- பறவைகள் உண்டு எஞ்சிய உணவை தேசிகர் குடும்பத்தை சேர்ந்தவர் கொண்டு வந்து மண்டபத்தில் வைப்பார்.
- முன்னமே மண்டபத்தில் வைத்திருந்த சோற்றோடு, கொண்டு வந்த சோற்றைக் கொட்டிக் கலந்து விடுவார்.
மலையேறி உச்சியை அடைந்ததும் இரு வழிகள் பிரிகின்றன. ஒன்று கோவிலுக்குச் செல்கிறது.
மற்றொன்று கழுகுகள் உணவு கொள்ளும் காட்சியைக் காணச் செல்கிறது.
இவ்வழி ஓர் மண்டபத்தருகே நின்று விடுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தினமும் இம்மலைக்கு இருகழுகுகள் வந்து உணவு சாப்பிட்டு செல்லும்.
அதை காண மண்டபத்திலும், அதைச் சுற்றியும் பன்னூறுக்கு மேற்பட்ட மக்கள் கொளுத்தும் வெயிலையும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நான்கு புறமும் சுற்றி சுற்றி வானத்தை நோக்கியபடி காத்திருப்பார்கள்.
11 மணியிலிருந்து 1 மணிக்குள் கழுகுகள் வரும் அதற்கு ஏற்ப ஒருவர் தூய்மையாக அகன்ற ஓர் தட்டில் நெய் கலந்த உணவை வைத்துக் கொண்டு தயாராக இருப்பார்.
உச்சிப் பொழுதுக்குச் சற்று முந்தியும் பிந்தியும் இரண்டு கழுகுகள் வந்து தமக்கென்று காத்திருக்கும் உணவில் ஒரு முறை அல்லது இருமுறை சாப்பிடும்.
பிறகு வான்வழியே சென்று விடும். அதைக் கண்டதும் மக்கள் கூட்டமும் கலைந்துவிடும்.
பறவைகள் உண்டு எஞ்சிய உணவை தேசிகர் குடும்பத்தை சேர்ந்தவர் கொண்டு வந்து மண்டபத்தில் வைப்பார்.
முன்னமே மண்டபத்தில் வைத்திருந்த சோற்றோடு, கொண்டு வந்த சோற்றைக் கொட்டிக் கலந்து விடுவார். அவ் உணவை மக்களுக்கு வழங்குவார்.