சினிமா செய்திகள்

யார் வெறுப்பை விதைத்தாலும் நாம் அன்பை மட்டும் பரிமாறுவோம்: நடிகர் சூர்யா

Published On 2024-10-26 17:58 GMT   |   Update On 2024-10-26 17:58 GMT
  • கங்குவா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
  • இதில் திரைத்துறையில் உள்ள பலரும், படத்தில் நடித்த நடிகர்களும் பங்கேற்றனர்.

சென்னை:

கங்குவா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. திரைத்துறையில் உள்ள பலரும், படத்தில் நடித்த நடிகர்களும் இவ்விழாவில் பங்கேற்றுள்ளனர்.

இந்த விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது:

என்ன வெறுப்பை விதைத்தாலும் நாம் அன்பை மட்டுமே பரிமாறுவோம்.

வீட்டில் உள்ள அத்தனை பெண்களுக்கும் நன்றி.

சூரியன் மேலே இருந்தால் ஒரு புதிய விடியல் கிடைத்திருக்காது.

ரசிகர்களாகிய உங்களின் அன்பு எனக்கு விலைமதிப்பில்லாதது.

வில்லில் அம்பு பின்னால் சென்றால் தான் நினைத்த இலக்கை அடைய முடியும்.

அன்பாக இருப்போம், நல்லதையே செய்வோம்.

உன் ரத்தமும், என் ரத்தமும் வேறு வேறல்ல.

எனது நண்பரின் புதிய பாதைக்கு நல்வரவு என தெரிவித்தார்.

Tags:    

Similar News