கிரிக்கெட் (Cricket)
null

ஒரே பந்தில் 13 ரன்கள்: முதல் 2 பந்துகளில் சிக்ஸர் விளாசி உலக சாதனை படைத்த ஜெய்ஷ்வால்

Published On 2024-07-14 14:52 GMT   |   Update On 2024-07-14 14:55 GMT
  • சிக்கந்தர் ராசா வீசிய முதல் ஓவரில் டாஸ் பாலாக வந்த முதல் பாலை ஜெய்ஷ்வால் சிக்ஸர் விளாசினார்.
  • பிரீ ஹிட்டாக வந்த அடுத்த பாலையும் ஜெய்ஷ்வால் சிக்ஸர் விளாசினார்.

ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையே 5 ஆவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 167 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 168 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியடைந்தது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 - 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

இப்போட்டியின் முதல் ஓவரில் வீசப்பட்ட முதல் 2 பந்துகளில் சிக்ஸர் விளாசி யஷஸ்வி ஜெய்ஷ்வால் புதிய சாதனை படைத்துள்ளார். முதல் ஓவரை சிக்கந்தர் ராசா வீசிய வீசினார். டாஸ் பாலாக வந்த முதல் பாலை ஜெய்ஷ்வால் சிக்ஸர் விளாசினார். அந்த பால் நோ பால் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பிரீ ஹிட்டாக வந்த அடுத்த பாலையும் ஜெய்ஷ்வால் சிக்ஸர் விளாசினார். இதன் மூலம் இந்திய அணி ஒரே பந்தில் 13 ரன்கள் குவித்தது.

இதன்மூலம் டி20 போட்டியில் முதல் பந்திலேயே 13 ரன்கள் குவித்த முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.

மேலும், டி20 போட்டியில் முதல் ஓவரின் முதல் 2 பந்துகளில் சிக்ஸர் விளாசிய 2 ஆவது வீரர் என்ற சாதனையையும் ஜெய்ஷ்வால் படைத்துள்ளார்.

இதற்கு முன்பு தான்சானியாவை சேர்ந்த இவான் இஸ்மாயில் செலிமானி என்ற வீரர் ருவாண்டா அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரின் முதல் 2 பந்துகளில் சிக்ஸர் விளாசியுள்ளார்.

Tags:    

Similar News