கிரிக்கெட்

நான் அதிகம் மிஸ் செய்யும் வீரராக ரோகித் இருப்பார்- டிராவிட்

Published On 2024-06-30 06:33 GMT   |   Update On 2024-06-30 06:33 GMT
  • நான் அதிகம் மிஸ் செய்யும் நபராக ரோகித் இருப்பார் என அவரது ஓய்வு குறித்து டிராவிட் கூறினார்.
  • இந்த போட்டியுடன் டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித் ஓய்வை அறிவித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று பார்படாசில் நடைபெற்றது. இதில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா டி20 உலக சாம்பியன் ஆனது.

இந்நிலையில் என்னை பொறுத்தவரை நான் அதிகம் மிஸ் செய்யும் நபராக ரோகித் இருப்பார் என ரோகித் ஓய்வு அறிவித்தது குறித்து ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டிராவிட் கூறியதாவது:-

ரோகித் சர்மாவை நான் நிச்சயம் மிஸ் செய்வேன். அவர் எனக்கு கொடுத்த மரியாதை, அணியின் மீதான அக்கறை, அர்பணிப்பு, எப்போதும் பின்வாங்காமல் இருப்பது, அவரின் ஆற்றல் ஆகியவைதான் என்னை மிகவும் ஈர்த்தது. என்னை பொறுத்தவரை நான் அதிகம் மிஸ் செய்யும் நபராக ரோகித் இருப்பார்.

Tags:    

Similar News