கிரிக்கெட்

டாஸின் போது ஜிம்பாப்வே கேப்டன் செய்த செயல் - வீடியோ வைரல்

Published On 2024-07-15 02:56 GMT   |   Update On 2024-07-15 02:56 GMT
  • 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது.
  • கடைசி போட்டியில் 42 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையே 5-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 168 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களுக்கு ஜிம்பாப்வே ஆட்டமிழந்தது. இதன்மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 - 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில், இந்த போட்டியின் தொடக்கத்தில் டாஸ் போடும் போது, ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா செய்த செயல் தற்போது வைரலாகி வருகிறது. சிக்கந்தர் ராசா குதித்து டாஸ் போடும் வீடியோ காட்சிகள் வைரலாகி பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் ஆட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News