ஆன்மிக களஞ்சியம்
சுக்ரனின் அம்சமான அத்தி மரத்தின் மகிமை
- அத்தி மரம் சுக்ரனுக்கு ஒப்பாக சொல்லப்பட்டிருக்கிறது.
- தமிழர் வரலாற்றில் அத்தி மரத்திற்கு மிகப்பெரிய முக்கியத்துவம் உண்டு.
தமிழர் வரலாற்றில் அத்தி மரத்திற்கு மிகப்பெரிய முக்கியத்துவம் உண்டு.
அத்தி மரம் சுக்ரனுக்கு ஒப்பாக சொல்லப்பட்டிருக்கிறது.
சுக்ராச்சாரி, சுக்ரனுடைய ஆதிபத்யம் பெற்ற மரமாக அத்தி மரம் உள்ளது.
சுக்ராச்சாரி நேரடியாக மோதமாட்டார். மறைந்து நின்று தாக்கக்கூடியவர் சுக்ராச்சாரி.
அதேபோல இந்த அத்தி மரத்தைப் பார்த்தாலும், கண்டு காய் காய்க்கும் காணாமல் பூ பூக்கும் என்று பழமொழி உண்டு.
அதாவது அத்தி மரத்தில் காய்ப்பது மட்டும்தான் தெரியும். பூப்பதே தெரியாதே.
அதை அதிகமாகப் பார்க்க முடியாது. அதனால்தான் சுக்ரனுடைய அம்சமாக இந்த அத்தி மரம் விளங்குகிறது.