கிரிக்கெட் (Cricket)
null

விராட், ரோகித் அதே தவறை செய்யமாட்டார்கள் என நம்புகிறேன்: சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

Published On 2024-05-29 14:16 GMT   |   Update On 2024-05-30 02:45 GMT
  • 2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது.
  • ரோகித் சர்மா 28 பந்தில் 27 ரன்கள்தான் அடித்திருந்தார். விராட் கோலி 40 பந்தில் 50 ரன்கள் சேர்த்தார்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. இதற்கிடையே ஒவ்வொரு அணிகளும் எப்படி விளையாட வேண்டும். எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என வீரர்களுக்கு கிரிக்கெட் விமர்சகர்கள் புத்திமதி சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தோல்வியடைந்தபோது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி செய்த தவறை மீண்டும் செய்யக் கூடாது என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறுகையில் "இரண்டு வருடத்திற்கு முன்னதாக நடைபெற்ற கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அடிலெய்டில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 168 ரன்கள் சேர்த்தது. ஆனால் முதல் 10 ஓவரில் 62 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சி அளித்தது.

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஏராளமான பந்துகளை சந்தித்தனர். ரோகித் சர்மா 28 பந்தில் 27 ரன்கள் அடித்தார். ஸ்டிரைக் ரேட் 96. விராட் கோலி 40 பந்தில் 50 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் 125. 18-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

இந்த போட்டியில் (தொடரில்) இந்தியா தோல்வியடைந்தது. 33 பந்தில் 190 ஸ்டிரைக் ரேட்டுடன் 63 ரன்கள் அடித்த ஹர்திப் பாண்ட்யாவுக்கு நன்றி சொல்லனும். 10 ஓவரில் இங்கிலாந்து சேஸிங் செய்தது.

இதில் இருந்து நாம் ஒன்றை உறுதியாக சொல்ல முடியும். அது என்னவென்றால் ரோகித் சர்மா, விராட் கோலி இந்த போட்டியில் செய்த அதே தவறை செய்யக் கூடாது. விராட் கோலி 2 வருடத்திற்கு முன்னதாக இருந்து அதே டி20 பிளேயர் அல்ல. வெளியில் இருந்து வந்த விமர்சனங்கள் அவரை இரண்டு வருடத்திற்கு முன்னதாக இருந்தை விட சிறந்த டி20 பேட்ஸ்மேனாக உருவாக்கியுள்ளது.

இவ்வாறு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News