கோவில்கள்

அதிசயங்களை தாங்கி நிற்கும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்

Published On 2023-01-04 08:44 GMT   |   Update On 2023-01-04 08:44 GMT
  • கோயிலைச் சுற்றி 21 கோபுரங்கள் உள்ளன.
  • திருவரங்கப் பெரியகோவில் 6,13,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.

வைணவர்களின் திருத்தலமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பல்வேறு அதிசயங்களையும், ரகசியங்களையும் தாங்கி நிற்கிறது. அதன் தொகுப்பு இதோ...

* திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 'பூலோக வைகுண்டம்' என்ற பெருமை பெற்றது. வைணவர்களின் 108 வைணவ திருத்தலங்களில் தலைமைச் செயலகம் போல் செயல்படுகின்றது.

* பன்னிரு ஆழ்வார்களில் 11 ஆழ்வார்கள், 'மங்களாசாசனம்' பெற்று பாடிய திருத்தலமாகும். 108 வைணவத் திருத்தலங்களில் இரண்டு திருத்தலங்கள், பூமியில் இல்லை. ஒன்று பரமபதம். மற்றொன்று திருப்பாற்கடல்.

* இந்தியாவிலேயே ஸ்ரீரங்கம் கோவில்தான் ஏழு பிரகாரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றி 21 கோபுரங்கள் உள்ளன.

* 1961 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கின்படி இங்கு 42 ஆயிரம் மக்கள் மட்டுமே வாழ்ந்து வந்தனர். தற்போது, இதன் மக்கள் தொகை 3 லட்சத்தைத் தாண்டி விட்டது.

* கோவில், 'நாழிக்கேட்டான் வாயில்' வெளிப்புற முகப்பின் இருபக்கங்களிலும் உள்ள மாடங்களில் பத்திரர், சுபத்திரர் ஆகிய துவார பாலகர்கள் உள்ளனர்.

* கோவிலின் உட்புற முகப்பில் பெரியபெருமாள் மூலஸ்தானத்தை நோக்கி, மகாவிஷ்ணுவுக்கு உரியவராக முறையே சங்கு, தாமரை வடிவங்களில், 'சங்க நிதி', 'பதும நிதி' உருவங்களுடன் இருக்கின்றனர்.

* விஜயரங்க சொக்கநாத நாயக்கர், அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோரின் உருவங்கள் தந்தத்தால் இயற்கை முறையில், வண்ணம்தீட்டி வைக்கப்பட்டுள்ளன.

* மூலவர், உற்சவர், தாயாருக்கு அணிவிக்கப்படும் மாலைகள் அனைத்தும் அம்மா மண்டபம் ரோட்டில் உள்ள மதுரகவி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கப்பட்டு, மாலை கட்டப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.

* மூலவர் சுதையினால் இருப்பதால் திருமஞ்சனம் செய்யப்படுவதில்லை. அதற்குப் பதில் கோவில் பணியாளரைக் கொண்டு இயற்கை மூலிகைகளினால் தயாரிக்க ப்பட்டதைலக்காப்புடன் மெருகூட்டப்படுகிறது.

* கோவில் கருவறையின்மேல் தங்கத் தகடுகளால் வேயப்பட்ட விமானம் உள்ளது. விமானத்தின் மேல் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களைக் குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன.

* இந்தத் திருத்தலத்துக்கு வந்து ஆண்டாள், திருப்பாணாழ்வார், துலுக்க நாச்சியார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்து உள்ளனர்.

* வருடத்துகொருமுறை,பங்குனி உத்திர நாளில் பெருமாளும், தாயாரும். தாயார் சன்னதியில் இருக்கும் சேர்த்தி சேவை மண்டபத்தில் சேர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.

* கோவிலில் உள்ள நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல் இருக்கும். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வாரால் கட்டமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள 1,000 தூண்களும் முழுமையாக கட்டி முடிக்கப்ப டாமல் போய்விட்டது. 951 தூண்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. மீதமிருக்கும் 49 தூண்கள், வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் காலத்தில் மணல்வெளியில் 49 மரத்தூண்கள் நடப்பட்டு ஆயிரம் தூண்களுடன் விழா நடைபெறுகிறது.

