கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு 172 ரன் இலக்கு

Published On 2024-06-27 18:36 GMT   |   Update On 2024-06-27 18:36 GMT
  • விராட் கோலி, ரிஷப் பண்ட் ஏமாற்றம் அளித்தனர்.
  • ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்தார்.

அதன்படி விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர் 

விராட் கோலி ஒன்பது ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி 57 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

சூர்யகுமார் யாதவ் 47 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்

ஹர்திக் பாண்டியா 23 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

ஜடேஜா 17 ரன்கள் அடிக்க இந்தியா 172 ரன்கள் அடித்துள்ளது.

Similar News