ஆன்மிகம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 13-ந்தேதி தேரோட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கொண்டாடப்பட்டு முக்கிய திருவிழாக்களில் ஒன்று திருஆடிப்பூர திருவிழா. இந்த ஆண்டுக்கான விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டதும், ஆண்டாள்-ரங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. இரவில் 16 வண்டி சப்பரத்தில், ஆண்டாள்- ரங்கமன்னார் வீதி உலா செல்கின்றனர். தொடர்ந்து 16-ந் தேதி வரை தினமும் காலை, இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடந்தது.
5-ந் திருநாளான 9-ந் தேதி காலை மங்களா சாசனம் வைபமும், இரவு 10 மணிக்கு 5 கருட சேவையும் நடக்கிறது. 11-ந் தேதி இரவு 7 மணிக்கு கிருஷ்ணன் கோவிலில், ஆண்டாள் திருமடியில், ரங்கமன்னார் சயனத்திருக்கோல வைபவத்தில் காட்சி அளிக்கிறார்.
8-ம் திருநாளான 12-ந் தேதி மதுரை அழகர்கோவில், ரங்க அரங்கநாத கோவில்களில் இருந்து பிரசாதமாக கொண்டு வரப்படும் பரிவட்டங்கள், ஆண்டாளுக்கு சாற்றப்படுகிறது.
மறுநாள் (13-ந் தேதி) காலை 7.20 மணிக்கு திருவாடிப்பூரத் தேரோட்டம் நடக்கிறது. 16-ந் தேதி ஆண்டாள்- ரெங்க மன்னார் திவ்ய தம்பதிகளுக்கு புஷ்பயாகத்துடன் விழா நிறைவடைகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நாகராஜன், தக்கார் ரவிச்சந்திரன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
இன்று நடைபெற்ற கொடியேற்று விழாவில் தக்கார் ரவிச்சந்திரன், சந்திரபிரபா எம்.எல்.ஏ., செயல் அலுவலர் நாகராஜன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முத்தையா, கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியன், மீரா தனலட்சுமி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டதும், ஆண்டாள்-ரங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. இரவில் 16 வண்டி சப்பரத்தில், ஆண்டாள்- ரங்கமன்னார் வீதி உலா செல்கின்றனர். தொடர்ந்து 16-ந் தேதி வரை தினமும் காலை, இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடந்தது.
5-ந் திருநாளான 9-ந் தேதி காலை மங்களா சாசனம் வைபமும், இரவு 10 மணிக்கு 5 கருட சேவையும் நடக்கிறது. 11-ந் தேதி இரவு 7 மணிக்கு கிருஷ்ணன் கோவிலில், ஆண்டாள் திருமடியில், ரங்கமன்னார் சயனத்திருக்கோல வைபவத்தில் காட்சி அளிக்கிறார்.
8-ம் திருநாளான 12-ந் தேதி மதுரை அழகர்கோவில், ரங்க அரங்கநாத கோவில்களில் இருந்து பிரசாதமாக கொண்டு வரப்படும் பரிவட்டங்கள், ஆண்டாளுக்கு சாற்றப்படுகிறது.
மறுநாள் (13-ந் தேதி) காலை 7.20 மணிக்கு திருவாடிப்பூரத் தேரோட்டம் நடக்கிறது. 16-ந் தேதி ஆண்டாள்- ரெங்க மன்னார் திவ்ய தம்பதிகளுக்கு புஷ்பயாகத்துடன் விழா நிறைவடைகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நாகராஜன், தக்கார் ரவிச்சந்திரன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
இன்று நடைபெற்ற கொடியேற்று விழாவில் தக்கார் ரவிச்சந்திரன், சந்திரபிரபா எம்.எல்.ஏ., செயல் அலுவலர் நாகராஜன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முத்தையா, கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியன், மீரா தனலட்சுமி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.