கோவில் தீர்த்தங்கள்: சந்திர புஷ்கரணி, சூர்ய புஷ்கரணி, வகுள தீர்த்தம், சம்பு தீர்த்தம், அசுவத்த தீர்த்தம், பலாச தீர்த்தம், புன்னாக தீர்த்தம், பில்வ தீர்த்தம், கதம்ப தீர்த்தம், ஆம்பர தீர்த்தம், தென்திருக்காவிரி, வட திருக்காவிரி கோவிலில் நிர்வாக முறையை ஏற்படுத்திய ராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார்.

ராமானுஜரது திருமேனி 5-வது 'திருச்சுற்று' எனப்படும் அகளங்கன் திருச்சுற்றில் வசந்தமண்டபத்தில் புதைக்கப்பட்டது. பிறகு தானாகவே அவரது திருமேனி பூமிக்கு வெளியே தோன்றியது. அதுவே தற்போது ராமானுஜர் சந்நிதி மூலஸ்தானமாக உள்ளது. தான் ஏற்படுத்திய நிர்வாகங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதைக் கண்காணித்து வருகிறார் ராமானுஜர் என்பது ஐதீகம்.

ஐந்து குழி மூன்று வாசல்

ஸ்ரீரங்கம் கோவிலின் தாயார் சந்நிதிக்கு வெளியே இருக்கும், ஐந்து குழி மூன்று வாசல் அற்புதமானது. இங்குள்ள ஐந்து குழிகள் வழியே, ஐந்து விரல்களை வைத்து தெற்கு பக்கம் பார்த்தால் பரமபத வாசல் தெரியும். இப்படித்தான் தாயார் பெருமாளை சேவிக்கிறார் என்பது ஐதீகம். அர்த்த பஞ்சக ஞானத்தைக் குறிப்பதே ஐந்து குழி என்றும் மூன்று வாசல் என்பது பிரம்மத்தின் வழி என்பதும் பெரியோர்கள் வாக்கு.

கல்லிலே கலை வண்ணம் திருவரங்கம்

திருச்சியில் காவிரியும் கொள்ளி டமும் உருவாக்கிய மணல் தீவு முக்கொம்பு தொடங்கி கல்லணை வரை உள்ளது. அரங்கம் என்றால் ஆற்றிடைக்குறை என்றும் பொருள்படும். சிறப்பு கருதி திருவரங்கம் ஆனது. அங்கு பெருமாள் வந்து தங்கியது ஒரு சுவையான புராணம். திருவரங்கப் பெரியகோவில் 6,13,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. அதாவது 156 ஏக்கர். கோவில் சுவர்களின் மொத்த நீளம் 32,592 அடி. பெரிய கோவில் 7 திருச்சுற்றுக்களோடு அமைந்துள்ளது. இந்தியாவிலேயே 7 சுற்றுக்களைக் கொண்ட கோவில் இது மட்டுமே. பெருமாள் தென்திசை நோக்கிப் பள்ளி கொண்டுள்ளார். கருவறை விமானத்தில் 4 கலசங்கள் உள்ளன. இவை நான்கு வேதங்களை குறிப்பதாக நம்புகிறார்கள். சுந்தர பாண்டியன் விமானத்துக்கு தங்கம் பதித்தான். அதனால் பொன்வேய்ந்த பெருமாள் என அழைத்தனர்.

நாம் ஸ்ரீரெங்கநாதரை தரிசிக்க ஏழாம் சுற்றின் தெற்கு வாசலில் உள்ள ராஜகோபுரத்தின் வழியாக நுழைகிறோம். முடிவடையாமல் இருந்த அந்த மொட்டை கோபுரத்தை 1979-ல் தொடங்கி 1987 மார்ச்சில் அஹோபில மடத்து 44-ம் ஜூயர் அழகிய சிங்கர் ஜூயர் 236 அடி உயரத்தில் முழுமையாக்கினார். ஆசியாவிலேயே பெரிய கோபுரமிது. இந்த ஏழாவது திருச்சுற்றில் சித்திரை திருவிழா நடப்பதால் சித்திரை திருவீதி என்று அழைக்கிறோம்.

