தாம்பத்ய சிக்கல்கள் நீக்கும் அத்திமரம்
- சுமூகமான சூழல் உருவாகும். தாம்பத்ய சிக்கல்கள் நீங்கும்.
- அத்தி மரத்திலிருந்து வரக்கூடிய அதிர்வலைகள் கணவன், மனைவி இடையே அன்யோன்யத்தைக் கொடுக்கும்.
கணவன், மனைவி இடையே சண்டை, சச்சரவு, சிக்கல்கள் போன்று இருப்பவர்கள், சுக்ரன் நீச்சமாக,
பகையாக இருப்பவர்கள், சுக்ரன் ஜாதகத்தில் கெட்டுப் போய்விடுதல் போன்றவற்றிற்கு நடைமுறைப் பரிகாரம்
என்று பார்த்தால் ஒரு அத்தி மரத்தை நட்டு வளர்த்து பராமரித்தாலே அவர்களிடையே சண்டை, சச்சரவுகள் எல்லாம் நீங்கும்.
சுமூகமான சூழல் உருவாகும்.
தாம்பத்ய சிக்கல்கள் நீங்கும்.
அத்தி மரத்திலிருந்து வரக்கூடிய அதிர்வலைகள் கணவன், மனைவி இடையே அன்யோன்யத்தைக் கொடுக்கும்.
அதனால்தான் வாழ்க்கை வளம் பெறுவதற்கும், கணவன் மனைவிக்குள் நெருக்கம், கடைசி வரையில்
ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக விரும்பி விலகாமல் இருப்பதற்கும் அத்தி மரம் வழிபாடு மிகவும் விசேஷமாக இருக்கும்.
அத்தி மரப் பலகையில் உட்கார்ந்து தியானம் செய்தால் பூமியினுடைய புவிஈர்ப்பு விசை நம்மை அதிகம் தாக்காமல்
எந்த மந்திரத்தை உச்சரிக்கிறோமே அந்த மந்திரத்தினுடைய பலன் முழுமையாகக் கிடைக்கும்.
இதுபோன்ற அபார சக்தியும் அத்தி மரத்திற்கு உண்டு.