கன்னி - தமிழ் மாத ஜோதிடம்

வைகாசி மாத ராசிபலன்

Published On 2024-05-15 04:35 GMT   |   Update On 2024-05-15 04:41 GMT

வைகாசி மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் அஷ்டமத்தில் மறைந்திருப்பதோடு, தனாதிபதி சுக்ரனோடும் இணைந்திருக்கிறார். இதனால் 'புத சுக்ர யோகம்' உருவாகிறது. 'மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் கிடைக்கும்' என்பார்கள். எனவே இம்மாதத்தில் பொருளாதாரத்தில் இருந்த பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குருவின் பார்வையும் உங்கள் ராசியில் பதிவதால் தொழில் வெற்றி நடைபோடும். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

ரிஷப - சுக்ரன்

வைகாசி 7-ந் தேதி, ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பாக்கிய ஸ்தானத்தில் பலம்பெறும் இவ்வேளையில் நல்ல காரியங்கள் பலவும் இல்லத்தில் நடைபெறும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து உத்தியோகத்திற்கான அழைப்புகள் வரலாம். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. என்றைக்கோ கொடுத்த கடன் வசூலாகும். பணப்பழக்கம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.

ரிஷப - புதன்

வைகாசி 11-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியான புதன், தொழில் ஸ்தானாதி பதியாகவும் இருக்கிறார். அவர் பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் மற்றும் குருவோடு இணைவது யோகமான நேரம்தான். தொழில் வெற்றி நடைபோடும். தொல்லை தந்தவர்கள் உங்களை விட்டு விலகுவர். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து, போதிய ஊதியம் தருவதாகச் சொல்லி அழைப்பார்கள். குடும்ப ஒற்றுமை பலப்படும். உதிரி வருமானங்கள் பெருகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும் நேரம் இது.

மேஷ - செவ்வாய்

வைகாசி 18-ந் தேதி, மேஷ ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் அஷ்டமத்தில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. மனக் கவலை, பணக்கவலை இரண்டும் தொடரும். சில இழப்புகளை சந்திக்க நேரிடும். 'யாரையும் நம்பி எதையும் செய்ய முடியவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாத இந்த நேரத்தில், அதிகமான விழிப்புணர்ச்சி தேவைப்படும்.

மிதுன - புதன்

வைகாசி 27-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிநாதன் தொழில் ஸ்தானத்தில் பலம்பெறும் இந்த நேரம் யோகமான நேரமாகும். பொருளாதாரம் மிகச்சிறப்பாக அமையும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டு. பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகவும், கடல் தாண்டி சென்று வேலை பார்ப்பது சம்பந்தமாகவும் ஏதேனும் முயற்சி செய்தால் அது கைகூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்த வண்ணமாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

மிதுன - சுக்ரன்

வைகாசி 31-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு தன - பாக்கியாதிபதியான சுக்ரன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது, தனவரவு தாராளமாக வந்துகொண்டே இருக்கும். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்கும் வாய்ப்பு உண்டு. குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பெற்றோரை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கலாம். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணையலாம்.

புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு முன்னேற்றப் பாதை தென்படும். வியாபாரம், தொழில் செய்பவர்கள் எதிர்பார்த்த இலக்கை அடைவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தலைமை பதவிகள் தானாக வந்துசேரும். சக கலைஞர்களின் ஆதரவால், கலைஞர்கள் மகிழ்ச்சி கொள்வர். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடை பெறுவதோடு, பெண்களின் பொருளாதார நிலையும் உயரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 14, 15, 21, 22, 26, 27, ஜூன்: 5, 6, 10, 11.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும் பச்சை.

Similar News