பங்குனித் திருநாளில் நம்பெருமாள் உலா வரும் கோரதம் இங்குதான் உள்ளது. கோட்டை வாசல் அருகில் உள்ள கண்ணன் சந்நிதியும் இங்குள்ளது.திருவரங்கப் பெருமாள் தென்திசை நோக்கி பள்ளி கொண்டிரு க்கிறார். குணதிசை முடியை வைத்து, குடதிசை பாதம் நீட்டி, வடதிசை முதுகு காட்டி, தென்திசை இலங்கை நோக்கி அரிதுயிலில் இருப்பதை காணும் பக்தர்கள் பரவசம் அடைகிறார்கள். அரங்கன் மீது கொண்ட காதலால் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து திருவரங்கம் வந்தவர் ஆண்டாள். அவரையே மணக்க விரும்பி அரங்கன் சந்நிதியில் திருமணத்தூணில் புகுந்து மறைந்தார் என்பது வரலாறு.

திருவரங்கம் கோவிலிலும், சுற்றியுள்ள மண்டபங்களிலும் உள்ள சிற்பங்களை பார்க்கும் போது கல்லிலே கலை வண்ணம் கண்டான் என்ற பாடலை நினைவுபடுத்தும்.இங்குள்ள கலைக்கூடத்தில் பழங்கால உலோக சிற்பங்கள் வாள்கள், நாணயங்கள், ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படுகின்றன. 1966-ல் யுனெஸ்கோ செய்த உதவியால் சிற்பங்களும் ஓவியங்களும் புதுப்பிக்கப்பட்டன. பொதுவாக கோவில்களில் வருடத்தில் ஒன்றோ இரண்டோ விழாக்கள் நடக்கும்.

ஆனால், வருடத்தில் 322 நாட்களும் பெருமாளுக்கு விசேஷம் என்பது திருவரங்கத்தில்தான். இதில்21 நாள் நடக்கும் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியும் மிக முக்கியமானவை. அதுமட்டுமல்ல, பெருமாள் வீதியில் உலா வரும்போது அவருக்கு முன்பாக தமிழ் மறை ஓதுவரும் இங்குள்ள சிறப்பாகும்.ஆழ்வார்களிடையே அரங்கனை தவிர மற்றொரு பெருமானைப் பாடாமல் வாழ்நாள் முழுவதும் ஸ்ரீரெங்கத்திலேயே வாழ்ந்து மறைந்தவர் தொண்டரடிப்பொடி ஆழ்வார்தான். அவர் திருவரங்கத்தின் பெருமை உணர்ந்தே, இந்திரலோகம் கூட வேண்டாம்... அரங்க மா நகரமான திருவரங்கம் போதும் என்றார். கி.பி. 10-ம் நூற்றாண்டு வரை இந்தக் கோவிலுக்கு வரலாற்று சான்றே இல்லை.

எல்லாம் இலக்கியச் சான்றுகளே. கோவிலின் மூன்றாம் சுற்றை திருமங்கை மன்னன் கட்டியதாக கூறுகிறது. ஆதித்ய சோழன் கா லம் தொட்டு 644 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவற்றின் மூலமாகவே சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள், நாயக்கர்கள் செய்த திருப்பணிகளையும், கொடுத்த நிலம், பொன் போன்றவையும் அறிய முடிகிறது. இது குறித்து கல்வெட்டுகள் தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மராட்டியம், ஒடியா முதலிய 6 மொழிகளில் கிடைக்கின்றன.

