கிரிக்கெட்

சாலையோர கடையில் சாப்பிட்ட சச்சின் டெண்டுல்கர்

Published On 2024-06-26 04:01 GMT   |   Update On 2024-06-26 04:01 GMT
  • கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர்.
  • இந்திய அணிக்காக 24 ஆண்டுகள் விளையாடியவர்.

கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர். இந்திய அணிக்காக 24 ஆண்டுகள் விளையாடியவர். கிரிக்கெட்டில் இவர் படைத்த சாதனைகளை பற்றி பேசிக்கொண்டே போகலாம்.

ஒருநாள் போட்டிகளில் 18 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் 15 ஆயிரத்திற்கும் அதிக ரன்களை குவித்து தள்ளிய பெருமையும் இவரையே சாரும். தனது மனைவி அஞ்சலியை விட 6 வயது இளையவரான சச்சின் டெண்டுல்கர், 22 வயதிலேயே திருமணம் செய்துகொண்டார். இருவருக்கு சாரா டெண்டுல்கர் மற்றும் அர்ஜுன் டெண்டுல்கர் என்று இரு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் சமீப காலமாக குடும்பத்துடன் நேரத்தை செல்விடும் சச்சின் டெண்டுல்கர், குடுப்பத்துடன் சுற்றுலா செல்வது பொதுவெளியில் கிரிக்கெட் விளையாடுவது என சுற்றி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளிநாட்டில் உள்ளார். அங்கு உள்ள சாலையோர கடையில் சாப்பிடும் புகைப்படத்தை வெளியிட்டு, மும்பைக்காரன் எங்கு சென்றாலும் அவனது சாலையோர உணவை விரும்புவான் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News