கிரிக்கெட்
null

விராட் கோலி அரைசதம், அக்சர் பட்டேல் அதிரடி- இந்தியா 176 ரன்கள் சேர்ப்பு

Published On 2024-06-29 16:09 GMT   |   Update On 2024-06-29 16:13 GMT
  • அக்சர் பட்டேல் 47 ரன்கள் விளாசினார்.
  • விராட் கோலி 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை யான்சன் வீசினார். முதல் பந்தில் ரோகித் சர்மா ஒரு ரன் எடுத்தார்.

அடுத்த பந்தை விராட் கோலி சந்தித்தார். பாயின்ட் திசையில் விராட் கோலி அருமையாக முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டினார். அதன்பின் 3-வது மற்றும் 6-வது பந்தையும் விராட் கோலி பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் முதல் ஓவரில் இந்தியாவுக்கு 15 ரன்கள் கிடைத்தது.

2-வது ஓவரை மகாராஜ் வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் ரோகித் சர்மா பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் 4-வது பந்தை ஸ்விப் அடிக்க முயன்றார். ஆனால் கிளாசன் சிறப்பாக கேட்ச் பிடித்தார். இதனால் ரோகித் சர்மா 5 பந்தில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 1.4 ஓவரில் 23 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து வந்த ரிஷப் பண்ட் 2-வது ஓவரின் கடைசி பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட் ஆனார். அப்போது இந்தியா 1.6 ஓவரில் 23 ரன்கள் எடுத்திருந்தது. மகாராஜ் 2-வது ஓவரில் இரண்டு பவுண்டர் கொடுத்து இரண்டு பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

3-வது ஓவரை ரபாடா வீசினார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது. அடுத்த ஓவரை மகாராஜ் வீசினார். இந்த ஓவரில் கோலி ஒரு பவுண்டரி அடிக்க இந்தியாவுக்கு 6 ரன்கள் கிடைத்தது. இந்தியா 4 ஓவர் முடிவில் 32 ரன்கள் எடுத்திருந்தது.

5-வது ஓவரை ரபடா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை சூர்யகுமார் யாதவ் லெக்சைடு தூக்கி அடித்தார். ஆனால் கிளாசின் அற்புதமாக கேட்ச் பிடிக்க சூர்யகுமார் யாதவ் 4 பந்தில் 3 ரன் எடுத்து வெளியேறினார். அப்புாது இந்தியா 4.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து அக்சட் பட்டேல் களம் இறங்கினார். 5-வது ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்த இந்தியா ஒரு பவுண்டரியுடன் ஏழு ரன்கள் அடித்தது.

பவர்பிளேயின் கடைசி ஓவரான 6-வது ஓவரை மார்கிராம் வீசினார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு 6 ரன்கள் கிடைத்தது. இதனால் பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் அடித்தது.

7-வது ஓவரை மார்கிராம் வீசினார். இந்த ஓவரில் அக்சர் பட்டேல் ஒரு சிக்ஸ் அடித்தார். அடுத்த ஓவரை மகாராஜ் வீசினார். இந்த ஓவரிலும் ஒரு சிக்ஸ் விளாசினார். இந்திய அணிக்கு இக்கட்டான நிலையில் இரண்டு சிக்ஸ் அடித்து கொடுத்தார். இதனால் இந்தியா 9 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்திருந்தது.

10-வது ஓவரை ஷம்சி வீசினார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு 7 ரன்கள் கிடைத்தது. ஆகையால் 10 ஓவர் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்து நல்ல நிலையை எட்டியது.

11-வது ஓவரை யான்சன் வீசினார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு 7 ரன்கள் கிடைத்தது.

12-வது ஷம்சி வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு 11 ரன்கள் கிடைத்தது.

நோர்ஜே வீசிய 13-வது ஓவரில் இந்தியாவுக்கு 5 ரன் கிடைத்தது. 14-வது ஓவரை ரபாடா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை பட்டேல் சிக்சருக்கு தூக்கினார். ஆனால் 4-வது பந்தில் எதிர்பாராத வகையில் ரன்அவுட் ஆனார்.

