கன்னி - தமிழ் மாத ஜோதிடம்

தை மாத ராசிபலன்

Published On 2024-01-11 04:31 GMT   |   Update On 2024-01-11 04:33 GMT

உழைப்பும், உறுதியான மனமும் வேண்டும் என்று சொல்லும் கன்னி ராசி நேயர்களே!

தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியில் கேதுவும், 7-ம் இடத்தில் ராகுவும் சஞ்சரிக்கின்றார்கள். சர்ப்ப தோஷத்தின் பின்னணியில் இருக்கிறீர்கள். ஆயினும் 6-ம் இடத்தில் சனி இருப்பதால் அற்புதமான நேரமிது. கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். வளர்ச்சி கூடும். தேங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். உத்தியோகம், தொழிலில் உயர்வும், முன்னேற்றமும் உண்டு. வருமானமும் திருப்திகரமாக இருக்கும்.

மேஷ-குருவின் சஞ்சாரம்!

மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். அஷ்டமத்தில் குரு சஞ்சரிப்பதால் அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது என்பார்கள். உழைப்பு கூடுதலாக இருந் தாலும், ஊதியம் குறைவாகவே இருக்கும். உடல் நிலைகளிலும் சிறுசிறு தொல்லைகள் ஏற்பட்டு மருத்துவச் செலவு களை அதிகரிக்கச் செய்யும். எனவே உற்சாகம் கொஞ்சம் குறையலாம். கொடுக்கல்-வாங்கல்களில் ஒரு தொகை செலவழிந்த பின்னரே அடுத்த தொகை உங்கள் கரங்களில் புரளும். வரவறிந்து செலவு செய்வது நல்லது. இதுபோன்ற நேரங்களில் குருவிற்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டால் தடைக்கற்கள் படிக்கற்களாக மாறும்.

தனுசு-சுக்ரன்!

ஜனவரி 19-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதி யானவர் சுக்ரன். அவர் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம் தான். சொத்துகள் வாங்கும் யோகமும், சொத்துக் களால் ஆதாயமும் கிடைக்கும் நேரமிது. முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க முக்கியப் புள்ளிகள் உதவிகரமாக இருப்பார்கள். தாய்வழி ஆதரவு திருப்தி தரும். செல்வாக்கு பெற்ற நண்பர்கள் மூலம் உங்கள் செயல்பாடுகளில் இருந்த தடைகளை அகற்றிக் கொள்வீர்கள்.

மகர-புதன்!

ஜனவரி 27-ந் தேதி மகர ராசிக்கு புதன் வருகின்றார். உங்கள் ராசிநாதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் நல்லநேரம் தான். பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்குக் கிடைக்க வேண்டிய யோகங்கள் அனைத்தும் கிடைக்கும். `புத ஆதித்ய யோக'மும் ஏற்படுவதால் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். கவுரவம், அந்தஸ்து உயரும். கடமையில் கண்ணும், கருத்துமாக செயல்பட்டுப் புகழ் குவிப்பீர்கள். வெளிநாட்டு முயற்சியில் இருந்த தடைகள் அகலும். கல்யாண முயற்சி கைகூடலாம்.

மகர-செவ்வாய் சஞ்சாரம்!

பிப்ரவரி மாதம் 4-ந் தேதி மகர ராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். மகரம் செவ்வாய்க்கு உச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் உச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத் தொல்லைகள் கொஞ்சம் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் கூடும். வாங்கிய சொத்துகளை விற்க நேரிடலாம். வருமானப் பற்றாக்குறை ஏற்படும். உத்தியோகத்தில் சகப் பணியாளர்களால் தொல்லை உண்டு. உங்கள் முன்னேற்றத்தைப் பற்றி மற்றவர்களிடம் விவரிக்க வேண்டாம்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு வெற்றிப்பாதையை நோக்கிச் செல்ல வழிபிறக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு உங்கள் திறமையை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் கைகூடி வரும். மாணவ-மாணவியர் களுக்கு பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உண்டு. பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் கூடும். தம்பதியர் களுக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும்.

ணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஜனவரி: 20, 21, 27, 28, பிப்ரவரி: 2, 3, 6, 7, 8.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.

Similar News