கிரிக்கெட்
தெலுங்கானாவில் சென்னை-பெங்களூர் கிரிக்கெட் போட்டியை வைத்து சூதாட்டம்- 4 பேர் கைது
- 2 குழுவினர் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வி குறித்து பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டனர்.
- அவர்களிடம் இருந்து ரூ.60 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பதி:
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கிரிக்கெட் போட்டியை வைத்து பல்வேறு இடங்களில் சூதாட்டம் நடைபெற்று வருகின்றன.
சென்னை-பெங்களூர் கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியை வைத்து தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம், மைலார் தேவப்பள்ளி பகுதியில் கிரிக்கெட் சூதாட்டம் நடந்தது.
2 குழுவினர் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வி குறித்து பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவலறிந்த போலீசார் அங்கு சென்றனர். போலீசார் வருவதை கண்ட சிலர் அங்கிருந்து தப்பி ஓடினர்.
அதில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.60 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.