விராட் கோலி லெக்சைடில் அடிக்க முயன்றார். பந்து விக்கெட் கீப்பர் அருகில் சென்றது. அதற்குள் அக்சர் பட்டேல் நீண்ட தூரம் ஓடி வந்தார். டி காக் கரெக்டாக ஸ்டெம்பில் அடிக்க அக்சர் பட்டேல் ரன்அவுட் ஆனார். அவர் 31 பந்தில் 1 பவுண்டரி, 4 சிக்சருடன் 47 ரன்கள் அடித்தார். அப்போது இந்தியா 13.3 ஓவரில் 106 ரன்கள் அடித்திருந்தது. அக்சர் பட்டேல்- விராட் கோலி ஜோடி 72 ரன்கள் குவித்தது. 14-வது ஓவரில் இந்தியாவுக்கு 10 ரன்கள் கிடைத்தது. ஒரு விக்கெட்டை இழந்தது.

அடுத்து 5-வது விக்கெட்டுக்கு ஷிவம் துபே களம் இறங்கினார். யான்சன் 15-வது ஓவரை வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை துபே சிக்சருக்கு தூக்கினார். இந்த ஓவரில் 10 ரன்கள் கிடைத்தது. இந்தியா 15 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்தது.

16-வது ஓவரை ஷம்சி வீசினார். இந்த ஓவரில் ஷிவம் துபே ஒரு பவுண்டரி அடித்தார். இதனால் 8 ரன்கள் கிடைத்தது.

17-வது ஓவரை நோர்ஜே வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் ஷிம் துபே. இதனால் இந்த ஓவரில் இந்தியாவுக்கு 8 ரன்கள் கிடைத்தது. 4 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்திருந்தது. இதற்கிடையே விராட் கோலி 5-வது பந்தில் ஒரு ரன் எடுத்து 48 பந்தில் 4 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.

18-வது ஓவரை ரபடா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கினார். 3-வது பந்தில் பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 16 ரன்கள் கிடைக்க இந்தியா 18 ஓவரில் 150 ரன்கள் அடித்தது.

19-வது ஓவரை யான்சன் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை நோ-பால் ஆக வீசினார். அதற்கு பதிலாக போடப்பட்ட பந்தில் கோல் ரன் அடிக்கவில்லை. 2-வது பந்தில் விராட் கோலி பவுண்டரி அடித்தார். 4-வது பந்தை விராட் கோலி சிக்சருக்கு தூக்கினார். 5-வது பந்தில் விராட் கோலி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 59 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஹர்திக் பாண்ட்யா களம் இறங்கினார். இவர் பந்தை தூக்கி அடிக்க முயன்றார். பந்து எட்ஜ் ஆகி கீப்பருக்கு பின் பக்கமாக பவுண்டரி சென்றது. இதனால் இந்திய அணிக்கு இந்த ஓவரில் 17 ரன்கள் கிடைத்தது. இதனால் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.

20-வது மற்றும் கடைசி ஓவரை நோர்ஜே வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை துபே பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 16 பந்தில் 3 பவுண்டரி ஒரு சிக்சருடன் 27 ரன்கள் அடித்தார். அடுத்து ஜடேஜா களம் இறங்கினார். கடைசி பந்தில் ஜடேஜா ஆட்டமிழக்க இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் சேர்த்துள்ளது.

பாண்ட்யா 2 பந்தில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நோர்ஜே கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

தென்ஆப்பிரிக்கா அணியில் யான்சன் 4 ஓவரில் 49 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். மகாராஜ் 3 ஓவரில் 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் சாய்த்தார். ரபடா 4 ஓவரில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். நோர்ஜே 4 ஓவரில் 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார். ஷம்சி 3 ஓவரில் 26 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

Tags:    

Similar News