றியூர் மேவிய நின் திருமுன்னதால்

ஒருமருங்கு ஏற்ற என் செய்வேன்

கற்பூர ஒளியினுக்கே" என்று வருந்தி பாடியுள்ளார்.

Tags:    

Similar News