கம்பீரம் காட்டும் ராஜகோபுரம்

ஸ்ரீரங்கம் கோவில் ஏறத்தாழ 156 ஏக்கர் பரப்பளவில் அதா வது 6,31,000 சதுர மீட்டர் கொண்டதாக, நாட்டிலேயே மிகப்பெரிய கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. மையப் பகுதியில் ரெங்கநாத சுவாமி சன்னதி உள்ளது. இது தெற்கு நோக்கிய வண் ணம் அமைந்துள்ளது. ராஜ கோபுரத்துடன்கூடிய பிரதான வாயில் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது.

கோவிலைச் சுற்றி உட்புற மாக அமைந்துள்ள நான்கு சுற்றுக்களும் கோவில் சார்ந்த பயன்பாடுகளுக்கு உரியவை. வெளிப்புறமாக உள்ள மூன்று சுற்றுக்களும் வீடுகள், வணிக நிறுவனங்கள், தெருக்கள் என முழு நகரத்தையும் உள்ள டக்கியுள்ளது.

ஸ்ரீரங்கம் கோவில் வளாகத் துக்குள் அமைந்துள்ள ஏழு மதில் சுற்றுக்களும், ஏழு லோகத்தை குறிப்பதாக சொல் லப்படுகிறது. மாடங்கள் சூழ்ந்துள்ள திருச்சுற்று- பூலோ கம், திரிவிக்ரம சோழன் திருச்சுற்று புவர்லோகம், அகலங்கனென்னும் கிளிச் சோழன் திருச்சுற்று சுவர் லோகம், திருமங்கை மன் னன் திருச்சுற்று -மகர்லோகம், குலசேகரன் திருச்சுற்று -ஜநோ லோகம், ராஜமகே ந்திர சோழன் திருச்சுற்று -தபோ லோகம், தர்மவர்ம சோழன் திருச்சுற்று -சத்யலோகம்.

தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய ராஜகோபுரம்

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவில் 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தல மாகவும், சோழநாட்டு திருப்பதிகளில் முதன்மை தலமாகவும் திகழ்கிறது. பரந்து விரிந்த இக் கோயில் வளாகத் தில் அமைந்துள்ள ஏழு சுற்று மதில்களின் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட் டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான ராஜகோபுரம், 72 மீட்டர் (236 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகிறது. இது 17 -ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதானாலும், 1987 -ம் ஆண்டு தான் முழுமை யாகக் கட்டி முடிக்கப்பட்டது. சோழநாட்டு காவிரி ஆற்ற ங்கரையில் அமைந்து ள்ள முதல் திவ்யதேச தலம்.

கட்டுமான பொருட்கள்

ஸ்ரீரங்கம் கோவிலின் பிரமாண்டமான ராஜகோபு ரத்தை கட்டுவதற்கு 1.7 கோடி எண்ணிக்கையிலான செங்கற்கள், 20,000 டன் மணல், 1,000 டன் கருங்கல், 12 ஆயிரம் டன் சிமெண்ட், 130 டன் இரும்பு கம்பி கள், 8,000 டன் வர்ண பூச்சுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ராஜ கோபு ரத்தின் மொத்த எடை 1.28 லட்சம் டன் ஆகும்.

சகல சவுபாக்கியம் தரும் கோவில்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மூலவர் ரெங்க நாதப்பெருமாள் புஜங்க சயனத்தில் தெற்கு நோக்கி ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டு காட்சி அளிக்கிறார். உற்சவராக நம்பெருமாள், தாயார் ஸ்ரீரங்க நாச்சியார், தீர்த்தம் சந்திர புஷ்கரணி, காவிரி கொள்ளிடம், கோவிலின் விமான மாக பிரண வாக்ருதி, தல விருட்சமாக புன்னை மரம் உள்ளது.

சூரிய குலத்தைச் சேர்ந்த மனுகுமாரன் பிரம்மனை நோக்கித் தவம் புரிந்து திருமாலின் திருவாரா தன விக்ரகத்தை கேட்டு வாங்கி அயோத்தியில் வைத்து வழிபட்டு வந்தார். இந்த விக்ரகத்தை ஸ்ரீராம பிரானும் வழிபட்டார். ஸ்ரீராமன், ராவணனை வென்று சீதா பிராட்டியை மீட்டு அயோத்திக்கு வந்த போது தம் முன்னோர்கள் வழிபட்டு வந்த திருமாலின் திருவாராதன விக்ரகத்தை, அன்பு காணிக்கையாக விபீஷணனுக்கு வழங்கினார். விபீஷணன் அதை எடுத்து இலங்கைக்குக் கொண்டு செல்லும் போது காவிரி, கொள்ளிடம் நதிக்கரையில் வைத்து இளைப்பாறினார்.

