கிரிக்கெட்

பும்ரா என்னைவிட 1000 மடங்கு சிறந்தவர்: கபில் தேவ் புகழாரம்

Published On 2024-06-27 13:38 GMT   |   Update On 2024-06-27 13:38 GMT
  • 23 ஓவர்களில் சராசரியாக 4.08 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
  • தற்போதைய இந்திய அணியின் வீரர்களையும், ஒட்டுமொத்த உடற்தகுதி நிலைகளையும் பாராட்டியுள்ளார்.

இந்தியாவுக்கு முதன்முறையாக உலகக் கோப்பையை வாங்கி கொடுத்த கேப்டன் கபில் தேவ், ஜஸ்பிரித் பும்ரா எனது காலத்தில் இருந்ததைவிட 1000 மடங்கு சிறந்த பந்து வீச்சாளராக திகழ்கிறார் என புகழாரம் சூட்டியுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு வரும் பும்ரா, இதுவரை வீசிய 23 ஓவர்களில் சராசரியாக 4.08 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

"என்னை விட பும்ரா 1000 மடங்கு சிறந்தவர். தற்போது இளம் பையன்கள் எங்களை விட மிகவும் சிறந்தவர்கள். எங்களுக்கு அதிக அனுபவம் இருந்தது. அவர்கள் சிறந்தவர்கள்" என்று கபில் பிரபல செய்தி நிறுவன பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இப்போது சிறந்த வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் பும்ரா, இந்தியாவுக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் ஒரு ஓவருக்கு மூன்று ரன்களுக்கு குறைவாகவே விட்டுக்கொடுத்து 159 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 89 ஒருநாள் போட்டிகளில் 149 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 68 போட்டிகளில் 85 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.


434 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற உலக சாதனையுடன் ஓய்வு பெற்ற கபில் தேவ், கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அவர் ஒருநாள் கிரிக்கெட்டிலும் வெற்றியைப் பெற்றார். அவரது 253 விக்கெட்டுகளைப் பெற்றார்.

1983-ல் இந்தியாவை முதல் உலகக் கோப்பை பட்டத்திற்கு அழைத்துச் சென்ற 65 வயதான கபில் தேவ், தற்போதைய இந்திய அணியின் வீரர்களையும், ஒட்டுமொத்த உடற்தகுதி நிலைகளையும் பாராட்டியுள்ளார்.

தற்போதைய இந்திய அணியினரை "அவர்கள் மிகவும் சிறந்தவர்கள். அவர்கள் உடற்தகுதி உடையவர்கள். அவர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள். அவர்கள் அற்புதமானவர்கள்" என்று கபில்தேவ் கூறியுள்ளார்.

Tags:    

Similar News