ஆன்மிகம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா நாளை தொடங்குகிறது

Published On 2018-07-06 04:25 GMT   |   Update On 2018-07-06 04:25 GMT
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. அருணாசலேஸ்வரரை காண உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

அதுமட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவிலில் விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்ல வரும் பக்தர்களால் கோவிலில் கூட்டம் அலைமோதும்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆனி பிரம்மோற்சவமும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான ஆனி பிரம்மோற்சவ விழா நாளை (சனிக்கிழமை) காலை 6.30 மணியில் இருந்து 7.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கு கிறது. இதையடுத்து அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன் மற்றும் பராசக்தி அம்மன் வீதி உலா நடை பெறும்.

விழாவை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) காலையிலும், மாலையிலும் விநாயகர் வீதி உலா நடைபெற உள்ளது.

இந்த விழா வருகிற 16-ந் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் காலை, மாலை சாமி வீதியுலாவும், விநாயகர், சந்திரசேகர் வீதியுலாவும் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் தலைமை யிலான விழா குழுவினர் செய்து வருகின்றனர். 
Tags:    

Similar News