மறுபடியும் அந்த விக்ரகத்தை எடுக்க முயன்றபோது விக்ரகத்தை எடுக்க முடிய வில்லை. தான் இனிமேல் இங்கு தான் நிரந்தரமாக இருக்கப் போவதாக பெருமாளே விபீ ஷணனிடம் கூறியதால் விபீஷணனும் மனம் உவந்து அந்த விக்ரகப் பெருமாளை வணங்கி விட்டு இலங்கைக்கு சென்றான். பெருமாளும் விபீஷணனுக்கு அருளும் வகையில் இலங்கையை நோக்கித் தன் பார்வை வரும்படி சயனித்துக் கொண்டார்.சோழநாட்டு அரசனான தர்மவர்மன் பெருமாளுக்கு முதலில் சிறு கோவிலைக் கட்டினார். இதற்கு பிறகு சேர, பாண்டிய அரசர்களும் இக்கோவிலைக் கட்டி முடிக்க அரும்பாடுபட்டார்கள்.

அது நாளடைவில் மிகப்பெரிய கோவிலாக உருவெடுத்து இன்றைக்கு வைண வத் தலங்களில் முதலாவது கோவிலாக, புகழ்பெற்ற 108 வைணவ தலங்களில் முன்னிலையில் நிற்கிறது.பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பா ணாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். கம்பனது ராமாயணம் அரங்கேறியதும் இங்கே தான்.

ஸ்ரீராமானுஜர் இறுதியில் திருநாடு அடைந்தாலும் அவரது திருமேனியை வசந்த மண்டபத்தில் - கெடாதவாறு மூலிகைச் சாந்து பூசி இன்று வரை வைத்திருக்கிறார்கள். இத்தலத்திலுள்ள மூலவரை - வெள்ளியன்று அதிகாலை விஸ்வரூப தரிசனம் கண்டு வந்தால் திருமணமாகாதவர்களுக்கு சுக்கிர தோஷம் விலகி திருமணம் நடக்கும். பணக்கஷ்டம் உள்ளவர்கள் அந்த சங்கடத்திலிருந்து மீண்டு விடுவார்கள். வெளி நாடு சென்று முன்னுக்குவர வேண்டும் என்று துடிப்பவர்கள், வேலை தேடுபவர்கள், சொந்தத் தொழில் செய்ய ஆசைப்படுபவர்கள் அனைவருக்கும் யோகத்தையும் சவுபாக்கியத்தையும் தரக் கூடிய கோவில் என்பது மிகப் பெரிய சிறப்பு.

வளரும் நெற்குதிர்கள்

20 அடி விட்டமும் 30 அடி உயரமும் கொண்ட 5 பிரம்மாண்ட நெற்குதிர்கள் சக்கரத்தாழ்வார் சந்நிதிக்கு அருகே அமைந்துள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவான இந்த நெல் சேமிப்பு கிடங்கிகள் வட்டவடிவமாக அமைந்தவை. மொத்தமாக 1500 டன் அளவுக்கு இந்த கிடங்கியில் நெல் சேமிக்க முடியுமாம். எந்தக் காலத்திலும் இந்த குதிர்களில் நெல் இல்லாமல் போனதே இல்லை என்ற பெருமையைக் கொண்டதாம் இவை. அதுபோல எத்தனை நெல் கொட்டினாலும் விரிவடைந்து ஏற்றுக் கொள்ளும் தன்மை கொண்டது என்றும் அதிசயமாக இந்தக் குதிர்களைச் சொல்கிறார்கள்.

Tags:    

Similar News