கிரிக்கெட்

மகளிர் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை சமன்செய்தது இந்தியா

Published On 2024-07-09 15:52 GMT   |   Update On 2024-07-09 15:53 GMT
  • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 84 ரன்களில் சுருண்டது.
  • இந்தியாவின் பூஜா வஸ்த்ராகர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

சென்னை:

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் எம்.ஏ. சிதம்பரம் அரங்கத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 17.1 ஓவரில் 84 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தியா சார்பில் பூஜா வஸ்த்ராகர் 4 விக்கெட்டும், ராதா யாதவ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகள் ஷபாலி வர்மா, ஸ்மிர்தி மந்தனா இருவரும் சிறப்பான ஆடினர். ஸ்மிர்தி மந்தனா அரை சதமடித்து 54 ரன்னும், ஷபாலி 27 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இறுதியில், இந்திய மகளிர் அணி 10.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 88 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட் டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்துள்ளது.

Tags:    

Similar News