கிரிக்கெட்
null

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பதவி ஏற்கிறார் காம்பீர்?

Published On 2024-06-01 08:22 GMT   |   Update On 2024-06-01 10:03 GMT
  • ஐபிஎல் தொடரில் கேகேஆர் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அணியின் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் விளங்கியதால் அவருக்கு வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.
  • இந்திய அணியின் பயிற்சியாளராக அவர் பதவியேற்கும் பட்சத்தில் கே.கே.ஆர் அணியின் பயிற்சியாளர் பணியிலிருந்து அவர் விலக நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சயாளர் ராகுல் டிராவிடின் பதவிக்காலம் ஐசிசி 2024 உலகக் கோப்பையுடன் முடிவடைய உள்ள நிலையில் அவருக்கு பொருத்தமான மாற்றாக யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் கவுன்சிலான பி.சி.சி.ஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்த பதிவிக்கான விண்ணப்பம் கடந்த மே 27 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் 3000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

வி.வி.எஸ் லக்ஷ்மண், கௌதம் கம்பீர், ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லாங்கர், ஸ்டீபன் பிளெமிங் உள்ளிட்டோரின் பெயர்கள் பிசிசிஐ வட்டாரங்களில் முதலில் அடிபடத் தொடங்கின. இவர்களுள் கவுதம் கம்பீரை பயிற்சியாள்ராக தேர்ந்தெடுக்க பிசிசிஐ தொடக்கத்திலிருந்தே மிகுந்த ஆர்வம் காட்டி வந்தது.

ஐபிஎல் தொடரில் கேகேஆர் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அணியின் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் விளங்கியதால் அவருக்கு வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.

 

ஆனால் கே.கே.ஆர் இணை உரிமையாளர் ஷாருக் கான், காம்பீரை தங்கள் அணியிலேயே தக்கவைத்துக்கொள்ள விரும்புவதால் காம்பீர், இந்தியஅணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்பாரா? அல்லது நிராகரிப்பாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் காம்பீர் விரைவில் பதவி ஏற்க உள்ளார் என்று பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

 

இந்திய அணியின் பயிற்சியாளராக அவர் பதவியேற்கும் பட்சத்தில் கே.கே.ஆர் அணியின் பயிற்சியாளர் பணியிலிருந்து அவர் விலக நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.   

Tags:    

Similar News